25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 06, 2025

சுற்றுச் சூழலை மாசு படுத்தாத உலகின் முதல் அமோனியா தயாரிப்பு

டென்மார்க் நாடு சுற்றுச் சூழலை மாசு படுத்தாத உலகின் முதல் அமோனியா தயாரிப்பு மையத்தைத் திறந்துள்ளது. இது முழுக்க முழுக்க சூரிய, காற்றாலை மின்சார ஆற்றலைக் கொண்டு இயங்கும்

Apr 06, 2025

முதன்முறையாக விஞ்ஞானிகள் சனி, சூரியனைச் சுற்றி வரும் அதே பாதையில், சுற்றி வருகின்ற ஒரு விண்கல்லைக் கண்டறிந்துள்ளனர்.

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி யுரேனஸ் கிரகத்தின் படங்களை நாசாவிற்கு அனுப்பி உள்ளது. இந்தத் தரத்தைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் இனி நம்மால் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களையும் இவ்வாறு துல்லியமாகப் படம் எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.சனிகோளைச் சுற்றி வளையங்களும், பல துணைக்கோள் இருப்பதையும் நாம் அறி வோம். ஆனால், முதன்முறையாக விஞ்ஞானிகள் சனி, சூரியனைச் சுற்றி வரும் அதே பாதையில், சுற்றி வருகின்ற ஒரு விண்கல்லைக் கண்டறிந்துள்ளனர்.

Apr 04, 2025

அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆதார் எண் விரல் பதிவு செய்யலாம்.

மாவட்டத்தில் மத்திய அரசு திட்ட பயனாளிகளின் விவரங்களை ரேஷன் கார்டுடன் ஆதார் எண்விரல் ரேகை பதிவு செய்வது 83 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விடுபட்ட வர்கள் ஏப். 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலை யில் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் விரல் ரேகை பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.மத்திய அரசு சார்பில் முன்னுரிமை குடும்ப அட்டை (பி.எச்.எச்) அந்தி யோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்) அட்டைகளுக்கு குடும்ப அதிக பட்சமாக 35 கிலோ வரைஇலவச அரிசியும், மானிய  விலையில் பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பலர் முறைகேடாக பெறுவதால் அரிசி வீணாவதாக கருதிய மத்திய அரசு குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவுகளை மார்ச் 31 வரை காலக்கெடு விதித்து கட்டாயம் ஆக்கியதுமாவட் டத்தில் 7,43,724 முன்னு ரிமை ரேஷன் கார்டுகளில் 6,13,684 கார்டுகளிலும் அந்தியோதயா கார்டு களில் 1,37,066 என ஒட்டு மொத்தமாக 83 சதவீதம்விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது குறித்துஅதிகாரிகள் தெரிவித்ததாவது: விடுபட்ட கார்டுதாரர்களில் இறந்த உறுப்பினர்களை இறப்புச் சான்றிதழ் இன்றி பெயர்களை நீக்க அதிகாரம் இல்லை. இதற்கு தீர்வாக அந்தந்த ரேஷன் கடை ஊழியர் களின் அறிக்கை கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒப்புதல் வழங்க அனுமதி கேட்டுள்ளோம்.வெளியூர்களில் தங்கி படிப்பவர்கள், பணிபுரிப வர்கள் ஏப்.15க்குள் அருகி லுள்ள ரேஷன் கடைகளில் சென்று ஆதார் அட்டைகள் மூலம் விரல் ரேகையை பதிவு செய்யலாம்.

Apr 04, 2025

ஊஞ்சல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை,  சிறு குழந்தைகளின் கைகளை பிடித்த படிதூக்கிசுழற்றும்வழக்கம்பெரியவர்களிடையே உண்டு. தொட்டிலில் குழந்தைகளை ஆட்டும் வழக்கமும் பழமையானது. குழந்தைகளுக்கு மரங்களில் ஏறி தொங்கி ஆடுவதும் ரொம்ப பிடிக்கும்.  ஊஞ்சல்களின் வரலாறு அறிய முடியாத அளவுக்கு பழமையானது. அதே அனுபவத்தை வழங்கும் வகையில் கயிறு கட்டி ஆடும் வழக்கமே, ஊஞ்சலாக உருவாகி இருக்கலாம். ஊஞ்சல் ஆடுவது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. ஊஞ்சல் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகின்றன. இதனால் மன அழுத்தம் குறைகிறது. குழந்தைகள் ஊஞ்சல் ஆடும்போது பெற்றோர் ,உடன் இருப்பதோடு மிதமான வேகத்தை பின்பற்ற வேண்டும்.கணினியில் நீண்ட நேரம் பணி செய்பவர்கள் ஊஞ்சல் பயிற்சி செய்தால் முதுகுவலியும், கழுத்து வலியும் நீங்கும். 

Apr 04, 2025

ரிசர்வ் வங்கி.

அரசின் கருவூலமாக விளங்கும் இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மத்திய வங்கி மட்டுமின்றி ,இந்தியாவின் நாணயத்தை யும்,ரூபாய் நோட்டுகளையும் வெளியிடுகிறது. இந்த வங்கிதான் நாட்டின் பல பொருளாதார நட வடிக்கைகளை இயக்கி வருகிறது. பொதுமக்கள் மற்ற வங்கிகளைப் பயன் படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமையின் கீழ் செயலாற்ற பல வங்கிகளை அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கியாக செயல்படுகிறது. ரிசர்வ் வங்கியைப்பொதுமக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு கண்காணித்தும் வருகிறது. ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே நாட்டின் பொருளாதாரம் மதிப்பிடப்படுகிறது. தொடக்கத்தில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டது. பின்னர் 1937-ம் ஆண்டு முதல், மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழு வதும் பல வட்டாரக் கிளைகள் உள்ளன. முதலில் தனியாரால் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, 1949-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.

Apr 04, 2025

வெள்ளை வால் மயில்.

வெள்ளை வால் மயில் உடல் பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். ஆண் மயிலின் முதுகுப்பகுதி கருப்பு நிறமாக காணப்படும், பெண் மயில் மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் வால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் 'வெள்ளை வால் மயில்' என அழைக்கப்படுகிறது.இது பூச்சிகள், எறும்புகள், பல்லிகள் போன்றவற்றை உணவாக உண்ணும். மரத்தில் கூடுகட்டி முட்டையிடும். ஒரு முறை 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். இது மற்ற மயில்களை போல இல்லாமல், மிகவும் வேகமாக பறக்கும் திறன் கொண்டது. தமிழ்நாட்டில் கரூர், தர்மபுரி, சேலம் மற்றும் மதுரை போன்ற இடங்களில் உள்ள வறண்ட புல்வெளிப் பகுதிகளில் இதை காணலாம். 

Apr 04, 2025

ஜாம்நகரில் இருந்து துவாரகா வரை 'பாத யாத்திரை' மேற்கொண்ட ,அனந்த் அம்பானி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அனந்த் அம்பானி, தனது பிறந்தநாளை துவாரகாவில் துவாரகாதீஷரை தரிசனம் செய்து கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.30வது பிறந்தநாளுக்கு முன்னதாக துவாரகாவிற்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார்  140 கி.மீ பயணம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது, துவாரகாவை அடைய அவருக்கு 2 -4 நாட்கள் ஆகலாம். செய்தியாளர்களிடம் பேசிய திரு. அம்பானி,“ஜாம்நகரில் உள்ள எங்கள் வீட்டிலிருந்து, துவாரகா வரை பாதயாத்திரை. இது கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகிறது, இன்னும் இரண்டு அல்லது நான்கு நாட்களில் நாங்கள் துவாரகாவை அடைவோம். எனது பாதயாத்திரை தொடர்கிறது. துவாரகாதீஷ் நம்மை ஆசீர்வதிப்பாராக. எந்த வேலையையும் செய்வதற்கு முன்பு துவாரகாதீஷ் மீது நம்பிக்கை வைத்து, துவாரகாதீஷை நினைவில் கொள்ளுமாறு இளைஞர்களிடம் நான் கூற விரும்புகிறேன். அந்த வேலை நிச்சயமாக எந்த தடையும் இல்லாமல் முடிக்கப்படும், மேலும் கடவுள் இருக்கும்போது,கவலைப்பட ஒன்றுமில்லை.”திரு. அம்பானி தனது பயணத்தைத் ஜாம்நகரின் மோதி காவ்டியிலிருந்து தொடங்கினார், இது ஒவ்வொரு இரவும்10,12 கி.மீ தூரத்தை தனதுZ+ பாதுகாப்பு மற்றும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பின் கீழ் கடக்கிறது. அவர் தனது30வது பிறந்தநாளை ஏப்ரல்10 ஆம் தேதி துவாரகாதீஷ் கோவிலில் பிரார்த்தனைகள் மற்றும் காணிக்கைகளுடன் கொண்டாடுவார்.

Apr 04, 2025

ரூ. 818 கோடி (USD 61.2 மில்லியன்)  மதிப்புள்ள 'குலிதா' பங்களாவை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு திருமண பரிசாக வழங்கினார்.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, டிசம்பர்13,2018 அன்று தொழிலதிபர் ஆனந்த் பிரமாலை மணந்தார். அவர்களின் பிரமாண்டமான திருமணத்திற்குப் பிறகு, ஆனந்தின் தந்தை அஜய் பிரமால், தம்பதியினருக்கு திருமண பரிசாக ஒரு ஆடம்பரமான மாளிகையை பரிசாக வழங்கினார்.'குலிதா' என்று பெயரிடப்பட்ட இந்த வீடு, அதன் அழகுக்காக எப்போதும் நகரத்தின் பேச்சாக இருந்து வருகிறது. மும்பையில் உள்ள50,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த அற்புதமான மாளிகை, அவரது தந்தையின் சின்னமான ஆன்டிலியாவைப் போலவே, பிரம்மாண்டத்தின் அடையாளமாக நிற்கிறது. சூரியன் மறையும் போது, அதன் தங்கப் பளபளப்பு மாளிகையை ஒளிரச் செய்கிறது.இஷா தனது கணவர் ஆனந்த் பிரமலுடன் வசிக்கும் இந்த அற்புதமான வீடு, ஆனந்தின் பெற்றோர்களான அஜய் மற்றும் ஸ்வாதி பிரமல் ஆகியோரின் திருமண பரிசாகும். இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமலின் ஆடம்பரமான மாளிகையான'குலிதா'வின் உள்ளேஅற்புதமான'குலிதா' மாளிகை50,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது, இது வெளியில் இருந்து ஒரு மின்னும் ரத்தினம் போலத் தெரிகிறது. அம்பானியின் பெற்றோர் இல்லமான ஆன்டிலியாவுடன் போட்டியிடும் ஆடம்பரமான விவரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.இந்த மாளிகை ஐந்து தளங்களைக் கொண்டு,, மும்பையின் ஆடம்பரமான வோர்லி பகுதியில் கடல் நோக்கிய கண்கவர் காட்சியுடன் ,ஏராளமான அறைகள் உள்ளன, குலிதாவின் கட்டிடக்கலை எஃகு"பனை மரம்" அமைப்பைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது மற்றும் மேம்பட்ட3D மாடலிங் கருவிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையை லண்டனை தளமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமான எக்கர்ஸ்லி ஓ'கல்லகன் வடிவமைத்தார்.இந்த சொத்து மூன்று பெரிய அடித்தள நிலைகளைக் கொண்டுள்ளது, இது பார்க்கிங் மற்றும் சேவைகளுக்கு போதுமான இடத்தை வழங்குகிறது. இது பல சாப்பாட்டு அறைகள் மற்றும் ஒரு ஆடம்பரமான வெளிப்புற நீச்சல் குளத்தையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில், உயரமான கூரையுடன் கூடிய விசாலமான மண்டபம் உள்ளது, இது பிரமாண்டமான நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்றது.தரை தளத்தில் ஒரு விசாலமான லாபி உள்ளது, அடுத்த தளத்தில் ஒரு சாப்பாட்டு மண்டபம் மற்றும் தம்பதியினருக்கான தனிப்பட்ட படுக்கையறை தொகுப்பு உள்ளது. இந்த மாளிகை வைர கருப்பொருளைப் பின்பற்றுகிறது, மூன்று வைர வடிவ அறைகள் அதன் தனித்துவத்தை சேர்க்கின்றன. இது ஒரு அழகான கோயில் மற்றும் மூன்று தள அடித்தள வாகன நிறுத்துமிடத்தையும் உள்ளடக்கியது.அதிகபட்ச வசதியை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு தளத்திலும் பணியாளர் குடியிருப்புகள் பொருத்தப்பட்டுள்ளன, இது 24 மணி நேரமும் உதவி வழங்குகிறது, இது வீட்டை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல ஆடம்பரமாகவும் நன்கு சேவை செய்யவும் உதவுகிறது.இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமலின் வீட்டின் தற்போதைய மதிப்பு தோராயமாக100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ. 818 கோடி ஆகும்.

Apr 04, 2025

சீனா கண்டுபிடித்துள்ள (Nuclear Battery) 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை சார்ஜ் போட்டால் போதும்.

சீனா கண்டுபிடித்துள்ளது. அதாவது சீனாவின் பீட்டாவோல்ட் (Betavolt) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அணுக்கரு மின்கலத்தை  (Nuclear Battery) கண்டுபிடித்துள்ளது. இது 50 வருடங்களுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டதாகும்.இந்த பேட்டரி ஒரு நாணயத்தைவிட சிறியதாகும். இது செல்போன்கள், டிரோன்கள், பேஸ்மேக்கர்கள் மற்றும் சென்சார்கள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களுக்கு சக்தியளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

Apr 03, 2025

இரவு உணவை தாமதமாக  சாப்பிட்டால்…..

இரவு உணவை தாமதமாக அதாவது இரவு 9.10 மணி வரை சாப்பிட்டால், அவ்வாறு செய்வதை நிறுத்துங்கள். ஒரு ஆய்வின் படி, நீங்கள் கண்டிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே சாப்பிட வேண்டும். ஏனென்றால் எல்லா பிரபலங்களும், உடல்நலப் பயிற்சியாளர்களும் இரவில் சீக்கிரம் சாப்பிடுவார்கள், இரவில் உங்களுக்கு நல்ல மற்றும் அமைதியான தூக்கம் கிடைக்கும், உணவு எளிதில் ஜீரணமாகிறது மற்றும் உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்..

1 2 ... 101 102 103 104 105 106 107 ... 118 119

AD's



More News