25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் புதுப்பாளையம், சக்கராஜா கோட்டை  அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் புதுப்பாளையம், சக்கராஜா கோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா

சித்திரை மாதம் 24-ம் தேதி (07-05-2024) செவ்வாய்கிழமை இரவு 8.00 மணி அளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்ஜோதி வடிவாய் அமர்ந்து, நாதஸ்வரம், மேளவாத்தியங்கள். கிளாரினெட் கச்சேரி, வான வேடிக்கைகளுடன் புறப்பட்டு, ஜவஹர் மைதானம் தெரு, மதுரை ராஜாக் கடைத்தெரு. தென்காசி - மதுரை மெயின் ரோடு, P.S.K. பார்க் அங்கைய ராஜா தெரு. வளையல் செட்டியார் தெரு. அம்பலப்புளி பஜார் ஸ்ரீ முத்தாலம்மன் பீடம் வந்து ஸ்ரீ குருசாமி கோவில் சிதம்பர மூப்பனார் தெரு வழியாக சுற்றி வந்து ஆலயம் வந்தடையும், அவ்வமயம் பக்த கோடிகள் அனைவரும் தவறாது  பொங்கல் விழா வைபங்களில் கலந்து கொண்டு சிறப்புவித்து அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.

இரவு 10.00 மணிக்கு மேல் வில்லிசை வேந்தர், ஜோதிடர் M.V. மனோகரன் வில்லிசை கலைக் குழுவினர் வழங்கும் வில்லிசை கச்சேரி நடைபெறும். (ஸ்ரீ முத்தாலம்மன் பிறப்பு - வளர்ப்பு கதை)

2-ம் நாள் நிகழ்ச்சிகள்

08.05.2024 சித்திரை 25-ம் தேதி புதன்கிழமை பகல் முழுவதும் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள அலங்காரப் பந்தலில் ஸ்ரீ முத்தாலம்மன் அருள்ஜோதி ரூப சக்தியாய் அமர்ந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும். அவ்வமயம் பொதுமக்கள் அனைவரும் அம்மன் தரிசனம் செய்து, அம்மனின் அருளைப் பெற்று திகழுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

காலை 10.00 மணிக்கு மேல் மதியம் வரை திருமதி. பாண்டியம்மாள் பாடகி பாரதி இசைக்குழு அவர்களின் பக்தி இசைப்பாடல்கள், பாரம்பரிய பஜனை மற்றும் நாமாவளிகள், கும்மி கிராமிய தெம்மாங்குப்பாடல்கள் நடைபெறும்.

இராஜபாளையம் புதுப்பாளையம், சக்கராஜா கோட்டை,அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் டிரஸ்ட்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News