தொழிற்பழகுநர் பயிற்சியாளர்கள் சேர்க்கை முகாம்
விருதுநகர் மாவட்டத்தில், தொழிற்பழகுநர் பயிற்சியாளர்கள் சேர்க்கை முகாம் 2022 வருகின்ற 12.09.2022 அன்று அரசினர் தொழிற்பயிற்சிநிலையம், சூலக்கரை,விருதுநகரில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருக்கின்றது. இதில், பிரபல முன்னனி நிறுவனங்கள் மற்றும் MSME யில் பதிவுபெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்று, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறதாவர்கள் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக ரூ.7000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply