டிமென்சியா நோயாளிகள் அன்றாட தேவைகளைச் சரிவரச் செய்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.முடிந்த அளவுக்கு நோயாளிகள் தனித்தே செயல்பட ஊக்குவிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.நோயாளியை எதிர்த்துப் பேசவோ, அவருடைய செய்கை சரியில்லை என்றோ வாதாடக் கூடாது.அவரிடம் உள்ள திறமைகளைப் பாராட்டி, அதைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.நோயாளிகளிடம் பேசும்போது தெளிவாகவும், நிதானமாகவும், நேருக்கு நேர் அவர் புரிந்துகொள்ளுமாறு பேச வேண்டும்.ஆறுதலாகத் தொடுதல், கையைப் பிடித்துக்கொள்ளுதல், தடவிக் கொடுப்பதன் மூலம் நம்முடைய அன்பைத் தெரிவிக்க வேண்டும்.எந்தச் சூழ்நிலையிலும் அவரைத் தனிமைப்படுத்த வேண்டாம்.முடிந்தவரை உணவு உண்ணும்போதும், தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் அவரும் உங்களோடு சேர்ந்தே இருக்கட்டும்.அவருக்கே தெரியாமல், இருந்த இடத்திலேயே சிறுநீர் கழித்துவிட்டால், அதைப்பெரிதுபடுத்த வேண்டாம். நோயின்காரணமாக இதைப் போன்றே அவர் செய்யும் சிலவேலைகள் அவரை அறியாமலேயே நடக்கின்றன.சத்தான உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உணவை அவரே எடுத்து உண்ண முடியாத நிலை வரும்போது. நீங்கள் ஊட்டிவிட வேண்டிய நிலை ஏற்படும். அதை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமாக எண்ணுங்கள்.மருந்தை அவரே எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் அவர் உட்கொள்ள மறந்துவிடுவார் அல்லது மருந்து சாப்பிட்டதை மறந்து, மறுமுறை அந்த மருந்தையே சாப்பிட்டுவிடுவார். ஆகவே, உறவினர்களே மருந்தைக் கொடுக்க வேண்டும்.சில நேரங்களில் கோபமாகவும் பதற்றமாகவும் முரட்டுத்தனமாகவும் நடக்கலாம். அப்போது அவரிடம் நீங்களும் உங்களின் முரட்டுத்தன்மையைக் காண்பிக்க வேண்டாம். சாந்தமாகப் பேசி, படுக்கையில் படுக்க வைத்து, தேவையான மாத்திரைகளைக் கொடுத்தால் அவர் சாந்தமடைவார்.முடிந்தவரை நடைப்பயிற்சி செய்யுமாறு ஊக்குவிக்கலாம்.புலன் உறுப்புகளைத் தூண்டும் பயிற்சிகள்: தொட்டு அறியும் உணர்வுகளைத் தூண்டக்கூடிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்உதாரணம்: கண்களை மூடிக்கொண்டுபொருட்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. உள்ளிருப்பதைக் காணமுடியாதபடி வெவ்வெறு பொருட்களை ஒரு பையில் போடவும். அவர் கையை உள்ளே விட்டு அந்தப் பொருட்களை என்னவென்று யூகிக்கச் செய்ய வேண்டும்டிமென்சியாவினால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள், பழக்கத்துக்கு ஒரு குழந்தையைப் போல! அவர்களுக்கு குழந்தைக்குரிய அன்பையும், பெரியவருக்குரிய மரியாதையையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். மறதி உள்ளவர்கள் தானே, அவர்களுக்கு என்ன தெரியும் என்று எதிலும் குறைகள் வைக்க வேண்டாம். இது தெய்வத்தையே ஏமாற்றுவது போல ஆகும் !
சருமத்தில் ஏற்படும் பல பரம்பரை நோய்களில் இதுவும் ஒன்று. இக்கட்டிகள் அனைத்தும் நரம்புகளில் தோன்றி, உடலில் கை, கால், முகம், முன்பக்கம், பின்பக்கம் மற்றும் தண்டுவடத்தில் தோன்றும். வலி ஏதுமிருக்காது. இது புற்றுநோய் இல்லாத கட்டி. காப்பி நிறத்தில் மூன்றுக்கு மேற்பட்ட மச்சங்கள் இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புண்டு. பெரிய கட்டிகள் இருப்பின் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். இதற்கு அறுவை சிகிச்சை தவிர வேறு எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது.
முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கீழ்க்காணும் தொல்லைகள் ஏதேனும் ஏற்பட்டால், நீங்கள் அளவுக்கு அதிகமாகச் செய்துள்ளதாக அர்த்தம். நாடித்துடிப்பு 120க்கு மேல் சென்றால்,இதயத்தில் படபடப்பு ஏற்பட்டால்,மார்பில் வலி ஏற்பட்டால்,மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்,அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டினால்,வழக்கத்துக்கு மாறான பலவீனம் இருந்தால்,மூட்டுகளில் வலி ஏற்பட்டால், உடனேஉடற்பயிற்சியை நிறுத்தி விட்டு டாக்டரின் ஆலோசனையைப் பெறவும்.
பல் இல்லாத முதியோர்கள் உணவை மென்று சாப்பிட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பெரும்பாலும் திரவ உணவையோ அல்லது திரவம் அதிகமாகக் கலந்துள்ள உணவையோதான் எடுத்துக்கொள்வார்கள். இதனால் உணவின் அளவு மட்டுமல்ல... அதன் ஊட்டச்சத்து நிலையும் குறைந்துவிடும்.மெல்வதற்குச் சிரமப்படும் முதியோர்கள் ,. இவற்றைப் பின்பற்றினால்அவர்களின்ஊட்டச்சத்துநிலைமேம்பட்டு,ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பால் அருந்தவும்.பனீர், சீஸ் சாப்பிடவும்.மெல்வதற்குக் கடினமான பொருள்களை நன்றாக அரைத்து, மசித்துச் சாப்பிடவும்.காய்கறிகளை வேகவைத்து மசித்துச் சாப்பிடவும்.மிருதுவான பழங்களான வாழை, பப்பாளி, மாம்பழம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிடவும் அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ்கள் குடிக்கவும்.குழைய வேகவைத்த சாதம், சேமியா, பொங்கல் மற்றும் உப்புமா சாப்பிடலாம்.வேகவைத்த முட்டை.மிருதுவான இறைச்சி.வேகவைத்த மிருதுவான மீன். தக்காளி போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட வேண்டியிருந்தால் பொடியாக நறுக்கியோ, தோலுரித்தோ சாப்பிடலாம்.சூப் வகைகள்.ரொட்டித் துண்டுகளைப் பாலோடு சேர்த்துச் சாப்பிடலாம்.ஜஸ்க்ரீம், ஜெல்லி, புட்டிங்ஸ், பாயசம், பாஸந்தி, ஜாமூன் மற்றும் ஜாங்கிரி போன்ற மிருதுவான உணவுகளைச் சாப்பிடலாம்
தமிழ்நாட்டில் குளிர்தாலம் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்படும். மழை சற்றுக் குறைவாகவும் குளிர் அதிகமாகவும் உள்ள பருவம் இது. இருப்பினும் அனைவரும் விரும்பும் பருவம் இக்காலம் தான். சுட்டு எரிக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து இளைப்பார, இது ஒரு பொன்னான பருவம். இம்மாதங்களில் சிறுசிறு தொல்லைகளும் நோய்களும் வர வாய்ப்புண்டு.முடிந்தளவிற்கு வீட்டிலேயே உணவை உண்ண வேண்டும்.கொதிக்கவைத்து, ஆறவைத்த தண்ணீரையே வீட்டிலேயும், வெளியிலேயும் குடிக்க வேண்டும்.இருமல்,சளி வர வாய்ப்பு அதிகமுள்ளதால், அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.அவசியம் ஃபுளூ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.ஆஸ்துமா நோயுள்ளவர்கள் தேவைப்பட்டால் காலம் தாழ்த்தாமல், இன்ஹேலரை உபயோகப்படுத்த வேண்டும்.குளிரைக்குறைக்கும் கம்பளி ஆடைகளையே முடிந்தளவிற்கு உபயோகிக்க வேண்டும்.தவறாமல் செய்யும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம்.பக்கவாதம், உதறுவாதம் போன்ற நோய் உள்ளவர்களுக்கு, இயன்முறைச் சிகிச்சை அவசியம்.யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.மலச்சிக்கல் வர வாய்ப்பு அதிகம். ஆகையால் அதற்கு நிவாரணம் பெற நிறைய பழங்கள். காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வெங்காயம், பீட்ரூட் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.தாகம் அதிகம் இருக்காது. ஆகையால் சுமார் 2 - 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.முடிந்தளவிற்கு காபி, டீயைக் குறைத்துக்கொண்டு சூடான சூப்பை அருந்தலாம்.வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் தோலுக்கு நல்லது. தோல் வறட்சியை நீக்கும்.கொய்யா, மாதுளம் பழம் குளிர்காலத்திற்கு ஏற்ற பழம்.பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகளைச் சற்று அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.குளிர்காலத்தில் பசி சற்று அதிகம் இருக்கும். அதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு, உணவில் கவனம் தேவை.மேற்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்தால், குளிரை எளிதாகச் சமாளித்துவிடலாம்.
இந்நோய்க்கு தைரோடாக்சிகோஸிஸ் என்று பெயர். தைராக்சின் எதனால் மிகுதியாகச் சுரக்கிறது என்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. இந்நோய் உள்ளவர்களுக்குதைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும் அல்லது அச்சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம். சிகிச்சைக்கு முன்பு இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக்கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவிதப் பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியதுபோல் பெரிதாகக் காணப்படும். ஒரு சிலருக்கு வீங்கி இருக்கும்.கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடலில் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாது. உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும்.முதியோர்களுக்கு நாடித்துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒரே சீராக இல்லாத நிலை (irregular heart beat), இதயம் வலிமை இழத்தல் மற்றும் காரணமில்லாமல் எடை குறைதல் போன்றதொல்லைகள் இருந்தால் அவருக்கு தைராய்டு அதிகமாகச் சுரக்கும் நோயிருப்பதாகக் கருதி, அதை உறுதிசெய்யப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதல் கண்டறிய முடியும்.
காலையில் வெறும் வயிற்றில் பழைய சோற்றுநீரை மோர் விட்டுக் குடிக்க, புரோபயாடிக் சத்து எளிதில் கிடைத்து.உடல் பலம் பெற முதல் அடித்தளம் இது.காலையில் காபி, டீக்கு பதில் புதினா. கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிது சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட்டுச் சூடாகக் குடிக்க, இந்தப் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகளில் உள்ள இரும்புச்சத்து உடல் நலம் பெறவும் ரத்தச்சோகை நீங்கவும் உதவும். மேலும், இதில் சேரும் சீரகம் நாள் முழுவதும் ஜீரண சக்தியை அதிகபடுத்த உதவும். இதில் உள்ள மைக்ரோ நியூட்டிரியன்ஸ் உடல் பலம் மேம்பட உதவும்.காலையில் வேகவைத்த முளைக்கட்டிய சுண்டல் சாப்பிட, இதில் உள்ள புரோட்டீன் சத்து நாள் முழுவதும் உடல் சோர்வை நீக்கும்.காலை 11 மணிக்கு குறுமிளகுடன் சேர்ந்த கீரை சூப் அல்லது காய்கள் மற்றும் சீரகம் சேர்ந்த சூப் குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.மதிய உணவில் பருப்பு சாம்பார், காய்,கீரை, கூட்டு, அதனுடன் துவையல் (இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தூதுவளை, பிரண்டைத் துவையல்), ரசம் (ஜீரண சக்தி அதிகரிக்கும்), நீர்மோர் ஒரு டம்ளர் குடிக்க, குடலுக்கும் உடலுக்கும் நன்மை தருவதுடன் உடலின் நீர்ச்சத்து இழப்பைச் சீர்செய்யும்.மாலையில் உலர் பழங்கள் (மா. ஆப்ரிகாட், பெர்ரி, திராட்சை, செர்ரி, அத்திப்பழம், உலர் ஆப்பிள் துண்டுகள்) சாப்பிடலாம். உலர் கொட்டைகள் சாப்பிடலாம்.நிலக்கடலை, பாதம், அக்ரூட், பிஸ்தா, முந்திரி, வறுத்த கடலை, வறுத்த பச்சைப் பயிறு, வறுத்த மூக்கடலை, உலர் கொட்டைகள், உலர் பழங்கள் ஆகியவை மினரல் சத்துகளை வாரி வழங்கும்.மாலையில் உளுந்தங்களி சாப்பிட நரம்புகள் பலம் பெற்று நரம்புத்தளர்ச்சி நீங்கும். சூடான பருத்திப்பால் அல்லது பாதம்பால் உடல் தளர்ச்சியை நீக்கி வலிமை தரும்.இரவில் சிறுதானியங்களில் (குதிரைவாலி, தினை, சாமை, வரகு) செய்யப்பட்ட உணவுகளை எடுக்க, உடலின் உட்சூடு குறைவதுடன் சிறுதானியங்களில் நார்ச்சத்து உள்ளதால் மறுநாள் காலை மலச்சிக்கல் ஏற்படாது.இவை தவிர தினமும் ஒரு ஸ்பூன் அமுக்கரா சூரணத்தைச் சூடான பாலில் கலந்து காலை, மாலை குடித்து வர 48 நாட்களில் உடல் பலம்பெறுவது நிச்சயம். மேலும், அஸ்வகந்தி லேகியம் இருவேளை உட்கொள்ள வேண்டும். இதிலுள்ள அஸ்வகந்தா. பால், தேன், நெய் போன்றவை உடலுக்கு இருமடங்கு வலிமையைத் தரும். அல்லது தேற்றாங் கொட்டை லேகியத்தை இருவேளை சாப்பிட உடல் இளைப்பு நீங்கி உடல் வளமையும் வலிமையும் பெறும். எனவே தான், தேற்றாங் கொட்டையிட்டு உடலைத் தேற்று என்பது கிராமத்து வழக்கு.வாரம் ஒருமுறை உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க உடல் சூடு தணிவதுடன் எலும்பு, மூட்டுகள் வலிமை ரு பெறும். நல்லெண்ணெயைத் தோலில் தேய்க்கத் ச் தேய்க்க கொலோஜன் உற்பத்தி பெருகி உடல் சுருக்கம் மறையும்.வாரம் ஒருமுறை சீரகம், சுக்கு, பெருங்காயம், வேப்பிலை கொழுந்து, துளசி, நுணா கொழுந்து ஆகியவற்றை அரைத்துச் சிறு சுண்டையளவு சாப்பிட நன்கு பசி எடுப்பதுடன் குடல் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்துவதால் சத்துகள்எளிதில் குடலால் உறிஞ்சப்பட்டு உடல் வலிமை பெறும். முடிந்தவர்கள் (சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து) வாரம் ஒருவேளை பழங்கள் மட்டும் சாப்பிட்டு உடல் இயக்கத்தைச் சீர்படுத்திக்கொள்ளலாம்.உணவில் கற்ப மூலிகைகளான கரிசலாங்கண்ணிக் கீரை, வல்லாரைக் கீரை, தூதுவளை, பொண்ணாங்கண்ணி போன்ற கீரை வகைகளை 48 நாட்கள் (கடுகு, உப்பு, புளியைத் தவிர்த்து) சீரகம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட நரை (முடி வெளுத்தல்), திரை (தோல் சுருக்கம்) நீங்கி உடல் பலம் பெறும்.
முதியோரின் தூக்கமின்மைக்கு காரணம் அறிய முயலவேண்டும். அதிக சத்தத்தைக் குறைத்துக் கதவை மூடி அமைதியான சூழ்நிலையை உண்டாக்க வேண்டும்.முதியோர் பகலில் தூங்காமல் இருக்க அறிவுரைகளைக் கூற வேண்டும். பகலில் ஏதாவது சிறு வேலைகளைச் செய்யச் சொல்ல வேண்டும்.இரவில் உணவு உண்டபின் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.படுக்கும் போது சரியான தலையணைகளை வைத்துச் சௌகரியமான நிலையில் படுத்து உறங்கச் சொல்ல வேண்டும்.தூக்க மாத்திரைகள் பகலில் கொடுக்காமல் இரவில் கொடுக்கப்பட வேண்டும்.நீர் பிரியக்கூடிய மாத்திரைகள் பகலில் கொடுக்கப்பட வேண்டும். இரவில் கொடுத்தால் தூக்கத்தைக் கெடுக்கும்.முதியோர் சிலருக்கு படுத்ததும் தூக்கம் வராது. அவர்களை தொலைக்காட்சி பார்ப்பது, பத்தகங்கள் படிப்பது போன்றவத்தில் ஈடுபடச் சொல்லலாம்.இம் முறையில் அவர்களுக்கு அசதிஏற்பட்டால் உடனே படுக்க சொல்ல வேண்டும்.படுப்பதற்கு முன்பு பாலில் சற்று தேன் கலந்து அருந்தினால் சில ருக்குச் சுகமான தூக்கம் வரலாம், பிரார்த்தனை, தியானம் போன்ற செயல்பாடுகள் மூலமாகவும் தூக்கம் வரலாம். தூங்கும் அறையில் அதிக வெளிச்சம் இல்லாமலும்,வெளிச்சத்தைத் தவிர்க்கத் திரை போட்டும் வைக்க வேண்டும். படுக்கை சுத்தமாக, ஈரமில்லாமல், சுருக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். தூங்கும்போது முதியோர் அணியும் ஆடை அவர்களுக்கு வசதி உள்ளதாக இருக்க வேண்டும்.படுப்பதற்கு முன் சிறுநீர் கழித்துவிட்டுப் படுக்கச் சொல்லவும். இதன் மூலம் தூக்கத்தின் இடையில் எழுந்திருப்பதைத் தவிர்க்கலாம். பிள்ளைகள் இரவில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி சத்தமாக வைப்பது போன்றவை முதியோரின் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும். ஆகவே. முதியோருக்குத் தொந்தரவு இல்லாமல், அதிக சத்தமாக வானொலி மற்றும் தொலைக்காட்சி வைக்காமல் அவர்கள் அமைதியுடன் தூங்க உதவ வேண்டும். மூத்தகுடிமக்களுக்குத் தூக்கம்,ஓய்வு அவசியம் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் தூங்கும் பகுதியில் அதிக சத்தங்கள் ஏற்படாமலும் குடும்பத்தினர் பார்த்துக்கொள்ள வேண்டும்.கடைசி முயற்சியாகவே தூக்க மாத்திரையை, மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.
அல்ஸைமர் நோயின் முதல் அறிகுறியே மறதியில்தான் ஆரம்பமாகிறது. இவர்களுக்கு மறதி மற்றும் கவனக்குறைவால் எதையும் மனதில் பதிய வைக்க முடிவதில்லை. இவர்களின் மறதியில் ஒரு தனித்தன்மையும் உண்டு. முக்கியமாக, அண்மைக்கால நினைவு பாதிக்கப்பட்டு மறதி உண்டாகிறது. ஏதாவது ஒன்றைக் கூறினால் அதில் கவனம் செல்லாததால், அதை நினைவில் பதிய வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் அண்மைக்கால நினைவுகள் அற்றுப்போய் விடுகின்றன.நடை, உடை, பாவனைகளில் மாற்றம் தெரியும். சுத்தமாகப் பளிச்சென உடை உடுத்துபவர், கசங்கிய சட்டையைஅணிவார். சட்டை பொத்தானை மாற்றிப் போட்டுக் கொள்வார். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மேற்கொண்ட மறதி சார்ந்த தொல்லைகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். இதுவே மறதி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.
மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டின் நிலவரப்படி அந்த நாட்டின் மக்கள் தொகை 12 கோடியே 31 லட்சம்,அங்கு 65 வயதுக்கு மேற்பட்டோர் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள். அதன்படி பார்த்தால் அந்த நாட்டில் தற்போது மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 3 கோடியே 70 லட்சம் பேர் முதியோர் ஆவார்கள். கிட்டத்தட்ட மூன்று பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருக்கிறார். முதியவர்களில் சுமார் 96 ஆயிரம் பேர் நூறு வயதை தாண்டியவர்கள். தலைநகர் டோக்கியோவில் மட் டும் 80 லட்சத்து 70 ஆயிரம் முதியோர்கள் வசிக்கிறார்கள்.ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு வெகுவாக குறைந்து வருவது முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது ,அந்த நாட்டு அரசை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. முதியோருக்கான ஓய்வூதியம், சுகாதாரம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக பெரும் தொகையை செலவிட வேண்டி இருப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.