25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 06, 2024

கூடுதல் வெளிநாட்டுச் சம்பளம் என ஆசை காட்டி மோசம் செய்யும் ஏஜன்டுகள்"ஆடு ஜீவிதம் ”திரைப்படக் கதை இவர்களுடைய மனவலியைத்தான் காட்சிப்படுத்தி உள்ளனர்.

நிறைய சம்பாதிக்கலாம் என்கிற ஆசையை தூண்டி தான் தமிழர்களையும் மலையாளிகளையும் அழைத்துக் கொண்டு செல்கின்றனர்.அங்கே மாட்டிக் கொண்டு அவஸ்த்தை படும்போது தான் ஆசைப்பட்டது எவ்ளோ தப்பான விஷயம் என புரியும் போது மேலும், வலி நெஞ்சை அடைக்கும் என்கிறார் சேரன்.சமீபத்தில் திருப்பூரில் இருந்து சென்ற ஒரு இளைஞரை ஏமாற்றி அழைத்துச் சென்று அவன் சண்டை பிடித்து தப்பிக்க பார்த்தான்னு சுட்டுக் கொன்னுட்டாங்க.. .  இது பொய்யான கதையல்ல, சவுதிக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் துயரக் கதை என தமிழ்நாட்டில் இருந்து நஜீப் போல சவூதிக்கு ஆடு மேய்க்கும் வேலையில் சிக்கி பல சவுக்கடிகளை வாங்கித் திரும்பி வந்த சேரன் என்பவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி இருக்கிறது. தங்கள் குடும்பத்தில் இருந்து சென்றவனை, போன ஐந்தாம் நாளே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் இந்தியர்கள் அனவைரின் மனதினையும் பாதித்துள்ளது .ஆயிரம் ஆடு ஜீவிதம் கதை இருக்கு: நஜீப் எனும் ஒரு மலையாளி மட்டும் சவுதிக்கு சென்று இந்த வலிகளை எல்லாம் அனுபவித்தார் என நினைக்க வேண்டாம். அதை விட சொல்ல முடியாத ஆயிரம் ஆடு ஜீவிதம் கதை இருக்கு. 20 வருடங்களாக ஒருத்தராவது எங்கள் வலிகளை படமாக்க மாட்டார்களா என நினைத்துக் கொண்டிருந்தேன். பிளஸ்சி பிருத்விராஜை வைத்து சொல்லியிருக்கும் படத்தை அழுது கொண்டே தான் பார்த்தேன் எனக் கூறுகிறார் தமிழ்நாட்டில் இருந்து சவுதிக்கு சென்று சிக்கிய சேரன்.டெய்லர் வேலைக்காக சென்றேன்: சொந்தக்கார ஏஜென்ட்டுதான் அவனை நம்பித்தான் 80 ஆயிரம் பணம் கட்டி சென்னையில இருந்து மும்பைக்குச் சென்று அங்கே இருந்து சவுதிக்குப் போனேன். விமானத்தில் போகும் போது சந்தோஷமாக இருந்தது. 30 ஆயிரம் சம்பளம்னு சொன்னாங்க.. விமான நிலையத்தில் ஓனர் வந்தான் காரில் அழைத்துச் சென்றான். சொகுசான ஏசி கார் நல்ல வேலை என நினைத்துக் கொண்டிருந்தேன். 150 கி.மீ., கார் போனது சிட்டியை தாண்டி மலைகள் இருக்கும் இடத்துக்கு கூட்டிப்போனான். டிரைவர் தமிழ்க்காரர் தான். இரும்பு தகரம் அடைத்த கொட்டகையில் ஆடுகளை வைத்திருக்கும் இடத்திற்கு கொண்டுப் போய் விட்டவுடனே அழுது விட்டேன். கேட்ட கதையெல்லாம் உண்மையாக நமக்கே நடந்து விட்டதே சொந்தக்கார ஏஜென்ட்டே காசு வாங்கிட்டு ஏமாத்திட்டானேன்னு நினைச்சு அழுதேன். கார் டிரைவர் அழாத அடம் பிடிக்காத அப்புறம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அமைதியா வேலை செஞ்சா சம்பளம் கிடைக்கும். ஊருக்கும் சில வருடங்களில் போய் விடலாம் என்றார்.ஒரு நாளைக்கு உணவு ஒரு பெரிய பன்னும் 5 லிட்டர் தண்ணீரும் தான். தூங்கிட்டா பூட்ஸ் காலால் எட்டி உதைப்பான். எதிர்த்து பேசினாலோ, எஸ்கேப் ஆக நினைத்தாலோ சவுக்கடி தான். ஒரு அடி வச்சா அப்படியே வரிக்குதிரை மாதிரி கோடு விழுந்துரும். 10 அடிக்கு மேல வாங்கியிருக்கேன் என சேரன் கண்ணீர் மல்க தனது சொந்தக் கதையை விவரித்துள்ளார். என்னை போல யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக நானே ஏஜென்ட்டாக மாறினேன். பலரை சரியான வேலைகளுக்கு கொண்டு சேர்த்து இருக்கிறேன். சிலர் ஏமாந்துப் போய் தப்பான ஆட்களிடம் இப்போதும் மாட்டிக் கொள்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பாகதிருப்பூர்காரப்பையன்ஒருவன்எதிர்த்துசண்டைபிடித்ததால்சுட்டுக்கொன்னுட்டானுங்க, பிணமாத்தான்வீட்டுக்குகொண்டுவந்தோம்.இன்னமும்அங்கேஇந்தகொடுமைத்தான்நடக்குதுஎனகண்கலங்கிஉள்ளார்.“ஆடு ஜீவிதம்” திரைப்படம் உண்மைக் கதையை வெளியிட்டு,மக்களின் வரவேற்பையும்,இனிபணத்திற்காக ஆசைப்பட்டு அரபு நாடுகளுக்குச் செல்லும் பல இந்தியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இந்தப்படம் பார்த்து பல இந்தியர்கள் அழுதுள்ளனர் .கூடுதல் வெளிநாட்டுச் சம்பளம் என ஆசை காட்டி மோசம் செய்யும் ஏஜன்டுகள்."ஆடு ஜீவிதம்”திரைப்படக் கதை இவர்களுடைய மனவலியைத்தான் காட்சிப்படுத்தி உள்ளனர்.

Apr 06, 2024

செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண வசூல் முறையில் GPS மற்றும் கேமரா மூலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். நாடு முழுவதும் NO சுங்கச்சாவடிகள் .மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் உறுதி

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் காட்சிகள் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் உறுதி செய்துள்ளார்.டோல்கேட் சிஸ்டம் முறை இந்தியாவில் விரைவில் முடிவிற்கு வரவுள்ளது. டோல்கேட் சிஸ்டமிற்கு பதிலாக இந்தியாவில் விரைவில் ஒரு புதிய டோல் வசூல் முறை அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய முறை மூலம் வழக்கமான சுங்க சாவடிகள் தேவையற்றதாக மாறும். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சாட்டிலைட் பேஸ்ட் டோல் சிஸ்டம் நாட்டில் அமலுக்கு வர உள்ளதாக கூறி இருக்கிறார். செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண வசூல் முறையில்,GPS மற்றும் கேமரா மூலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Apr 05, 2024

இன்டர்ன்ஷிப் விண்ணப்பிக்கும் போது ........

மாணவர்கள் கல்வி திறனை மேம்படுத்தவும், வேலை அனுபவத்தை பெறவும் 'Internship' செல்வது வழக்கம். இன்டர்ன்ஷிப். விரும்பும் துறை சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி செய்ய நிர்ணயிக்க வேண்டும். பின்னர் அதனுடன் ஒத்துப்போகும் நிறுவனங்களில் கூட பயிற்சி பெற வாய்ப்பு அமையும். எல்லோரையும் போல பயிற்சிக்கு விண்ணப்பிக்க கூடாது. உங்களுடைய ரெஸ்யூமில் உங்களுடைய திறன்கள், அனுபவம், இதுவரை செய்த சாதனைகளை பட்டியலிடும்போது நிறுவனத்தினர் முதன்மையாக பரிசீலனை செய்வார்கள் எல்லோரையும் போல பயிற்சிக்கு விண்ணப்பிக்க கூடாது.இது நம்மை நாமே அப்டேட் செய்து கொள்ளநீங்கள் தேர்வு செய்யும் துறையில் தற்போதைய நிகழ்வுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நேர்காணலில் நேருக்கு நேர் பேசுதல், தெளிவாக பேசுதல் உள்ளிட்ட சிக்கல்களை சரி செய்ய அதற்கான் பயிற்சிகளை முன்கூட்டியே செய்துக் கொள்ள EDD வேண்டும் நீங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செல்வதற்கு முன் அந்த நிறுவனம் பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அந்த நிறுவனத்தில் கலாச்சாரம், வேலை பார்க்கும் முறை, சமீபத்திய நிகழ்வுகள் எல்லாம் தெரிய வேண்டும்.   உங்களுடைய ரெஸ்யூமில் நீங்கள் விண்ணப்பித்த பயிற்சி வேலைக்கு உதவக்கூடிய கூடுதல் (extra curricular activities) குறிப்பிட்டால் அது இன்னும் சிறப்பாக அமையும்.தொடர்பில் இருங்கள்.எப்போதும் துறை சார்ந்த நிபுணர்கள், நிகழ்வுகள், ஆன்லைன் கருத்தரங்குகள் ஆகியவற்றில் பங்கேற்று நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.   பல நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பையும் மாணவர்களுக்கு வழங்குகிறது. அவற்றை கண்டறிந்து பயிற்சி பெறுகையில் வேலை அனுபவத்துடன் பணமும் சம்பாதிக்க முடியும்.

Apr 04, 2024

இஎம்ஐ கடன் வாங்கி உள்ளீர்களா? மாத சம்பளம் வாங்கும் பலரை சிக்கலில் தள்ளி உள்ளது

மாதம், மாதம் உங்களுக்கு 2ம் தேதி இஎம்ஐ வருவது போல் கடன் வாங்கி உள்ளீர்களா... மறந்து அந்த தவறை இனிசெய்ய வேண்டாம். 2ம் தேதிக்கு பதில் 5ம் தேதி அல்லது 7ம் தேதி இஎம்ஐ என்றால் நிச்சயம் எளிதாக இருக்கும். ஏப்ரல் மாதமான இம்மாதம் 2ம் தேதி இஎம்ஐல் லோன் வாங்கிய பலரை சிக்கலில் தள்ளி உள்ளது.ஏப்ரல் ஒன்றாம் தேதியான முதல் புதிய நிதியாண்டு பிறக்கிறது. புதிய நிதியாண்டு பிறக்கிறது ஒருபுறம் எனில், சம்பளம் இந்த மாதம் ஒன்றாம் தேதி பலருக்கும் வந்திருக்காது. புனித வெள்ளி மார்ச் 29ம் தேதி வந்தது. அதன்பிறகு சனி மற்றும் ஞாயிறு வந்தது. திங்கள் கிழமையான ஏப்ரல் 1ம் தேதி வந்துள்ளது. அடுத்தடுத்து வங்கி விடுமுறை நாட்கள் என்பதுடன், நிதியாண்டு கணக்கினை முடிக்க வேண்டிய நிலையில் வங்கிகள் இருந்தன. இதேபோல் நிறுவனங்களுமே நிதியாண்டிற்கான கணக்கை முடிக்கும் பணியில் இருந்தன.இந்த காரணங்களால் இந்த மாதம் பல நிறுவனங்களில் 30ம் தேதி, 31ம் தேதி , ஏப்ரல் 1ம் தேதி சம்பளம் போடப்படவில்லை.. பல நிறுவனங்கள் ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம் போட முடியும் என்பதை முன்கூட்டிய அறிவித்துள்ளன. பல ஐடி நிறுவனங்களுமே இதே முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 2ம் தேதி இஎம்ஐயில் கடன் வாங்கியவர்கள் வழக்கத்தைவிட இந்த முறை சிக்கலை சந்தித்துள்ளனர். வீட்டு உபயோக பொருட்களை இஎம்ஐயில் வாங்குறீங்க, பைக் அல்லது கார் வாங்குறீங்க அப்படீன்னா, இஎம்ஐ தேதி குறைந்தது ஐந்து அல்லது 7ம் தேதி என்று இருப்பதே நல்லது.. ஏனெனில் எல்லா மாதமும் உங்களால் 5ம் தேதி இஎம்ஐ சரியாக கட்ட இயலாது.. சில தனியார் நிதி நிறுவனங்களில் இஎம்ஐயாக பொருட்கள் வாங்கினால் அதற்கான இஎம்ஐ தேதி 2ம் தேதியாகவே இருக்கும்.. அப்படியா நிலையில் சில நேரங்களில் சம்பளம் தாமதமாக வந்தாலோ அல்லது வங்கிகள் அடுத்தடுத்து விடுமுறை வந்தால் சிக்கலாகும். ஒருவேளை உங்களால் குறிப்பிட்ட தேதியில் இஎம்ஐ பணத்தை கட்டாமல் போனால் நீங்கள் கட்ட வேண்டிய அபராதம் 950 ஆக இருக்கும். தனியார் வங்கிகளில் 750 ரூபாயக்கு மேல் அபராதமாக செலுத்த வேண்டியது வரலாம். இஎம்ஐ கட்டாமல் விடும் காரணத்தால் உங்கள் சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.இஎம்ஐ தேதி 2ம் தேதி என்றால் ஒன்றாம் தேதியே வங்கியில் பணத்தை இருப்பு வையுங்கள். நீங்கள் 2ம் தேதி காலையில் பணத்தை போடலாம் என்று நினைத்தால், அவர்கள் விடியற்காலையிலேயே இசிஎஸ் போட்டு பணத்தை எடுக்க முயற்சிப்பார்கள்.. அப்போது பணம் இல்லை என்றால், அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும்.. 

Apr 03, 2024

புவிசார்குறியீடு பெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர்பால்கோவா

விருதுநகர்மாவட்ட ஶ்ரீவில்லிபுத்தூர்பால்கோவா.புவிசார்குறியீடு பெற்றுபுகழ்பெற்று விளங்குகிறது.தயார் செய்யப்படும் பொருட்கள்அதன் தரம்மற்றும் தனித்தன்மைகாரணமாக உலகஅளவில் புகழ்பெறுகின்றன.பால்கோவாவாங்கி வரச்சொல்லி,ஶ்ரீவில்லிபுத்தூர்நண்பர்களுக்கு தரும்அன்புதொல்லைகள் அளவிற்கு,ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாபுகழ்பெற்றது.பால்கோவா என்பதுபாலில் சர்க்கரைசேர்த்து பாலைசுண்ட காய்ச்சிதயார் செய்யப்படும்பொருள் தான். ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்குஇத்தனை மவுசுஎன்றகேள்வியை, ஶ்ரீவில்லிபுத்தூர்பால் கோவாஉற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, பால்கோவாவின்சுவைக்கு முக்கியகாரணம் பாலின்தரம் மற்றும்அதனை பக்குவமாகதயார் செய்யும்முறை தான்என்கின்றனர்.ஶ்ரீவில்லிபுத்தூர்மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியஊர் என்பதால்,பெரும்பாலும் இங்குவிவசாயம் தான்பிரதான தொழிலேவிவசாயிகள் தாங்கள்வளர்க்கும் மாடுகளுக்குமேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியவளமான புற்களையேஉணவாக தருகின்றனர்.அதனால்பாலின் தரம்இங்கு நன்றாகவும்பால் உற்பத்திஅதிகமாகவும் உள்ளது.அந்த தரமானபாலை நல்லகெட்டியான இரும்புபாத்திரத்தில் எடுத்துகொண்டு விறகுஅடுப்பில் வைத்து, முந்திரி தோல்களைகொண்டு தீ மூட்டிபாலை பக்குவமாகசுண்ட காய்ச்சிபால்கோவா தயார்செய்கின்றனர்.ஶ்ரீவில்லிபுத்தூர்பகுதியில் பால்உற்பத்தி அதிகம்என்பதால் அன்றையகாலகட்டத்தில் பாலைபதப்படுத்தி வைப்பதற்கானபெரிய தொழில்நுட்பவசதிகள் இல்லாதகாரணத்தால், பாலைசுண்டக் காய்ச்சிபால்கோவா அதிகளவில்தயார் செய்துஅதை வெளியூர்களுக்குவிற்பனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தமுறை அப்படியேகடைபிடிக்கப்பட்டு வந்துஇன்று பால்கோவாஎன்றாலே ஶ்ரீவில்லிபுத்தூர்தான் என்றாகிவிட்டது.

Apr 03, 2024

திருச்சி மக்கள் எதிர்பார்க்காத மெட்ரோ ரூட்

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன. அதாவது திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ரோ தொடங்கப்பட உள்ளது. இதில் திருச்சியில் தொடங்கப்பட உள்ள மெட்ரோவில் மேப் வெளியாகி உள்ளது.சென்னையில் மெட்ரோ இரயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கிவருகிறது. அதே போல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாத்தியக் கூறு ஆய்வின் மூலம் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் இந்த சாத்தியக் கூறு அறிக்கையில் கண்டறியப்பட்டன. :திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 26 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் வழித்தடங்களில் 2 45 கி.மீ நீளத்திற்கு 45 நிலையங்கள்கண்டறியப்பட்டுள்ளன.திருநெல்வேலி மாநகராட்சியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 13 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், பாளையம்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 12 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 3-ல் 15 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ நீளத்திற்கு 40 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் இரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கி.மீ நீளத்திற்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன

Apr 02, 2024

இந்திய ரயில்வே பொது டிக்கெட் பயணிகளுக்கான புதிய  UPDATE

இந்திய ரயில்வே தனது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் விதிகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. இதுபோன்ற ஒரு மாற்றம், நாட்டின் அனைத்து பிரபலமான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பேமெண்ட் தளம் வழியாக செலுத்துவது ஆகும்.இதன் மூலம் தனிநபர்கள் பொது டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்த விரைவில் உதவும். ஏப்ரல்1 முதல், யுபிஐ கட்டண முறையைப் பயன்படுத்தி இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் பொது வகுப்பு ரயில் முன்பதிவுகளுக்கு நீங்கள் பணம் செலுத்த முடியும்.இது பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை கணிசமாக எளிதாக்கும். ரயில்வே நெட்வொர்க்கில் பொது ரயில் டிக்கெட்டில் பயணம் செய்ய விரும்புவோர், முன்பதிவு செய்வதற்கான பணத்தை ரொக்கமாகச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.மேலும் கூகுள் போன்றQRஅடிப்படையிலான யுபிஐ ஆப்ஸைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ஆப்ஷன்கள் உள்ளது. ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் கவுன்டர்களில் ஆன்லைன் டிக்கெட் வசதிகளை ரயில்வே வழங்கும்.

Apr 02, 2024

பூமியின்மையப்பகுதியில் இருக்கும்நாடு   ghana

 பூமியில்எண்ணிலடங்கா ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன பரந்து விரிந்த நிலப்பரப்பு, கடல்மட்டம், மலைமுகடுகள் அமைந்துள்ளது.பூமிக்கு மையத்தில் அமைந்திருக்கும் நாட்டின் பெயர் கானா என்று அழைக்கபடுகிறது. விஞ்ஞானிகள் இதை கற்பனை இடம் என்று குறிப்பிடுகின்றனர்.உண்மையில் பூமியின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள ஆப்ரிக்க நாடு தான் கானா. இந்த நாடு பூமியின் மையமாக கருதப்படுகிறது.இது பூமியின் அகலம் இங்கிருந்துதான் கணக்கிடப்படுகிறது. பூமியின் மையத்திலிருந்து சுமார்380 மைல்கள் தொலைவில் கானா அமைந்துள்ளது.இருப்பினும் பூமியின் மையப்பகுதிக்கு மிக அருகில் இருப்பதால் இது பூமியின் மையப்பகுதி என அழைக்கப்படுகிறது.  

Apr 01, 2024

உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கம் 10வது இடத்தை பெறுகின்றது 

அதிக விலை கொண்ட உலோகமாக தங்கம் பார்க்கப்படுகின்றது.ஒவ்வாரு மனிதனின் செல்வத்தை குறிக்கும் பொருளாகவும் தங்கம் காணப்படுகின்றது.தங்கம் தான் ஒரு வீட்டின் பொருளாதாரத்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது என்றால் மிகையாகாது.முதலீடு என்றாலே தங்கம் தான் என கருதப்படும் நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் வாங்க சுமார் ரூ.5,800 க்கு மேல் செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த உலகில் தங்கத்தை விட அதிக விலை கொண்ட பொருட்கள் எல்லாம் இருக்கின்றன. உலகில் விலை உயர்ந்த பொருட்களை பட்டியல் படுத்தினால் அதில் தங்கம் பல்வேறு உலோகங்களின் பின்னால் தான் இருக்கின்றது தங்கத்தை மிஞ்சிய எத்தனையோ பொருட்கள் சாதாரண மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கதிரியக்க தனிமமாக ஃபிரான்சியம் அறியப்படுகின்றது. ஒரு கிராம் ஃபிரான்சியத்தின் விலை ரூ.8,313 கோடி ஆகும்.குறித்த தனிமத்தின் ஆயுட்காலம் 22 நிமிடங்கள் மாத்திரமே ஆகும்.22 நிமிடங்களின் பின்னர் இந்த உலோகம் வேறு உலோகமாக மாறிவிடும். இந்த தனிமம் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும் உலகின் மிக விலை உயர்ந்த தனிமமாக ஃபிரான்சியமே காணப்படுகின்றது. ஃபிரான்சியத்திற்கு அடுத்தப்படியாக விலையுயர்ந்த உலோகமாக காலிஃபோர்னியா பார்க்கப்படுகின்றது.கடந்த1950 ஆம் ஆண்டு முதன்முதலில் காலிஃபோர்னியா பல்கழைகழகத்தில் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்த தனிமத்திற்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் காலிஃபோர்னியாவின் விலை ரூ.2.22 கோடி ஆகும். இதனை ஆண்டுக்கு அரை கிராம் மட்டுமே உருவாக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமை அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் கார்பன் என்பதும் மிகவும் விலையுயர்ந்த தனிமங்களில் ஒன்றாகும். வைர வடிவிலான கார்பன் ஒரு கிராமின் பெறுமதி ரூ.54 லட்சம் ஆகும்அணு குண்டுகள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம் எனும் தனிமம் வைரத்திற்கு அடுத்த படியாக விலையுயர்ந்ததாக கருதப்படுகின்றது.இவை எளிதில் தீப்பற்ற கூடியது என்பதால் இதனை சேமித்து வைப்பது மிகவும் கடினம். ஒரு கிராம் ரூ.3.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஸ்காண்டியமும் ஒரு விலையுயர்ந்த தனிமமாகும். இத மிகவும் குறைந்த அளவில் தான் பூமியில் காணப்படுகின்றது.ஒரு கிராம் ஸ்காண்டியத்தின் விலை ரூ.22,000 வரை விற்பனையாகின்றது. பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும்,லுடேடியம் பூமியில் உள்ள அரிய உலோகமாகும்.இது அல்கலைஷேன், ஹைட்ரஜனேட்டம், பாலிமரைசேஷன், போன்ற செயல்முறைகளில் அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றது. ஒரு கிராம் லுடேடியம் ரூ.5,7000 வரை விற்பனை செய்யப்படுகிறது.நம்மில் பெரும்பாலனவர்களுக்கு பிளாட்டினம் பற்றி தெரிந்திருக்கும். இந்த தனிமம் ஆபரணங்கள் செய்யவும் பயன்படுகின்றது. இதன் தேவை மிக அதிகமாக இருந்தாலும், ஆண்டுக்கு சில நூறு டண்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிராம் பிளாட்டினத்தின் பெறுமதி  ரூ.48,0000 ஆகும். உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. உலகம் முழுவதும் தங்கத்திற்கு அதிக தேவை காணப்படுகின்றது.உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கம் 10வது இடத்தை பெறுகின்றது. ஒரு கிராம் தங்கம் தற்போது 5800 வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

Apr 01, 2024

இந்தியாவில் புதிய விமானம் நிறுவனம் ஃப்ளை91..

சரியான திட்டத்துடன், சரியான கட்டணத்தையும் கொண்டு இயங்கினால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உள்ளது என்பது தான் தற்போதைய விமானச் சந்தையின் நிலவரம். சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களை மட்டுமே டார்கெட் செய்து JettWings என்ற விமானச் சேவை நிறுவனம் அறிமுகமான நிலையில், புதிதாக ஒரு நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.இந்த ஏவியேஷன் துறையில் புதிதாக ப்ளை 91 நிறுவனம் (FLY91) தனது பயணச் சேவைகளைத் தொடங்கியுள்ளது. கோவாவின் மனோகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 7:55 மணிக்குப் புறப்பட்ட நிறுவனத்தின் முதல் பயணிகள் விமானம் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு பறந்தது. மேலும், தனது முதல் இயக்க நாளில், ஃப்ளை91 பெங்களூருவிலிருந்து சிந்துதுர்க் (Sindhudurg) செல்லும் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.ஃப்ளை91 நிறுவனம் முதல்கட்டமாகக் கோவா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சிந்துதுர்க் இடையே பறக்கும், ஏப்ரல் மாதத்தில் அகத்தி, ஜல்கான் மற்றும் புனே ஆகிய இடங்களுக்கான சேவைகளை விரிவாக்கம் செய்ய உள்ளது. திங்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோவா-பெங்களூரு இடையேயும், இதே போன்ற அட்டவணையில் பெங்களூரு-சிந்துதுர்க் இடையேயும் இயக்கப்படும். மேலும், கோவா-ஹைதராபாத் இடையேயும், சிந்துதுர்க்-ஹைதராபாத் இடையேயும் வாரத்திற்கு இரண்டு முறை சேவைகள் இயக்கப்படும் என ஃப்ளை91 தெரிவித்துள்ளது. இந்தியாவை இதுவரை இல்லாத வகையில் இணைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த முதல் பயணம் வெறும் இடத்தை அடைவது பற்றி மட்டுமல்ல; ஒரு தேசத்தின் கனவுகள் மற்றும் ஆசைகள் ஆகியவற்றுடன் பறப்பதைக் குறிக்கிறது" என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் சாக்கோ தெரிவித்தார். ஃப்ளை91 ஒரு பிராந்திய விமான நிறுவனம் ஆகும், இது இந்தியா முழுவதும் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களை வான்வழி போக்குவரத்து மூலம் தங்களுடைய இணைப்பை மேம்படுத்த முயல்கிறது.

1 2 ... 35 36 37 38 39 40 41 ... 46 47

AD's



More News