25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Dec 07, 2022

மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருது 2021-2022

விருதுநகர் மாவட்டத்தில் நேரு யுவ கேந்திரா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர்,மகளிர் மன்ற விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டும் சிறப்பாக செயல்பட்ட இளைஞர்,மகளிர் மன்றத்திற்கு விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.தகுதி:மாவட்டஅளவிலானசிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருது(ஒன்று):1. நேரு யுவ கேந்திராவிலும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுசெய்து இருக்க வேண்டும.2. மேலும் பதிவு செய்த மன்றங்கள் 2021-2022-ம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்கினை தணிக்கை செய்திருத்தல் அவசியம்.3. 01-04-2021 முதல் 31-03-2022 வரை சிறப்பாக பணியாற்றி  இருப்பதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்4. ரூ.25000/- ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.5. இதில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவிலான இளையோர் மன்ற விருதுக்கு தேர்வுசெய்து அனுப்பப்படும்.விருது பெறத் தகுதியுள்ள மன்றங்கள் விண்ணப்ப படிவங்களை மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை 15.12.2022-ம்  தேதிக்குள் மாவட்ட நேரு யுவ கேந்திராஇகுமாரசாமி ராஜாநகர், மகளிர் காவல் நிலையம் அருகில், விருதுநகர் - 626 002 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்பிக்கும் படி, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Dec 06, 2022

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 வயதுப் பிரிவுகளில் உள்ள மாணவர்கள் தங்களது வயதுச் சான்றுகளுடன் 10-12-2022 அன்று காலை 9-00 மணிக்கு நடைபெறும் கலைப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் சிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் சிவகாசி அண்ணாமலையம்மாள் உண்ணாமலைநாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.  இவ்ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் ஆக்கப்பூர்வமான கலைகளை வெளிக் கொணர, அரசு ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வருகின்றது.மாவட்ட அளவில் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியப் போட்டிகளில் 5-8, 9-12, 13-16, ஆகிய வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.  இப்போட்டிகளில் 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பெறும் குழந்தைகள் மாநில அளவில் நடைபெறும் கலைப்போட்டிக்கு ஜவகர் சிறுவர் மன்ற செலவில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள்.  மேலும், இம்மாநில அளவிலான கலைப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்க்கு ரூ.10000/-ம், இரண்டாம் பரிசு பெறும் மாணவர்க்கு ரூ.7500/-ம், மூன்றாம் பரிசு பெறும் மாணவர்க்கு ரூ.5000ஃ-ம் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.போட்டி விதிகள்1. பரதநாட்டியம் (செவ்வியல்)பரதநாட்டியம், தமிழக நாட்டுப்புற நடனங்கள், குச்சுப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம்.  முழு ஒப்பனை மற்றும் உரிய ஆடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள்  (கர்நாடக இசைப்பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுதிக்கப்படும்.2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக்கலை)தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம்.  முழு ஒப்பனை மற்றும் உரிய நடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் முழு நடனங்கள் அனுமதியில்லை.  ஒலி நாடாக்கள்,குறுந்தகடுகள்,பென்டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.3.குரலிசைகர்நாடக இசை, தேசியப்பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும்.  மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிறமொழிப்பாடல்கள், குழுப் பாடல்கள் அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படும்.4. ஓவியம்40x30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம்.  ஓவியம் வரைவதற்கான அட்டைகள், ஓவியத் தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும்.  குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும்.ஒரே மாணவர் மேற்காணும் மூன்று வகைப்போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.  போட்டிகளில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.போட்டிகள் நடைபெறும் இடம்ஜவகர் சிறுவர் மன்றம்அண்ணாமலையம்மாள் உண்ணாமலைநாடார் அரசு மேல்நிலைப்பள்ளிசிவகாசி.   திட்ட அலுவலர் அலைப்பேசி எண்.94439 61523இப்போட்டிகளில் கலந்து கொள்கின்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 வயதுப்பிரிவுகளில் உள்ள மாணவர்கள் தங்களது வயதுச் சான்றுகளுடன் அண்ணாமலையம்மாள் உண்ணாமலைநாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-12-2022 (சனிக்கிழமை) அன்று காலை 9-00 மணிக்கு நடைபெறும் கலைப்போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Dec 03, 2022

உலக மண் தினத்தினை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி, காந்தி கலை மன்றத்தில் உலக மண் தினத்தினை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சியினை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,I.A.S.., அவர்கள்  இன்று (03.12.2022) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கான பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அதற்கான மாற்றுப்பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திருந்தார்.அதனடிப்படையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சியானது 03.12.2022 முதல் 05.12.2022 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இக்கண்காட்சியில், சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு  பதிலான மாற்றுப்பொருட்கள் ஆகியவை உள்ளன.இக்கண்காட்சி முதன்முதலாக இராஜபாளையம் நகராட்சியில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை போல்  மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் நடத்தப்பட வேண்டும்.  திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு சவாலான விஷயமாகும். அதனால் பொதுமக்கள் அதனை மக்கும் குப்பைகள்,  மக்காத குப்பைகள் என பிரித்து வழங்கி நகராட்சிக்கு உதவிட வேண்டும்.மேலும், பிளாஸ்டிக்  அல்லாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி, சுற்றுப்புறச்சூழலை காத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி பவித்ரா ஷியாம், ராம்கோ சேர்மன் திரு.வெங்கட்ராம ராஜா,   நகராட்சி ஆணையாளர் திரு.பார்த்தசாரதி, திருப்பூர் பாதுகாப்பு சங்கம்  நிறுவனர்,செயலாளர்  முனைவர்.வீரபத்மன், இராஜபாளைய நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு.காளி, நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 03, 2022

இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,I.A.S., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில்;, இரு சக்கர வாகன விபத்துகளில், தலையில் அடிப்பட்டு அதனால் ஏற்படும் உயிழப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தலைக்கவசத்தின் பயன் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். மேற்படி விழிப்புணர்வினை அரசு அலுவலகங்களிலிருந்து அரசு அலுவலர்கள் மூலமாக முதற்கட்டமாக ஏற்படுத்த வேண்டும்.  அதன்படி, வருகின்ற திங்கட்கிழமை முதல் (டிசம்பர் 5-ம் தேதி) அரசு அலுவலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் வருகின்ற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து, விழிப்புணர்வினை ஏற்படுத்த  வேண்டும்.இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியும் விழிப்புணர்வினை படிப்படியாக பொதுமக்களிடமும் கொண்டு சென்று, பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டுவதை ஊக்குவிக்க காவல்துறையினர் மூலமாக அறிவுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Dec 01, 2022

உலக வாசக்டமி இருவார நிகழ்ச்சியினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்

உலக வாசக்டமி  இருவார நிகழ்ச்சியினை முன்னிட்டு, மாவட்ட அளவிலானஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்  03.12.2022 அன்று திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்யும் நபருக்கு ரூ.3300/- (ரூபாய்  மூவாயிரத்து முன்னூறு ) வழங்கப்படும். பெண்களுக்கு செய்யும் குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சையை விட ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.சிறப்பம்சங்கள்:    மிக மிக எளிமையானது,  மிகவும் பாதுகாப்பானது, பயப்பட தேவையில்லை,மயக்க மருந்து கொடுப்பதில்லை,  5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது,  தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை,  சிகிச்சை முடிந்த உடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை, இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் கிடையாது. எப்போதும் போல் இல்லற உறவு கொள்ளலாம். அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட செய்து கொள்ளலாம். கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும்; முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்யலாம். ஆண்மைக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.குறிப்பாக இரத்த சோகை, இதய நோய் மற்றும் பிற மருத்துவ காரணங்களினால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத தாய்மார்களின் கணவன்மார்கள் தாமாக முன் வந்து கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு அரசு தரும் பயனீட்டுத்தொகைரூ.1100/-, ஊக்கத்தொகை ரூ.200/- மற்றும்  மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 2000/- சேர்த்து ஆக மொத்தம் ரூ.3300/- ஒவ்வொரு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.  மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்படும் ரூ.2000/- பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.              இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமெனவும், முகாம் ஏற்பாடுகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி., I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 28, 2022

ASIA BOOK OF RECORDS

(Asia book of records) The record for performing the maximum number of Non-stop (4167) punches on a hand pad while walking backwards 2.7 km in 32 minutes. And also he is going to break his own record by covering 5 km in NOBEL WORLD RECORDS  

Nov 26, 2022

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர்,  முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்     மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 30.11.2022 அன்று  மாலை  4.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  அலுவலகத்தில்  நடத்தப்படவுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள்,  படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன்  (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 26, 2022

தமிழ்நாடு அரசினால் 2022 ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது”

தமிழ்நாடு அரசினால் 2022 ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது” 2023 ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள் ஆகியோர்களில் டாக்டர். அம்பேத்கர் தமிழ்நாடு அரசு  விருதினைப் பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை,  விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்  பெற்று பூர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I AS., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 26, 2022

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 114 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் நேரடி நியமனம்

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 114 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது . மேற்படி பதவிகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேற்படி விண்ணப்பங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 04.12.2022 அன்று நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டனாது  (Hall Ticket) மேற்படி விண்ணப்பதாரர்களின் கைப்பேசி எண்ணிற்கு குறுசெய்தியாக (Message) அனுப்பப்படும் மின்னஞ்சல் முகவரி வழியாக நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது விண்ணப்பதாரர் தமிழக அரசின் இணையதளம் ((https://www.tn.gov.in), வருவாய் நிருவாகத்துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் விருதுநகர் மாவட்ட இணையதளம் ((https://virudhunagar.nic.in)  மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 25, 2022

விருதுநகர் மாவட்டம் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க திருத்த நடவடிக்கைகள் 01.01.2023 மற்றும் 01.04.2023, 01.07.2023, மற்றும் 01.10.2023 ஆகிய அடுத்தடுத்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு 09.11.2022 முதல் 08.12.2022 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் போது சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாறுதல் செய்ய 09.11.2022 முதல் 08.12.2022 வரை விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிட மையங்கள் வட்ட, கோட்ட, நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய கள விசாரணைக்கு பினி முடிவு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2023 அன்று வெளியிடப்படவுள்ளது.மேலும் வாக்காளர்களின் வசதிக்காக அவர்களது வசிப்பிடம் அருகில் அமைந்துள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் 26.11.2022 சனிக்கிழமை , 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை, தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. பொதுமக்கள், வாக்குச்சாவடி அமைவிட அலுவலரிடம் தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கலாம்.இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க www.nvsp.in என்ற இணையதள முகவரியில் தேசிய வாக்காளர் சேவை தளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்க(Apply Online) என்ற இணைப்பினை அழுத்தவேண்டும். பொதுமக்கள் தங்கள் விரும்பும் படிவங்களை தேர்வு செய்து, விபரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.01.01.2023 அன்றோ அதற்கு முன்போ 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் அல்லது 01.04.2023,01.07.2023 மற்றும் 01.10.2023 ஆகிய அடுத்தடுத்த தகுதி நாட்களில் 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் மற்றும் புதிதாக பெயரினை சேர்க்க விழையும் அனைத்து தரப்பினரும் மேற்குறிப்பிடப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.  

1 2 ... 11 12 13 14 15 16 17 18 19 20

AD's



More News