25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்த முகாமானது 100 சதவீத உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்யும் பொருட்டு  மாவட்டந்தோறும் 18.07.2026. 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய நாட்களில் கீழ்கண்ட இடங்களில்  நடத்தப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 18.07.2026 அன்று, வத்திராயிருப்பு வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், அருப்புக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகர் வட்டம் -வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,  

25.07.2026 அன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், காரியாபட்டி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சிவகாசி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,01.08.2026 அன்று, இராஜபாளையம் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திருச்சுழி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சாத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,   08.08.2026அன்று,  வெம்பக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகமானது நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News