மெதுவாக செல்லும் உயிரினங்களில் ஒன்று ஆமை. இதன் முதுகுப்பகுதியில் கடினமான ஓடு பிணைந்திருப்பதால் வேகமாக செல்ல முடியாது. மேலும் இதன் கால்கள் வேகமாக ஓடும் வகையில் அமைக்கப்படவில்லை. இருப்பினும் தரையை விட நீரில் வேகமாக செல்லும் திறன் பெற்றது. பெரும்பாலான நிலவாழ் ஆமைகளின் உணவாக புல்,இலை, பூ, பழம் உள்ளன. எதிரிகளைக் கண்டவுடன் தலை, கால்களை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வதால் தப்பி ஓட வேண்டிய அவசியமும் இல்லை. இதில் பல வகைகள் உள்ளன. இதற்கேற்ப அதன் எடை, ஆயுட்காலம், அளவு மாறுபடுகிறது.
உலகில் துலிப் பூக்களின் ஏற்றுமதியில் இந்நாடு முதலிடத்தில் இருப்பதால், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து 'துலிப் பூக்களின் நிலம் ' என அழைக்கப்படுகிறது. மார்ச் - மே மாதத்தில் துலிப் மலர்கள் பூத்து குலுங்கும். உலகில் துலிப் ஏற்றுமதியில் 2, 3வது இடத்தில் சீனா, பெல்ஜியம்உள்ளன. துலிப் மலர் என்பது சிவப்பு, ஆரஞ்சு, பிங்க், மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் பூக்கின்றன. இதில் பல வகைகள் உள்ளன. ஆசியாவின் பெரிய துலிப் மலர் தோட்டம் 74 ஏக்கர் பரப்பளவு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ளது.
விதவிதமான வடிவங்களில் உடலில் டாட்டு அணிவதற்கு இன்றைய தேதியில் பலரும் விரும்புகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டார் அப் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டாட்டு வரையும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளது
தண்ணீர் சேமிப்பு அமைப்புகளில்கூட கண்ணுக்கு தெரியாத வகையில் பிளாஸ்டிக் நுண் துகள்கள்கலந்திருப்பது பல இடங்களில் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக்கழிவுகள் பூமியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன..சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள இயற்கை பொருட்கள், தண்ணீரில்கலந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை ஈர்த்துநீக்குவதில் திறம்பட செயல்படுவதை விஞ்ஞானிகள் அறிந்தனர் .இதனை அடிப்படையாக கொண்டு புளி போன்ற பிசின் நிறைந்த திரவத்தை கொண்ட வெண்டைக்காய், வெந்தய சாறுகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவையும் நீர்நி லைகளில் கலந்து இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை தண்ணீரில் இருந்து பிரித்து இழுத்துக்கொண்டன.ஒரு லிட்டர் தண்ணீரில் இது போன்ற காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒருவித பொடியை ஒரு கிராம் அளவு கலந்தாலே பல மடங்கு மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பிரிக்கப்படுவது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.வெண்டைக்காய் சாறு மற்றும் வெந்தய சாறு ஒரு மணி நேரத்தில் முறையே 67 சதவீதம் மற்றும் 93 சதவீதம் பிளாஸ்டிக் துகள்களை நீக்கி தண்ணீரை சுத்தம் செய்தது இந்த ஆய்வுகளில் தெரியவந்தது. கழிவுநீர் சுத்திகரிப்பு செயல் பாட்டில் மாசுகளை அகற்ற தற்போது பாலி அக்ரிலாமைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில், மேற்கண்ட தாவர சாறுகளை நீர் சுத்திகரிப்பு செயல்பாட்டில்பயன்படுத்துவதால், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் எளிதாக அகற்றப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமையலுக்கு பயன்படுத்தும் புளி ,வெண்டைக்காய் சாறு மற்றும் வெந்தய சாறு, 93 சதவீதம் பிளாஸ்டிக் துகள்களை நீக்கி தண்ணீரை சுத்தம் செய்தது என்று நிபுணர்கள் ஆய்வுகளில் தெரியவந்தது.
‘ஐஸ்ரிஸன் வெல்ட்’ என்னும் இந்த பனிக் குகை தான், உலகிலேயே மிகப்பெரிய பனிக் குகையாகும். ஐஸ் அசுரர்களின் உலகம் என்று அழைக்கப்படும் இந்த பனிக் குகை ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பழமையான சுற்றுலாத் தலமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இதனைப் பார்வையிட வருகிறார்கள். 42 கி.மீ. தூரம் கொண்ட இந்த குகையில் ஒருகி.மீ தூரம் வரை மட்டுமே பார்வையிட அனுமதிக்கின்றனர். 30 ஆயிரம்சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த குகையில் இயற்கையாய் உருவான உறைபனியின்வடிவங்கள், பனிச்சிலைகள் போன்றவற்றை காணும்போது பனியால் உருவாக்கிய அரண்மனை போல் காட்சியளிக்கிறது.
உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் சர்வதேசகடல்சார் அமைப்பின் தகவலின்படி, கடல் போக்குவரத்து மூலம் தான் நடைபெறுகிறது. பொம்மைகள் முதல் கனிமங்கள், நிலக்கரி, பெட்ரோல் வரை அனைத்து வகையான பொருட்களையும் கொண்டு செல்கின்றன. ஒரு கப்பல் எந்த வகையான பொருட்களை கொண்டு செல்வதற்காக இயக்கப்படுகிறதோ அதனை பொறுத்து கொள்கலன் கப்பல், ரோ ரோ கப்பல், மொத்த கேரி எண்ணெய் டேங்கர் என்றபெயர்களில் அழைக்கப்படுகின்றன.'எவர் கிரீன்' சீன கப்பல் கட்டும் குழுவின் தயாரிப்பான இது 400 மீட்டர் நீளமும், 61,50 மீட்டர் அகலமும் கொண்டது. ஏறக் கு றைய, நான்கு கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பெரியது. உலகின் 2-வது பெரிய கப்பலான அல்ஜெசிராஸ் சுமார் 400 மீட்டர் நீளமும், 61 மீட்டர் அகலமும் கொண்டது. 3-வதாக புதிய தரைக்கடல் கப்பல் கட்டும் நிறுவன தயாரிப்பான எம். .சி. குல்சுன், எம்.எஸ்.சி. மினா ஆகியவை பிரபலமான சரக்குக் கப்பல்கள் ஆகும். இதில் எந்த வகையான குளிர்சாதன உணவு, மருந்துகளையும் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல தயாரிக்கப்பட்ட தனித்துவமான கப்பலாக உள்ளது. பயணி கள் கப்பலை பொறுத்தவரை உலக அளவில் 'குயின்மேரி " ரக கப்பல்கள் பெயர் பெற்றவை. குயின் மேரி 2,345 மீட்டர் நீளம் கொண்டது. பயணிகள் மற்றும் சரக்கு கப்பலாக இருந்து, பின் னர் உலகின் அதிநவீன பயணிகள் சொகுசு கப்பலாகவும் மாறியது. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும். உலகில் பல்வேறு கப்பல்கள் இருந்தாலும், குயின் மேரி மட்டுமே செல்லப் பிராணிகளுடன் பயணிக்கும் ஒரே கப்பலாகும்.
பொதுவாக 'நான் ஸ்டிக்' பாத்திரங்களின் மேற்பரப்பில் பூசப் படும் ரசாயனங் கள் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கானவை. எனவே இவை இரண்டுக்கும் பாதிப்பில்லாத பூச்சை கனடாவைச் சேர்ந்த டொரன்டோ பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
செல்போனை நீண்டநேரம் பார்ப்போருக்கு நாளடைவில் கண் நீர் அழுத்த நோய் வரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாததுதான் இதில் கொடுமையான விஷயம். இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. நாளடைவில் கண் பார்வை மொத்தமாக பறிபோய்விடும். மின்விளக்கை பார்த்தால் சுற்றி வளையங்கள் தெரிவது, தலை வலி, ஒரு பொருளை பார்த்தால் நடுப்பகுதி மட்டும் தெரிவது ஆகியவையே இதன் ஆரம்ப அறிகுறிகள்.
'இராஜபாளையம் டைம்ஸ்' என்ற பத்திரிக்கை2001 மார்ச் முதல்2025 மார்ச் வரை(25 ஆண்டுகள்) விலையில்லா பத்திரிகையாக இராஜபாளையம் நகரச் செய்திகள், மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்றுவெளியிட்டு இருக்கிறேன்.பலமுறை நான் சில பத்திரிக்கைகள் படித்து முடிக்கும் பொழுது கனத்த இதயத்துடன் தான் பத்திரிக்கையை மடித்து வைப்பேன். 'மன நிறைவுடன் ஒரு பத்திரிக்கை விஷயங்களை நாம் ஏன் நடத்தக் கூடாது' என்ற ஒரு ஆதங்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் Rajapalayamtimes.Rajapalayamtines. படித்து முடித்தவுடன் யாராக இருந்தாலும், ஏதோ நல்ல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம், என்ற மன நிறைவுடன் தான் பத்திரிக்கையை வாசித்து வந்துள்ளனர்.காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல இச்செய்திகள் நிறைய மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 2021 ஏப்ரல் மாதம் 14 ம் தேதி தமிழ் வருடப் பிறப்பன்று நவீன முறையில் EPaper ஆக rajapalayamtimes.com என்ற Website ஆரம்பிக்கப்பட்டது முதலில் சொற்பமான viewers உடன் வலம் வந்தது. அதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் கூடக்கூட E-Paper தற்பொழுது rajapalayamtimes App ஐ உருவாக்கி கிட்டத்தட்ட17 லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்து உள்ளது. என்பதை பெருமையுடன்தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கட்டணமில்லாEPaper ஐAndroidSmart போன் வைத்திருப்பவர்கள் Playstore க்குச் சென்று rajapalayamtimes ஐClick செய்து டவுன்லோட் செய்து, எங்கள் பத்திரிக்கைக்கு (E-paper) ஆதரவு அளிப்பீர்கள் என்ற பெரு நம்பிக்கையுடன் தொடர்கிறேன். குறைந்த GB யுடன் குட்டி குட்டி செய்திகளாக வலம் வரும் எங்களுடைய பத்திரிக்கைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு, சின்ன குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை அவர்கள் மனம்கோணாமல், மனதைக் காயப்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதில்லை. நினைத்த நேரத்தில் எங்குசென்றாலும் உங்கள் மொபைலில் இருக்கும் குட்டிப் பத்திரிக்கைRajapalayamtimes. தற்கால தொழில்நுட்பமுறையில் நவீன மயமாக்கி செயல்படுத்துகிறேன். கூடியவிரைவில்ஐபோனிலும் வலம் வரும்படி செய்ய உள்ளோம். என்பதை பகிர்ந்து கொள்கிறேன். தற்பொழுது இப்பத்திரிக்கையை உலகம் முழுவதும் உள்ள அனைவரும் படிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையில் மாதம் ஒரு முறை வெளியிடும் முதல் பக்க கட்டுரையை இராஜபாளையம் நகர மக்கள் அனைவரும் விரும்பி படிக்க ஆவலுடன் காத்திருப்பார்கள். எங்கள் செய்திகளில் நல்ல விஷயங்களைத் தவிர எந்தவொரு கிரிமினல், விபத்து, மற்றவரைக் காயப்படுத்தும் சொற்கள் கிடையாது, மனதிற்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் மன நிறைவையும் கொடுக்கும், ஒரே பத்திரிக்கை இராஜபாளையம் டைம்ஸ் மாத்திரம் தான்.Rajapalayamtimes பத்திரிக்கை படித்தவுடன் மனமகிழ்ச்சியை தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உங்களுடைய பேராதரவு தொடர்ந்து எங்கள் பத்திரிக்கையை மகோன்னதமான நிலைக்கு உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எங்களுடைய பத்திரிகை சேவை தொட்டுத் தொடரும்.'அட' நம்நாட்டில் உலகத்தில் இப்படி எல்லாம் நடக்கிறதா? என்ற மனத்துடன் தினம், தினம் படிக்கத் தூண்டும் குட்டிப் பத்திரிக்கை. rajapalayamtimes தினமும்5 நமிடங்கள் வாசித்தாலே போதும், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள நல்லதொரு பத்திரிக்கை. நிறைய செய்திகளை வெளியிட்டு எதைப்படிப்பது என்று திணறாமல், நின்று நிதானமாகப் படிக்க rajapalayamtimes ஐ தேர்ந்தெடுங்கள் மன நிறைவுடன் வழங்கும் மனநிறைவான rajapalayamtimes. செய்திகள் பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.உங்கள் செய்திகள் சங்கங்கள், கோவில் திருவிழா, கல்லூரி, பள்ளி, விழாக்களை எங்களுக்குWhatsApp இல் அனுப்பி வைத்தால் இந்த செய்திகளில் பகிர்ந்து கொள்ளும். உங்கள் வியாபாரம், சம்மந்தமான விளம்பரங்களை கட்டணமில்லாமல் வெளியிடும் ஒரே இதழ் EPaper ஐ Android Smart போன் வைத்திருப்பவர்கள் இராஜபாளையம் டைம்ஸ் உங்கள் போனில் பார்க்க https://play.google.com/store/apps/details?id=in.anjanainfotech.rajapalayamtimes CLICK LINK.READ OUR NEWS.25 ஆம் வருடத்தை நோக்கி இராஜபாளையம் டைம்ஸ்
ஊர்வனவகைஅமெரிக்காவில்வாழும்தனித்துவமுள்ளவிலங்கினம்கொம்புபல்லி.ஆங்கிலத்தில்இதன்அறிவியல்பெயர்.'ப்ரைனொசோமாஎன்பதாகும்.வட அமெரிக்காவில் மெக்சிகோ, கனடா பாலைவன புல்வெளி பகுதிகளில்அதிகம் காணப்படுகிறது. இதன் தற்காப்பு நடைமுறைகள் மிகவும் உடல் அமைப்பு, நடத்தை வித்தியாசமானது.இதன் தலை மற்றும் உடல் பகுதியில் கொம்பு போன்ற முட்கள் நிறைந்து உள்ளன. இதன் உதவியால் பாறை மற்றும் மண்ணுடன் ஒன்றி மறைந்து வாழ்கிறது. எதிரியின் பார்வையில் இருந்து தப்புகிறது.இதன் உடல், பரந்து, தட்டையாக இருக்கும்; சூழலுக்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றும் திறன் உடையது. முதன்மை உணவாக எறும்புகளையும், பூச்சிகளையும் உண்ணும்.இதன் கண்களுக்கு அருகில் நுண்ணிய ரத்த நாளங்கள் உள்ளன. இதை பயன்படுத்தி எதிரி மீது ரத்தத்தைப் பீய்ச்சி அடிக்கும். அந்த ரத்தம் கசப்பு சுவையுடன் இருக்கும். இதை கண்டு பூனை, நாய் போன்ற இதன் எதிரி விலங்குகள் திகைத்து ஓடிவிடும். உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு நடைமுறையாக இதை பின்பற்றுகிறது கொம்பு பல்லி.முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினம் இது. பாலைவனத்தில் தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உடல் வெப்பத்தை அமைத்து கொள்ளும். குளிர்காலத்தில் உறக்க நிலைக்கு சென்று விடும். சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கு ஏற்ப வாழ்வை அமைத்து கொள்ளும்.காடு அழிப்பு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பட்டால் கொம்பு பல்லி இனம் உலகில் குறைந்து வருகிறது. இந்த விலங்கினத்தை பாதுகாப்பது நம் கடமை.