25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 01, 2026

நாசா மாநாட்டில் பங்கு பெற 13 வயது தமிழ் மாணவர் ஹரி துவரகதன் தேர்வு!

இளம் வயதிலேயே அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி, சர்வதேச மேடையில் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் மாணவர் ஹரி துவரகனுக்கு RAJAPALAYAM TIMES சார்பில்  பாராட்டுக்கள்.

Jun 01, 2026

ஜூன் 1: ஆம்தேதி முதல் பயோமெட்ரிக் கட்டாயம்.

தலைமைச் செயலகத்தில்உள்ள மனிதவள மேலாண்மைத் துறை அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூன் 1ஆம்தேதி முதல் ஃபேஸ் ஐடி எனப்படும் முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு

Jun 01, 2026

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து: முதல்வர் விஜய்யின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தொடர் முயற்சியால், பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.பின்னணி மற்றும் நடவடிக்கை:முதலமைச்சரின் கடிதம் (14.05.2026): தமிழ்நாட்டின் நெசவு மற்றும் ஜவுளித் தொழில்துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு, பருத்திக்கான 11% இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.ஒன்றிய அரசின் உத்தரவு (30.05.2026): தமிழக முதலமைச்சரின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.முந்தைய அரசுகளால் சாதிக்க முடியாத இந்த முக்கியத்துவம் வாய்ந்த வரிவிலக்கை, முதல்வர் விஜய் தனது விரைவான மற்றும் துரிதமான நடவடிக்கையின் மூலம் சாத்தியமாக்கிக் காட்டியுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

May 30, 2026

💼 ONDC-யில் ₹70 கோடி முதலீடு செய்தது ‘ஸோஹோ’ (Zoho)!

இந்தியாவின் இறையாண்மை தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கில், முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஸோஹோ (Zoho), அரசாங்க ஆதரவு பெற்ற ONDC மின்வணிகத் தளத்தில் ₹70 கோடி முதலீடு செய்துள்ளது.📌 முக்கிய புள்ளிகள்:MSME-களுக்கு அதிகாரமளித்தல்: சந்தை அணுகல் மற்றும் கட்டமைப்புத் தடைகளை எதிர்கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) தங்களின் வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்தவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இந்த முதலீடு உதவும்.செயலிகளின் பங்களிப்பு: விக்ரா (Vikra) விற்பனையாளர் செயலி மற்றும் Zoho ERP, Zoho Books, Zoho Inventory போன்ற நிதிச் செயலிகள் மூலம் சிறு வணிகர்கள் ONDC நெட்வொர்க் வழியாக இந்தியச் சந்தையுடன் நேரடியாக இணைக்கப்படுவார்கள்.ONDC-யின் பிரம்மாண்ட வளர்ச்சி: இந்திய வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்தும் ONDC தளம், கடந்த 2026 நிதியாண்டில் மட்டும் 218 மில்லியன் பரிவர்த்தனைகளை சாத்தியமாக்கி சாதனை படைத்துள்ளது."நாட்டைக் கட்டமைப்பதில் தனியார் துறையும் பங்களிக்க வேண்டும்; ONDC உடனான இந்த இணைப்பு அனைத்து வணிகங்களுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எளிமையாக்கும்." – சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் (தலைவர், ஸோஹோ நிதி மற்றும் செயல்பாடுகள் பிரிவு).மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் (DPIIT) கீழ் 2021-ல் ONDC தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

May 30, 2026

🚨 AI பயிற்சிக்கு வீட்டு வேலைகளைப் பதிவு செய்த ‘பிரான்டோ’: தனியுரிமை சர்ச்சையும், மத்திய அரசு விசாரணையும்!

பெங்களூருவைச் சேர்ந்த வீட்டுச் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமான 'பிரான்டோ' (Pranto), ரோபோடிக்ஸ் மற்றும் AI பயிற்சிக்காக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குள் நடக்கும் வேலைகளைப் பதிவு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளது. முதலீட்டாளர் ஆவணங்கள் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் தனியுரிமை (Privacy) குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.மத்திய அரசு விசாரணை: இந்த விவகாரத்தை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) கவனத்தில் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.பிரான்டோவின் விளக்கம்: இது வெறும் 0.1% வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு சோதனைத் திட்டம். வாடிக்கையாளர்களின் முழு அனுமதியுடன் (Opt-in) மட்டுமே பாத்திரங்களைக் கழுவுதல், சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் பதிவு செய்யப்படுகின்றன; இயல்பாக (By default) கேமராக்கள் பயன்படுத்தப்படுவதில்லை.போட்டி நிறுவனங்கள் மறுப்பு: இந்தத் துறையில் தாங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என 'அர்பன் கம்பெனி' மற்றும் 'ஸ்னாபிட்' போன்ற போட்டி நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.முதலீட்டு உயர்வு: இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், பிரான்டோ நிறுவனம் சமீபத்தில் 20 மில்லியன் டாலர் நிதி திரட்டி, தன் சந்தை மதிப்பை 200 மில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.

May 30, 2026

உருவாகிறது சூப்பர் எல்-நினோ.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை இயல்பை விட 2.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடிய நிகழ்வான சூப்பர் எல்-நினோ, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாகக்கூடும் என கணிப்புஇதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படக்கூடும் என்றும், இதனால் 2027 ஆம் ஆண்டு உலகளாவிய வெப்பநிலை, இதுவரை பதிவாகாத அளவில் உச்சத்தை தொடக்கூடும் என்றும் கணிப்புதனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.

May 30, 2026

பிளாஸ்டிக் கேன்களில் அடைத்த நீரை வெயில் படாமல் வைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் கேன்களில் அடைத்த நீரை வெயில் படாமல் வைக்க வேண்டும் என்றே அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், சில கடைகளில் வெயில் படும்படி வைத்துள்ளதை காண முடியும். இதனால் அந்த நீரில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கலக்க வாய்ப்புள்ளது. இந்த நீரைநாம்அருந்தும்போதுபலமோசமானவிளைவுகளை உண்டாக்கும்.எனவே,கடைஉரிமையாளர்கள்பொறுப்புடனும், பொதுமக்கள் கவனத்துடனும் இருக்க வேண்டுகின்றோம்.

May 30, 2026

செவ்வாயில் பனிப்பாறைகள்.

செவ்வாய் கிரகத்தில் (Mars) நீர் பனி (Water ice) இருப்பதை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (MSA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. செவ்வாயின் வடக்கே உள்ள சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள 82 கிலோமீட்டர் அகலமுள்ள 'கொரோலெவ்' (Korolev) பள்ளத்தில் இந்தப் பிரம்மாண்டமான பனி அடுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் திகைப்பூட்டும் புகைப்படத்தை இ.எஸ்.ஏ-வின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' (Mars Express) விண்கலம் எடுத்துள்ளது. இந்தக் கொரோலெவ் பள்ளத்தின் மையப்பகுதியில் சுமார் 1.8 கிலோமீட்டர் தடிமன் கொண்ட பனி அடுக்கு ஆண்டு முழுவதும் உறைந்த நிலையிலேயே காணப்படுகிறது

May 30, 2026

விண்கல்லைக் கண்டுபிடித்த 14 வயது இந்திய சிறுவன்! நாசா அங்கீகாரம்.

டெல்லி நொய்டாவைச் சேர்ந்த 14 வயது மாணவன் தக்ஷ் மாலிக், விண்வெளியில் புதிய விண்கல் (Asteroid) ஒன்றைக் கண்டுபிடித்து உலகளவில் சாதனை படைத்துள்ளார். இந்த அரிய சாதனையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.6-வது இந்தியர்: விண்கற்களைக் கண்டுபிடித்த இந்திய மாணவர்களின் வரிசையில் தக்ஷ் மாலிக் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.தற்காலிகப் பெயர்: இந்தக் கல்லிற்கு தற்போது '2023 OG40' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.பெயர் வைக்கும் உரிமை: இந்த விண்கல் குறித்து நாசா இன்னும் 4-5 ஆண்டுகள் ஆய்வு செய்யும். அதன் பிறகு, தக்ஷ் மாலிக் விரும்பும் பெயரை இதற்குச் சூட்டலாம்.மாணவனின் விருப்பம்: "இதை கண்டுபிடித்த போது நாசாவில் பணியாற்றியது போல் இருந்தது. இதற்கு 'Destroyer of the World' அல்லது 'Countdown' என பெயர் வைக்க யோசித்து வருகிறேன்" என்று தக்ஷ் மாலிக் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.உலகமே பாராட்டும் இந்த 14 வயது இந்திய இளம் சாதனையாளரைப் பகிர்வோம், கொண்டாடுவோம்!

May 29, 2026

அரிய 'புளூ மூன்' (Blue Moon) நிகழ்வு!

என்ன நடக்கிறது?: ஒரே காலண்டர் மாதத்தில் வரும் இரண்டாவது முழு பௌர்ணமி நிலவை 'புளூ மூன்' என்பார்கள். (இது நீல நிறத்தில் இருக்காது).எப்போது?: நடப்பு மே மாதத்தின் முதல் பௌர்ணமி மே 2-ல் முடிந்த நிலையில், 2-வது பௌர்ணமியான 'புளூ மூன்' மே 31, 2026 அன்று வானில் தோன்றுகிறது.சிறப்பு: இது 19 ஆண்டுகளுக்கு 7 முறை மட்டுமே நடக்கும் ஒரு அரிய நிகழ்வு.அடுத்தடுத்த தேதிகள்: இதற்குப் பிறகு டிசம்பர் 31, 2028 மற்றும் செப்டம்பர் 30, 2031 ஆகிய தேதிகளில் புளூ மூன் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 2 ... 37 38 39 40 41 42 43 ... 136 137

AD's



More News