25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மாவட்டம்  திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்ககை நடைபெறுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்ககை நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு மாணவர் சேர்ககை நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA), நில அளவையாளர் (SURVEYOR),  மின்சார பணியாளர் (ELECTRICIAN), இயந்திர வேலையாள் (MACHINIST),  ஆகிய நான்கு தொழில் பிரிவுகளிலும் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம்; ரூ.50/-, நேரில் வர இயலாதவர்கள் செலுத்தி ஆன்லைன் மூலம் www.skill training.tn.gov.in  என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/-, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா  சீருடை (தையற்கூலியுடன்), விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக் கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு பள்ளியில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ 1000/- வழங்கப்படும்.  

இந்த பயிற்சிக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க  ஜீன் 7- ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே திருச்சுழி சுற்றுவட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், மேலும் விபரங்களுக்கு 95788-55154. 70100-40810. 95669-29663 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News