25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 02, 2026

CRPF-ஐச் சேர்ந்த அதிகாரி ஜாகீர் ஹுசைன் 'கிரேட் ஜவான்'

2018-ல் இந்தியாவை அழிப்பதற்காக மூன்று பயங்கரவாதிகள் ஒரு இடத்தில் ரகசியமாக ஒளிந்திருந்தனர். CRPF-ஐச் சேர்ந்த அதிகாரி ஜாகீர் ஹுசைன் அந்த மூன்று பேரையும் இவர் கண்டுபிடித்து. தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அந்த மூவருடன் போராடி அவர்களை நரகத்திற்கு அனுப்பினார் இவரது வீரத்தைப் பாராட்டி பெரிய மனிதர்கள் கையால் தகுந்த கௌரவம் அளிக்கப்பட்டது. இவரது தியாகத்திற்கும் தைரியத்திற்கும் 'கிரேட் ஜவான்' என்று பாராட்டலாம்.

Feb 28, 2026

 HCL நிறுவனர் ஷிவ் நாடார் வசிக்கும் இடம்: 

புது தில்லியில் உள்ள ஒரு மதிப்புமிக்க சுற்றுப்புறமான பிரண்ட்ஸ் காலனி வெஸ்டில் அமைந்துள்ள நாடார் குடும்ப மாளிகை, அழகாக பராமரிக்கப்படும் புல்வெளிகள், தனியார் தோட்டங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை மற்றும் கலைப் பாராட்டு ஆகிய இரண்டிற்கும் வடிவமைக்கப்பட்ட இடங்களுடன் சுமார்40,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது.இந்த இல்லத்தின் மிகவும் தனித்துவமானது கலையை அதன் இடஞ்சார்ந்த அடையாளத்துடன் ஒருங்கிணைப்பதாகும். இந்த வீடு நாடார் கலைத் தொகுப்பிலிருந்து படைப்புகளைக் காட்சிப்படுத்துவதாக அறியப்படுகிறது - அவற்றில் பல கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்துடன் தொடர்புடையவைவீட்டை ஒரு தனியார் இல்லம் போல குறைவாகவும், தனிப்பட்ட கலாச்சார உறைவிடமாகவும் உணர வைக்கின்றன.ஊக்கப்படுத்த வேண்டும் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. பல பெரிய வீடுகள் அளவு அல்லது ஆடம்பர அலங்காரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்த இல்லம் அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் கலாச்சார நலன்களை எதிரொலிக்கும் இடங்களை உள்ளடக்கியது.குறிப்பாக ஷிவ் நாடார் போன்ற வணிகத் தலைவர்களின் உயர்மட்ட குடியிருப்புகள், எல்லாவற்றிற்கும் மேலாக தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கின்றன. எனவே, வீட்டின் பொதுவான இருப்பிடம் மற்றும் அளவு பொதுவில் குறிப்பிடப்பட்டாலும், குடும்பத்தின் பாதுகாப்பைப் பாதுகாக்க சரியான முகவரி மற்றும் கட்டிடக்கலை விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன.பொது நபர்களுக்கான குடியிருப்பு கட்டிடக்கலை பெரும்பாலும் விவேகமான வடிவமைப்பு உத்திகளுடன் திறந்த தன்மையை சமநிலைப்படுத்துகிறது - நிலப்பரப்புகள், இடையகங்கள் மற்றும் அமைதியான ஆனால் பாதுகாப்பான சூழல்களை கைவினை செய்வதற்கான கட்டுப்படுத்தப்பட்ட அணுகலைப் பயன்படுத்துதல்.ஷிவ் நாடரின் தனிப்பட்ட வீடு அவரது பரந்த ரியல் எஸ்டேட் அடையாளத்தின் ஒரு அம்சம் மட்டுமே:நொய்டா, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ளHCL வளாகங்கள் நவீன பணியிட கட்டிடக்கலை மற்றும் சமூகம் சார்ந்த வடிவமைப்பை பிரதிபலிக்கின்றன.நிலைத்தன்மை மற்றும் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட வளாகங்களைக் கொண்ட ஷிவ் நாடார் அறக்கட்டளையின் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சமகால கட்டிடக்கலை அறிக்கைகள்.நுண்கலை வளாகங்கள் போன்ற திட்டமிடப்பட்ட அல்லது நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள் குடும்பத்தின் மரபில் கட்டிடக்கலை லட்சியத்தை மேலும் உட்பொதிக்கின்றன.ஷிவ் நாடார் இல்லம் அதன் அளவு அல்லது இருப்பிடத்திற்காக மட்டுமல்ல, தனியுரிமை, தனிப்பட்ட ரசனை மற்றும் கலாச்சார ஆழத்தை கலக்கும் விதத்திற்காகவும் தனித்து நிற்கிறது. இது ஒரு அருங்காட்சியகம் அல்லது நிறுவன தலைமையகம் போல பொதுவில் காட்சிப்படுத்தப்படாமல் இருக்கலாம், ஆனால் அதன் இருப்பு குடியிருப்பு வடிவமைப்பு எவ்வாறு ஆறுதல், கலை மற்றும் மரபு அனைத்தையும் ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்கான அமைதியான பாடத்தை வழங்குகிறது.

Feb 28, 2026

விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகாமந்தனா  பிரமாண்டமான திருமணம்.

தெலுங்கு திரையுலகத்தின் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் உதய்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படி ராஷ்மிகாவுக்கு திருமாங்கல்யம் கட்டினார். விஜய் தேவரகொண்டா. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகாவின் ஆசைப்படி மாலையில் 'கொடவா' முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இதில் தெலுங்கு திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.பிரமாண்டமான திருமணத்தை ஒட்டி, வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் ஏழை மக்களுக்காக ராஷ்மிகா மந்தனா 68 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 180 வீடுகளைக் கட்டியுள்ளார். நூற்றுக் கணக்கான அனாதை இல்லங்களுக்கு விருந் தும் அளித்தார்.ராஷ்மிகா மந்தனா செய்த நல்ல பணிக்காக வாழ்த்துங்கள்.

Feb 28, 2026

நாட்டை காக்க உயிரையே பணயம் வைத்தராணுவ நாய் டைக்சன்.

ராணுவ நாய் டைக்சன் கிஸ்த்வாரில் நடந்த மோதலில் காயமடைந்த போதிலும் தன் கடமையை நிறுத்தவில்லை. தொடர்ந்து தடயத்தை பின்தொடர்ந்து மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க உதவியது. நாட்டை காக்க உயிரையே பணயம் வைக்கும்  உண்மையான வீரம்.

Feb 28, 2026

அரசு ஊழியர்களின் புதிய சம்பளம்.

பதவிகள் - மாத சம்பளம்ஆசிரியர் - ₹85,000மருத்துவர் - ₹1,30,000நீதிபதி - ₹1,50,000அறிவியலாளர்  – ₹1,40,000பியான் -   ₹45,000கிளார்க் - ₹50,000அஞ்சல்காரர் - ₹55,000சப்-இன்ஸ்பெக்டர் (SI) - ₹80,000ஹெட் கான்ஸ்டபிள் - ₹69,000அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ASI) ₹76,000ஜூனியர் இன்ஜினியர் - ₹92,000இன்ஸ்பெக்டர்  - ₹1,20,000செக்ஷன் ஆபிசர் - ₹1,29,000ஐஏஎஸ்/ஐபிஎஸ்/ஐஎஃப்எஸ் - ₹1,55,000IAS/IPS (சீனியர் ஸ்கேல்) - ₹2,10,000

Feb 28, 2026

ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, கி.பி. (பொ.ஆ ) முதல் நூற்றாண்டில் பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன ..அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள். ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

Feb 27, 2026

(ஹெவன் 1), முதல் தனியார் விண்வெளி மையம் .

 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட்டில் 2027ல் உலகின் முதல் தனியார் விண்வெளி மையம் (ஹெவன் 1),  விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது.(ஐ.எஸ்.எஸ்.,) பதிலாக, தற்போது செயல்பாட்டில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு இது செயல்பட உள்ளது. இதன் விட்டம் 14.7 அடி. உயரம் 33 அடி.அமெரிக்காவின் 'வாஸ்ட்' நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. ஐ.எஸ்.எஸ்., போல விண்வெளியில் மிதந்தபடி பூமியை சுற்றி வரும். ஐ.எஸ்.எஸ்.,ல் இருந்து 'ஹெவன் 1' தனித்துவமாக நவீன மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Feb 26, 2026

தமிழ்நாட்டின் நிர்வாக பிரிவுகள்.

மாவட்டங்கள் - 38 மக்களவைத் தொகுதிகள் - 39 சட்டமன்றத் தொகுதிகள்- 234 மாநகராட்சிகள்- 25 நகராட்சிகள்- 137 வருவாய் கோட்டங்கள்- 94 தாலுகாக்கள் 316 ஊராட்சி ஒன்றியங்கள்- 388 டவுன் பஞ்சாயத்துகள்- 490 கிராம பஞ்சாயத்துகள் - 12525.

Feb 25, 2026

புன்னகைக்கும் 'குவாக்கா'

குவாக்கா என்பது  ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட, மாக்ரோபோடிடே ஒன்ற, கங்காரு குடும்பத்தைச் சேர்ந்த, பாலுாட்டி விலங்கு. இது,'உலகின் மகிழ்ச்சியான விலங்கு என்று அழைக்கப்படுகிறது. !'ஏனெனில்  , அதன்முகத்தில், இயல்பாக ஒரு புன்னகை போன்ற தோற்றம் இருக்கிறது. குவாக்காக்கள், ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ராட்னெஸ்ட் தீவு மற்றும் பால்ட் தீவு போன்ற, சில சிறிய தீவுகளில் காணப்படுகின்றன. இவை, 40 செ.மீ., நீளமும், 3 கிலோ எடையும் கொண்டவை. இவற்றின் உடல், மென்மையான பழுப்பு நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இ இவை புல், இலைகள், மரப்பட்டைகள் மற்றும் சிறு தாவரங்களை உணவாக உட்கொள்ளும் தாவர உண்ணி. இது, கருவுற்று 27 நாட்களில், ஒரு குட்டியைப் பெற்றெடுக்கும். அந்தக் குட்டி, ஆறு மாதங்கள் வரை தாயின் பையில் வளரும். குவாக்காக்களின் மகிழ்ச்சியான தோற்றம் மற்றும் நட்பு குணம், அவற்றை உலகளவில் அன்புக்குரியவையாக மாற்றியுள்ளன. இவை, மனிதர்களிடம் பயமின்றி நட்பாக இருக்கும் தன்மை கொண்டவை. இதனால், ராட்னெஸ்ட் தீவில், குவாக்காக்களுடன் சுற்றுலாப் பயணியர், 'செல்பி' எடுத்துக் கொள்வது பிரபலம். இருப்பினும், அவற்றுக்கு உணவளிப்பது அல்லது தொந்தரவு செய்வது, அங்கு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழிட இழப்புமற்றும் பிற வேட்டையாடி விலங்குகளால், அழிந்து வரும் இனமாக குவாக்காக்கள்பட்டியலிடப்பட்டுள்ளன.

Feb 24, 2026

ஒரு கிரானைட் கல்லில் நியாண்டர் தால் மனிதன் ஒருவனின் கைரேகை கண்டறியப் பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில், ஒரு கிரானைட் கல்லில் நியாண்டர் தால் மனிதன் ஒருவனின் கைரேகை கண்டறியப் பட்டுள்ளது. இது 43,000 ஆண்டுகள் பழமையானது. உலக வரலாற்றிலேயே மிகப் பழமையான, முழுமையாகக் கிடைத்த நியாண்டர்தாலின் கைரேகை இதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

1 2 ... 33 34 35 36 37 38 39 ... 104 105

AD's



More News