25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 05, 2026

மண்பானை > குளிர் சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட நீர் உடலில் வாதத்தை அதிகரிக்கும். இது மூட்டு வலி, வாய்வு மற்றும் மலச்சிக்கல் போன்றபிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.பானை நீர் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும் திறன் கொண்டது.மூளை மற்றும் செரிமான அமைப்புக்கும் நன்மை பயக்கும்.

May 05, 2026

ரூ.755 பிரீமியத்தில் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி', பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது.18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். 

May 05, 2026

நைட் ஷிஃப்ட்டில் பணிபுரிந்தால் உடலின் இயல்பான நேரச்சுழற்சி பாதிக்கப்படும்.

ஊழியர்கள் தொடர்ந்து நைட் ஷிஃப்ட்டில் பணிபுரிந்தால், உடலின் இயல்பான நேரச்சுழற்சி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் டைப்-2 சர்க்கரை நோய், இதய கோளாறு, ஹார்மோன் சமநிலை குறைவு என பல உடல் நல பிரச்சினைகளை சத்தமின்றி உருவாவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு.

May 05, 2026

புதிய சட்டம் இனிமேல் சிம்கார்டு வாங்கனும்ன்னா, பயோமெட்ரிக் அவசியம்.

இந்தியாவில் அதிகரித்து வரும்'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகளை கட்டுப்படுத்த, சிம் கார்டு பெறுவதில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் சந்தேகத்திற்கிடமான வங்கி பரிவர்த்தனைகளை தற்காலிகமாக முடக்குவது உள்ளிட்ட அதிரடித் திட்டங்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.காவல்துறை அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்து, பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் இந்த மோசடிகளை தடுக்க பலமுனை உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சிம் கார்டுகளை வழங்கும் போது பயோமெட்ரிக் அடையாள சோதனையை கட்டாயமாக்கவும், மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளை உடனடியாக முடக்கவும் தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் மோசடி அழைப்புகளை கண்டறியும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், நீக்கப்பட்ட கணக்குகளின் தரவுகளை180 நாட்கள் வரை சேமித்து வைக்கவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.வங்கி துறையை பொறுத்தவரை, சைபர் மோசடிகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தற்காலிகத்தடை விதிக்கும் ரிசர்வ் வங்கியின் நடைமுறையை நாடு முழுவதும் சீராக அமல்படுத்த கோரப்பட்டுள்ளது.  2024,ஆம் ஆண்டில் அரசு அதிகாரிகள் முதல் முதியவர்கள் வரை பலரையும் பாதித்துள்ள இந்த'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகளை குறைக்க தொழில்நுட்பதளம், வங்கி மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்பட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

May 05, 2026

இந்தியாவில் AC வெடிப்பு அபாயம்.

உங்கள் வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்: 1. AC unit check (use AC indoor/outdoor image icon) “உள் மற்றும் வெளி யூனிட்கள் சுத்தமாகவும் நல்ல நிலையில் உள்ளதா பார்க்கவும்.” 2. Outdoor protection (sun + AC unit image) “நேரடி வெயிலில் கம்ப்ரசர் அதிகமாக சூடாகாமல் shade அல்லது cover பயன்படுத்தவும். 3. Voltage stabilizer (electric icon) “மின்சாரம் மாறுபாடு AC-க்கு சேதம் செய்யலாம், stabilizer பயன்படுத்தவும். 4. Gas leak warning (pipe + oil leak image) “பைப் பகுதியில் கருப்பு எண்ணெய் இருந்தால் உடனே சரிசெய்யவும். 5. Warning signs (fire / alert icon) "விசித்திரமான சத்தம் அல்லது எரியும் வாசனை இருந்தால் உடனே AC அணைக்கவும். AC வெப்பதிலை 24°C - 26°C வைத்தால் மின்சாரம் சேமிக்கலாம் மற்றும் கம்ப்ரசர் பாதுகாப்பாக இருக்கும்.

May 05, 2026

த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை,

மகளிர் மேம்பாடு.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500. 6 விலையில்லா சிலிண்டர்கள்: மணப்பெண்களுக்கு தங்கம் + பட்டுச்சேலை; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; மாணவர்களின் அம்மாக்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி: மகளிர் குழுக்களுக்கு ரூ.லட்சம் வட்டியில்லா கடன்.உலகத்தரக் கல்வி..உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன்; நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், Al மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்சுகாதாரமான தமிழ்நாடு.குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மருத்துவக் காப்பிடு; நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை; ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை; போதைப்பொருள் இல்லா தமிழ்நாடுசமூகப் பாதுகாப்பு.முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்தியம்: 200 யூனிட்கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு:நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டாஅரசு ஊழியர் நலன்.மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை OPS: ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம். அங்கன்வாடி  ஊழியர்களுக்கு ரூ.18,000,  சுகாதாரபணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம். பணி ஓய்வின் போது ரூ.15 லட்சம்இளைஞர் முன்னேற்றம்.வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை; ஊதியத்துடன் கூகூடிய லட்சம் இன்டர்ன்ஷிப்: 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்: அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணைவிவசாயிகள் நலன்.நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 முதலீட்டு உதவி பயிர்க் கடன்கள்தள்ளுபடி: MSP: நெல் குவிண்டால் ரூ.3.800. கரும்பு பன்னுக்கு ரூ.4.500 5 லட்சம் சோலார் பம்புகள்: தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100% பயிர்க் காப்பீடுமீனவர் நலன்.தடைக்கால நிவாரணம் ரூ.27.000; மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு; மீனவர்களுக்கு நிரந்தர வீடுதமிழ்நாடு வளர்ச்சி.2030-க்குள் $15 டிரில்லியன் பொருளாதாரம் Al அமைச்சகம், Al பல்கலைக்கழகம். A நகரம்: MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக மாஸ்டர் பிளான்", தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்நல்லாட்சி.லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில் காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள்: நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள். 

May 04, 2026

NO- 1 இடத்துக்கு வர……

1 உன்னத் தவிர வேற யாரையும் முழுசா நம்பாத. 2. யாரையும் துரத்திட்டு போகாத, உன்ன தேடி வர்ற அளவுக்கு நீ மாறு. 3. குளிர்ந்த நீர் குளியல், உன் மன உறுதிய வளர்க்கும். 4.உயிரைக் கொடுத்து உடற்பயிற்சி பண்ணு. ஏன்னா உன் உயிர் அந்த உடம்புல தான் இருக்கு. 5.உன் மேல மட்டும் கவனம் வை, மத்ததெல்லாம் தேவையில்லாதது தான். 6.'வேற வழி இல்ல'-னு நினைச்சு ஒரு விஷயத்த பண்ணு, கண்டிப்பா ஜெயிப்ப. 7.எமோஷனல் ஆகாத, உன் உணர்வுகளை நீ கண்ட்ரோல் பண்ணு. 8.உன்ன செதுக்கிய குடும்பத்தையும், கூடவே இருந்தவங்களையும் என்னைக்குமே மறக்காத.

May 04, 2026

சூரிய ஒளியை பார்த்தால் கண் கூசுவது ஏன்?

நீங்கள் சூரிய ஒளியைப் பார்த்தால் மட்டுமல்ல, பிரகாசமான எந்த ஒளியைப் பார்த்தாலும் கண் கூசும். இது ஒரு வகையான பார்வைப் புலனுக்கான தகவமைப்பே ஆகும்.இந்த பிரகாசமான ஒளியைப் பார்க்கும் போது, கண்ணில் உள்ள ரெடப்சின் நிறமி செயலிழக்கப்படுகிறது. இதனால் ஒளி-வேதியியல் வினை மட்டுப்படுகிறது. அப்போது நமக்கு சில வினாடிகளுக்கு பார்வையே தெரியாது. உதாரணமாக வெளியே, வெளிச்சமான பகுதியில் இருந்து இருண்ட திரையரங்கிற்குள் நுழையும்போது இந்நிலை ஏற்படுவதை நீங்கள் காணலாம். மேலும், ஒளிச் செறி விற்கேற்ப கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவை ஒழுங்குபடுத்த கண் பார்வையின் விட்டத்தின் அளவு விழித் திரை தசைகளால் தானியங்கு நரம்பு களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.இந்தப் பாதுகாப்பு கூறுகள் அனைத்தும் கண்களைக் காப்பதற்கே தகவமைப்பாக அமைந்துள்ளன.

May 04, 2026

புதிய ரூல்ஸ்...  KYC செய்யாத FASTag கணக்குகள் தடை செய்யப்படும்.

பெட்ரோல் பங்குகளில் இனி E20 பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் OTP மட்டும் போதாது, PIN / Password அல்லது Fingerprint போன்ற 2 பாதுகாப்பு முறைகள் அவசியம்.  சில வங்கிகள் டெபிட் கார்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளன. KYC செய்யாத FASTag கணக்குகள் தடை செய்யப்படும்.  புதிய இன்சூரன்ஸ் பாலிசிகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும்.

May 02, 2026

ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல்

 இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு முடித்து, 80%-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள, ஏழ்மையான பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் திறமையான மாணவர்களை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து அவர்களை இன்ஃபோசிஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் 'பிரேரனா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு எழுத்துத் தேர்வை நடத்துகிறது. அந்தத்  தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தங்கள் மேல்படிப்புக்கான நிதி உதவிக்குத் தகுதி பெறுவார்கள்.விண்ணப்பப் படிவத்தைப் பெற, மாணவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:தொடர்பு எண்கள்: 1. திருமதி. சரஸ்வதி - 99009063382. திரு. சிவக்குமார் - 99866 303013. திருமதி. பிந்து - 99645 34667, இது யாருக்காவது தேவைப்படலாம். www.infosys.com/infosys-foundationஇதனை மற்ற குழுக்களிலும் பகிரவும். இது ஒருவருக்காவது உதவினால் கூட போதும்.இது ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல் 

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 119 120

AD's



More News