25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Apr 27, 2023

தொழிலாளர் தினம் அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2022 முதல் 31.03.2023 வரை) கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தில். கிராம வளர்ச்சித் திட்டம்(VPDP). அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு  செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம்  குறித்து விவாதித்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2022-2023 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு  செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம் மற்றும் தொழிலாளர் மதிப்பீடு (Labour Budget) குறித்து விவாதித்தல். பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் - குறித்து விவாதித்தல். அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து விவாதித்தல். பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்து விவாதித்தல். தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல். கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல். எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் உறுதிமொழி எடுத்தல்.   ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல். வறுமை குறைப்பு திட்டம்(VPRP) இதர பொருட்கள்  குறித்து விவாதித்தல்.எனவே, 01.05.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்

Apr 26, 2023

சிறப்பு உலக திறனாய்வுத்திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டி

மாவட்ட அளவிலான சிறப்பு உலக திறனாய்வுத்திட்டம் 2022-23ம் ஆண்டு நடத்துவது சார்பாக, 6,7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட உலக திறனாய்வு தேர்வுகளில் 8,9 மற்றும் 10 மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவ/ மாணவியர்களுக்கு 27.04.2023 அன்று சிறப்பு உலக திறனாய்வுத்திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெறும் முதல் 3 மாணவ/மாணவியர்களுக்கு டி-சர்ட்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.நடைபெறவிருக்கும் விளையாட்டு போட்டிகள் விபரம்-100மீட்டர், 200மீட்டர், 400மீட்டர் ஒட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல் மாணவ, மாணவியர் இருபாலருக்கும் அவரவர் வகுப்பு பிரிவில் நடைபெறும்.போட்டியில் கலந்து கொள்ள வருபவர்கள் தவறாது தங்களது வயது சான்றிதழ் அல்லது வயது குறித்த Bonafide certificate  பள்ளி தலைமை ஆசிரியர்/ஆசிரியையிடமிருந்து பெற்று வர வேண்டும், வயது சான்றிதழ் இல்லாதவர்கள் கண்டிப்பாக விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இயலாது. விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு காலை 9.00 மணிக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வரும் மாணவ/ மாணவியருக்கு தினப்படி/பயணப்படி ஏதும் வழங்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 22, 2023

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC CGL ) தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள்

 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் SSC CGL தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 7500 பணிக்காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்து மேலும் அறிந்து கொள்ள  www.ssc.nic.in     என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023.இத்தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் 24.04.2023 அன்று முதல் நேரடியாக நடைபெறவுள்ளது.இப்போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக எழுதலாம்.இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562 - 293613 அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் இந்த அரிய வாய்ப்பினை விருதுநகர் மாவட்ட போட்டித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 22, 2023

SOUTH DELHI MUNICIPAL CORPORATION

DISPOSE USED PLASTICS BAGS IN A PLASTIC BOTTLE BEFORE YOU THROW ! Please forward this message to as many as possible. Excellent suggestion which all should follow.

Apr 19, 2023

விழுதுகளை வேர்களாக்க உயர்கல்வி ஆலோசனை

  2022 -2023ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த விழுதுகளை வேர்களாக்க உயர்கல்வி வழிகாட்டி வகுப்பு மாவட்ட நிர்வாகத்தால் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேற்படி ஆலோசனை முகாம்களை Mass Movement for Transformation(MMT) and NURTURE என்ற தன்னார்வ இயக்கம் பிற தன்னார்வ இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் 20.04.2023 அன்று காலை 10.00 மணியளவில் AAA பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் விழுதுகளை வேர்களாக்க உயர்கல்வி ஆலோசனை வகுப்பில் (Career Guidance Program) கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 06, 2023

ஆதாரை பதிவு செய்து 10 வருடம் ஆனவர்கள் புதுப்பிக்க வேண்டும்

ஆதார் நம்மோடு ஒன்றிவிட்டநிலையில் ஆதார் எண் பெற்ற ஒவ்வொருவரும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற புதிய தகவலை, இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு வெளியிட்டுள்ளது ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கும், ஆதாரை புதுப்பித்தல் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.ஆதாரை பதிவு செய்து 10 வருடம் ஆனவர்கள் புதுப்பிக்க வரும் ஜூன் 14ம் தேதி வரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு தெரிவித்துள்ளது.இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India), இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்குவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்துவமாக பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் எண் வழங்கப்படுகிறது.பிறந்த குழந்தை முதல், இறந்த பின்னர் அந்த பிணத்திற்கு இறுதி செய்யும் வரை இப்போது எல்லா இடங்களிலும் ஆதார் கேட்கப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் இந்திய மக்களின் வாழ்க்கையில் 'ஆதார்' மிகப்பெரிய அங்கமாகிவிட்டது. சிம்கார்டு வாங்குவதாகட்டும், அரசின் மானியங்கள் கிடைக்க வேண்டும் என்றாலும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் எது வாங்க வேண்டுமானாலும் ஆதார் கார்டை கையோடு கொண்டு போக வேண்டும்.போலி கார்டுகள் தமிழகத்தில் ஒரே நபர் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரேஷன் அட்டை வைத்திருந்த போது ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டபோது தமிழகத்தில் எங்கு வசித்தாலும் ஒரே ஒரு ரேஷன் கார்டில் மட்டுமே பெயரை இணைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் பல லட்சக்கணக்கான போலி ரேஷன்கார்டுகள் ஒழிந்து போனது,வங்கி கணக்கு இதேபோல் பான்கார்டு உடன் ஆதார் இணைப்பால் இப்போது யாரும் வருமான வரியில் முறைகேட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைரேகை வங்கி பணப்பரிவர்த்தனையில் ஆதார் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது ஏ.டி.எம். கார்டு இல்லாமல், வங்கி கணக்கு எண் இல்லாமல் ஆதார் எண், கைரேகை வைத்து பணம் எடுக்கக்கூடிய ஏ.இ.பி.எஸ். எனப்படும் ஆதார் எனேபல் பேமெண்ட் சிஸ்டம் (ஆதார் ஏ.டி.எம்.) என்ற பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. முகவரி சான்று ஆதார் பதிவு செய்த பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை மேலும் வலுப்படுத்தும் வண்ணம் கூடுதல் ஆவணங்களை வைத்து ஆதாரை புதுப்பிக்க வேண்டும். வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பதிவேற்றம் செய்து கொண்டு ஆதாரை புதுப்பித்து பலப்படுத்த முடியும்.. அதன்பிறகு கட்டணம் வசூலிப்பார்கள். எனவே myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் அல்லது உங்களது மொபைல் போனில் mAadhaar App என்ற ஆன்ட்ராய்டு ஆப் அல்லது IOS செயலியை பதிவிறக்கம் செய்து அல்லது மொபைல் மூலமாகவும் ஆவணங்களை எளிதாக புதுப்பிக்கலாம்.

Apr 03, 2023

இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சமாதானக்கூட்ட நடவடிக்கைகள்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம் மற்றும் நகரம், இராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பாதாள சாக்கடைத்திட்டம், தாமிரபரணி குடிநீர் திட்டம் மற்றும் இரயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிப்பது தொடர்பாக இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சார்பில் 28.03.2023 அன்று நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்தது தொடர்பாக இரண்டு தரப்பினரையும் அழைத்து சமாதானக்கூட்டம் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து 26.03.2023 அன்று மாலை 05.00 மணியளவில் சிறப்பு அழைப்பாளர்களாக இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர், இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் இராஜபாளையம் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.1 மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்ட அலுவலர்களின் விபரம்:1. வருவாய் ஆய்வாளர், இராஜபாளையம்2. கிராம நிர்வாக அலுவலர், இராஜபாளையம்3.சார்பு ஆய்வாளர், தெற்கு காவல் நிலையம், இராஜபாளையம்/I-நகராட்சி தரப்பினர் சார்பாக கலந்து கொண்டவர்கள்Tதகராட்சி ஆணையாளர், இராஜபாளையம்இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சார்பாக கலந்து கொண்டவர்கள்1.திரு.மாரியப்பன், (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்) 9488717452.2. திரு.என்.ஏ. ராமச்சந்திரராஜா (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்)3. திரு.எம்.மணிகண்டன் (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்) மற்றும் 15 நபர்கள்மேற்படி கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது;1.08.03.2023-ல் நகர்மன்ற தீர்மானம் எண்:94-ன்படி வரிவிதிப்பு குறைப்பிற்கான நடவடிக்கை அரசாணை வருகிற எப்ரல் மாதம் 20-ம் தேதிக்குள் பெற்றுத் தருவதாக நகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.2. சொத்து வரி விகிதம் (Basic Kate) 19% இருந்து 16 ஆக குறைப்பதற்கான நடவடிக்கைகள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் சட்டமன்றத்தில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.  3. குடிநீர் இணைப்புக் கட்டணம் மற்றும் கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி, செலுத்தியவர்களின் தொகை அடுத்து வரும் நிதியாண்டிற்கான கட்டணத்தில் அல்லது வைப்பு தொகையில் ஈடு செய்யப்படும்.4. மேற்கண்ட முடிவுகளின் அடிப்படையில் 28.03.2023 அன்று நடைபெற இருந்த முற்றுகை போரட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

Mar 10, 2023

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது

 மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை அகலப்பாதைக்கான தண்டவாள இணைப்பு பணிகள் முடிந்து  வழக்கமான ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.  திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. .  அதாவது, தாம்பரம் ரெயில் நிறுத்தம் வழங்கிய பின்னர் ,  மதுரையில் இருந்து சென்னைக்கு ,தேஜஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில், சென்னை வரை முன்பதிவு செய்திருந்த பயணிகள் தாம்பரம் நிறுத்தத்தில் இறங்க வசதியாக இருப்பதாக தெரிவித்தனர். அத்துடன், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பயணிகள் தாம்பரம் ரெயில் நிறுத்தத்தால் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர்.

Mar 04, 2023

பொறுப்புத் துறப்பு

மனிதர்களின்ஒவ்வொரு சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்தாலும். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு, மருத்துவரின் ஆலோசனை அவசியம். 

Feb 21, 2023

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இராஜபாளையம் நகராட்சி அறிவிப்பு

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்இராஜபாளையம் நகராட்சியின் 42 வார்டுகளிலும் திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் இல்லாத பகுதியாக (OOF++) அறிவித்தல் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இராஜபாளையம்நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளையும், திறந்தவெளி கழிப்பிடமி பகுதியாக (ODF+) அறிவிப்பதற்கு மத்திய நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்த நிபந்தனைகளின்படி இராஜபான நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 42 வரை அனைத்து வார்டுகளையும், திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் மலம் இல்லாத பகுதியாக (ODF++) அறிவித்து ,நகர்மன்ற நிறைவேற்றப்பட  உள்ளது. இந் நகராட்சி பொதுமக்கள் இப்பொருள் தொடர்பாக  ஏதேனும் ஆட் பணை இருப்பின் உரிய ஆதாரத்துடன் அலுவலக வேலை நாட்களில் அல்லது commr.rajapalayam@tn.gov.in என்ற  முகவரிக்கு இந்த அறிவிப்பு செய்த 15 நாட்களுக்குள் எழுத்து பதிவு செய்யலாம் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.ஆணையாளர்இராஜபாளையம்  நகராட்சிநாள்: 20 . 02 . 2023வெ.ஆ.எண்.32/செ.ம. தொ.அ/2023

1 2 ... 11 12 13 14 15 16 17 18 19 20

AD's



More News