25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 20, 2024

3 தலைநகரங்களை கொண்ட ஒரே .இந்திய மாநிலம்

இந்தியாவில் நிர்வாக ரீதியாக 3 தலைநகரங்களைக் கொண்ட ஒரே மாநிலம் ?ஒரு பொது அறிவு சார்ந்த கேள்விதான் உலாவி வருகிறது. பலருக்கும் இதற்கு பதில் தெரியவில்லை..இந்தியாவில் நிர்வாக ரீதியாக 3 தலைநகரங்களைக் கொண்ட ஒரே மாநிலம் ஆந்திர பிரதேசம்தான். ஆந்திராவின் முதல் தலைநகரம் விசாகப்பட்டினம். மாநில செயற்குழு இங்குதான் அமைந்துள்ளது, அதாவது மாநில அரசு இங்கிருந்து அனைத்து நிர்வாக வேலைகளையும் செய்கிறது.ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது தலைநகம் அமராவதி. இங்கு தான் மாநில சட்டமன்றம் அமைந்துள்ளது. இங்கு அனைத்து எம்எல்ஏக்களும் மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கின்றனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மூன்றாவது தலைநகரம் கர்னூல்தான். இங்குதான் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் உள்ளது, அங்கு மாநிலத்தின் முக்கியமான விஷயங்கள் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன.

Apr 20, 2024

அதிகரிக்கும் விவாகரத்துகள் நம் இந்தியாவில்....

இந்தியாவில், விவாகரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காதல் திருமணம்VS நிச்சயிக்கப்பட்ட திருமணம்.விவாகரத்து என்ற முடிவை எடுக்கும் தம்பதிகளில், காதல் திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள். விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்?  சின்ன சின்ன சண்டைகள் போட்டால் கூட, அதை சரி செய்து, தீர்வு காண்பதற்கு முன்னமே, உடனே பிரிவு தான் அதற்கான தீர்வு என்று உடனடியாக நீதிமன்றத்தை அணுகும் தம்பதிகள் ஏராளம்.    விவாகரத்து அதிகரிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று, திருமணம் ஆகியும் இன்னொரு ஆண் / பெண்ணிடம் உறவில் இருப்பது. Extra marital affairs என்பது பரவலாகி இருப்பது விவாகரத்தையும் அதிகரிக்கிறது  இன்றைய நவீன உலகில், காதல் திருமணத்துக்கு எதிர்ப்புகள் குறைந்து வருகிறது, காதலிப்பவர்களே எதிரியாக மாறிவிடுகின்றனர். காதல் திருமணம் செய்தவர்கள் தான் அதிக அளவில் விவாகரத்து கோருகிறார்கள். இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் அதீதமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நடைமுறையில் இல்லாத அளவுக்கு வேறுபாடுகளை ஏற்படுத்தி, விவாகரத்துக்கு வழிவகுக்கின்றன. சோஷியல் மீடியாவில் மற்றவர்களைப் பார்த்து தன்னுடைய வாழ்க்கையும் அதே போல இருக்க வேண்டும், அதே போல வாழ வேண்டும் என்ற போட்டித்தன்மை தனிப்பட்ட கணவன் மனைவி வாழ்க்கையை பாதிக்கிறது. பிஸியான வாழ்க்கை முறையால் கணவன் மனைவி நேரம் செலவழிப்பதே அரிதாகி வருகிறது. இதில் ஒருவர், மற்றவருடன் போதிய அளவு நேரம் செலவிட முடியாமல், கணவனோ அல்லது மனைவியோ தனிமையை உணர்வது, ஒரு கட்டத்தில் பிரிவை நோக்கிய முடிவை எடுக்க வைக்கும்   திருமணங்கள், இப்போது வரை விருப்பத்தோடு தான் நடக்கிறது என்று கூற முடியாது. ஆண், பெண் இருவருக்குமே, விருப்பம் இல்லாமல், பெற்றோர்கள் வற்புறுத்தல், வயதாகிறது என்ற காரணம், சமூகத்தில் அழுத்தம் போன்றவற்றால் கட்டாயத்தால் திருமணம் செய்வது விவாகரத்தில் முடிகிறது.  எல்லா விஷயங்களிலும் பெற்றோர்கள் தலையிடுவது, கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய பிரச்சனைகளைக் கூட பெரிதாக்கி விடுகிறது. விவாகரத்து அதிகரிக்க இது முக்கியமான காரணமாகி உள்ளது. திருமண வாழ்வில் பாலியல் உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பாலியல் உறவில் பாதிப்பு, நெருக்கமின்மை போன்றவை, பிரிவை நோக்கிச் செல்லும். உடல் ரீதியாக துன்புறுத்துவது, வார்த்தைகளால் காயப்படுத்துவது, தினமும் ஒரு சண்டை என்று எப்போதும் ஏதோ ஒரு வகையில் abuse என்பது விவாகரத்து நோக்கி முடிவு எடுக்க வைக்கிறது.  இன்று சில தம்பதிகள் குழந்தை பெற்று கொள்ள விரும்பவில்லை. கணவன் அல்லது மனைவி ஒருவருக்கு குழந்தை பெற விருப்பமில்லை என்றால், அவர்கள் விவாகரத்து நோக்கி செல்கிறார்கள்.

Apr 20, 2024

நாட்டின் முன்னனி நிறுவனமான HCL டெக்னாலஜிஸின் தலைமைப் பதவியில் ரோஷ்னி ரூ.84,000 கோடி சொத்து..!

42 வயதில், நாட்டின் முன்னனி நிறுவனமானHCL டெக்னாலஜிஸின் தலைமைப் பதவியில் ரோஷ்னி.இந்திய பணக்காரராக மட்டுமல்ல வணிகம், தொண்டு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.84,330 கோடி சொத்து மதிப்புடன், இந்தியாவில் பணக்கார பெண்களில் இவரும் ஒருவர்வித்யாக்யான் லீடர்ஷிப் அகாடமியின் தலைவராக இருக்கும் ரோஷ்னி, நாடார் மல்ஹோத்ரா ஆதரவற்ற இளைஞர்களுக்கான கல்வி சேவையை வழங்குகிறார்:டெல்லியின் ஃப்ரெண்ட்ஸ் காலனி கிழக்கில் அவருக்கு பிரம்மாண்ட சொகுசு  பங்களா உள்ளது ரூ.115 கோடி மதிப்பு கொண்ட ,இந்த பங்களா அவரது வெற்றி மற்றும் அந்தஸ்துக்கு சான்றாகும்

Apr 20, 2024

ஜப்பானியர்கள் கடினமாக உழைப்பதில் மட்டுமல்ல, பணம் சேர்ப்பதிலும் வல்லவர்கள். பணம் சேர்க்கும் டெக்னிக்

ஒரு மனிதர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் அதை சேர்த்து வைப்பதில்தான் அவரது திறமை அடங்கியுள்ளது. சம்பாதித்த பணத்தை தாறுமாறாக செலவழித்து விட்டால் எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாது. ஜப்பானியர்கள் கடினமாக உழைப்பதில் மட்டுமல்ல, பணம் சேர்ப்பதிலும் வல்லவர்கள். ஜப்பானியர்கள் அரிகாத்தோ(Arigato) என்ற தத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதன் பொருள் நன்றி. ஜப்பானியர்கள் எல்லாவிதமான செயல்களிலும் நன்றியுணர்வை வெளிப்படுத்துவார்கள். நன்றி நன்றி என்று தினமும் பலமுறை சொல்வது அவர்களது வழக்கம். நன்றி உணர்வு ஜப்பானிய கலாசாரத்தின் ஒரு மிக முக்கியமான பகுதியாகும்..கடவுள் தமக்கு தந்திருக்கும் இந்த நல்ல வாழ்க்கை மட்டுமல்ல, பொருள், பணம் என்று அனைத்து விஷயங்களுக்குமே நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள் ஜப்பானியர்கள். ஒரு ஜப்பானியர் செல்வந்தராகவோ அல்லது ஓரளவு பணம் உடையவராகவோ அல்லது ஏழையாகவோ கூட இருந்தாலும், அவர்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களுக்கு நன்றி சொல்வது வழக்கம்.தாங்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் சாதாரண பொருட்கள் முதல் அனைத்திற்கும் நன்றி சொல்வார்கள். அவற்றின் மீது இணையற்ற மரியாதையும் பாராட்டும் வைத்திருப்பார்கள். இந்த ஆழ்ந்த நன்றி உணர்வை பணத்திற்கும் கடைப்பிடிக்கிறார்கள்.தாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு யென்னிற்கும் நன்றி தெரிவிக்கிறார்கள். அது மட்டுமல்ல, செலவழிக்கும் பணத்திற்கும், முதலீடு செய்யும் பணத்திற்கும், பிறருக்கு பணம் தரும்போதும் ஒவ்வொரு பைசாவிற்கும் நன்றி சொல்கிறார்கள். ஏதாவது பொருட்களை வாங்கிவிட்டு பணம் தரும்போது கடனே என்று தராமல் நன்றி சொல்லித் தருகிறார்கள். அவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது கண்டக்டர் டிக்கெட் கொடுத்தால் நன்றி சொல்லித்தான் டிக்கெட் பெறுகிறார்கள். ஒவ்வொரு பைசாவையும் நன்றி சொல்லி செலவழிப்பதன் மூலம் அவர்கள் புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுக்கிறார்கள்.பணத்தை சரியான இடத்தில் வைத்திருப்பார்கள். பர்சில் வைத்திருந்தாலும் அதை கசங்கல் இல்லாமல் நன்றாக நேர்த்தியாக அதை ஒழுங்காக வைத்திருப்பார்கள். கசங்கியோ, அழுக்காகவோ சுருட்டலாகவோ இருக்காது.கொடுக்கும் செயல் பெறுபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. இது நன்றியுணர்வு சுழற்சியை வலுப்படுத்துகிறது தானமாக பிறருக்கு பணத்தைக் கொடுக்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் தருகிறார்கள். இதனால் அவர்களுடைய பணம் இரட்டிப்பாகிறது. தங்களிடம் பணம் பெற்றுக் கொள்பவர்களிடம் கூட நன்றி சொல்வது அவர்களது உயர்ந்த பண்பு. பிறருக்குத் தரும் அளவுக்கு தங்களிடம் நிதி உள்ளது என்பதற்கான மனநிறைவுக்கான அடையாளமாக நன்றி சொல்கிறார்கள்நன்றி உணர்வுடன் இருப்பது பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தேவையில்லாத செலவுகளை செய்வதை தடுக்கிறது…ஜப்பானிய கலாசாரமும் நமது இந்தியக் கலாசாரத்தை நிறையவே ஒத்திருக்கிறது. நாமும் பணத்தை மகாலட்சுமி என்று சொல்வோம். பணத்தை மிகவும் மதிப்போம். அதை பத்திரமான இடத்தில் வைப்பது வழக்கம்.. பணத்தை தேவையில்லாத இடங்களில் வைக்க மாட்டோம். இடது கையால் பணம் பெறவோ, கொடுக்கவோ மாட்டோம். பணத்தை மதிக்கும் விஷயத்தில் இந்தியக் கலாசாரத்தை ஒத்திருக்கிறது ஜப்பானியக் கலாசாரமும்…..

Apr 19, 2024

மூலிகை : இலைக்கள்ளி

தாவரப்பெயர் : EUPHORBIBA LIGULARIAதாவரக் குடும்பம் : EUPHORBIACEAEபயன்படும் பாகங்கள்-இலை, பூ, காய், பழம், விதை, நெய்,பிண்ணாக்கு, மரப்பட்டைதலை வலி, மது மேகம், நீரிழிவு காய்ச்சல், சொறி, சிறங்கு,  இடுப்புவலி, நரம்பு தளர்ச்சிக்கு மருந்தாக பயன்படும்  

Apr 18, 2024

உயரமான ஏரி

இந்தியாவின் மிக உயரமான ஏரி என அழைக்கப்படும் 'குருதோங்மர்' ஏரி,வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் மங்கன் மாவட்டத்தில் இமயமலை தொடரில் உள்ளது.கடல் மட்டத்திலிருந்து16,929 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நன்னீர் ஏரியான இது சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் இருந்து190 கி.மீ., துாரத்தில் உள்ளது பரப்பளவு132 ஹெக்டேர். ஹிந்து, சீக்கியர், புத்த மதத்தினருக்கு இது புனித நதியாக கருதப்படுகிறது ஏப்ரல்,மே,டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப்பயணிக இதை ரசிக்கலாம். திபெத் எல்லையில் இருந்து 5 கி. துாரத்தில் உள்ளது.

Apr 18, 2024

தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலை சுற்றுலா

தமிழ்நாட்டில் கேரள எல்லையை ஒட்டி உள்ள தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலை சுற்றுலா தலத்திற்கு கேரளா வழியாகவே போக முடியும்.. இப்போது போனால் ரம்மியான அதன் சூரிய உதயம் மற்றும் காலநிலையை கண்டு மெய்சிலிர்க்கலாம்.கேரளாவின் இடுக்கி மாவட்டம் சூரியநல்லி அருகே கொழுக்குமலை என்ற அழகிய கிராமம் மிகப்பெரியமலை சிகரங்களுடன் குளுகுளு கால நிலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு கேரளா வழியாக மட்டுமே வாகனங்களில் உங்களால் போக முடியும் . ஆனால் இது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவுக்கு உட்பட்டது.போடிமெட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூர்யநெல்லிக்கு உங்கள் சொந்த வாகனங்களில் போக முடியும். ஆனால் காரை அங்கு நிறுத்திவிட்டு, அங்குள்ள ஜீப்பில் பயணித்து மட்டுமே உங்களால் கொழுக்குமலையை அடைய முடியும்.வானமே வசீகரித்து சூரியனை நீல ஒளி வீச வைக்கும் இடம்.. பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள் பனி மூட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் கொழுக்குமலை தான் ஆசியாவின் மிக உயரமான தேயிலை தோட்டம் அமைந்துள்ள பகுதியாகும். மூணாறுக்கு யார் வந்தாலும் கண்டிப்பாக வரக்கூடிய பகுதி தான் கொழுக்குமலை. கொழுக்குமலைக்கு மாலைக்குள் போய் இரவில் தங்கி சூரிய உதயத்தை இங்கு காண கோடி கண்கள் வேண்டும். கொழுக்குமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 7130 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மூணாறிலிருந்து சுமார் 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கொழுக்குமலை இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற டிரக்கிங் தலம் ஆகும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள் . ஆனால் கொழுக்குமலையில் ஒரே ஒரு தங்கும் விடுதி தான் உள்ளது. இந்த இடத்தில் புக்கிங் செய்தவர்கள் தான் தங்க முடியும்.கொழுக்குமலை போகிறவர்கள் அப்படியே மூணாறில் இருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில் பூம்பாறை அருகே அமைந்துள்ள சந்தாம்பாறைக்கும் சென்று வருவார்கள் . சாந்தாம்பாறை பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் சதுரங்க பாறை என்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது... இங்கிருந்து ஒருபக்கம் தமிழ்நாட்டையும் மறுபக்கம் கேரளாவையும் பார்க்க முடியும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் மாவட்டத்தின் மொத்த அழகையும் ரசிக்க முடியும்.இந்த சதுரங்கப்பாறை கிராமத்திற்கு பூம்பாறை அல்லது சூரிய நெல்லியில் இருந்து ஜீப் மூலமாக போகலாம். கொழுக்குமலையில் காலையில் சூரிய தரிசனத்தை பார்த்துவிட்டு மலைகளை ரசித்துவிட்டு மதியம் சூரிய நெல்லி வந்து அங்கிருந்து ஜீப் மூலம் சதுரங்கப்பாறைக்கு போகலாம். இதேபோல் சதுரங்கப்பாறையை அருகில் ராமக்கல் மேடு என்ற இடமும் உள்ளது. இதுவும் சிறப்பான சுற்றுலா தலம் ஆகும்..

Apr 17, 2024

காரில் AC போட்டவுடன் விரைவில் Cooling ஆக.....

இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது.இந்த சூழ்நிலையில் காரில் பயணம் செய்பவர்கள் நிச்சயமாக ஏசியை போட்டு தான் பயணம் செய்வார்கள்.அதே போல, வெளிக்காற்றும் அனலாக இருக்கும் என்பதால் காரின் ஜன்னலை திறந்து வைக்க முடியாதபடி இருக்கும். இதனால், அவர்கள் காரின் ஜன்னலை மூடடி வைத்து ஏசியை ஆன் செய்து வைத்து பயணிப்பார்கள்.தற்போது கோடை காலம் வந்துவிட்டதால் உங்களது காரில் இருக்கும்AC செயல்படுகிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் காரில் செல்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.உங்களது காரை எப்பவும் நிழல் இருக்கும் இடத்தில் நிறுத்துங்கள். சூரிய ஒளி இருக்கும் இடத்தில் உங்களது காரை நிறுத்தினால் கேபினில் அளவுக்கதிமாக வெப்பம் இருக்கும்.உங்களது காரை நிறுத்தும்போது ஜன்னல் கதவுகளை முழுமையாக மூடாமல் திறந்து வையுங்கள். அதாவது, காருக்குள் காற்று சென்ற வரும் வகையில் வழி ஏற்படுத்தி வையுங்கள்.எடுத்த உடனேயே ஏசியை முழு full blower mode- ல் வைக்காமல் படிப்படியாக காற்று வரும் வேகத்தை கூட்டுங்கள்.காரில் இருக்கும் AC Filter -யை சுத்தப்படுத்துங்கள். வேண்டுமானால், அதனை மாற்றிக் கொள்ளுங்கள்..உங்களது ஏசி சரியாக இயங்குவதற்கு நீங்கள்ரெகுலராக அதனை பயன்படுத்த வேண்டும். சிறிய தொலைவிற்கு சென்றால் கூட பயன்படுத்த வேண்டும்.இந்த  வழிமுறைகளை பயன்படுத்தியும் ஏசி கூலிங் ஆகவில்லை என்றால் சர்வீஸ் செய்வது நல்லது.   

Apr 17, 2024

லாபம் தரும் Post Office Saving Scheme

மாதம் ரூ.9250 வழங்கும் பிரதம மந்திரியின் மாத வருமான திட்டம் MonthlyIncomeSchemeபல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக, அரசு ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டங்கள் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது.அந்தவகையில், MIS (எம்ஐஎஸ்) (Monthly Income Scheme) என்று சொல்லக்கூடிய மாதாந்திர வருமானத்  திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். இதன் ஆண்டு வட்டி விகிதம் 7.4 % ஆகும்.Deposit செய்யப்படும் முதலீடு தொகையின் மூலம் மாதம் தோறும் வட்டியை பெறலாம். இந்த டெபாசிட் தொகை முதிர்வடைந்ததும் உங்களுக்கு திருப்பி தரப்படும்.ஆனால், அதற்கு முன்பே நீங்கள் டெபாசிட் தொகையை எடுக்க விரும்பினால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளது.நீங்கள் முதலீடு செய்த தொகையை ஒரு வருடம் முதல்3 வருடஇடைபட்ட காலத்தில் திரும்ப பெற நினைத்தால் டெபாசிட் தொகையிலிருந்து 2 % பணம் அபராதமாக வசூலிக்கப்படும்.3 வருட காலத்திற்கு பிறகு பணத்தை திரும்ப பெற நினைத்தால் டெபாசிட் தொகையிலிருந்து 1 % அபராதமாக வசூலிக்கப்படும். ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.5,500 கிடைக்கும். அதேபோல, கூட்டு கணக்கு மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு மாதம்தோறும் ரூ.9,250 கிடைக்கும். 

Apr 17, 2024

வளர்ப்பு பிராணிகளை விரும்பி வளர்ப்பது  நாயையா? பூனையையா..?

வீடுகளில் பலர் நாய். பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை விரும்பி வளர்ப்பது வழக்கம். இந்நிலையில் பூனையை விட, நாய்களை வளர்ப்பதற்கு தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியா. டென்மார்க். அமெரிக்கா, பிரிட்டனில்2117 பேரிடம் ஆய்வு நடந்தது. இதில்844 பேர் நாய்,872 பேர் பூனை,401 பேர் இரண்டும் வைத்திருந்தனர். இதில் பலரும் பூனையை விட நாய்களுக்கு காப்பீடு உள்ளிட்ட பல வசதிகளை செய்வதாகவும், அதிக கவனமுடன் கவனிப்பதாகவும் தெரிவித்தனர்.

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 47 48

AD's



More News