நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இந்த முகாமானது 100 சதவீத உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்யும் பொருட்டு மாவட்டந்தோறும் 18.07.2026. 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய நாட்களில் கீழ்கண்ட இடங்களில் நடத்தப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 18.07.2026 அன்று, வத்திராயிருப்பு வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், அருப்புக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகர் வட்டம் -வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,
25.07.2026 அன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், காரியாபட்டி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சிவகாசி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,01.08.2026 அன்று, இராஜபாளையம் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திருச்சுழி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சாத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும், 08.08.2026அன்று, வெம்பக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகமானது நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply