நாம் அன்றாடம் வாங்கும் பிரீமியம் ரக கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களிலேயே இவ்வளவு பெரிய மோசடியா? வெளிநாடுகளில் காலாவதியான பிஸ்கட்கள் மற்றும் உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, இந்தியாவில் புதிய பேக்கிங் செய்து, காலாவதி தேதியை மாற்றி விற்பனை செய்த கும்பலை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் ₹4.3 கோடி மதிப்பிலான 43,000 கிலோ பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறை, இந்த மோசடி நீண்ட காலமாக நடைபெற்று வந்ததாகத் தெரிவித்துள்ளது. பிரபலமான பிராண்டுகள் என்றாலும், நீங்கள் வாங்கும் எந்தவொரு பேக் செய்யப்பட்ட உணவுப் பொருளின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை முறையாகச் சரிபார்க்காமல் வாங்காதீர்கள்.
தமிழகத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்வு. கார், ஜீப்களுக்கு ரூ.55லிருந்து ரூ.80 ஆகவும், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.85லிருந்து ரூ.130 ஆகவும், லாரி, பேருந்துகளுக்கு ரூ.185லிருந்து ரூ.275 ஆகவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்று பாதிப்பால் இதுவரை சுமார் 513 பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 131 பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இது 'பண்டிபுக்யோ' (Bundibagyo) எனும் அரிதான வகை வைரஸ் என்பதால், இதைக் கட்டுப்படுத்த தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை என்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO இந்த நிலையை *சர்வதேச பொது சுகாதார அவசரநிலை" (Public Health Emergency of International Concern) என்று அறிவித்துள்ளது
லடாக்கின் லே பகுதி அருகே இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று ராணுவ அதிகாரிகளும் காயமின்றி உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. விபத்திற்குப் பிறகு, நொறுங்கிய ஹெலிகாப்டரின் சிதைவுகளுக்கு அருகில் புன்னகையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அவர்களது மன உறுதி ஒட்டுமொத்த நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் இருந்து அவர்கள் மீண்டு வந்தது ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. துணிச்சலும், மன உறுதியும் கொண்ட நம் ராணுவ அதிகாரிகளின் இந்த செயல், பலரையும் ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு நாட்டின் உயரிய தலைமைக்கு வழங்கப்படும்,ஸ்வீடன் நாட்டின் மிக உயரிய 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய புரட்சிகரமான மாற்றத்தை ரோச் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.இந்நிறுவனம் தயாரித்துள்ள அடெசோலிசுமாப் (Atezolizumab) என்ற புதிய ஊசி வடிவிலான சிகிச்சையின் மூலம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை பல மணி நேரம் மருத்துவமனையில் தங்கி, நரம்பு வழியாக (IV) செலுத்தப்பட்டு வந்த இந்த சிகிச்சை, இனி வெறும் 7 நிமிடங்களில் (7 நாட்களில் அல்ல) போட்டு முடிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் நேரமும், மருத்துவமனைகளின் நேரமும் பெருமளவு மிச்சமாகும்.இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மருந்தின் ஒரு டோஸின் விலை சுமார் ரூ. 3.7 லட்சம் ஆகும்.
நம் நாட்டு குடிமக்களுக்கு, 'ஆதார்' என்ற அடையாள அட்டை வழங்குகிறது, மத்திய அரசு. இதைப்போல மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு, தனி அடையாள அட்டை வழங்க இருக்கிறது, அந்தந்த மாநில அரசு.நாட்டில் முதன்முதலாக இந்த அடையாள அட்டை வழங்கும் மாநிலம், கேரளம். விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிற இந்த அட்டையில், ஒருவரை பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கும். அரசு சம்பந்தமான அனைத்துக்கும் சான்றாக பயன்படுத்தப்படும் இந்த அடையாள அட்டை, 'நேட்டிவிட்டி கார்ட்' என அழைக்கப்படுகிறது.,
இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) மற்றும் அதன் ஒருங்கிணைந்த கட்டண முறைமை (UPI) ஆகியவை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு பெரிதும் பாராட்டியுள்ளார். மேலும், தான் "மிகவும் போற்றும்" நிறுவனங்களில் NPCI-யும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.“இன்னோவேட்டர்ஸ் பிளேகிரவுண்ட் பாட்காஸ்ட்” (Innovators Playground Podcast) தொடரின் ஒரு பகுதியாக, NPCI தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திலீப் ஆஸ்பே உடன் ஸ்ரீதர் வேம்பு கலந்துரையாடினார். இது குறித்து தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ள வேம்பு, "நான் UPI-ஐப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், NPCI உருவாக்கியுள்ள அளவையும் அதன் பிரம்மாண்ட தாக்கத்தையும் வியந்து நோக்குவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.தற்சார்பு செயற்கை நுண்ணறிவு (Sovereign AI): மேற்கத்திய நாடுகளின் AI மாதிரிகளை முழுமையாகச் சார்ந்திருக்காமல், இந்தியத் தேவைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தற்சார்பு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதன் அவசியத்தை இந்த விவாதம் வலியுறுத்தியது. தற்போதைய AI புரட்சியை எதிர்கொள்ள, ஜோஹோ நிறுவனம் தற்போது "இரண்டு இணை முயற்சிகளில்" (Twin Initiatives) ஈடுபட்டு வருவதாக ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்துள்ளார்.ஆற்றல் திறன்மிக்க உள்கட்டமைப்பு (Energy Efficiency): செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் செயல்பாட்டிற்கு அதிக ஆற்றல் (Power) தேவைப்படுகிறது. ஜோஹோவின் கிராமப்புற தொழில்நுட்ப மையமாக விளங்கும் தமிழ்நாட்டின் தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், AI தொழில்நுட்பத்திற்கான ஆற்றல் நுகர்வைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து வேம்பு விவரித்தார்.கிராமப்புறத் திறமையும், பொருளாதார வளர்ச்சியும்: முக்கிய பெருநகரங்களைத் தாண்டி, கிராமப்புற இந்தியாவும் எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வாறு முக்கியப் பங்காற்ற முடியும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது "நமது பொருளாதார வளத்திற்கு இன்றியமையாதது" என்று திலீப் ஆஸ்பே குறிப்பிட்டார்.ஒரே நோக்கம் - இரு வேறு தளங்கள்: மக்கள் அளவில் மிகக் குறைந்த செலவில் UPI-ஐ சாத்தியமாக்கிய NPCI-ன் அணுகுமுறைக்கும், இந்திய மற்றும் உலகளாவிய தேவைகளுக்கான மென்பொருட்களைத் தயாரிக்கும் Zoho-வின் நீண்டகால சுயநிதி (Bootstrapped) மாதிரிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை இந்த பாட்காஸ்ட் வெளிப்படுத்தியது. மலிவு விலை, உலகளாவிய தரம் மற்றும் உள்ளூர் பயன்பாடு ஆகியவற்றிற்கு இவ்விரு நிறுவனங்களும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
விப்ரோ (Wipro) நிறுவனத்தின் நிறுவனரான அசிம் ஹாஷிம் பிரேம்ஜி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை மாற்றியமைத்ததோடு மட்டுமல்லாமல், தனது செல்வத்தை அறப்பணிகளுக்கு அர்ப்பணித்த மாபெரும் கொடையாளர் ஆவார். ஒரு சிறிய சமையல் எண்ணெய் நிறுவனத்தை உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானாக மாற்றிய அவரது பயணம் நேர்மை, தொலைநோக்கு மற்றும் எளிமைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.வெற்றி என்பது வெறும் வணிகம் அல்லது செல்வம் சார்ந்தது மட்டுமல்ல; அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே உண்மையான வெற்றி என்பதை அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.தொடக்கமும் வளர்ச்சியும்: 1945-ல் மும்பையில் பிறந்த இவர், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார். 1966-ல் தனது தந்தையின் திடீர் மறைவுக்குப் பிறகு, 21 வயதில் குடும்பத் தொழிலான ‘வெஸ்டர்ன் இந்தியன் வெஜிடபிள் ப்ராடக்ட்ஸ்’ (சமையல் எண்ணெய் வணிகம்) பொறுப்பை ஏற்றார்.விப்ரோவின் உதயம்: வணிகத்தை மென்பொருள் மற்றும் வன்பொருள் துறைகளுக்கும் விரிவுபடுத்தி, 1982-ல் அதற்கு 'விப்ரோ' (Wipro) எனப் பெயர் சூட்டினார்.சமூகப் பங்களிப்பு: 'அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை' மூலம் இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தனது செல்வத்தின் கணிசமான பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி, உலகின் மிகத் தாராளமான கொடையாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.குடும்பம் மற்றும் எளிமை: எழுத்தாளர் யாஸ்மீன் பிரேம்ஜியை மணந்த இவருக்கு, ரிஷாத் மற்றும் தாரிக் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது ரிஷாத் பிரேம்ஜி விப்ரோவின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். அளவற்ற செல்வம் இருந்தபோதிலும், அசிம் பிரேம்ஜி தனது எளிமையான வாழ்க்கை முறைக்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறார்.அசிம் பிரேம்ஜியின் உன்னத தத்துவத்தைப் பின்பற்றுவதற்கு நாம் கோடீஸ்வரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை.உங்கள் ஆற்றலைக் கண்டறியுங்கள்: உங்களின் தனித்துவமான திறன்கள், ஆற்றல்கள் மற்றும் ஆர்வங்களைப் பற்றிச் சிந்தித்து, உங்களால் சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை உணருங்கள்.தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்: எப்போதும் வசதியான வட்டத்திற்குள் (Comfort Zone) முடங்கிவிடாமல், புதிய சவால்களை எதிர்கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.சுயநலமின்றிச் சிந்தியுங்கள்: உங்களது பணி, திறமை மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வாறு ஒரு சிறந்த சூழலை உருவாக்க உதவும் என்று யோசியுங்கள்.நேர்மையைக் கடைப்பிடியுங்கள்: கடினமான சூழ்நிலையிலும் அறநெறி சார்ந்த தேர்வுகளையே மேற்கொள்ளுங்கள். நம்பிக்கையும் நேர்மையுமே வெற்றிக்கான வலுவான அடித்தளம்.கைமாறு செய்யுங்கள்: மற்றவர்கள் தங்கள் இலக்குகளை அடைய உங்களால் இயன்ற வழிகாட்டுதலையோ அல்லது ஊக்கத்தையோ வழங்குங்கள்.இறுதிச் சிந்தனை: "மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் நாம் மிகவும் சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் இருக்க வேண்டும். பொருந்தி வாழ, ஒருவர் உலகத்துடன் சேர்ந்து பரிணமிக்க வேண்டும்." உங்களது உடனடி வட்டத்தைத் தாண்டி, அனைவரும் செழித்து வாழ வாய்ப்புள்ள ஒரு உலகை உருவாக்க இன்றே உங்களது பங்களிப்பைத் தொடங்குங்கள்!
EPFO வழங்கும் EPF திட்டத்தில் 2025-26 நிதியாண்டிற்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வட்டி EPF தொகைக்கு மட்டுமே பொருந்தும்; EPS ஓய்வூதியப் பகுதிக்கு வட்டி கிடையாது. ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12% PF ஆக பிடிக்கப்படுகின்றது, இதில்நிறுவனத்தின்பங்களிப்பில்ஒருபகுதிEPFக்கும்மற்றொன்று EPSக்கும்செல்கிறது. PF இருப்பை EPFO போர்டல் அல்லது UMANG ஆப் மூலம் ஆன்லைனில் எளிதாக பார்க்கலாம்.