25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


முதுமை

Oct 29, 2025

முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கவனம் தேவை.

முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கீழ்க்காணும் தொல்லைகள் ஏதேனும் ஏற்பட்டால், நீங்கள் அளவுக்கு அதிகமாகச் செய்துள்ளதாக அர்த்தம். நாடித்துடிப்பு 120க்கு மேல் சென்றால்,இதயத்தில் படபடப்பு ஏற்பட்டால்,மார்பில் வலி ஏற்பட்டால்,மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்,அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டினால்,வழக்கத்துக்கு மாறான பலவீனம் இருந்தால்,மூட்டுகளில் வலி ஏற்பட்டால், உடனேஉடற்பயிற்சியை நிறுத்தி விட்டு டாக்டரின் ஆலோசனையைப் பெறவும்.

Oct 22, 2025

உணவை மெல்வதற்குச் சிரமப்படும் முதியோர்களுக்கான சில யோசனைகள். 

பல் இல்லாத முதியோர்கள் உணவை மென்று சாப்பிட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பெரும்பாலும் திரவ உணவையோ அல்லது திரவம் அதிகமாகக் கலந்துள்ள உணவையோதான் எடுத்துக்கொள்வார்கள். இதனால் உணவின் அளவு மட்டுமல்ல... அதன் ஊட்டச்சத்து நிலையும் குறைந்துவிடும்.மெல்வதற்குச் சிரமப்படும் முதியோர்கள் ,. இவற்றைப் பின்பற்றினால்அவர்களின்ஊட்டச்சத்துநிலைமேம்பட்டு,ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பால் அருந்தவும்.பனீர், சீஸ் சாப்பிடவும்.மெல்வதற்குக் கடினமான பொருள்களை நன்றாக அரைத்து, மசித்துச் சாப்பிடவும்.காய்கறிகளை வேகவைத்து மசித்துச் சாப்பிடவும்.மிருதுவான பழங்களான வாழை, பப்பாளி, மாம்பழம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிடவும் அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ்கள் குடிக்கவும்.குழைய வேகவைத்த சாதம், சேமியா, பொங்கல் மற்றும் உப்புமா சாப்பிடலாம்.வேகவைத்த முட்டை.மிருதுவான இறைச்சி.வேகவைத்த மிருதுவான மீன். தக்காளி போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட வேண்டியிருந்தால் பொடியாக நறுக்கியோ, தோலுரித்தோ சாப்பிடலாம்.சூப் வகைகள்.ரொட்டித் துண்டுகளைப் பாலோடு சேர்த்துச் சாப்பிடலாம்.ஜஸ்க்ரீம், ஜெல்லி, புட்டிங்ஸ், பாயசம், பாஸந்தி, ஜாமூன் மற்றும் ஜாங்கிரி போன்ற மிருதுவான உணவுகளைச் சாப்பிடலாம்

Oct 15, 2025

குளிரைச் சமாளிக்க….

தமிழ்நாட்டில் குளிர்தாலம் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்படும். மழை சற்றுக் குறைவாகவும் குளிர் அதிகமாகவும் உள்ள பருவம் இது. இருப்பினும் அனைவரும் விரும்பும் பருவம் இக்காலம் தான். சுட்டு எரிக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து இளைப்பார, இது ஒரு பொன்னான பருவம். இம்மாதங்களில் சிறுசிறு தொல்லைகளும் நோய்களும் வர வாய்ப்புண்டு.முடிந்தளவிற்கு வீட்டிலேயே உணவை உண்ண வேண்டும்.கொதிக்கவைத்து, ஆறவைத்த தண்ணீரையே வீட்டிலேயும், வெளியிலேயும் குடிக்க வேண்டும்.இருமல்,சளி வர வாய்ப்பு அதிகமுள்ளதால், அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.அவசியம் ஃபுளூ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.ஆஸ்துமா நோயுள்ளவர்கள் தேவைப்பட்டால் காலம் தாழ்த்தாமல், இன்ஹேலரை உபயோகப்படுத்த வேண்டும்.குளிரைக்குறைக்கும் கம்பளி ஆடைகளையே முடிந்தளவிற்கு உபயோகிக்க வேண்டும்.தவறாமல் செய்யும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம்.பக்கவாதம், உதறுவாதம் போன்ற நோய் உள்ளவர்களுக்கு, இயன்முறைச் சிகிச்சை அவசியம்.யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.மலச்சிக்கல் வர  வாய்ப்பு அதிகம். ஆகையால் அதற்கு நிவாரணம் பெற நிறைய பழங்கள். காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வெங்காயம், பீட்ரூட் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.தாகம் அதிகம் இருக்காது. ஆகையால் சுமார் 2 - 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.முடிந்தளவிற்கு காபி, டீயைக் குறைத்துக்கொண்டு சூடான சூப்பை அருந்தலாம்.வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் தோலுக்கு நல்லது. தோல் வறட்சியை நீக்கும்.கொய்யா, மாதுளம் பழம் குளிர்காலத்திற்கு ஏற்ற பழம்.பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகளைச் சற்று அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.குளிர்காலத்தில் பசி சற்று அதிகம் இருக்கும். அதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு, உணவில் கவனம் தேவை.மேற்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்தால், குளிரை எளிதாகச் சமாளித்துவிடலாம்.

Oct 08, 2025

தைராக்ஸின் அதிகம் சுரத்தல்

இந்நோய்க்கு தைரோடாக்சிகோஸிஸ் என்று பெயர். தைராக்சின் எதனால் மிகுதியாகச் சுரக்கிறது என்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. இந்நோய் உள்ளவர்களுக்குதைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும் அல்லது அச்சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம். சிகிச்சைக்கு முன்பு இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக்கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவிதப் பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியதுபோல் பெரிதாகக் காணப்படும். ஒரு சிலருக்கு வீங்கி இருக்கும்.கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடலில் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாது. உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும்.முதியோர்களுக்கு நாடித்துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒரே சீராக இல்லாத நிலை (irregular heart beat), இதயம் வலிமை இழத்தல் மற்றும் காரணமில்லாமல் எடை குறைதல் போன்றதொல்லைகள் இருந்தால் அவருக்கு தைராய்டு அதிகமாகச் சுரக்கும் நோயிருப்பதாகக் கருதி, அதை உறுதிசெய்யப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதல் கண்டறிய முடியும்.

Oct 01, 2025

முதுமையிலும் இளமையின்  பலம் பெற எளிய முறைகள்...

காலையில் வெறும் வயிற்றில் பழைய சோற்றுநீரை மோர் விட்டுக் குடிக்க, புரோபயாடிக் சத்து எளிதில் கிடைத்து.உடல் பலம் பெற முதல் அடித்தளம் இது.காலையில் காபி, டீக்கு பதில் புதினா. கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிது சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட்டுச் சூடாகக் குடிக்க, இந்தப் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகளில் உள்ள இரும்புச்சத்து உடல் நலம் பெறவும் ரத்தச்சோகை நீங்கவும் உதவும். மேலும், இதில் சேரும் சீரகம் நாள் முழுவதும் ஜீரண சக்தியை அதிகபடுத்த உதவும். இதில் உள்ள மைக்ரோ நியூட்டிரியன்ஸ் உடல் பலம் மேம்பட உதவும்.காலையில் வேகவைத்த முளைக்கட்டிய சுண்டல் சாப்பிட, இதில் உள்ள புரோட்டீன் சத்து நாள் முழுவதும் உடல் சோர்வை நீக்கும்.காலை 11 மணிக்கு குறுமிளகுடன் சேர்ந்த கீரை சூப் அல்லது காய்கள் மற்றும் சீரகம் சேர்ந்த சூப் குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.மதிய உணவில் பருப்பு சாம்பார், காய்,கீரை, கூட்டு, அதனுடன் துவையல் (இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தூதுவளை, பிரண்டைத் துவையல்), ரசம் (ஜீரண சக்தி அதிகரிக்கும்), நீர்மோர் ஒரு டம்ளர் குடிக்க, குடலுக்கும் உடலுக்கும் நன்மை தருவதுடன் உடலின் நீர்ச்சத்து இழப்பைச் சீர்செய்யும்.மாலையில் உலர் பழங்கள் (மா. ஆப்ரிகாட், பெர்ரி, திராட்சை, செர்ரி, அத்திப்பழம், உலர் ஆப்பிள் துண்டுகள்) சாப்பிடலாம். உலர் கொட்டைகள் சாப்பிடலாம்.நிலக்கடலை, பாதம், அக்ரூட், பிஸ்தா, முந்திரி, வறுத்த கடலை, வறுத்த பச்சைப் பயிறு, வறுத்த மூக்கடலை, உலர் கொட்டைகள், உலர் பழங்கள் ஆகியவை மினரல் சத்துகளை வாரி வழங்கும்.மாலையில் உளுந்தங்களி சாப்பிட நரம்புகள் பலம் பெற்று நரம்புத்தளர்ச்சி நீங்கும். சூடான பருத்திப்பால் அல்லது பாதம்பால் உடல் தளர்ச்சியை நீக்கி வலிமை தரும்.இரவில் சிறுதானியங்களில் (குதிரைவாலி, தினை, சாமை, வரகு) செய்யப்பட்ட உணவுகளை எடுக்க, உடலின் உட்சூடு குறைவதுடன் சிறுதானியங்களில் நார்ச்சத்து உள்ளதால் மறுநாள் காலை மலச்சிக்கல் ஏற்படாது.இவை தவிர தினமும் ஒரு ஸ்பூன் அமுக்கரா சூரணத்தைச் சூடான பாலில் கலந்து காலை, மாலை குடித்து வர 48 நாட்களில் உடல் பலம்பெறுவது நிச்சயம். மேலும், அஸ்வகந்தி லேகியம் இருவேளை உட்கொள்ள வேண்டும். இதிலுள்ள அஸ்வகந்தா. பால், தேன், நெய் போன்றவை உடலுக்கு இருமடங்கு வலிமையைத் தரும். அல்லது தேற்றாங் கொட்டை லேகியத்தை இருவேளை சாப்பிட உடல் இளைப்பு நீங்கி உடல் வளமையும் வலிமையும் பெறும். எனவே தான், தேற்றாங் கொட்டையிட்டு உடலைத் தேற்று என்பது கிராமத்து வழக்கு.வாரம் ஒருமுறை உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க உடல் சூடு தணிவதுடன் எலும்பு, மூட்டுகள் வலிமை ரு பெறும். நல்லெண்ணெயைத் தோலில் தேய்க்கத் ச் தேய்க்க கொலோஜன் உற்பத்தி பெருகி உடல் சுருக்கம் மறையும்.வாரம் ஒருமுறை சீரகம், சுக்கு, பெருங்காயம், வேப்பிலை கொழுந்து, துளசி, நுணா கொழுந்து ஆகியவற்றை அரைத்துச் சிறு சுண்டையளவு சாப்பிட நன்கு பசி எடுப்பதுடன் குடல் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்துவதால் சத்துகள்எளிதில் குடலால் உறிஞ்சப்பட்டு உடல் வலிமை பெறும். முடிந்தவர்கள் (சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து) வாரம் ஒருவேளை பழங்கள் மட்டும் சாப்பிட்டு உடல் இயக்கத்தைச் சீர்படுத்திக்கொள்ளலாம்.உணவில் கற்ப மூலிகைகளான கரிசலாங்கண்ணிக் கீரை, வல்லாரைக் கீரை, தூதுவளை, பொண்ணாங்கண்ணி போன்ற கீரை வகைகளை 48 நாட்கள் (கடுகு, உப்பு, புளியைத் தவிர்த்து) சீரகம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட நரை (முடி வெளுத்தல்), திரை (தோல் சுருக்கம்) நீங்கி உடல் பலம் பெறும்.

Sep 24, 2025

முதியோரின் தூக்கமின்மையைச் சரி செய்ய  உதவுங்கள்.

முதியோரின் தூக்கமின்மைக்கு காரணம் அறிய முயலவேண்டும். அதிக சத்தத்தைக் குறைத்துக் கதவை மூடி அமைதியான சூழ்நிலையை உண்டாக்க வேண்டும்.முதியோர் பகலில் தூங்காமல் இருக்க அறிவுரைகளைக் கூற வேண்டும். பகலில் ஏதாவது சிறு வேலைகளைச் செய்யச் சொல்ல வேண்டும்.இரவில் உணவு உண்டபின் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.படுக்கும் போது சரியான தலையணைகளை வைத்துச் சௌகரியமான நிலையில் படுத்து உறங்கச் சொல்ல வேண்டும்.தூக்க மாத்திரைகள் பகலில் கொடுக்காமல் இரவில் கொடுக்கப்பட வேண்டும்.நீர் பிரியக்கூடிய மாத்திரைகள் பகலில் கொடுக்கப்பட வேண்டும். இரவில் கொடுத்தால் தூக்கத்தைக் கெடுக்கும்.முதியோர் சிலருக்கு படுத்ததும் தூக்கம் வராது. அவர்களை தொலைக்காட்சி  பார்ப்பது, பத்தகங்கள் படிப்பது போன்றவத்தில் ஈடுபடச் சொல்லலாம்.இம் முறையில் அவர்களுக்கு அசதிஏற்பட்டால் உடனே  படுக்க சொல்ல வேண்டும்.படுப்பதற்கு முன்பு பாலில் சற்று தேன் கலந்து அருந்தினால் சில ருக்குச் சுகமான தூக்கம் வரலாம், பிரார்த்தனை, தியானம் போன்ற செயல்பாடுகள் மூலமாகவும் தூக்கம் வரலாம். தூங்கும் அறையில் அதிக வெளிச்சம் இல்லாமலும்,வெளிச்சத்தைத் தவிர்க்கத் திரை போட்டும் வைக்க வேண்டும். படுக்கை சுத்தமாக, ஈரமில்லாமல், சுருக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். தூங்கும்போது முதியோர் அணியும் ஆடை அவர்களுக்கு வசதி உள்ளதாக இருக்க வேண்டும்.படுப்பதற்கு முன் சிறுநீர் கழித்துவிட்டுப் படுக்கச் சொல்லவும். இதன் மூலம் தூக்கத்தின் இடையில் எழுந்திருப்பதைத் தவிர்க்கலாம். பிள்ளைகள் இரவில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி சத்தமாக வைப்பது போன்றவை முதியோரின் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும். ஆகவே. முதியோருக்குத் தொந்தரவு இல்லாமல், அதிக சத்தமாக வானொலி மற்றும் தொலைக்காட்சி வைக்காமல் அவர்கள் அமைதியுடன் தூங்க உதவ வேண்டும். மூத்தகுடிமக்களுக்குத் தூக்கம்,ஓய்வு அவசியம் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் தூங்கும் பகுதியில் அதிக சத்தங்கள் ஏற்படாமலும் குடும்பத்தினர் பார்த்துக்கொள்ள வேண்டும்.கடைசி முயற்சியாகவே தூக்க மாத்திரையை, மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.

Sep 10, 2025

அல்சைமர் . ( மறதி நோய் )

அல்ஸைமர் நோயின் முதல் அறிகுறியே மறதியில்தான் ஆரம்பமாகிறது. இவர்களுக்கு மறதி மற்றும் கவனக்குறைவால் எதையும் மனதில் பதிய வைக்க முடிவதில்லை. இவர்களின் மறதியில் ஒரு தனித்தன்மையும் உண்டு. முக்கியமாக, அண்மைக்கால நினைவு பாதிக்கப்பட்டு மறதி உண்டாகிறது. ஏதாவது ஒன்றைக் கூறினால் அதில் கவனம் செல்லாததால், அதை நினைவில் பதிய வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் அண்மைக்கால நினைவுகள் அற்றுப்போய் விடுகின்றன.நடை, உடை, பாவனைகளில் மாற்றம் தெரியும். சுத்தமாகப் பளிச்சென உடை உடுத்துபவர், கசங்கிய சட்டையைஅணிவார். சட்டை பொத்தானை மாற்றிப் போட்டுக் கொள்வார். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மேற்கொண்ட மறதி சார்ந்த தொல்லைகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். இதுவே மறதி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.

Sep 03, 2025

மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம்.

மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டின் நிலவரப்படி அந்த நாட்டின் மக்கள் தொகை 12 கோடியே 31 லட்சம்,அங்கு 65 வயதுக்கு மேற்பட்டோர் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள். அதன்படி பார்த்தால் அந்த நாட்டில் தற்போது மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 3 கோடியே 70 லட்சம் பேர் முதியோர் ஆவார்கள். கிட்டத்தட்ட மூன்று பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருக்கிறார். முதியவர்களில் சுமார் 96 ஆயிரம் பேர் நூறு வயதை தாண்டியவர்கள். தலைநகர் டோக்கியோவில் மட் டும் 80 லட்சத்து 70 ஆயிரம் முதியோர்கள் வசிக்கிறார்கள்.ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு வெகுவாக குறைந்து வருவது முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது ,அந்த நாட்டு அரசை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. முதியோருக்கான ஓய்வூதியம், சுகாதாரம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக பெரும் தொகையை செலவிட வேண்டி இருப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

Aug 27, 2025

முதுமை வேறு, முதிர்ச்சி வேறு.

இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரிப் பார்க்கும் பக்குவமான மனம் இருந்தால் அதைத்தான் 'முதிர்ச்சி என்கிறோம். சிலருக்கு அது 20 வயதில் கூட வந்துவிடும். சிலருக்கு 80 வயது வரை முதிர்ச்சி வராமலே போகலாம்.  தான் முதிர்ச்சி அடைந்திருப்பதை ஒருவர் எப்படி உணர முடியும்?யாரைப் பற்றியாவது யாரோ வம்பு பேசுவதைக் கேட்க அலுப்பாக இருக்கும். இதில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று தோன்றும்.அம்மாவோ, மனைவியோ, நெருங்கிய உறவுகளோ போன் செய்யும்போது எரிச்சல் வராது. போனை எடுத்து அன்புடன் பேசமுடியும்.தான் பேசுவதைக் குறைத்து, அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கத் தோன்றும்.எல்லாம் தெரிந்ததுபோலப் பேச மாட்டார்கள். "ஆமாம், இது எனக்குத் தெரியாது" எனத் தயங்காமல் ஒப்புக்கொள்வார்கள்.நண்பர்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். அவர்களைக் கொண்டாடவும் செய்வார்கள்.பிரச்னைகளைக் கண்டு ஒதுங்காமல்,ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்காமல் நேரடியாக எதிர்கொள்வார்கள்.தங்கள் நேரத்தை வீணடிக்கும் மனிதர்களைச் சாமர்த்தியமாக ஒதுக்கக் கற்றிருப்பார்கள்.தன்னுடைய மகிழ்ச்சி மற்றவர்கள் கையில் இல்லை, அது தன் மனதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பார்கள்.அடுத்தவர்களை நேசிப்பதுபோலத் தங்களையும் நேசிப்பார்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்காகத் தங்களை வருத்திக்கொள்ள மாட்டார்கள்.தேவையற்ற வாக்குவாதங்களையும் சண்டைகளையும் புறக்கணித்துவிட்டு, மௌனமாக அந்தச் சூழலைக் கடந்து போய்விடுவார்கள்.யாரையும் வெறுமனே தோற்றத்தை வைத்தும் பேச்சை வைத்தும் எடைபோட மாட்டார்கள்.யார் மீதும் தங்கள் கருத்தை வலிந்து திணிக்க மாட்டார்கள். மாற்றுக்கருத்து வைத்திருக்க அடுத்தவர்களுக்கு உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.அடுத்தவர்களின் தவறுகளை மறக்கவும், அதைவிட அதிகமாக மன்னிக்கவும் கற்றிருப்பார்கள்!

Aug 20, 2025

மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து மூத்த குடிமக்களின் நலனுக்கான சட்டங்கள், சலுகைகள்.

மூத்தகுடிமக்களின் பாதுகாப்பான கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து மூத்த குடிமக்களின் நலனுக்கான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்து செயல்ப டுத்தி வருகிறது.மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை, சேமிப்புகளுக்கு கூடுதல் வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுவதோடு அவசரகால மீட்பு, மனநல ஆலோசனை, நலத்திட்டங்கள், முதியோர் இல்லம் பற் றிய விவரங்களை வழங்குவதற்காக 14567 என்ற சிறப்பு உதவி எண் அறிவிக் கப்பட்டு உள்ளது.அதில் தொடர்பு கொண்டால் நமது பெயர், முகவரியை கேட்டு அறிந்து கொண்டு, நமக்கு என்ன குறை? என்று கேட்பார்கள். பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லையா? மருத்துவரீதியிலான பிரச்சினைகளா? ஓய்வூதியம் பெறுவதில் ஏதாவது தடை உள்ளதா? வங்கி தொடர்பான பிரச்சினைகளா? என்றெல் லாம் விசாரிப்பார்கள்.எனவே முதியோர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தால், அவற்றை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.முதியோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த சேவையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் மூத்த குடிமக்களுக்கென்று மத்திய அரசு தனி யாக அடையாள அட்டை வழங்குகிறது. உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பித்து அந்த அட்டையைபெற்றுக்கொண் டால், மருத்துவ வசதி மற்றும் அரசின் திட்டங்களில் பல் வேறு சலுகைகளை பெறலாம்.மூத்த குடிமக்களுக்கு, ரெயிலில் பயணம் செய்ய வழங்கப்பட்டு இருந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

1 2 3 4 5 6 7

AD's