25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 30, 2024

உடல் ரீதியாக மனிதர்களுக்குபல பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் அரிசி

உணவுஎன்றபெயரில்நம்மில்பெரும்பாலானோர்இன்றுவிஷத்தைத்தான்உட்கொண்டுவருகின்றோம்.நாம்உண்ணக்கூடியஉணவில்சரிபாதியாககலப்படம்தான்நிறைந்திருக்கின்றன.கலப்படம்நிறைந்தபொருட்கள்தான்இன்றுபல்வேறுஉணவுப்பொருட்களின்தரத்தைக்குறைக்கின்றன.அதோடு,உடல்ரீதியாகவும்மனிதர்களுக்குபலபாதிப்புகளைஏற்படுத்துகின்றன.கடைக்குச் செல்லும் பொதுமக்கள் தரமான பொருட்களை ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரம் இல்லாத கலப்படப் பொருட்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்த்து தரமான பொருட்களை பார்த்து வாங்க வேண்டும். கலப்படம் இல்லாத உணவுப்பொருட்களின் பட்டியலை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சீனி, அரிசி காபித் தூள், காய்கறி மற்றும் பழங்கள் என தொடங்கி, ஏராளமான பொருட்களில் இன்று கலப்படம்தான் ஆட்சி நடத்தி வருகிறது. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைத் தடுக்க  பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு பொருட்களை வாங்க வேண்டும்.அரிசி என்பது நாம் அன்றாட உணவில் பயன்படுத்தக்கூடிய உணவுப்பொருளாகும்., தற்போது‘’ பிளாஸ்டிக் அரிசி என்பது சுத்தமான, இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசியைப் போல் மாற்றப்பட்டு, உண்மையான அரிசியோடு கலக்கப்படுகிறது. பிளாஸ்டிக் என்பது மக்காத, செரிக்காத மற்றும் உண்ணத்தகாத ஒரு பொருளாகும்., இதை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட பல நோய்களால் அவதிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.ஒரு டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் அரிசியை போட வேண்டும், அந்த அரிசி மேலே மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி. அப்படியில்லாமல் அடியில் தங்கிவிட்டால் அதுதான் நல்ல அரிசி என்று நாம் அறிந்துகொள்ளலாம்.அதேபோல் தீக்குச்சி அல்லது லைட்டரைப் பயன்படுத்தியும் கூட பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்கலாம். குறிப்பிட்ட அளவு அரிசியை எடுத்துக்கொண்டு நெருப்பிலிட்டு எரிக்க வேண்டும். அந்த அரிசி எரிந்ததும் பிளாஸ்டிக் வாசனை வந்தால் அது போலியான அரிசி ஆகும். உண்மையான அரிசி எரிந்தால் பிளாஸ்டிக் வாசனை வராது. எனவே, இதுபோன்ற பிளாஸ்டிக் அரிசியை கண்டறியும் முறையைப் பயன்படுத்தி கலப்படம் நிறைந்த உணவுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Mar 30, 2024

எகிறும் கரண்ட் பில் இதற்கு மாற்று சோலார் பேனல்கள்  மாதத்திற்கான மின் கட்டணம்12 ஆயிரம் ரூபாய் சோலார் பேனலுக்கு மாறிய பின்பு நெட்வொர்க் சார்ஜ் ஆக 500 ரூபாய் வரை மட்டுமே

இந்தியாவில் பல வீடுகள்24×7 மின்சாரம் பெறவும், மின் கட்டணத்தை மிச்சப்படுத்தவும் சூரிய ஒளியை பயன்படுத்துகின்றனர்.ஒருவர் சூரிய சக்தியில் இயங்க விரும்பும் மின் சுமை மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்து, ஆன்-கிரிட் அல்லது ஆஃப்கிரிட் சோலார் சிஸ்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்தியாவில் வசிப்பவர்கள் இப்போது அதிகநபர்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வீடுகளுக்கு சோலார் பேனல்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலையான எதிர்காலத்தை நம்புகின்றனர்.வீடுகளுக்கான சோலார் பேனல்கள் சூரிய மின்கலங்களின் தொகுப்பாகும். அவை முழுக்க முழுக்கமின்சாரத்தை உருவாக்கவும் வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சோலார் பேனல்கள் சூரியனின் கதிர்களை உறிஞ்சி ஒளிமின்னழுத்த விளைவு மூலம் மின்சாரம் அல்லது வெப்பமாக மாற்றுகின்றன.வீடுகளுக்கான சோலார் பேனல்கள் சூரியனில் இருந்து சுத்தமான மற்றும் தூய ஆற்றலை ஊக்குவிக்கின்றன. உங்கள் வீட்டில் சோலார் பேனல் நிறுவலைக் கருத்தில் கொள்வது, கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை எதிர்த்துப் போராடவும், புதைபடிவ எரிபொருள் அல்லது மின்சாரத்தின் மீதான கூட்டுச் சார்பைக் குறைக்கவும் உதவும்..இது ஒவ்வொரு குடியிருப்பு மற்றும் வணிக சொத்து உரிமையாளருக்கும் வளமான மின்சாரம் வழங்குவதற்கான இறுதி தேர்வாக அமைகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மருத்துவர் அகிலாண்ட பாரதி தனது வீட்டில் இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம்12 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி வந்துள்ளார்.தற்போது சோலார் பேனலுக்கு மாறிய பின்பு நெட்வொர்க் சார்ஜ் ஆக500 ரூபாய் வரை மட்டுமே மின்கட்டணமாக செலுத்தி வருகின்றார். இதன் மூலம் அதிகப்படியான மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான எரிவாயுவை சேமிக்க முடியும். மேலும் மின்சாரத்தை விற்பனை செய்யவும் முடியும் என்று உறுதியளிக்கின்றார். 

Mar 30, 2024

நடக்கும் ஒவ்வொரு இன்பத்திற்கும் ,துன்பத்திற்கும்  காரணம் ?

மனிதனுடைய வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். அதற்கான காரணத்தை நாம் கண்டுபிடித்து விட்டோம் என்றால் பிரச்சனைகள் ஏற்படாது. காரணத்தை அறிவதுதான் மிக மிக முக்கியம் எங்கு தவறு நடந்தது? எதைத் தவிர விட்டோம் என சிந்தித்துப் பார்த்து அந்த காரணத்தை அறிந்து விட்டோம் என்றால் அதுவே நமக்கு வெற்றியை வழிவகுத்து தந்துவிடும். ஒரு குண்டூசியை நாம் தொலைத்து விட்டால் கூட, அதை தொலைத்ததற்கும் நமக்கு ஒரு காரணம் இருக்கும் அது எதனால் நம் தொலைத்தோம் என்று அந்த காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.அதற்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க இந்த ஒரு சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கும்.அமெரிக்காவில் இருக்கும் தன் அக்காவுக்கு பார்சல் அனுப்புவதற்காக தபால் நிலையம் போனான் ஒரு இளைஞன். பார்சலுக்கான தபால் கட்டணம் செலுத்தியபோது அவனுக்கு மீதி இரண்டு ரூபாய் சில்லறை தர வேண்டும். என்னிடம் சில்லறை இல்லை என்று சொல்லி இரண்டு ரெவின்யூ ஸ்டாம்புகளை கொடுத்தார் தபால் நிலைய ஊழியர். கடையில் சில்லறை இல்லை என்றால் சாக்லேட் தருவார்கள் அதையாவது சாப்பிடலாம். ஒன்றுக்கும் உதவாது ஸ்டாம்ப் தருகிறார்கள் என்று அவனுக்கு எரிச்சல் வந்தது.தபால் ஊழியரை மனதுக்குள் திட்டியபடி அதை வாங்கி தன் பர்ஸில் வைத்தான். கொஞ்ச நாளில் அதை மறந்தே விட்டான். இந்த கால இளைஞர்கள் பலருக்கு தங்கள் பர்சை சுத்தம் செய்யும் வழக்கம் இல்லை அவனும் அப்படித்தான். ஆண்டுகள் கடந்தன.அவன் கல்லூரி படிப்பை முடித்து சான்றிதழ்களை வாங்க செல்லும் போது அவனிடம் செலுத்த வேண்டிய நிலுவைகள் ஏதும் இல்லை என்பதற்காக ஒரு சான்றிதழ் கேட்டார்கள். அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து போட வேண்டும் என்றார்கள்.ஊருக்கு வெளியே நெடுஞ்சாலையின் ஓரமாக இருந்த அந்த கல்லூரிக்கு அருகில் தபால் நிலையம் எதுவும் இல்லை. பலரும் என்ன செய்வது? என்று தெரியாமல் திகைக்க இவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்து. தன் பர்ஸை திறந்து பார்த்தான் என்றோ வாங்கி வைத்த ஸ்டாம்பு அப்படியே புதிதாக இருந்தது. தனக்கு ஒன்று தன் நண்பனுக்கு ஒன்று என்று எடுத்து பயன்படுத்தினான்.வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அர்த்தமுள்ள காரணம் இருக்கும் என்பதை அன்று அவன் புரிந்து கொண்டான். இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா? நமக்கு நடக்கும் ஒவ்வொரு இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஏதாவது ஒரு காரணத்தை கடவுள் நமக்கு வைத்திருப்பார். அதன் மூலம் நல்லது செய்ய வைப்பார் அந்த காரணத்தை நாம் கண்டுபிடித்து நமக்கு வழி காட்டுவது நம்மை படைத்த இறைவன்தான்.

Mar 30, 2024

எந்த வகையிலும் ,65 வயதை கடந்தவர்கள் உங்களை சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்

கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள்.வேகமாக திரும்பாதீர்கள்.கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள். நின்றவாறு கால்சட்டை Pant) மாட்டிக் கொள்ளாதீர்கள். எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்.இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.பின்புறமாக நடக்காதீர்கள். எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள் படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுத்து நிற்கவோ  நடக்கவோ செய்யாதீர்கள்.உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள், அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும். சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும் .அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள் வலி சரியாகும்கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்குபிடிப்புஏற்பட்டால் , வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள் நல்ல தீர்வு  ,வலி சரியாகும்திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள். 

Mar 30, 2024

காய்ச்சல் அடிக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால் பொருட்கள் உங்கள் உடல் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும் என்பதால் காய்ச்சல் இருக்கும் போது அவற்றை  தவிர்க்கவும். காய்ச்சலின் சிப்ஸ், குக்கீகள், கேக்குகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இது உங்கள் உடல் நிலையை மேலும் மோசமாக்கும்.உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது சர்க்கரை நிரம்பிய உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு எந்த ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது.நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்  கோதுமை, தானியங்கள் போன்ற உணவுகள் , ஜீரணம் செய்வது கடினம் உங்கள் செரிமான அமைப்பு அதிக சோர்வடையும். ஆகையால் காய்ச்சலின் போது இதை தவிர்க்கவும்.காய்ச்சலால் நீங்கள் வியர்வை மற்றும் திரவங்களை இழக்க நேரிடும். இந்த நேரத்தில் காஃபின் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை எடுத்து கொள்ளவது மேலும் நீரிழப்புக்கு வழி வகுக்கும்.  SODA,SOFTDRINKSபோன்றகாற்றோட்டமான பானங்களில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் என்பதால் இருமல் மற்றும் சளியை இது அதிகம் தூண்டும்.காய்ச்சலின் போது இதில் குறிப்பிட்டுள்ள உணவு மற்றும் பானங்களைத் தவிர்ப்பது நல்லது .

Mar 29, 2024

CLEAN கிச்சன் TIPS

பெண்கள் அனைவரும், அவர்கள் சமைக்கும் கிச்சனை சுத்தமாக வைத்து கொள்ள தான் விரும்புவார்கள். இதற்காக பெண்கள் அதிகமான நேரத்தை கிச்சனில் தான் செலவழிப்பார்கள். கிச்சனில் அழுக்கும், எண்ணெய் பிசுபிசுப்பும் சேராமல் இருக்க தினமும் காலை அல்லது இரவு தூங்கும் முன்பு கிச்சனை ஈர துணி வைத்து நன்கு துடைத்து விட்டு காய வைக்க வேண்டும். மேலும், வாரத்தில் இரண்டு முறை ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள்.பால்காய்ச்சும் போது பால்,தண்ணீர் எல்லாம்கிச்சன் மேடைமீது வைத்துஊற்றிய பிறகுஅடுப்பின் மீதுவைக்கலாம். இதனால்பால் சிந்திவீணாகாது.  பால்காய்ச்சி அடுப்பில்.அடிபிடித்து லேசாகதீய்ந்த வாடைஅடிக்கிறது என்றால்,அதில் ஒருவெற்றிலையை போட்டால், கருகிய வாடைகாணாமல் போகும்.பால்பொங்கி வழிவதுநமக்கு பெரியதலைவலியாக இருக்கும்.பால் காய்ச்சும்பாத்திரத்தை எடுத்து.அதில் ஒருசிறிய கிண்ணத்தைவைத்து விடுங்கள்.அதன் பின்புபாலை அந்தபால் காய்ச்சும்கிண்ணத்தில் ஊற்றிஅடுப்பில் வைத்துகாய்ச்சினால், பால்பொங்கி வழியாது.

Mar 29, 2024

பெண்களுக்கு ரயில்  பயணத்தில் கிடைக்கும் சலுகைகள்

இந்திய ரயில்வே பெண்களுக்காக பல விதிகளை வகுத்துள்ளது.உங்களின் உரிமைகள் மற்றும் இரயில்வே விதிகளை அறிந்து கொள்வது அவசியம் இதில் பெண்கள் தனியாக பயணம் செய்து டிக்கெட் எடுக்க முடியாவிட்டால் அவர்களுக்கு என்ன உரிமைகள் கிடைக்கும்? அவர்களுக்கென்று பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்கு அத்தகையஉரிமைகள் பற்றி தெரியாது. எனவே, இந்த விதிகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.TTEபெண்கள் ரயிலில் முன்பதிவு செய்யாவிட்டாலோ அல்லது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ ரயிலில் இருந்து இறங்க முடியாது.இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ், சில நிபந்தனைகளுடன் அந்தப் பெண் தனது ரயில் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டார். இது தவிர ரயிலில் ஒரு பெண் தனியாக பயணம் செய்தால்,TTEயிடம் பேசி இருக்கையை மாற்றிக் கொள்ளலாம்.TTEஅடுத்த ஸ்டேஷனில் ஒரு டிக்கெட்டைப் பெற பெண்ணைக் கோரலாம். ஒரு பெண்ணிடம் பணம் இல்லை என்றால், அவள் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்க முடியாது. இந்த சட்டம்1989 இல் இயற்றப்பட்டது. குடியரசுத் தலைவரிடமிருந்து காவல் பதக்கம் மற்றும் இந்திய காவல் விருது பெற்ற பெணகளுக்கு கட்டணத்தில்50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.இது தவிர, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கும் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. அரசாங்கத்தால்182 ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டது. இதில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

Mar 28, 2024

கோவை டாக்டர். அசோக் பக்தவத்சலம் ஒரு மென்பொருள் ஆலோசகராக பணியை தொடங்கி இன்று கோவையின் தவிர்க்க முடியாத நபர்களுள் ஒருவர்

கோயம்புத்தூர் மாவட்டத்கை தொழில்நுட்ப மையமாக மாற்றிய பெருமைக்குரிய டாக்டர். அசோக் பக்தவத்சலம் ஒரு மென்பொருள் ஆலோசகராக பணியை தொடங்கி இன்று கோவையின் தவிர்க்க முடியாத நபர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளார்.1990 களில் KGiSL நிறுவனத்தை தொடங்கி, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனில் கவனம் செலுத்தினார். பின்னர் புகழ்பெற்ற கேஜி மருத்துவமனையுடன் இணைந்து மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பணிகளை மேற்கொண்டார்.இதனை அடுத்து 1996 இல், கோயம்புத்தூரில் முதல் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் நிறுவனமாக KGiSL மாறியது. டாக்டர். பக்தவத்சலத்தின் தலைமையில் நிறுவனம் விரிவடைந்து, IT மற்றும் BPO சேவைகளிலும் கால் பதித்தது. குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி: குறுகிய காலத்திலேயே KGiSL உற்பத்தி, வங்கி, சுகாதாரம், காப்பீடு, நிதி மற்றும் கணக்கியல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு சேவை செய்யும் நம்பகமான மென்பொருள் சேவை நிறுவனமாக உருவானது.KGiSL இன் பிரதான தயாரிப்பான டால்பின், பேக் எண்ட் ஆஃபிஸ் சேவை மற்றும் மூலதனச் சந்தைகளில் தீர்வு நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் உள்ள 60% க்கும் அதிகமான நிறுவன தரகர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி KGiSL நிறுவனத்துக்கு தற்போது, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே UiPath இன் முதல் டயமண்ட் பார்ட்னர் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம்: மேலும், டாக்டர் பக்தவத்சலத்தின் தொலைநோக்குப் பார்வையால் கோவையில் CHIL சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்பட்டு KGiSL SEZ என அழைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையை மையமாக கொண்ட இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் டெல் இன்டர்நேஷனல், காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றனகல்வி நிறுவனங்கள் அமைப்பு: தொழில் மட்டுமின்றி, எதிர்கால திறமைகளை வளர்ப்பதிலும் கால் பதித்த இவர், கோவை சரவணம்பட்டியில் KGiSL இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜிஐஎஸ்எல் - இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் மேனேஜ்மென்ட் ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவினார். அதுமட்டுமின்றி மைக்ரோ காலேஜ் என்ற புது முறையில் பட்டதாரிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங், ஃபுல் ஸ்டேக் டெவலப்மென்ட், சைபர் செக்யூரிட்டி மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகளிலும் திறன்களை கற்று தருகிறது. தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒரு புறம் இருந்தால், மக்கள் நலனுக்கான செயல்களிலும் ஈடுபடுகிறார்.கே.ஜி மருத்துவமனையின் அறங்காவலராக , பின்தங்கிய நபர்களுக்கு 1,00,000 இலவச IOL அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள உதவி செய்தார். இவரது சாதனைகளை பாராட்டி,ஜி.கே.சுந்தரம் ஈட்டி விருது, டாக்டர்.எஸ்சி (ஹானரிஸ் காசா) மற்றும் லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் வழங்கும் தகவல் தொழில்நுட்பத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது என விருதுகளை குவித்துள்ளார்.கோவையில் மேலும் ஒரு ஐடி சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தில் R&Dயை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ள இந்த பொருளாதார மண்டலத்திற்காக 1,000 கோடி முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

Mar 28, 2024

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மூலிகை டீ

மருந்து, சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மூலம்,சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க,உதவும் ஒரு தேநீர்  சில வீட்டு வைத்தியங்கள் . மூலிகைடீ நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கருப்பு மிளகு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை,வெந்தயப் பொடி கலந்து தயாரிக்கப்படுகிறது.கருப்பு மிளகு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி,ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுத்து,சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்..இலவங்கப்பட்டை இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து, சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை கடுமையாக உயருவதைத் தடுத்து,கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கும், அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.முதலில், கருப்பு மிளகை பொடி செய்து 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.இதையடுத்து 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டையை அரை டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயப் பொடியை கலக்க வேண்டும்.அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இந்த பொடிகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை வெறும் வயிற்றில் அல்லது இரவு உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்ளலாம்

Mar 27, 2024

வெறும் 3 மணி நேரம் 48 நிமிடத்தில் சென்னையில் இருந்து பெங்களூருவை சென்றடைய இரண்டாவது வந்தே பாரத் ரயில்

சென்னை பெங்களூர் இடையே கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாவது வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறது. மாலை டீ குடித்துவிட்டு சென்னையில் இந்த ரயிலில் ஏறினால், இரவு உணவிற்கு பெங்களூருக்கு சென்று விடலாம். தமிழகத்திற்கு முதல் வந்தே பாரத் ரயிலாக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவிற்கு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி காட்பாடி வழியாக பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மைசூருக்கு சென்று வருகிறது.இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது தென்னக ரயில்வே நிர்வாகம் சென்னை-மைசூர் இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயிலை கடந்த 12ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. பிரதமர் மோடி கடைசியாக துவக்கி வைத்த 10 வந்தே பாரத் ரயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்த ரயில் தற்போது பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.மைசூர்-சென்னை இடையேயான இரண்டாவது வந்தே பாரத் ரயில் வரும் ஏப் 5ம் தேதிக்கு பிறகு அதிகாலை 6:00 மணிக்கு மைசூரிலிருந்து கிளம்புகிறது. பின்னர் இது பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையம் வழியாக பெங்களூருவை கடந்து மதியம் 12:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. வெறும் 6 மணி நேரம் 20 நிமிடத்தில் இந்த ரயில் மைசூர்-ல் இருந்து சென்னைக்கு வரும்.தற்போது இந்த ரயில் சென்னை- பெங்களூரு வரை மட்டுமே இயங்கி வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு கிளம்பி பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையம் வரை தற்போது பயணிக்கிறது. ஏப் 5ம் தேதிக்கு பிறகு மைசூர்விற்கு இரவு 11:20 மணிக்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு இடையேயான முதல் வந்தே பாரத் ரயில் பகல் நேரத்தில் சென்னையிலிருந்து கிளம்பும் நிலையில் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இரவு நேரத்தில் பயணிக்கும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இரண்டாம் வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரம் என்ற ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் சரியாக இரவு 8:48 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது. இரண்டாம் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பயணம் செய்பவர்கள் வெறும் 3 மணி நேரம் 48 நிமிடத்தில் பெங்களூருவை சென்றடைய முடியும்இந்த ரயிலில் உள்ள டிக்கெட் விலையை பொருத்தவரை சென்னையிலி ருந்து கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் வரை பயணிக்க ஏசி சேர் கார் கோச்சில் ஒரு நபருக்கு ரூபாய் 1130 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கோச்சில் ஒரு நபருக்கு ரூபாய் 2020 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது முதல் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் விலையை விட சற்று அதிகமாகும். வெறும் 3 மணி நேரம் 48 நிமிடத்தில் பெங்களூருவை சென்றடைய முடியும்.

1 2 ... 36 37 38 39 40 41 42 ... 46 47

AD's



More News