25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 16, 2024

! மதுரை-தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை தென்னகத்தின் கனவு திட்டம் .

மதுரை-தூத்துக்குடி இடையே 160 கிலோமீட்டர் தொலைவுக்கு இரட்டை வழித்தடமாக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்மூலம் தென்மாவட்ட மக்களுக்கு 2 முக்கியமான பலன்கள் கிடைக்க உள்ளது:பிரதமர் நரேந்திர மோடி பயணமாக தமிழ்நாடு வந்தார்.. பிரதமர் நரேந்திர மோடி 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதலில் அவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.திருச்சி விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு ரூ1,100 கோடியிலான திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததோடு, தமிழகத்தில் ரூ.20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இதில் ஒரு திட்டம் தான் தென்மாவட்ட மக்களின் கனவு திட்டமான மதுரை-தூத்துக்குடி இரட்டை வழித்தட ரயில் பாதையாகும். மதுரை-தூத்துக்குடி இடையே ரூ.1,890 கோடி மதிப்பிட்டில் இரட்டை வழித்தடத்துக்கான ரயில் பாதை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு தொடங்கியது. இந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது. தற்போது பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மதுரை-தூத்துக்குடி இரட்டை வழித்தடமாக்கப்பட்ட ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மதுரையில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவுக்கு தூத்துக்குடி வரை ரயில் பாதை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி இடையே ஒற்றை வழித்தடம் தான் இருந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ஒரு ரயில் வரும்போது இன்னொரு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் கிராசிங்கிற்காக நிற்க வேண்டும்.தற்போது இரட்டை வழித்தடமாக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் நின்று செல்ல வேண்டிய சூழல் இருக்காது. இதன்மூலம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் இருந்து திருநெல்வேலி வழியாக ம் தமிழகத்தின் பிற இடங்களுக்கு இயங்கும் ரயில்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து இந்த வழித்தடத்தில் தென்மாவட்டங்களுக்கு இயங்கும் ரயில்களின் பயண நேரம் என்பது சற்றும் குறையும்.ஒற்றை ரயில்பாதை காரணமாக இந்த மார்க்கத்தில் அதிகமான ரயில்கள் என்பது இயக்கப்படாத சூழல் இருந்தது. தற்போது மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை இரட்டை வழித்தடமாக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் சிறப்பு ரயில்கள், கூடுதல் ரயில்கள் மக்களின் வசதிக்காக இயக்கப்படும். இதுதவிர திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரியில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களாக உள்ள சென்னை, கோவை, மும்பை, பெங்களூர் உள்பட பிற ஊர்களுக்கும் ரயில்கள் அதிகளவில் இயக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன்மூலம் தென்மாவட்ட மக்களுக்கு இந்த திட்டம் என்பது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 

Apr 16, 2024

அழகான மேகமலை மலைப்பிரதேசம் 

ஊட்டி, கொடைக்கானலை தவிர்த்து, பல அழகான, பிரபலமற்ற, , இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. தேனி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் 1500 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகான மேகமலைக்கு ஒரு முறை போயிட்டு சுற்றிப் பார்க்கலாம் மேகங்கள் உரசி செல்லும் மேகமலை மேகமலையின் சிகரங்கள் எப்போதும் மேகங்களால் மூடப்பட்டிருக்கும், அவை நம்மை உரசி செல்வத்தை நாமே உணரலாம், இதனாலேயே உள்ளூர்வாசிகள் இதை மேகமலை அழைக்க ஆரம்பித்தனர். எங்கு சென்றாலும் பசுமை, நீர்வீழ்ச்சிகள், மலைகள், இதமான வானிலை, இயற்கை எழில் கொஞ்சும் அழகு என மேகமலை நம்மை கட்டி போடுகிறது. நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான ஒரு வார இறுதியை நீங்கள் தேடுகிறீர்களானால், மேகமலை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாகும். சுருளி அருவி சின்ன சுருளி அருவி மேகமலை மலைத்தொடரின் அடிவாரத்தில் அடர்ந்த பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மேகமலை மலையில் உருவானதால் கிளவுட்லேண்ட் அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி சுமார் 190 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். பசுமையான மரங்களுக்கு இடையே ஓடும் நீரின் அழகைக் காண மக்கள் எப்போதுமே இங்கு வந்துக் கொண்டு இறக்கிறார்கள்.மேகமலை வனவிலங்கு சரணாலயம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில், மேகமலை வனவிலங்கு சரணாலயம் 63,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து பல வனவிலங்குகளுக்கு புகலிடமாக காட்சியளிக்கின்றது. யானைகள், புலி, சிறுத்தை, நீலகிரி தஹ்ர், கவுர், புள்ளிமான், சாம்பார் மான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி-லாங்கூர் வால் மக்காக், காமன் லாங்கூர், பானெட் மக்காக், சோம்பல் கரடி, சாம்பல் நிற ஜங்கிள் ஃபௌல், வழுவழுப்பான பூசப்பட்ட நீர்நாய் மற்றும் பறக்கும் அணில் ஆகிய வனவிலங்குகளையும் விஸ்கர் புல்புல், காமன் ஐயோரா, வெள்ளை-புருவம் கொண்ட வாக்டெயில், கிரே வாக்டெயில், பைட் புஷ் அரட்டை, பிளைத்தின் ரீட் வார்ப்ளர், பார்ன் ஸ்வாலோ, ஸ்பாட் டவ், ஏசியன் பாரடைஸ் ஃப்ளைகேட்சர், லாங்-வால்ட் ஷரைக் போன்ற பறவை வகைகளையும், பல வித்தியாசமான தாவரங்களையும் கண்டு களிக்கலாம்..காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் பசுமையான தேயிலை செடிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கின்றன, மேலும் இயற்கையை சுற்றி நேரத்தை செலவழிப்பதன் மூலம் மட்டுமே கிடைக்கும் அமைதி வேறு எதிலுமே நமக்கு கிடைக்காது. மகாராஜா மெட்டு வியூ பாயின்ட் இரவங்களார் அணையிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த வியூபாயின்ட் மேகமலையில் உள்ள பிரபலமான இடமாகும். மேகமலையின் மொத்த அழகையும் ஒரே இடத்தில் நின்றபடி ரசிப்பதற்கு நீங்கள் மகாராஜா மெட்டு வியூ பாயின்ட்டு ,பாறைகள் நிறைந்த மலைகளுக்கு நடுவே இருக்கும் பசுமையானது நிச்சயம் கட்டாயம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அமைதி தரும் கோயில்கள் அழகான மேகமலையில் சில ஆன்மீக ஸ்தலங்களும் உண்டு. மேகமலை மலைத்தொடரில் மலை உச்சியில் அமைந்துள்ள முருகன் கோயில், , மலை உச்சியில் அமர்ந்திருப்பதால், அந்த இடத்தின் அழகிய அழகைக் காணவும் பெருமளவு மக்கள் கூட்டம் இங்கு வருகை தருகிறது. பேருந்து நிலையத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மலையின் உச்சியில் பாறைகளால் கட்டப்பட்ட மங்களா தேவி கோயில் மேகமலையில் உள்ள சக்தி வாய்ந்த கோயிலாகும். தேனியில் தங்குமிடம் புக் செய்யுங்கள் மேகமலையில் தங்குவதற்கு என பெரிய ஹோட்டல்கள் எதுவும் இல்லை, அதே போல மேகமலையின் சுற்றுலாத் தலங்களை ஒரே நாளில் பார்த்து விடலாம். ஆகையால் தேனியில் தங்குவேதே நல்லது. இரண்டு நாட்களில் வார இறுதி சுற்றுலா சென்று பணிக்கு திரும்ப விரும்புவோருக்கு மேகமலை ஒரு சரியான ஓய்வு கொடுக்கும் இடமாகும். 118 கிமீ தொலைவில் உள்ள மதுரை விமான நிலையமும் ரயில் நிலையமும் மேகமலைக்கு அருகில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகும். இந்த விமான நிலையமும் ரயில் நிலையமும் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்தும் ரயில் நிலையத்திலிருந்தும் வாடகை கார்கள் எளிதாகக் கிடைக்கின்றன. மேலும் தமிழக அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பொது பேருந்துகள் வாயிலாகவும், தனியார் பேருந்து வாயிலாகவும் நீங்கள் மேகமலையை அடையலாம்..

Apr 15, 2024

மன அழுத்தத்தை போக்க .....

அன்பான அரவணைப்பைக் கொடுங்கள் அல்லது பெறுங்கள். உங்களுக்கு பிடித்த திரைப்படத்தை மீண்டும் பார்க்கவும். நள்ளிரவு நடைப்பயிற்சி செல்லுங்கள். புதிய பொழுதுபோக்கை ஆராயுங்கள். மழையில் நடனம். உங்களை நீங்கள் காதல் செய்யுங்கள். 1 மணி நேரம் எதுவும் செய்ய வேண்டாம். அந்நியரிடம் புன்னகை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த பாடலுக்கு நடனமாடுங்கள்… உங்கள் அலமாரியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். செல்லப்பிராணிகள் மீது அன்பு செலுத்துங்கள். அன்பான அரவணைப்பைக் கொடுங்கள் அல்லது பெறுங்கள்.

Apr 15, 2024

லோன் வாங்கி மட்டும் சொந்த வீடு கட்டாதே. ..

30 இலட்சம் கையில் இருந்தால்,10 இலட்சத்தில் வீடு கட்டு.. 10 இலட்சம் கையில் இருந்தால்,5 இலட்சத்தில் வீடு கட்டு.. 5 இலட்சம் கையில் இருந்தால், 4000 ரூபாய் வாடகை வீட்டில் வாழு.. 10 இலட்சம் கையில் வைத்துக் கொண்டு. 20 இலட்சத்தில் வீடு கட்டுவது, சொந்த பணத்தில் தனக்கே சூன்யம் வைத்துக் கொள்வதற்குச் சமம்..லோன் வாங்கி வீடு கட்டாதே.. 30 இலட்சத்தில் பணக்காரர் வீடு கட்டி வைத்திருப்பார், அவரிடம் 4000 ரூபாய் வாடகையில் சந்தோஷமாக வசிக்கலாம்.. தயவு செய்து கடன் வாங்கி மட்டும் சொந்த வீடு கட்டாதே..  

Apr 13, 2024

நாடு முழுக்க வருகிறது நாடு முழுக்க புதிய ஊதிய திட்டம்

.புதிய ஊதிய அமைப்பை மதிப்பிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் (ILO) தொழில்நுட்ப உதவியை நாடுவதாக அறிவித்துள்ளது.குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து வாழ்க்கை ஊதியத்திற்கு மாறுவது மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் மற்றும் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான விரைவான முயற்சிகளை எடுக்கும் என்பதால் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தற்போது உள்ள குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒருவருக்கு அளிக்கப்படும் மிக குறைந்த அடிப்படை ஊதியம் ஆகும். ஆனால் வாழ்க்கை ஊதியம் என்பது.. ஒருவர் சுயமாக கடன் இன்றி சரியான உணவு, சரியான படிப்பு செலவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஊதியம் ஆகும். இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர், 90% அமைப்புசாரா துறையில் உள்ளனர். பலர் தினசரி குறைந்தபட்ச ஊதியம் ₹176 அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கின்றனர். இவர்களுக்கு போதிய ஊதிய உயர்வு இல்லாததால் பல்வேறு மாநிலங்களில் ஊதியம் வழங்குவதில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.வாழ்க்கை ஊதியம் என்பது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்குத் தேவையான ஊதியத்தை வழங்குவது ஆகும். நாட்டின் பொருளாதார சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு நாட்டின் பணவீக்கத்தை கணக்கில் கொண்டு சம்பளத்தை அடிக்கடி உயர்த்துவது, மக்களுக்கு முறையான வாழ்வாதாரத்தை வழங்குவதே வாழ்க்கை ஊதியம் ஆகும்.: நாடு முழுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டமும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் முக்கியமான வாக்குறுதி பழைய ஓய்வூதிய திட்டம் ஆகும். ஆனால் இதை இன்னும் தமிழ்நாடு அரசு கொண்டு வரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.இது போக புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஊழியர்கள் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர். ஒருவேளை இந்த திட்டமும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றால், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தலாம் என்ற திட்டத்தில் மத்திய பாஜக அரசு இருப்பதாக தகவல்கள் வருகின்றன..:

Apr 13, 2024

. பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன்

 உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் வியப்படைய செய்துள்ளது விவோ பிராண்ட். பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் பல காலமாக ,சிறப்பான கேமரா (camera) அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்த விவோ நிறுவனம், இப்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில், புதிதாக பறக்கும் கேமராவை ஸ்மார்ட்போனுடன் இணைத்துள்ளது.விவோ(Vivo) நிறுவனம் விரைவில் பறக்கும் கேமரா அம்சம் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளது.சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் வருவது போன்ற ஹைடெக்கான அமைப்பை இந்த பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் இரண்டு பகுதிகளாக பிரியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.விவோ டிசைன் செய்துள்ள இந்த புதிய பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் சாதனம் பார்ப்பதற்கு வழக்கமான ஸ்மார்ட்போன் போல காட்சியளிக்கிறது. இந்த போனிற்குள் நிறுவனம் ஒரு மினி ட்ரோன் கருவியை இன்பில்ட்டாக(miniinbuiltdrone) மறைத்து வைத்துள்ளது. இந்த ட்ரோனில்200MP திறன் வரை வழங்கக்கூடிய ஒரு மைக்ரோ கேமராவை விவோ உருவாக்கியுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் வழக்கமான ட்ரிபிள் கேமரா அம்சமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.ஏரியல் வியூ வீடியோ மற்றும் புகைப்படங்களை படம்பிடிக்க இந்த் போனுடன் வரும் குவாட்க்காப்டர் ட்ரோனை(quadcopter) நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ட்ரோன் புகைப்படம் மற்றும் வீடியோ(dronephotographyandvideorecording) பதிவு கலாச்சாரம் இப்போது உலகம் முழுக்க பேமஸ் அடைந்து வரும் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது..இதை புரிந்துகொண்ட விவோ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் பறக்கும் கேமராவை வழங்க ஒரு மினி டிரோன் கருவியை போனுக்குள் மறைத்து வைத்து உருவாக்கியுள்ளது. இந்த வடிவமைப்பிற்கான டிசைனை விவோ நிறுவனம்2020 ஆம் ஆண்டு சமர்ப்பித்து உரிமையை வாங்கி கொண்டது. நான்கு வருட நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வெற்றிகரமாக போனில் இருந்து பிரிந்து செயல்படும் ஒரு பறக்கும் கேமராவை விவோ இப்போது உருவாக்கியுள்ளது.,எந்த நிறுவனத்தாலும் இத்தகைய வெற்றிகரமான ப்ரோட்டோடைப் சாதனத்தை உருவாக்க முடியவில்லை என்பதே உண்மையாகும். உலகமே திரும்பி பார்க்கும் வகையில் விவோ நிறுவனம் மட்டும் இதை சாத்தியமாக்கியுள்ளது.போனில் இருந்து பிரிந்து பறக்கும் ட்ரோனை கட்டுப்படுத்த ஸ்மார்ட்போனிலேயே கண்ட்ரோலராக (controller) பயன்படுத்தும் அமைப்பையும் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. பறக்கும் பொழுது பொருள் அல்லது மனிதர்கள் மீது மோதாமல் இருக்க ஆட்டோமேட்டிக் டிடெக்ஷன் அம்சமும் இதில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மினி டிரோன் எவ்வளவு நேர பயன்பாட்டை வழங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இது திறம்பட செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விவோ பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் சாதனம்$1000 டாலருக்கு மேல் விலை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வண்டுமென்றால், கட்டாயம் விலை அதிகமாக தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு 2027ல் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Apr 13, 2024

நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்க பெண்களுக்கு உதவியாக உள்ள வெள்ளி கொலுசு.

பெண்களின் கால்களுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது அவர்கள் அணியக்கூடிய கொலுசுகள். இந்தியாவில் வெள்ளிக்கென்று தனி மவுசு உள்ளது.நம்முடைய முன்னோர்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் ஒவ்வொரு விதமான பராம்பரியம் ஒளிந்துள்ளது. இதைப் பராம்பரியமாக பின்பற்றி வந்தாலும், இக்காலத்திற்கு ஏற்ப பல விதமான டிசைன்களில் அணிந்து மகிழ்கின்றனர். அதுவும் பெண்களுக்கு அழகு சேர்ப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்திற்கு என்பதால் வெள்ளியில் கொலுசுகளை அணிந்து மகிழ்கின்றனர்..பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவற்றைக் குறைக்க வேண்டும் என்பதால் தான் வெள்ளியிலான கொலுகளை அணிய சொல்கின்றனர்.. வெள்ளி கொலுசுகளைப் பெண்கள் காலில் அணியும் போது எலும்புகள் வலுவடையும். வெள்ளி உலோகம், கணுக்கால்களைத் தொடும் போது, தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்த உதவியாக உள்ளது.வெள்ளி கொலுகளை அணியும் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குணப்படுத்தவும், கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உதவியாக உள்ளது. மேலும் வெள்ளியிலான கொலுசுகளை அணியும் போது பெண்களுக்கு ஹார்மோன் அளவை சமன் செய்ய உதவியாக உள்ளது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.நாள் முழுவதும் பெண்கள் நின்றுக் கொண்டே பல்வேறு வேலைகளைச் செய்வதால் கால் வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இந்த பிரச்சனையை வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் தீர்க்க முடியும்.வெள்ளி கொலுசுகள் குதிகால் நரம்பைத் தொட்டு கொண்டிருப்பதால், இந்த நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இதோடு பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் வெள்ளி கொலுசுகள் பயன்படுகிறது. இதனால் தான் நம்முடைய முன்னோர்கள் கட்டாயம் கால்களில் தண்டை, சிலம்பு, கொலுசு என காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.உடலில் உள்ள சூட்டை அகற்றுவதோடு, இதனால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு வெள்ளி கொலுசுகள் உதவியாக உள்ளது.வெள்ளி கொலுசுகளை அணிவதன் மூலம் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும், இதோடு பெண்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு விதமான நோய்களுக்குத் தீர்வு காணவும் உதவியாக உள்ளது. வெள்ளி கொலுசுகளைக் கால்களில் அணியும் பெண்கள் அழகாகத் தெரிவதோடு, உலோகத்தில் உள்ள கதிர்வீச்சுகள் அவர்களின் மனநிலையை மாற்றமும், எப்போதும் நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்கவும் பெண்களுக்கு உதவியாக உள்ளது..

Apr 13, 2024

பிரஷர் குக்கர் பயன்படுத்தும் முறை

,.எதிர்பாராதவிதத்தில் வரும் விருந்தாளிகளைச் சமாளிக்கவும்,சமையலறையில் பல மணி நேரம் வியர்வை வடிய சமையல் செய்வதிலிருந்து தப்பிக்கவும் பிரஷர் குக்கர் மிக உதவுகிறது.பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, காய்கறி என்று மூன்று விதப் பண்டங்களை ஏறக்குறைய ஒரே மணி நேரத்தில் வேக வைக்க முடியும். பல ஆண்டுகள், பிரஷர் குக்கரில் உணவு தயாரித்துப் பழக்கமிருந்தாலும், இல்லத்தலைவியர் பலருக்கு பிரஷர் குக்கரின் சக்தி, திறமை மற்றும் குக்கரைப் பாதுகாப்பது எப்படி என்பது முழுமையாகத் தெரிந்திருப்பதில்லை.குக்கரின் வெளிப்புறத்தை சோப்புக்கலந்த கொதி நீரினால் சுத்தம் செய்து, உடனே உலர வைக்க வேண்டும். குக்கரை நீரில் அமுக்கி வைக்கும்போது, பளபளப்பு மங்கிவிடுகிறது. வாஷிங் சோடா உபயோகித்துச் சுத்தம் செய்யக்கூடாது. குக்கர் மங்கிய நிலையில் இருந்தால், அலுமினியத்தைச் சுத்தம் செய்யக்கூடிய டார்ட்டாரிக் அமிலம் உபயோகித்துச் சுத்தம் செய்யலாம்.சமைக்கும்போது, குக்கருள் ஒரு சிறு துண்டு புளியோ, அல்லது ஒரு துண்டு எலுமிச்சையோ போட்டு வைத்தால், உட்புறம் கறுப்பாக ஆகாமல் பளிச்சென்று இருக்கும். (எலுமிச்சம் தோலை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துப் பயன்படுத்தலாம்.. குக்கரைச் சுத்தப்படுத்தியவுடன், நன்றாக உலர்ந்த துணியால் துடைத்து வைக்க வேண்டும். மூடியை மூடிய நிலையில் வைக்க வேண்டாம். பல வீடுகளில், குக்கரை, சமைப்பதற்கு மட்டுமன்றி வேறு பல வேலைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இது தவறு. குக்கருக்குள் வைக்கப்படும் பாத்திரங்களை வேறு எதற்கும் உபயோகிக்கக் கூடாது.குக்கரையும், உள் வைக்கும் பாத்திரங்களையும் குப்புறப் போட்டுச் சுத்தம் செய்யக் கூடாது. குப்புறப் போட்டுச் சுத்தம் செய்யும்போது, விளிம்புகள் தேய்ந்து, பாத்திரங்கள் ஒன்று மீது ஒன்று சரிவரப் பொருந்தாது. பொருந்தாதபோது, இடைவெளி இருக்கும். எனவே ஆவி ஏற்படுவது தடைப்படும். ஆகவே குக்கரையும் பாத்திரங்களையும், வேறு எந்த முறையிலும் பயன்படுத்தக் கூடாது.இரப்பர் வளையம் நெடுநாட்களுக்குப் பயன்பட வேண்டுமானால் குக்கரைத் திறந்தவுடன் வளையத்தை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு விடவும். வாரத்திற்கு ஒருமுறை, ரிஃப்ரிஜிரேட்டரில் உள்ள ஐஸ் தயாரிக்கும் ஷெல்ஃபில் ஒரு மணி நேரத்திற்கு வைத்து எடுக்கவும். குக்கருள் ஏற்படும் ஆவியைச் சீராக்கி குக்கருள் இருக்கும் அழுத்தம் மாறாமல் ஒரே நிலையில் இருக்க உதவுகிறது வெயிட் வால்வு. அளவுக்கதிகமான ஆவி ஏற்படும்போது, ஆட்டோமேடிக்காக, வெயிட் வால்வு, அளவுக்கதிகமான ஆவியை வெளியேற்றி குக்கருள் ஒரே நிலையான அழுத்தம் தொடர்ந்து இருக்கும்படிச் செய்கிறது. பிரஷர் குக்கரில் கேஸ்கட் ரிலீஸ் சிஸ்டம் இருக்கிறது. வெயிட் வால்வில் உணவுத் துண்டுகள் சேர்ந்து அடைத்துக் கொண்டு விடுமேயானால் வெயிட் வால்வு சரிவரச் செயல்பட்டு குக்கருள் ஏற்படும் அதிக ஆவியை வெளியேற்ற முடியாது. கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும்போது, குக்கருள் உள்ள ஆவியின் அழுத்தம் அதிகமாகும்போது, கேஸ்கெட்டின் ஒரு பகுதி சரிந்து அதிகமான ஆவி குக்கருக்குள் போய்விடுகிறது.கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் இல்லாதபோது, உணவுத் துண்டுகள் அடைத்துக்கொண்டு வெயிட் வால்வு செருகப்படும் துவாரமும் அடைபட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு. குக்கருள் ஏற்படும் அதிக ஆவியின் அடிக்கத்தின் காரணமாக வெயிட் தூக்கி அடிக்கப்படும். எனவே, குக்கர் மூடியைச் சுத்தப்படுத்தும்போது, ஒரு சிறிய, மெல்லிய ஊசியை, வெயிட் வால்வு செருகப்படும் துவாரத்தில் நுழைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் இருக்கும்போது கேஸ்கெட் சரிந்து விழுந்துவிடுகிறது. இவ்வாறு கேஸ்கெட் விழுந்துவிடும்போது, குக்கரை அடுப்பிலிருந்து இறக்கிக் குளிரச் செய்து, வெயிட் வால்வு ஏன் வேலை செய்யவில்லை என்று கவனிக்க வேண்டும். குக்கர் மூடியின் ஒருபுறத்தில் பொருத்தப்பட்டிருப்பது சேஃப்டி வால்வு. குக்கருக்குள் போதுமான நீர் இல்லாதபோதும், வெயிட் வால்வு அடைத்துக் கொள்ளும்போதும், குக்கருள் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. குக்கருள், பாதுகாப்பான அளவுக்கு மேல் ஆவியின் அழுத்தம் அதிகமானால், இந்த சேஃப்டி வால்வு உருகி, அளவுக்கதிகமான ஆவியை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. சில குக்கர்களில் இந்த சேஃப்டி வால்வு கைப்பிடிக்கு அடியில் அமைந்திருக்கும். 

Apr 12, 2024

போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்! லட்சாதிபதி ஆக தினமும் ரூ.200

இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தோராயமாக 9.5 ஆண்டுகளில் (115 மாதங்கள்) ஒரு முறை முதலீட்டை இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறது.இது 7.5 சதவீத கூட்டு வருடாந்திர வருவாயின் நிலையான விகிதத்தை வழங்குகிறது.கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ், எந்தவொரு வயது வந்தவரும் தனிநபர் அல்லது 3 பெரியவர்கள் வரை கூட்டு கணக்கைத் திறக்க தகுதியுடையவர் ஆவார்கள்.கிசான் விகாஸ் பத்ரா என்பது அஞ்சல் அலுவலகத்தின் சேமிப்புத் திட்டமாகும். இது கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள தனிநபர்களின் நீண்டகால சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஆபத்து இல்லாதமுதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் கிஷான் விகாஸ் பத்ரா கணக்குகளைத் திறக்கலாம். மேலும், பாதுகாவலர்கள் சிறார்கள் அல்லது மனநலம் குன்றியவர்கள் சார்பாக கணக்குகளை திறக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தை ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம். மேலும், 100 இன் மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.உதாரணமாக நீங்கள் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தால், முதிர்ச்சியின்போது ரூ.10 ஆயிரம் கிடைக்கும்.KVP திட்டத்தின் முக்கிய ஈர்ப்பு அதன் இரட்டிப்பு அம்சமாகும், அதாவது உங்கள் முதலீட்டுத் தொகை முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்தில் இரட்டிப்பாகும். தற்போது,KVP இன் இரட்டிப்பு காலம் 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆகும். அதாவது ஒரு வருடத்திற்கு தொடர்ந்து தினமும் ரூ.200 முதலீடு செய்தால், பத்தாண்டுகளுக்குள் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்.ஒரு வருடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.200 முதலீடு செய்தால், அந்த ஆண்டுக்கான மொத்த முதலீடு ரூ.73,000 (200 * 365) ஆகும். இரட்டிப்பு காலம் 115 மாதங்களில் 7.5 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்துடன் (ஆண்டுதோறும் கூட்டும்) நிர்ணயிக்கப்பட்டால், உங்கள் முதலீடு 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் ரூ.1,46,000 ஆக இரட்டிப்பாகும்..

Apr 12, 2024

BSNL ரீசார்ஜ்.. ரூ.397 போதும்.. 150 நாட்கள் வேலிடிட்டி

`.ஜியோ நிறுவனத்தை விட கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் எக்கச்சக்க நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.பிஎஸ்என்எல் ரூ 397 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 397 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 10 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக 150 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாஇ வரம்பற்ற அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முதல் 30 நாட்களுக்கு வழங்கப்படும்.பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 666 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் அதிக நன்மைகள் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் ( bsnl rs 797 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் கிடைக்கும். ஆனால் பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பின்பு, ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மட்டுமே 300 நாட்களுக்கு ஆக்டிவாக இருக்கும். குறிப்பாக 60 நாட்களுக்குப் பிறகு அனைத்து சலுகைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 997 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையைக் கொண்டுவருவதால், இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் மக்கள் அதிகம் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

1 2 ... 33 34 35 36 37 38 39 ... 47 48

AD's



More News