25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Jun 03, 2024

எலும்பு ஸ்ட்ராங்கா இருக்க கால்சியம் நிறைந்த உணவுகள்

எலும்புகள்  ஸ்ட்ராங்காஇருக்க கால்சியத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்று பால். இதில் வைட்டமின் டி உள்ளது, இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.தயிரில் கால்சியம் மட்டுமின்றி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்கள் உள்ளன.மத்தி  மீன்கள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரமாக மட்டுமல்லாமல், கால்சியம் நிறைந்த உணவாகவும் கருதப்படுகிறது.டோஃபு கால்சியத்தின் சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரமாகும்.இது பல்வேறு உணவுகள் மற்றும் சமையல் வகைகளில் சேர்க்கப்படலாம்.பாதாமில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது மட்டுமல்லாமல், கால்சியமும் உள்ளது.பச்சை இலை காய்கறிகளில் கால்சியம் அதிகம் உள்ளது.உலர்ந்த அத்திப்பழம் கால்சியம் கொண்ட இனிப்பு மற்றும் சத்தான சிற்றுண்டியாகும்.

Jun 01, 2024

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செம்பருத்தி டீ

ரத்தத்தில் சோடியம் குறைவாக பொட்டாசியம், சத்து அதிகமாக இருந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் நான்கைந்து செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.வடிகட்டி இத்துடன் நாட்டுச் சர்க்கரை கலந்து தினமும் குடித்தால், இதில் இருக்கும் பீட்டா கரோட்டின், லைக்கோபின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.நார்ச்சத்து, பொட்டாசியம் நிறைந்த சிறுதானியங்களையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

Jun 01, 2024

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் உங்கள் நாளை தொடங்குவதால் கிடைக்கும் நன்மைகள் .காலை தண்ணீர் குடிப்பதால் நீர்ச்சத்து அதிகரித்து சருமத்தில் சுருக்கங்கள் குறைந்து இயற்கையான பொலிவை அதிகரிக்கும். காலை தண்ணீர் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.  காலை தண்ணீர் குடிப்பது நீங்கள் காலை உண்ணும் சிற்றுண்டியின் செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலை தடுக்கிறது.  உடலில் நீர்ச்சத்து குறையும் போது முடி உலர்ந்து உடையக்கூடியதாக மாற்றும். எனவே காலையில் தண்ணீர் குடிப்பதால் முடியின் பொலிவும் வலிமையும் அதிகரிக்கும்.  சிறுநீரகத்தில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போகச் செய்ய தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க காலை தண்ணீர் குடிங்க. காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவை உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்கும். 

May 31, 2024

பனை வெல்லம்

உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.சுவாச குழாய்,நுரையீரல்போன்ற பிரச்சினைகளுக்குநிவாரணம் அளிக்கிறது.ரத்த சோகையைத் தடுக்கும் தன்மைக்கொண்டது.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. செரிமானம் மற்றும்  மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்கிறது. சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.சிறுநீர் பாதை பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

May 29, 2024

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ...

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரேட், கால்சியத்துடன் சேர்ந்து, சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் இருக்க உதவுகிறது.எலுமிச்சை ஜூஸில் இருக்கும் பெக்டின் எனும் நார்ச்சத்து, கல்லீரலில் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.இதனால் மலச்சிக்கல் வராது.  எலுமிச்சை ஜூஸ் குடிப்பது ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. எலுமிச்சை ஜூஸில் உள்ள பெக்டின், எடை இழப்பினை ஊக்குவிக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும். 

May 28, 2024

அதிக வெப்பநிலை காரணமாக உடலில் தோன்றும் வேர்வையால் வேர்க்குரு ஏற்படுகிறது

 ஏப்ரல் மாதத்திலேயே வெப்பம் உச்சத்ததில் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். வெயிலில் நீண்ட நேரம் தங்குவதால் உடல் உஷ்ணம் வேர்க்குரு பிரச்சனை அதிகரிக்கிறது. சிறிய சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படுகிறது. பல நேரங்களில் ஆடை அணிவதில் கூட சிரமம் ஏற்படுகிறது..வேர்க்குரு போக்கமுல்தானி மெட்டியை பயன்படுத்தி உஷ்ண தடிப்புகளை நீக்கலாம். முல்தானி மெட்டி குளிர்ச்சியாக இருக்கும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத் தழும்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம். முல்தானி மெட்டியில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின் வேர்க்குரு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். வேர்க்குரு இருக்கும் பகுதிகளில் இந்த பேஸ்ட்டை 15 நிமிங்கள் உடலில் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.வேர்க்குருவை தடுக்க கோடையில் முடிந்தவரை காட்டன் துணியை மட்டுமே அணியுங்கள். இது வியர்வை உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளதால் உங்கள் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கிறது.வேர்க்குருவை தடுக்க முடிந்தவரை உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். உடலை ஈரப்பதமூட்டும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். எலுமிச்சை நீர், பழ வகை சார்ந்த ஜூஸ் மற்றும் சர்பத் போன்ற பானங்களின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக உடலில் இருந்து நச்சு பொருட்கள் எளிதில் அகற்றப்படுகின்றன.வெயிலில் இருந்து வெளியே வரும்போதெல்லாம் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்கவும். இதனால் உடலில் தேங்கியிருக்கும் வியர்வை நீங்கும் தொற்று மற்றும் வேர்க்குரு ஆபத்து இருக்காது.

May 27, 2024

வயதுக்கு ஏற்ப பெண்களின் சரியான எடை அளவு

ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும் என்றால் உங்கள் வயதிற்கு சரியான உடல் எட யில் இருப்பது அவசியம் .அந்த வயதிற்கு குறிப்பிட்ட எடைக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.12 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகள் 32-36 கிலோ எடை இருக்க வேண்டும்.15 முதல் 20 வயதுடைய இளம் பெண்கள் 45-50 கிலோ எடையில் இருப்பது அவசியம்.21 முதல் 30 வயது வரை இளம் பெண்கள் 50-60 கிலோ எடையில் இருப்பது ஆரோக்கியமானதாகும்.31 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் 60-65 கிலோ எடையில் இருக்க வேண்டும்.41 முதல் 60 வயது வரை வயது முதிர்ச்சி அடையும் பெண்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள59-63 கிலோ எடை இருக்க வேண்டும்.இந்த தகவல்கள் பொதுவானவை. பெண்களின் உடல் உயரத்தைபொறுத்து உடல் எடையின் அளவு மாறும்.

May 24, 2024

நம்முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது வசம்பு

கிராமத்தில்உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடு படுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்னச் சின்ன தொற்று நோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது.இதனாலேயேஇது பிள்ளை வளர்ப்பான்என்று கூறப்படுகிறது. வசம்பை ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் என்று அழைப்பதுண்டு.வசம்பு பொடி அரை ஸ்பூன் எடுத்து அருகம்புல் சாறு50 மில்லி சாற்றில் கலந்து30 நாட்கள் பருகி வர வேண்டும் திக்குவாய் தீரும்.சுடுதண்ணீர்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.வசம்பை தூள் செய்து ரெண்டு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும்.இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியை கொடுக்கவும் ,சோம்பலை நீக்கவும், வசம்பு பயன்படுகிறது.அதிமதுரம் சிறிதளவு அதே அளவு வசம்பு சேர்த்து நசித்து ஒரு டம்ளர் நீரில் காய்ச்சி.20மில்லி காலை, மாலை இரண்டு நாள் பருக கொடுத்தால் குழந்தை காய்ச்சல் சரியாகும்.வசம்பு ஒரு அங்குல துண்டையும்,10 லவங்கத்தையும் அம்மியில் நசித்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதித்து ஆறியபின் காலை மாலை வேலைக்கு50 மில்லி பருக காலரா சரியாகும்.கோலி அளவு மஞ்சள், சிறிது வசம்பு,சிறிது கற்பூரம் மூன்றும் சேர்த்து அத்துடன் மருதோன்றி இலைகள், நெல்லிக்காய் இலைகள் சேர்த்து அரைத்து இரவில் கால் ஆணி மீது வைத்து கட்டி காலையில் எடுத்து விட வேண்டும். மூன்று நாட்கள் இது போல் செய்தால் கால் ஆணி குணமாகும்.துளசி செடியின் பூங்கொத்து, சுக்கு, திப்பிலி, வசம்பு இவற்றை தனித்தனியே தூளாக்கி சலித்து சம அளவு கலந்து ஒரு சிட்டிகை தூளை சர்க்கரை சேர்த்து காலை மாலை இரண்டு நாள் கொடுத்தால் கக்குவான் சரியாகும்.

May 23, 2024

தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால்...

தினமும் பாதங்களின் கீழ் ஆழமாய் எண்ணெய் தடவினால்,80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம்2 முதல்3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும். நல்ல தூக்கம் வரும். உடலில் இருக்கும் சோர்வு பறந்துபோகும்.சாதாரண வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வர குணமாகும். உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக காண்பீர்கள். தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால் கால்களில் இருக்கும் வீக்கம், வலி ஆகியவை குணமாகும். இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை அனுபவிப்பீர்கள். தொடர்ந்து செய்வதால் நல்ல தூக்கம், வலியில்லாத கால்கள் வசப்படும். சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வும் வலியும் காணப்படும். அதற்கும் இது நல்ல தீர்வு.

May 22, 2024

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிப்பதால்....

ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சி இதனுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரணச் சக்தி பெருகும்.சாதம் வடித்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.வடித்த கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகளவில் அடங்கி உள்ளன.இதனைப் பயன்படுத்தி ரசம் வைத்தும் சாப்பிடலாம். இட்லிமாவு அரைக்கும்போது இதனைக் கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாகஇருக்கும். சாதம் வடித்த கஞ்சியுடன் திராட்சைப் பழங்களைச் சேர்த்துஅரைத்து முகத்தில் தடவி வர, முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள்நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.கால் வலியில் அவதிப் படுபவர்கள். சாதம் வடித்த கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைத்தால் கால் வலி, வீக்கம் குறையும். இது நல்ல வலி நிவாரணியாக பயன்படும்.சாதம் வடித்த கஞ்சி பசியைத் தூண்டும் தன்மையுடையது. இதனுடன்' சிறிது சீரகம் கலந்து குடித்தால் சாப்பிட்ட உணவுகள் சீக்கிரம் ஜீரணம்ஆகும்.முகம், கழுத்து, கைப் பகுதிகளில் சாதம் வடித்த கஞ்சியைத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் அலசி லர, விரைவில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.நீர்கடுப்பு பிரச்சனை தீரும். நீண்ட நேரம் நல்ல எனர்ஜியுடன் வேலை பார்க்க முடியும். கண் எரிச்சலை தீர்க்க உதவுகிறது.வெள்ளை படுதல் பிரச்சனையை சரிசெய்கிறது.மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் தீரும் புற்று நோய் வராமல் தடுக்கும். உடலின் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும். குடல் அழற்சியைத் தடுக்கும்.மேலும் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News