25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 26, 2024

உயிருக்கு ஆபத்து வரும் திரவ நைட்ரஜன் ஸ்மோக் வகை உணவு

திரவநிலை :-ன்ன நைட்ரஜனில் பிஸ்கட்டை நனைத்து, அதை உண்ணும்போது நைட்ரஜன்,காற்றின் வெப்பத்தில் ஆவியாகிறது. அதை உண்ணும்போது வாயில் இருந்தும். மூக்கின் துவாரங்களில் இருந்தும், புகை கிளம்புகிறது. திரவ நிலையில் நைட்ரஜன் இருக்கும் போது அதன் வெப்பநிலை, மைனஸ் 196 டிகிரி யாக இருக்கம். பிஸ்கட்டை திரவ நைட்ரஜனில் முக்கி கையில் எடுத்து, வாயில் போட வேண்டும். அந்த சில நொடி நேரத்தில், திரவ நைட்ரஜன் ஆவியாக விடும். ஆனால், திரவ நைட்ரஜனை அப்படியே பருகினால், அதீத குளிர்ச்சியான அது, நேரடியாக சுவாசப் பாதை, உணவு குழாய் போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தும். எவ்வாறு கடுமையான வெப்பம் ,தீக்காயங்களை ஏற்படுத்துமோ, அதே போல், அதீத குளிர் தன்மையும் தீங்கை ஏற்படுத்தும்.சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் தாவணகெரேவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலியில் துடிதுடித்த வீடியோ, இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.குழந்தைகளுக்கு :- ஒரு பொருளை சாப்பிட தருவதற்கு முன், அதன்பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வது. பெற்றோரின் கடமை, எனவே அப்பொருளின் தன்மை குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு அவசியம்.  

Apr 25, 2024

மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது

மாம்பழங்களில் அதன் வகைகளுக்கு ஏற்ப சுவையும் மாறுபடும்மாம்பழ பிரியர்கள் பலரும் பல வகையான மாம்பழங்களை வாங்கி வருகின்றனர்.. இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் மாம்பழங்களை விளைவிக்கப்படுகின்றன?இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், பீகார்,குஜராத், ஹரியானா, ஹிமாச்சலபிரதேசம், கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப்,ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்,மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிகப்படியாக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றனதமிழ்நாட்டில் அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம் ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன..ஆந்திர பிரதேசம்:  பங்கனப்பள்ளி, தோதாபுரி, நீலம், சுவர்ணரேகா ஆகியமாம்பழ வகைகள் கிடைக்கின்றன. பீகார்: பாம்பே க்ரீன் (Bombay Green), சௌசா, தஷேஹரி, ஃபஸ்லி, குலாப்காஸ், கிஷென் போக், ஹிம்சாகர், சர்தாலு, லாங்க்ராஆகிய மாம்பழ வகைகள்விளைகின்றன.குஜராத்: கேசர், அல்போன்சா, ராஜாபுரி, ஜமாதார், தோதாபுரி, நீலம், தஷேஹரி, லாங்க்ராஆகிய மாம்பழ வகைகள்கிடைக்கின்றன.ஹரியானா: சௌசா, தஷேஹரி, லாங்க்ரா, ஃபஸ்லி ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன,ஹிமாச்சல் பிரதேசம்: சௌசா, தஷேஹரி, லாங்க்ரா ஆகிய மாம்பழவகைகள் கிடைக்கின்றன.மகாராஷ்டிரா: அல்போன்சா, கேசர், பைரி ஆகிய மாம்பழவகைகள்  கிடைக்கின்றன.கர்நாடகா: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, பைரி, நீலம், மல்கோவா ஆகிய மாம்பழவகைகள் கிடைக்கின்றன.   மத்திய பிரதேசம்: அல்போன்சா, பாம்பேக்ரீன், லாங்க்ரா, நீலம், ஃபஸ்லி ஆகிய மாம்பழவகைகள் கிடைக்கின்றன.பஞ்சாப்: சௌசா, தஷேஹரி, மால்டா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.  ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம்: பாம்பே க்ரீன், சௌசா, தஷேஹரி, லாங்க்ராஆகிய மாம்பழ வகைகள்கிடைக்கின்றன. தமிழ்நாடு: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம் ஆகியமாம்பழ வகைகள் கிடைக்கின்றன. மேற்கு வங்காளம்: ஃபஸ்லி, குலாப்காஸ், ஹிம்சாகர், கிஷன் போக், லாங்க்ரா, பாம்பே க்ரீன்ஆகிய மாழ்பழ வகைகள்கிடைக்கின்றன.இராஜபாளையம்: நம்நகரில் பஞ்சவர்ணம், கிளிமூக்கு, சப்பட்டை, காசாலாடு வகை மாம்பழங்கள் மிகவும் சுவையானது, பஞ்சவர்ணம், சப்பட்டை ருசிக்கு எந்த மாம்பழம் வராது என்றே சொல்லலாம். கிளிமூக்கு ஊறகாய்க்கு ஏற்ற காய் ஆகும்

Apr 25, 2024

Amazon Pay ஆப்பில் கடன் வாங்கும் வசதி! UPI சேவையே மாற போகுது

.. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸின் சமீபத்திய அறிக்கையின்படி, அமேசான் பே இந்தியாவின் முழுநேர இயக்குனரான விகாஸ் பன்சால் (Vikas Bansal) இது குறித்து பேசுகையில், யுபிஐ மீதான கிரெடிட் என்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். இந்த முயற்சிக்காக நாங்கள் என்பிசிஐ (National Payments Corporation of India) உடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளார். யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் மூலம் கிரெடிட் ஆப்ஷன்களை (Credit Options).. அதாவது கடன் கொடுக்கும் விருப்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.ஏற்கனவே அமேசான் நிறுவனமானது அதன் அமேசான் பே லேட்டர் (Amazon Pay Later) வழியாக உடனடி கிரெடிட்டை (Instant Credit) வழங்குகிறது என்பதும்,. இந்த அம்சம் வாடிக்கையாளர்களுக்கு அமேசானில் பொருட்களை வாங்கவும், மாதாந்திர தவணைகளில் பணம் செலுத்தவும் உதவுகிறது. இந்த பை நௌவ் பே லேட்டர் (Buy Now Pay Later) சேவையை வழங்க அமேசான் ஃபைனான்ஸ் இந்தியாவானது ஆக்ஸியோ (Axio), ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC FIRST Bank) வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank) ஆகியவைகளுடன் கூட்டுவைத்துள்ளது. அமேசான் பே லேட்டர் ஆனது 9 மில்லியன் வாடிக்கையாளர் பதிவுகளை ஈர்த்துள்ளது. இது 99.9% கட்டண வெற்றி விகிதத்தை (Payment success rate) கொண்டுள்ளது.பரிமாற்ற கட்டண கட்டமைப்பை (Interchange fee structure) சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் சிறிய வணிகர்களிடையேயான குறைந்த தத்தெடுப்பு (Low adoption) காரணமாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கிரெடிட் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமேசானின் வணிகர்களின் விரிவான வலையமைப்பானது இந்த நிலைமையை மாற்றும் என்று விகாஸ் பன்சால் நம்புகிறார்மேலும் அவர், 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் (ஷாப்பிங் செய்வது, பில் கட்டணங்களை செலுத்துவது, வணிகர்களிடம் இருந்து ஆன்லைன் வழியாக பொருட்களை வாங்குவது மற்றும் பிறருக்கு பணம் அனுப்புவது உட்பட) பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு அமேசான் பே யுபிஐ-ஐ பயன்படுத்துகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.அமேசான் பே சேவையானது 350-க்கும் மேற்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான ப்ரிக் மற்றும் மோட்டார் விற்பனையாளர்களை (Brick-and-mortar sellers) சேர்த்துள்ளது. மேலும், டாக்ஸி முன்பதிவு, உணவு விநியோகம், திரைப்படம் மற்றும் பேருந்து டிக்கெட் மற்றும் பயண முன்பதிவு போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் 10,000 ஆன்லைன் விற்பனையாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமேசான் பேவை தழுவிய முக்கிய பிராண்டுகளில் உபர் (Uber), ஜோமாட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy), டாமினோஸ் (Dominos) மற்றும் புக்மைஷோ (BookMyShow) ஆகியவைகளும் அடங்கும். மேலும் அமேசான் பே ஆப் ஆனது ஆர்பிஎல் வங்கி (RBL Bank) உடன் இணைந்து யுபிஐ கட்டணங்களையும் செயல்படுத்துகிறது. மேலும் ஃபாஸ்ட்டாக் (FASTag) ரீசார்ஜ்களுக்காக ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) உடன் கூட்டுசேர்ந்துள்ளது. இதுதவிர்த்து அமேசான் பே ஐசிஐசிஐ இணை பிராண்டட் கிரெடிட் கார்டையும் அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரியில், அமேசான் பேவானது ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் (Reserve Bank of India) இருந்து ப்ரீபெய்ட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் லைசன்ஸையும் (Prepaid payment instrument license) பெற்றுள்ளது.

Apr 24, 2024

இயற்கையான முறையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க ....

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சுட்டெரிக்கும் சூரியன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது.எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் ஏசி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. என்னதான் ஏசி மாட்டினாலும் நீண்ட நேரத்திற்கு அவற்றைப் பயன்படுத்த முடியாது. இயற்கையான முறையில் வீட்டை எப்படியெல்லாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் .வீட்டைச் சுற்றி மரம் செடிகளை வளர்த்தால், வீடு எப்போதும் குளுமையாக இருக்கும். சூரிய வெப்பத்தை இவை தடுத்து விடுவதால்,இயற்கையான நல்ல குளுமையான சூழலை வீட்டில் நீங்கள் உணர முடியும்., கோடை காலங்களில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வையுங்கள். போதிய காற்றோட்ட வசதி இல்லாதவர்கள் வீட்டில்Exhaust Fan பொருத்துவது நல்லது. இது வீட்டில் உள்ள சூடான வெப்பக் காற்றை வெளியே தள்ள உதவும். தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அடிக்கடி நீர் அருந்துவதால் உங்கள் உடலின் வெப்பநிலை சராசரியாகப் பராமரிக்கப்படும். இதனால் வெளிப்புற வெப்பம் உங்களை அதிகம் தாக்காமல் இருக்கும். வீட்டில் தேவை இல்லாமல் இயங்கி, வெப்பத்தைவெளியேற்றும் ஃபேன், பல்ப், பிரிட்ஜ், கணினி போன்றவற்றை அணைத்து விடுங்கள். அவற்றை அணைப்பது உங்கள் வீட்டை குளுமையாக வைத்திருக்கும்.வீட்டில் தேவையில்லாமல் அடைத்துக் கொண்டிருக்கும் சாமான்கள், காகிதங்கள், புத்தகங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி, வீட்டை முடிந்த அளவுக்கு காலியாக வைத்திருங்கள். இது, வெப்பம் உங்கள் வீட்டில் அதிகம் தேங்காமல் ,உங்கள் வீட்டில் காற்றோட்டம் அதிகமாகி எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டு மொட்டை மாடியில் வெப்பத்தைப் பிரதிபலிக்கும் பெயிண்ட் அடிப்பது, உங்கள் வீட்டை குளுமையாக வைத்திருக்க உதவும். அல்லது மொட்டை மாடியில் தென்னை ஓலை போட்டு அதன் மேல் நீர் தெளித்து வையுங்கள். இதன் மூலமாக வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இந்த முறைகளைப் பின்பற்றி ஏசி இல்லாமலேயே உங்கள் வீட்டை கோடை காலத்தில் குளுமையாக வைத்திருக்க முடியும்.

Apr 24, 2024

மாதம் ரூ.5000 போதும்...5.22 கோடிக்கு அதிபதி..

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் கடந்த சில காலங்களாகவே லாபத்தை அள்ளிக்கொடுத்து வருகின்றன. இந்திய பங்குச் சந்தையும் தொடர் ஏற்றத்துடன், புது உச்சங்களை தொட்டு வருவதாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மீதான ஆர்வம் மக்களிடையே பெருகி வருவதாலும் இனி வரும் காலங்களில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட்SIP இல் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் நீண்டகாலம் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கோடிகளில் பணம் சேர்ப்பது சாத்தியமே..நீண்ட காலSIPகளின்15ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில்15 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்க்கலாம்.இதில் முதலீட்டாளர்கள் தங்கள் வட்டிக்கு வட்டி பெறுகிறார்கள் என்று பண வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.நீங்கள் 15 சதவீத வருடாந்திர SIP ஸ்டெப்-அப் (Step -UP) விகிதத்தை பராமரிப்பது முக்கியம். உதாரணமாக, நீங்கள் மாதந்தோறும் ரூ. 5,000 எனSIP இல் பணத்தை முதலீடு செய்ய தொடங்குவதன் மூலமும்,15 சதவீத வருடாந்திரSIP ஸ்டெப்அப் மூலம் முதலீட்டை தொடர்ந்து கூட்டுவதன் மூலமும், 15 சதவீத வருடாந்திர மியூச்சுவல் ஃபண்ட் வருவாயையும் சேர்த்து, முதலீட்டாளர்கள் 25 ஆண்டுகளில் சுமார் ரூ. 5.22 கோடியை குவிக்க முடியும்.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

Apr 23, 2024

கௌதம் அதானி வாழ்க்கையை மாற்றிய ப்ரீத்தி அதானி

இந்திய பணக்காரர்கள் என்ற உடன் அம்பானி , அதானி குடும்பத்தினர் தான் கௌதம் அதானி தன்னுடைய தொழில் சாம்ராஜ்யம், சர்ச்சைகள் உள்ளிட்டவற்றுக்காக அடிக்கடி செய்திகளில் தென்பட கூடிய ஒரு பெயர்.பிரமிக்க வைக்கும். கௌதம் அதானியின் சொத்து மதிப்புற்கும், வளர்ச்சிக்கும் காரணமாக இருப்பவர் அவரது மனைவி ப்ரீத்தி அதானி.குஜராத் மாநிலத்தை சேர்ந்த ப்ரீத்தி அதானி ஒரு பல் மருத்துவர் என்பது பலருக்கும் தெரியாது. மருத்துவராக இருந்து தற்போது மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவியாக உயர்ந்திருக்கிறார் ப்ரீத்தி அதானியின் வருகைக்கு பிறகு தொழிலை தாண்டி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதானிக்கு பிறந்திருக்கிறது. ப்ரீத்தியின் முயற்சியால் அதானி குழுமத்தில் இருந்து அதானி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தற்போது ப்ரீத்தி தான் அதானி அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 1996 ஆம் ஆண்டு அதானி அறக்கட்டளை நிறுவப்பட்டது முதல் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளை இந்தியாவின் 19 மாநிலங்களில் 5853 கிராமங்களில் பல்வேறு தொண்டுகளை செய்து வருகிறது. அதானி அறக்கட்டளை மூலம் சுமார் 70 லட்சம் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வி, பொது சுகாதாரம், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் இந்த அறக்கட்டளை கவனம் செலுத்தி வருகிறது.அதானி குழுமத்திற்கு கிடைக்கும் லாபத்தில் 3 % அதானி அறக்கட்டளைக்கு என ஒதுக்கப்படுகிறது. . ப்ரீத்தி அதானியை பொறுத்தவரை மக்களின் படிப்பறிவு விகிதத்தை முன்னேற்ற வேண்டும் என இலக்கு கொண்டவர். எனவே கல்வி சார்ந்த தொண்டுகளில் கவனம் செலுத்துகிறார்.கௌதம் அதானி பல்வேறு நேர்காணல்களில் தன்னுடைய தொழில் மற்றும் முன்னேற்றத்தில் மனைவி பிரீத்தி அதானியின் பங்கு மிக முக்கியமானது என பெருமிதமாக தெரிவித்துள்ளார். தற்போது ப்ரீத்தி அதானியின் சொத்து மதிப்பு சுமார் 8,000 கோடியாக இருக்கிறது.கௌதம் அதானி - ப்ரீத்தி அதானி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் கரன், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். ஜீத், அதானி குழுமத்தின் நிதித்துறை துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார். ப்ரீத்தி அதானி. அகமதாபாத்தில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியில் டெண்டல் சர்ஜனுக்கான பிடிஎஸ் படிப்பை முடித்த ப்ரீத்தி, மருத்துவராக சேவையாற்றி வந்தார்.1986ஆம் ஆண்டு கௌதம் அதானிக்கும் ப்ரீத்திக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது ப்ரீத்தி பல் மருத்துவர், கௌதம் அதானியோ மேல்நிலை பள்ளி படிப்பை மட்டுமே முடித்திருந்தார். கல்லூரிக்கு கூட செல்லாத தன்னை ப்ரீத்தி ஏற்பாரா என்ற தயக்கம் இருந்தது, ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொண்டார், இது தான் என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம் என கௌதம் அதானி பேட்டிகளில் கூறி இருக்கிறார்

Apr 23, 2024

ராதிகா மெர்சண்டின் பிரைடல் ஷவர்

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டிற்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்சண்டும் காதலித்து வந்தனர், இந்நிலையில் இரு குடும்பத்தினரும் இதனை ஏற்றுக் கொண்டு கோலாகலமாக நிச்சயதார்த்தை நடத்தினர்.கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் இவர்களின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் இருந்து பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். உலகமே மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உற்று நோக்கியது. .ஜூலையில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அண்மையில் ராதிகா மெர்சண்டின் பிரைடல் ஷவர் நிகழ்ச்சி வண்ணமயமான முறையில் அரங்கேறி இருக்கிறது. பிரின்சஸ் டெய்ரீஸ் தீமை ( theem )அடிப்படையாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஒரு கனவுலகமே கண் முன் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.பிங்க் மற்றும் பர்பிள் நிறங்களை அடிப்படையாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அது தவிர பிரம்மாண்ட விருந்தும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. ப்ளோரா இந்தியா என்ற நிறுவனம் இதற்கான அலங்காரங்களை செய்தது. இந்த வீடியோவை அந்த நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுஇந்த நிகழ்ச்சியில் மணப்பெண் தோழிகள் அனைவரும் பிங்க் நிற ஆடையும் மணப்பெண்ணான ராதிகா மெர்ச்சண்ட் வெள்ளை நிற ஆடையும் அணிந்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் தான் . இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Apr 23, 2024

பொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்தடை ஏற்படாமல் தமிழக மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது. மகிழ்ச்சியான அறிவிப்பு

கோடை வெயில் துவங்கிவிட்டதால், வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவையானது எப்படியும் 20,000 மெகாவாட்டை தாண்டக்கூடும் என்கிறார்கள்.காரணம் ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும்.தமிழகத்தை பொறுத்தவரை எப்போதுமே மின்தேவை என்பது அதிகமாகவே இருக்கும். இந்த வருடம் ஜனவரியிலேயே,17000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டதுபொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,TANGEDCO ஏற்கனவே தமிழகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில், மீட்டர் பாக்ஸ் பழுதடைந்தாலோ அல்லது மின்தடை ஏற்பட்டாலோ அல்லது கூடுதல் மின்கட்டணம் வசூலித்தாலோ புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அதேபோல, தமிழகத்தில் மின்சார நுகர்வு புதிய உச்சத்தையும் கடந்த வாரம் எட்டியது.435.85 ஜிகாவாட் ஹவர் அளவுக்கு மின்சார நுகர்வு இருந்துள்ளது.. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.தமிழகத்தில் வீடு, அலுவலகங்களில் ‘ஏசி’ பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் திருவிழா ஒருபக்கம் நடந்துவந்த நிலையில், இரவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட், பகலில் விவசாயத்திற்கு அதிக மின் வினியோகம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. எனவே, மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவாக இம்மாதம் 17ம் தேதி 44.27 கோடி யூனிட்களாக அதிகரித்தது.தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 55 லட்சம் யூனிட் உயர்ந்து,44.82 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவை இம்மாதம் 20000 மெகா வாட்டை தாண்டி 20125 மெகா வாட்டாக இருந்தநிலையில், கடந்த நேற்றுமுன்தினம் 18ம்தேதி, உச்சத்துக்கு சென்றுவிட்டது.தமிழகத்தில் மின் நுகர்வு 20341 மெகா வாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டிவிட்டது.இதுகுறித்து மின் வாரியம் அறிக்கை ஒன்றையும் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் “18ம் தேதி மீண்டும் புதிய உச்சம் தொட்டது, நம்முடைய மாநிலத்தின் மின் தேவை மற்றும் மின் நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் சீரான மின் வினியோகம் உறுதி செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

Apr 23, 2024

பெட்ஷீட்டுகளை வாஷிங் மிஷினில் துவைக்கலாமா ?

வெயில் காலத்தில் போர்வையில் வரும் துர்நாற்றத்தை தவிர்க்கவும் பலர் பெட்ஷீட்டை துவைக்க நினைப்பார்கள்.. குளிர் காலம் முடிந்து வெயில் காலம் நெருங்குவதால் அனைவரும் உங்கள் வீட்டில் இருக்கும் பெட்ஷீட்டை துவைத்து மடித்து வைக்கலாம் .திட்டம் போட்டிருப்பார்கள்பெட்ஷீட்டை மெஷினுக்குள் போடுவதற்கு முன்பு அதில் குறிப்பிடப்பட்ட குறிப்பை படிக்க வேண்டும். துவைக்கலாமா, ட்ரை க்ளீனிங்கா என்ன வகையான துணி எப்படி துவைக்க வேண்டும் போன்ற கவன குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து நீங்கள் பெட்ஷீட்டை துவைக்கலாம். அதை பொறுத்து நீங்கள் பெட்ஷீட்டை துவைக்கலாம்இதையடுத்து, வாஷிங் மெஷின் என்ன அமைப்பு என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக கணமாக பெட்ஷீட் போடுவதாக இருந்தால் உங்கள் மெஷின் எடை7 கிலோ எடை கொண்டிருக்க வேண்டும். அப்படி மெஷின் என்ன அளவை தாங்கி கொள்ளும் என்பதை பொறுத்து பெட்ஷீட்டை போட வேண்டும். சாதாரண துணி லேசாக இருப்பதால் அது திரும்பி புரண்டு துவைத்து கொள்ளும். ஆனால், பெட்ஷீட் கணமாக இருப்பதால், நீங்கள் அதை2,3 முறை மேலும், கீழும் திருப்புதல் வேண்டும். இதன் மூலம் பெட்ஷீட் ஒரே இடத்திலேயே நிற்காமல் இருக்கும். இதையெல்லாம் கவனிக்காமல் இருப்பதால்வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆகிவிடும் அபாயம் உள்ளது அல்லது பெட்ஷீட் வீணாகும் அபாயமும் உள்ளது என்பதால் கவனமுடம் இருக்கவும். 

Apr 22, 2024

உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் ஜப்பானியர்கள்.

.'நம்மில் பெரும்பாலோர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்புகிறோம். ஆனால், தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம், மாசு போன்றவற்றால்60 வயதை எட்டும் முன்பே பலர் இறந்துவிடுகிறார்கள். உலக சுகாதார புள்ளி விவரப்படி இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம்69.16 ஆண்டுகள். உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் ஜப்பானியயர்கள் .ஜப்பானைச் சேர்ந்த ஒருவர்112 வயது344 நாட்களில் உலகின் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஜப்பானில் உள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம்83.7 ஆண்டுகள். பெண்களுக்கு86.8வயதும்,ஆண்களுக்கு80.5வயதும்ஆகும்.ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற் பயிற்சி கலாச்சாரம், மரபியல் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள்.சரியான அளவில் உணவை உண்ண வேண்டும். வயிறு80 சதவீதம் நிரம்பும் வரை மட்டும் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழலாம் என்று அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள். எனவே, அதிக உணவை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது வயிற்றின் சுமையைஅதிகரிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.  ஜப்பானியர்கள் அதிக அளவிலான தூய்மையைப் பின்பற்றுகிறார்கள். இதமான சமநிலைமற்றும் பருவகால பூக்கள் நிறைந்த பூங்காக்கள் மக்களை நீண்ட காலம் வாழ வைக்கிறது உணவு நேரம்: ஜப்பானியர்கள் மெதுவாக சாப்பிடும் முறையை ஊக்குவிக்கிறார்கள். ஒரே தட்டில் சாப்பிடுவதை விட சிறிய தட்டுகள் அல்லது கிண்ணங்களில் சாப்பிடுவது,.'குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர் .சாப்பிடும்போது டிவி பார்ப்பதையும் செல்போன் பயன்படுத்துவதையும் தவிர்க்கின்றனர் குறிப்பாக தரையில் அமர்ந்து சாப்பிடுவதை பின்பற்றுகின்றனர்உணவு முறை: ஜப்பானியர்கள் சமச்சீரான உணவை உண்கின்றனர். பழங்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், அரிசி, முழு தானியங்கள், டோஃபு, சோயா, மிசோ மற்றும் ம் பச்சை காய்கறிகள் அதிகம் உட்கொள்கின்றனர். இந்த அனைத்து உணவுகளிலும் குறைந்த அளவு கொழுப்புகள் மற்றும் சர்க்கரை உள்ளன. அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இதனால், புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து விடுபடுவதும் ஜப்பானில் உடல் பருமன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதற்கு இந்த டயட் தான் காரணம்.ஜப்பானியர்களிடையே தேநீர் மிகவும் பிரபலமானது. தேநீர் தயாரிக்கப் பயன்படும் தேயிலை இலைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயைஎதிர்த்துபோராடும். நடைபயிற்சிக்குஜப்பானியர்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை தவிர்க்கிறார்கள்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடக்க விரும்புவார்கள். நாற்காலிகள் மற்றும் சோஃபாக்களை விட தரையில் உட்காருவது. மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு நடந்து அல்லது சைக்கிளில் செல்கின்றனர். இவை அனைத்தும் அவர்களின் ஆயுளை அதிகரிக்க உதவுகின்றன.முதியோர் பராமரிப்பு: மற்ற நாடுகளைப் போலல்லாமல், ஜப்பானியர்கள் தங்கள் வயதான குடும்ப உறுப்பினர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதில்லை. குடும்ப உறுப்பினர்களை கவனிப்பது அவர்களின் பாரம்பரியம். முதுமையில் குடும்பத்துடன் வாழ்வது உளவியல் ரீதியாக பல நன்மைகளைத் தருவதாகவும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்றும் நம்புகிறார்கள்.மகிழ்ச்சியுடன் வாழ்வது: ஜப்பானியர்கள்'இகிகை' கொள்கையின்படி வாழ்கின்றனர்,, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அன்பாக நேரத்தை செலவிடுவது அவர்களின் ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்கும்.

1 2 ... 31 32 33 34 35 36 37 ... 47 48

AD's



More News