25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்” சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்” சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் .

விருதுநகர்  மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  (17.07.2026) ”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்” சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கிறது.  இதில் முதல் கட்டமானது 17.07.2026 முதல் 31.07.2026 வரை சுயகணக்கெடுப்பு முறையிலும், இரண்டாம் கட்டமானது 01.08.2026 முதல் 31.08.2026 வரை கள கணக்கெடுப்பாளர்கள் மூலமும் நடைபெறும். மேலும் இப்பணிக்காக 3000 கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சுய கணக்கெடுப்பின் (Self Enumeration)  மூலம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான  கல்வி, வீடு, சாலை மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த திட்டத்தையும் அதன்    தேவையினையும் அறிய இந்த சுய கணக்கெடுப்பு விவரங்கள் உதவுகின்றன.எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின்  சுய விவரங்களை https://se.census.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தவுடன் 11 இலக்க கணக்கெடுப்பு குறிப்பு எண் (Self Enumeration Reference Number (SRN)   வழங்கப்படுகிறது.  இந்த SRN-ஐ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பின்னர்  கணக்கெடுப்பாளர் (Enumerator) உங்கள் இல்லத்திற்கு வரும்போது, அவரது அடையாள அட்டையை சரிபார்த்து, இந்த சுய கணக்கெடுப்பு குறிப்பு எண்ணை கணக்கெடுப்பாளரிடம் வழங்குவதன் மூலம், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை அவர் சரிபார்த்து உறுதி செய்வார் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News