25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 11, 2024

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், அரிசி விலையில் மாற்றம்

 தமிழகத்தில் அரிசியை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாகவே விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்திருந்தது.இதற்கு பிறகு பருவமழை தவறியது, குறைவான விளைச்சல், மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவாகிவிட்டது.. இதனால் நெல் விலையும் அதிகமாகி விட்டது. எனவே, அடுத்த 3 மாத காலத்துக்கு அரிசி விலை உயர்ந்தே காணப்படும் என்று வியாபாரிகளும் கடந்த ஜனவரி மாதமே கணித்து கூறியிருந்தார்கள். காரணம் என்ன: மேட்டூர் அணையும் மூடப்பட்டு, சம்பா சாகுபடிக்கு மழையும் கைகொடுக்காமல் டெல்டா விவசாயிகளும் கையை பிசைந்தனர். இவையெல்லாம்தான் தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு காரணமானது. சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆக உயர்ந்தது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்தது.. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்பனையானது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆகவும், பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரையும் உயர்ந்தது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை எகிறியது... கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில், இப்போது விலை குறைந்து வருகிறதாம்.அரிசி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்துள்ளது.தற்போது கோடை விளைச்சலும், சந்தைக்கு வர தொடங்கிவிட்டதால், அரிசியின் விலையில் மாற்றம் தென்பட்டு வருகிறதாம்.. விலையும் குறைந்து தொடங்கியுள்ளதாம்.. அரிசி விலை: அரிசியின் விலையை சீராக வைத்திருப்பதற்காக மத்திய அரசு அரிசி இருப்பு அளவை கண்காணித்தும் வருகிறது. அதன்படி, ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது... அரிசியின் விலை திடீரென குறைந்துள்ளதால், பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டு வருகிறது.ஆனால், கடந்த 6 மாதங்களை எடுத்துக் கொண்டால், எவ்வளவுதான் அரிசி விலை உயர்ந்தாலும், தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் வராது என்றும், வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும், போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளதாகவும், அமைச்சர் பெரிய கருப்பன் உறுதி தந்தவாறே இருந்தார். அதற்கேற்றவாறு, தற்போதுவரை ரேஷனில் அரிசிக்கு தட்டுப்பாடும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில், ரேஷன் அரிசி தாரர்களுக்கும், நிம்மதி ஏற்பட்டுள்ளது..

Apr 11, 2024

1994-ல்தாத்தாவாங்கிய 500 ரூபாய்பங்கைகண்டுபிடித்தவர்

1994ல் அவரது தாத்தா500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியிருக்கிறார். அந்த பங்குகளை அவரது தாத்தா விற்கவே இல்லை. காலப்போக்கில் அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார்.சண்டிகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தன்மய் மோதிவாலா.1994ல் அவரது தாத்தா500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியிருக்கிறார். அந்த பங்குகளை அவரது தாத்தா விற்கவே இல்லை. காலப்போக்கில் அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார்.1994ல் அவரது தாத்தா செய்த ஒரு சிறிய முதலீடு, தற்போது கணிசமான தொகையாகப் பெருகியிருக்கிறது.இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளவர்,``என் தாத்தா பாட்டி1994ல்500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கினார்கள். அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். அவர்கள் அதை ஏன் வாங்கினார்கள், அவர்கள் அதை வைத்திருந்தார்களா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஓர் இடத்தில் குடும்பத்தின் சொத்துக்களை அடுக்கி வைக்கும்போது இதுபோன்ற சில சான்றிதழ்கள் எனக்குக் கிடைத்தன(ஏற்கனவே இவற்றை டிமேட்டிற்கு மாற்றுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது)’’ என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தபதிவு பலரின்கவனத்தைப் பெறவே, இந்த பங்குகளின்தற்போதைய மதிப்புஎன்ன எனக்கேட்டுள்ளனர். டிவிடெண்டைதவிர்த்து தற்போதுபங்குகளின் மதிப்பு 3.75 லட்சமுள்ளதாகவும், இதுமிகப்பெரிய தொகைஇல்லையெனினும்30 ஆண்டுகளில்750 மடங்கு வருமானம்என்பது உண்மையில்பெரியது என்றும்மருத்துவர் தெரிவித்துள்ளார். அதோடுஇந்த சான்றிதழ்களைடிமேட்டாக மாற்றுவதற்குச்சிரமப்பட்டதைக் குறித்தும்இதற்காக ஓர்ஆலோசகரின் உதவியைப்பெற நேர்ந்ததுஎன்றும் செயல்முறையின்வேதனையான விஷயங்களையும்பகிர்ந்துள்ளார்.

Apr 10, 2024

இந்திய வானின் மன்னன் இண்டிகோ விமான நிறுவனத்தின் ராகுல் பாட்டியா..!

எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டம் பெற்று இரண்டாண்டுகள் ஐபிஎம் நிறுவனத்தில் வேலை பார்த்த ராகுல் பாட்டியா தனக்கு வேறு ஒரு வேலை இருப்பதாகக் கருதினார்.1988 ஆம் ஆண்டில் அவர் தனது தந்தைக்கு உதவ நினைத்தார். இன்டர்குளோப் என்ற நிறுவனத்தை தொடங்கி டிராவல்ஸ் துறையில் புதிய தளத்தை உருவாக்கினார்.காலப்போக்கில், அவர் அதை பயண தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் வணிக ஜெட் விமானங்களில் ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றினார். 1992 இல், தனியார் பங்கேற்புக்கான விமான உரிமங்களை அரசு வழங்கியது. வழக்கமான லஞ்சம் வாங்கும் முறையை ராகுல் விரும்பவில்லை. அவர் ராகேஷ் கங்வால் (யுஎஸ் ஏர்வேஸ்) உடன் இணைந்து விண்ணப்பித்தார். 2004 இல், உரிமம் வந்தது, இண்டிகோ ஏர்லைன்ஸ் பிறந்தது.அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் அனைவரும் விமான நிறுவனத்தை இயக்க முடியாமல் அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில், 2005 ஆம் ஆண்டு பாரிஸ் விமான கண்காட்சியில் $6.5 பில்லியன் மதிப்புள்ள 100 ஏர்பஸ் ஏ320-200 விமானங்களை ராகுல் ஆர்டர் செய்தார். 2006 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி இண்டிகோவின் முதல் ஏர்பஸ் விமானத்தை டெலிவரி செய்தார். ஆகஸ்ட் 4, 2006 அன்று, இண்டிகோ முதல் முறையாக புது தில்லியிலிருந்து குவாஹாட்டி வழியாக இம்பாலுக்கு பறந்தது. அதன் குறைந்த விலையுள்ள - கூடுதல் சேவைகள் இல்லாத மாடலில் விமானம் புறப்பட்டது.இந்த மாடலின் வெற்றியை தொடர்ந்து ராகுல் 2007 இல் மேலும் 15 விமானங்களை வாங்கினார், அப்போது முதல் இண்டிகோ சந்தையை மொத்தமாக புரட்டிப்போட்டது. 2010 இல் ரூ.2664 கோடி விற்பனையைத் தொட்டது.இந்தியாவின் இரண்டு பெரிய தனியார் விமான நிறுவனங்களான - ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங்ஃபிஷர், 2,114 கோடி நஷ்டத்தை சந்தித்தபோது, இண்டிகோ 2010 இல் 550 கோடி லாபத்தை ஈட்டியது. 17.3% சந்தைப் பங்குடன், ஏர் இந்தியாவைத் தூக்கி எறிந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக மாறியது. இண்டிகோ தன் மாடலைப் பற்றி சரியாக கணித்தது. மொத்த ஆர்டர்களுக்கு 40% தள்ளுபடியுடன், விமான நிறுவனங்களில் வாங்கும் போது வெறும் 4% மட்டுமே முன்பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய விமானத்தைப் பெறுவதற்கு விமானத்தை விற்கலாம்.2011ல், இண்டிகோ நிறுவனம் சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி பெற்றதால், 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள 180 ஏர்பஸ் ஏ320நியோ விமானங்களை ராகுல் ஆர்டர் செய்தார். இண்டிகோ வளர்ந்து கொண்டே இருந்தது மற்றும் ஒரு விமானத்தில் 180 பயணிகளுக்கு எகனாமி வகுப்பு இருக்கைகளை மட்டுமே வழங்கியது. 2013 வாக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை முறியடித்து 27% சந்தைப் பங்கைப் பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ ஆனது..நவம்பர் 10, 2015 அன்று, இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் 3008.5 கோடி ஐபிஓவவை வழங்கியது. 6.63 மடங்கு அதிக சந்தா பெற்றதால், இண்டிகோ 44,290 கோடி சந்தை மதிப்பைத் தொட்டது. இண்டிகோ 20 நிமிட திருப்பம் மற்றும் 12 மணி நேர விமானச் செயல்பாட்டு நேரத்துடன் 58.6% சந்தைப் பங்காக வளர்ந்தது. ஏர் இந்தியா (13.2%) மற்றும் விஸ்தாரா (8.65%) கூட நம்ப முடியவில்லை. இன்று, இண்டிகோ 100 இடங்களுக்கு தினமும் 1800 விமானங்களை இயக்குகிறது. 300க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டிருப்பது இந்தியாவில் முதல் முறையாகும் மற்றும் 702 கோடி லாபத்துடன் ஆண்டுக்கு 54,000 கோடி வருவாய் ஈட்டுகிறது. இது ஆண்டுக்கு 85 மில்லியன் பயணிகளுக்கு மேல் பறக்கிறது.ஒரு சிறந்த வணிக மாடல் எந்த நாளிலும் எந்த போட்டியையும் வெல்ல முடியும் என்பதை ராகுல் பாட்டியா நிரூபித்துக் காட்டியுள்ளார்..

Apr 10, 2024

ஹோட்டலில் எண் 13 அறை அல்லது கட்டிடத்தில்13 வது மாடி பெயர்  இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம்! காரணம்?.

நீங்கள் உலகின் பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது விதவிதமான ஹோட்டல்களில் தங்கியிருக்கக் கூடும். பல கட்டிடங்களுக்கும் சென்றிருக்கக் கூடும். அதில் நீங்கள் பல முறை, ஹோட்டலில் எண் 13 அறை அல்லது கட்டிடத்தில் 13 வது மாடி பெயர்  இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம். மேலை நாடுகளில் 13 எண்ணை கேட்டாலே மக்கள் அலறுவதைக் காணலாம் அதற்கான காரணம்?. மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக எண்13 என்பது மிகவும் அபசகுனமாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இயேசுவின் கடைசி விருந்து(LastSupper) சாப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை13 என கூறப்படுகிறது. மேலும் யேசு மரித்த நாள்13ம் தேதி வெள்ளிக்கிழமை என கூறப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்13 எண்ணை பார்த்தாலும், கேட்டாலும், மக்கள் அச்சத்தில் உறைந்து விடுகின்றனர்.இது ஒரு வகையான ஃபோபியா என மருத்துவர்கள் கூறுகின்றனர். எண்13 பற்றிய இந்த பயம் ட்ரிஸ்கைடேகாபோபியா என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் உலகின் பல இடங்களில் குறிப்பாக மேலை நாடுகளில் அறை எண்13 அல்லது13 வது தளம் காணமுடியாது.12 வது மாடிக்குப் பிறகு நேரடியாக14 வது தளம் இருக்கும்.இந்தியாவிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்களில்13ம் எண்ணை காண முடியாது. அதே போல் பல பெரிய ஹோட்டல்கள் அல்லது கட்டிடங்கள் சர்வதேச தரத்தின்படி கட்டப்பட்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல், 13வது மாடி, 13ம் எண் கொண்ட அறைகள் கட்டப்படுவதில்லை. 

Apr 10, 2024

பெங்களூரில் விமான டிக்கெட்டுக்கு நிகரான டாக்சி கட்டணம்

சில நேரங்களில் விமான போக்குவரத்து கட்டணம் என்பது டிமாண்டை பொறுத்து அதிகரிப்பது, குறைவதுமாக இருக்கும். குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கும்.\ஆனால் வாரத்தின் சில நாட்களில் விமான கட்டணங்கள் என்பது நாம் எதிர்பாராத அளவு மிகக்குறைவாக இருக்கும். அப்படி குறைந்த டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு பேரிடியாக விழுந்துள்ளது வாடகை கார்கட்டணம்..மானஸ்வி சர்மா என்பவர் புனேவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். விமான நிலையம் வந்திறங்கிய அவர் வீட்டுக்கு செல்வதற்காக ஊபர் தளத்தில் வாடகை கார் பதிவு செய்துள்ளார்அப்போது வாடகை காருக்கு ஆகும் கட்டணம் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிட்டதட்ட விமான கட்டணத்துக்கு நிகரான வாடகை கார் கட்டணம் இருந்ததை கண்டு ஷாக்கான அவர் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மானஸ்வி சர்மா புனேவில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் 3,500 ரூபாய்க்கு டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு செல்ல ஊபர் வாடகை காரை பதிவு செய்த போது அதில் 2,000 ரூபாய் கட்டணமாக காட்டியுள்ளதுஅந்த ஸ்கிரீன் ஷாட்டை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் புனேவிலிருந்து பெங்களூரு வருவதற்கு 3,500 ரூபாய் தான் கட்டணம் செலுத்தினேன், ஆனால் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து என்னுடைய வீட்டிற்கு செல்வதற்கு 2,000 ரூபாய் நான் செலுத்த வேண்டி இருக்கிறது என பதிவிட்டு இருந்தார்.அவரது இந்த பதிவு எக்ஸ் தள பயன்பாட்டாளர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர் மாற்று வழிகளில் வீட்டிற்கு செல்ல முயற்சி செய்து இருக்கலாமே என்ற யோசனைகளை வழங்கியுள்ளனர். பேருந்துகளை பயன்படுத்தி இருக்கலாமே அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் அழைத்திருந்தால் அவர்கள் நிச்சயமாக 2000 ரூபாய்க்கு கீழேதான் கேட்டிருப்பார்கள் என ஒருவர் கூறியுள்ளார்.அதே வேளையில் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்தும் பலர் புலம்பியுள்ளனர். பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நகருக்குள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வது என்பது மிக மோசமான ஒரு அனுபவமாக மாறி வருகிறது எனக் கூறியுள்ளனர்.

Apr 09, 2024

வெயில் காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் தர்பூசணியில் ரசாயன கலப்படம்

வெயில் காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், உடல் சூட்டை தணிக்கவும் உதவும் தர்பூசணி..சிலர்தர்பூசணியின் உள்புறம் நன்றாகசிவப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக செயற்கையாக ரசாயனங்கள் சேர்க்கிறார்கள். சில ரசாயனங்களை பயன்படுத்தி பழங்களில் அதிக சிவப்பு நிறத்தை கொண்டு வருகின்றார்கள். இதனை வாங்கி சாப்பிடும் போது உடல் நலம் பாதிப்படைகிறது.பழுக்காத தர்பூசணியை விரைவில் பழுக்க வைக்க ஆக்சிடாசின் ரசாயனத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த ரசாயனத்தால் வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.சீக்கிரம் பழுப்பதற்காக கால்சியம் கார்பைடையும் பயன்படுத்துகிறார்கள். இதை சாப்பிடுவதால் தலைவலி, கண்பார்வை பாதிப்பு ஏற்படும்.சிவப்பு நிற ரசாயனத்தை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் தர்பூசணிக்குள் செலுத்தி விடுவதால் பார்ப்பதற்கு நல்ல கலரில் இருப்பதுடன் பழுத்ததாக நினைத்து மக்களும் வாங்கி விடுகிறார்கள்.இதனால் சிலருக்கு வயிறு உப்புசம், வாந்தி, மூச்சிரைப்பு, டயரியா, கண் பார்வையில் கோளாறு போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.பழங்களின் ஓரங்களில் உள்ள வெள்ளை பகுதிகள் வெள்ளை நிறமாக இல்லாமல் சிவப்பு கலந்து காணப்படும்.தர்பூசணி துண்டு ஒன்றை எடுத்து தண்ணீரில் போட்டு வைக்க தண்ணீரின் நிறம் மாறும்.ரசாயனம் கலந்த இந்த பழங்கள் சீக்கிரம் அழுக ஆரம்பித்து விடும்.வியாபார லாபத்திற்காக இப்படி கலப்படம் செய்து மக்களின் உயிருடன் விளையாடுவது மிகவும் தவறான செயல். இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு நிச்சயம் வேண்டும். 

Apr 09, 2024

முடி வளர்ச்சிக்கு உதவும் சின்ன வெங்காயச்சாறு

முடியை பராமரிக்க உதவுவதில் சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயமும் ஒன்று நம் பாட்டிமார்கள் தலையில் பூஞ்சைத் தொற்றினால் அரிப்பு என்றால் உடனே இரண்டு சின்ன வெங்காயத்தை உழித்து அதன் சாற்றை தலையில் வைத்து அழுத்தி தேய்ப்பதை பார்த்திருக்கிறோம். அன்று பாட்டிமார்கள் செய்த விஷயம் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து மருத்துவமும் இதை ஆதரிக்கிறது என்பதற்கு சாட்சிதான் சந்தைகளில் கிடைக்கும் வெங்காயச்சாறு கலந்த ஷாம்பூக்கள்.தகுந்த முறையில் பயன்படுத்தும்போது சின்ன வெங்காயசாறு தலைமுடி உதிர்வைத் தடுப்பதுடன், முடியின் வேரை வலுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள கந்தகம்(சல்பர்) என்னும் வேதிப்பொருள் இருப்பதே. இது முடி வளர்ச்சிக்கு உதவும் அவசியமான புரதம் ஆன கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சின்ன வெங்காய சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால் பொடுகு போன்ற தொற்றுக்களை நீக்கவும் உதவுகிறது.சின்ன வெங்காயம் அதிகப்படியான முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. இவர்கள் தாராளமாக அந்த இடத்தில் சின்ன வெங்காயச் சாறை பயன்படுத்தி முடி கொட்டுதலை தடுத்தும், புதிய முடிகளை வளரச் செய்தும் பயன்பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து முடியை பாதுகாக்க உதவுகிறது. மேலும் சிலருக்கு வயது ஆவதற்கு முன்பே முடி நரைக்கும் பிரச்சனை உண்டு இதை தடுக்கவும் சின்ன வெங்காயச்சாறு உதவுகிறது. நம் உச்சம் தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் கலவைகள் வெங்காயச் சாற்றில் உள்ளன மேலும் முடி வளர்ச்சிக்கு உதவும் மயிர் கால்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது..ஒரு கைப்பிடி அளவு அல்லது தேவைப்படும் சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதை தோல் உரித்து மண் போக நன்கு கழுவிக்கொண்டு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாறை எடுத்து நேரடியாகவும் தலையில் தடவி30 நிமிடம் கழித்து அலசலாம்.அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வேசாக சூடுபடுத்தியும் முடியில் வேர்க்கால்களில் படுமாறு தடவி மசாஜ் செய்யலாம். இந்த சின்ன வெங்காய சாற்றுடன் தேன் அல்லது கற்றாழை ஜெல் போன்றவற்றைக் கலந்து ஹேர் பேக் போல் முடிக்கு போட்டு பின் குளிக்கலாம்.முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர இதை டிரை செய்யுங்கள்.ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெங்காயச் சாற்றுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்துக் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர்.வெங்காயச்சாறு தயாரிக்கும் போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வெங்காயம் நன்கு வெந்து அதில் உள்ள சாறு வெளியேறி நீர் குறைந்ததும் அந்த நீரை வடிகட்டியும் முடிக்கு அப்ளை செய்வது இன்னொரு முறை. வெங்காயத்தை மைய அரைத்து அப்படியே பேக் போட்டுக் குளித்தாலும் முடிக்கு ஊட்டச்சத்து தரும். இப்படி பல முறைகள் உள்ளன. அலர்ஜி அல்லது தொற்று பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணர் ஆலோசனைப்படி பயன் படுத்துவதே சிறந்தது.

Apr 08, 2024

புதியசேவையைக்கொண்டுவந்தPhonePe.

போன்பே (PhonePe) நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு பயணம் செய்யும் பயனர்கள் அங்கு போன்பே செயலியைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு பயணம் செய்யும் பயனர்கள், அங்கு போன்பே செயலியை (ஆப்) பயன்படுத்தி சில்லறை கடைகள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் விடுமுறை இடங்கள் ஆகியவற்றில் Mashreq இன் Neopay டெர்மினல்களில் பணம் செலுத்தும் சேவையைக் கொண்டுவந்துள்ளது.குறிப்பாக இந்த தகவல்களை போன்பே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் பரிவர்த்தனை மாற்று விகிதத்தைப் பிரதிபலிக்கும் என்றும் கணக்கில் இருந்து இந்திய ரூபாயில் பணம் டெபிட் செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் போன்பே செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும், அவர்கள் இந்திய வங்கிகளில் தங்களுடைய குடியுரிமை இல்லாத கணக்குகளைப் பயன்படுத்தி அங்குப் பணம் செலுத்த முடியும் இதுதொடர்பாக போன்பே நிறுவனத்தின் இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் சிஇஓ ரித்தேஷ் பாய் தெரிவித்தது என்னவென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். குறிப்பாக இந்திய சுற்றலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். போன்பே கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி இங்கும் வரும் இந்தியர்கள் பணம் செலுத்துவதை எளிதாக்கும்.இது யுபிஐ (UPI) வசதியை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். Mashreq இன் Neopay டெர்மினல்கள் யுபிஐ ஒரு கட்டண கருவியாக ஏற்க உதவுகிறது என்று அவர் தெரிவித்தார். அதேபோல் பேடிஎம் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் பலர் போன்பே செயலியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்த போன்பே நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சேவைகளைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. அதேபோல் போன்பே போன்று வாட்ஸ்அப் நிறுவனமும் கூடிய விரைவில் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தற்போது சர்வதேச யுபிஐ பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்தியப் பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனவே வாட்ஸ்அப் நிறுவனமும் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களில் புதிய வசதியானது யுபிஐ செட்டிங்ஸ் (UPI Settings) பக்கத்தில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) எனும் ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது என்பது தெரியவந்துள்ளது.மேலும் வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் இந்த விருப்பத்தைத் தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷன் என்பதை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன்பின்பு எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும் 

Apr 08, 2024

தமிழ்நாட்டில் உள்ள பாலைவனம் குதிரைமொழி தேரி

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருந்து15 கிலோ மீட்டர் தொலைவிலே தான் தேரிக்காடு உள்ளது. இங்குள்ள மணல்கள் சிவப்பு மணல் மேடுகளால் ஆனதாகும். இது12,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இக்காட்டிற்கு இன்னொரு பெயர் உண்டு அதுதான், குதிரைமொழி தேரி.இங்கிருக்கும் சிவப்பு மணல் மேடுகள் காற்றின் காரணமாக மாறிக்கொண்டேயிருக்கும் தன்மை கொண்டது. இக்காட்டிற்குள் அதிகம் தூரம் சென்றால் தொலைந்து விடுவோம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் நிலப்பரப்பு அடிக்கடி காற்றினால் மாறிக் கொண்டேயிருப்பதால் வழி மறந்துவிடும் என்று அங்கிருக்கும் மக்கள் கூறுகிறார்கள்.தேரிக்காட்டில் முந்திரி செடிகளும், பனை மரங்களுமே அதிகமாக காணப்படுகிறது. தேரிக்காட்டில் உள்ளது போன்று சிவப்பு மணல்கள் அந்த பகுதிகளில் வேறு எங்குமே கிடையாது. இங்கு மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்பு மணல்கள் அமைந்திருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று. இங்குள்ள மணல் படிமங்கள் 2.6 மில்லியன் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. கடலில் இருந்து வந்து படிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கேயிருக்கும் நிலப்பகுதியை மூன்று அடுக்குகளாக பிரிக்கிறார்கள். அதில் முதல் அடுக்கு 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் இரண்டாவது அடுக்கு 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் மேல்பகுதி 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முந்தையதும் என்றும் கூறப்படுகிறது.இங்கிருக்கும் மணல்களில் இரும்பு ஆக்ஸைட் (Iron oxide) உள்ளதால் இது சிவப்பு நிறத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.அருஞ்சுணை காத்த அய்யனார் கோவில் மற்றும் கருகுவேல் அய்யனார் கோவில் இங்குள்ள மிகவும் பிரபலமான அய்யனார் கோவில்களாகும். அருஞ்சுணை காத்த அய்யனார் கோவிலில் இருக்கும் சுணை நீர் மிகவும் சுவையாக இருக்கும். இந்த பாலைவனத்தின் நடுவிலே ஒரு அழகிய நீர்சுணை அமைந்திருப்பது மேலும் அதிசயமாக உள்ளது. அதை விட அதிசயம், அது வற்றாத நீர்சுணை என்று அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.தேரிக்காட்டில் சூரிய உதயமும், அஸ்தமனமும் காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் என்பதால் நிறைய சுற்றுலாப்பயணிகளை இங்கே ஈர்க்கிறது என்றே சொல்ல வேண்டும்.இத்தனை காலமாக பெரிதும் அறியப்படாத இடமாக இருந்த தேரிக்காடு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது..இங்குள்ள சிவப்பு மணல்கள் புகைப்படம் எடுப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதனால், புகைப்படக்கலைஞர் களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது.எனவே வளர்ந்து வரும் சுற்றுலாத்தலமான தேரிக்காட்டின் அழகை நிச்சயமாக ஒருமுறையாவது ரசித்துவிட்டு வர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Apr 06, 2024

பயணர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. “  “வாட்ஸ்அப்”

வாட்ஸ்அப்Navigationbar அம்சத்தை ஸ்கிரீன் கீழே கொண்டு வந்து அப்டேட் கொடுத்துள்ளது. இதன் மூலம்iOS போலவே ஆண்ட்ராய்டு பயன்பாட்டை மாற்றியுள்ளது.மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயணர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இன்டர்வேஸில் மாற்றம் செய்துள்ளது. அதாவது வாட்ஸ்அப்navigationbarஐஸ்கிரீன் கீழே கொண்டு வந்து அப்டேட் கொடுத்துள்ளது. முன்னதாக,chats,calls,updates,communities அம்சங்கள் ஸ்கிரீன் டாப்ல் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கீழே கொண்டு வந்து மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம்iOS போலவே ஆண்ட்ராய்டு பயன்பாட்டை மாற்றியுள்ளது. இது பயன்படுத்த மிக எளிதாக இருக்கும் வகையிலும், பயனர் அடுத்த டேப்க்கு எளிதாக மாற்றும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. 

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 47 48

AD's



More News