25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


முதுமை

Jun 03, 2025

கால்சியத்தின் பலன்

ரத்தத்தில் உள்ள சுண்ணாம்புச் சத்து 8.8 mg/dl அளவுக்குக் குறைவாக இருந்தால், குறைவான சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) என்று தெரிந்துகொள்ளலாம்.பயன்கள்இது பற்களையும் எலும்புகளையும் உறுதியாக வைக்க உதவுகிறது.. நரம்பு மற்றும் சதைகள் உறுதியாக இருக்க உதவுகிறது. இதயம் சரியாக இயங்க உதவுகிறது.ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை உறைய வைக்க உதவுகிறது.கால்சியம் குறைய என்ன காரணம்?பரம்பரையாக வரலாம்வைட்டமின் டி குறைபாடுதைராய்டு சுரப்பி அகற்றிய பின்னர்பாரா தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரத்தல்  (Hypoparathyroidism)போதிய சூரிய ஒளி இல்லாமைசிறுநீரகச் செயலிழப்புமருந்துகள்: ஸ்டீராய்டு, குளோரோதின்அறிகுறிகள்வறட்சியான சருமம்கால்களிலும், முதுகிலும் சதைப் பிடித்தல்வறட்சியான நகங்கள்தலைமுடி கடினமாக இருத்தல்இதயம் செயலிழத்தல்மனக்குழப்பம்,மனச்சோர்வுவலிப்பு நோய்சிகிச்சைசுண்ணாம்புச் சத்து மாத்திரையை 1 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.வைட்டமின் டி குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.சூரிய ஒளியில் தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும் இருத்தல் அவசியம்.பால் அல்லது தயிரைத் தினமும் சற்று அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.பின்வரும் உணவு வகைகளை முடிந்தளவுக்கு உணவில் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.சிறுதானியங்கள்கீரை வகைகள் (உதாரணம்: முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை)கறிவேப்பிலைகொட்டை வகைகள், உதாரணம்: பாதாம், முந்திரிமீன், நண்டு, இறால்

May 27, 2025

வயிற்று வலி

வயிறுஎன்பதுஇரைப்பை, சிறுகுடல், பெருங்குடல்,குடல்வால், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, புராஸ்டேட் சுரப்பி (ஆண்களுக்கு), கர்ப்பப்பை ஓவரிகள் (பெண்களுக்கு) ஆகிய பல உறுப்புகள் அடங்கிய ஒரு பகுதியாகும்.வயிற்று வலி வரக் காரணங்கள்.இரைப்யைப் புண், புற்றுநோய் கட்டி.சிறுகுடலில் ஏற்படும் புண், நோய்த்தொற்று.வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்.கல்லிரல் பாதிப்பு, உதாரணம்: காமாலை.பித்தப்பையில் கற்கள்.கணையத்தில் ஏற்படும் அழற்சி.சிறுநீரகத்தில்உள்ளகற்கள், கட்டி, நோய்த்தொற்று.சிறுநீர்ப்பையில் ஏற்படும் கட்டி, நோய்த்தொற்று.புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் நோய்த்தொற்று.கர்ப்பப்பையில் ஏற்படும் புண், கட்டி.மருந்துகளின் விளைவு / வலி நிவாரணி.உறுப்புகள் பாதிக்கப்பட்டதைப் பொறுத்து நோயின் தொல்லைகளும் மாறுபடும். உதாரணம்.இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு உணவு உண்டபின் வலி அதிகமாகும்.குடற்புண் உள்ளவர்களுக்குப் பசி எடுக்கும் போதெல்லாம் வயிற்றுவலி ஏற்படும்.சிறுகுடலில் நோய்த்தொற்று (உதாரணம்: காசநோய்) ஏற்பட்டால் பசி குறையும். எடையும் குறையும், லேசாக காய்ச்சல் இருக்கும், வயிறு சற்று வீங்கினாற்போல இருக்கும்.பித்தப்பையில் உள்ள கற்களின் விளைவாக வயிற்றின் வலது பக்கத்தில் (மேல் பகுதி) வலி இருக்கும். அது, வலது முதுகு வரையிலும் பரவலாம், வலி விட்டு விட்டும் வரலாம். சிறுநீரகத்தில் உள்ள கற்களினால் ஏற்படும் வலி. வலது அல்லது இடதுபுறம் வலி ஏற்படும், அது விட்டு விட்டும் வரும், வலி வயிற்றின் அடிப்பாகம் வரை இறங்கும்.வலி ஏற்பட்டால் சுயசிகிச்சை ஏதும் செய்யாமல், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை நாடி, தக்க சிகிச்சை பெற்று வயிற்று வலியின்றி நலமாக வாழ்வோம்.

May 20, 2025

கேட்டராக்ட்டின் அறிகுறிகள் என்ன?

கேட்டராக்ட் பிரச்னை உள்ள  ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஆனால் கேட்டராக்ட் பிரச்னை உள்ள அனைவருமே பொதுவாகக் கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை உணர்வது வழக்கம். எனவே பின்வருவனவற்றைக் கேட்டராக்டின் அறிகுறிகள் எனலாம்.பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.நிறங்களைப் பிரித்தறிவதில் சிரமம் இருப்பது மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது‎பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவதுசில வெளிச்சங்கள் மிகக் குறைவாகவும். சில வெளிச்சங்கள் மிக அதிகமாகவும் தெரிவது.படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமம் ஏற்படுவது. குறிப்பாக இரவு நேரங்களில் படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் அதிகமாகச் சிரமம் ஏற்படுவது.வெளிச்சத்தைச் சுற்றி வானவில் போலத் தெரிவது, குறிப்பாக வாகன வெளிச்சத்தை சுற்றி அவ்வாறு தெரியலாம்.நிறங்கள் தெளிவாகத் தெரியாமல்  இருக்கலாம்.

May 13, 2025

முதுமை என்பது ஒரு பருவமே.நோயல்ல.!

முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல. ஆனால் முதுமையில் பல நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாகின்றன.நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!ஆரம்பம் என்கிற ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால் இளமைக்கு முதுமை ஒரு முடிவு.முதுமை அடை வதற்கு என்ன காரணங்கள் என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னமும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. முதுமை அடையப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். முன்னோர்கள் நீண்ட நாட்கள் வழ்ந்திருந்தால் அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிர் அணுக்கள் குறைகின்றன.திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகுதல். உயிரணுக்கள் பெருகி வரும் தன்மை.கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுதல்.ஃப்ரிரேடிகல்ஸ் என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழித்தல்.உடல்வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன் குறைதல். நமது மூளைப் பகுதியிலுள்ள பிட்யூட்ரி என்னும் நாளமில்லாச் சுரப்பி Killer hormone எனும் திரவத்தைச் சுரக்கிறது. இந்தத்திரவம்  பெண் பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. இத்திரவம் உடலை அழித்து மரணத்தை ஏற்படுத்துகிறது. அதனால், ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால், அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு,தலையிலுள்ள மூளைப் பகுதியில் பீனியல் எனும் சுரப்பி Melotinin எனும் திரவத்தைச் சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம். ஒருவர் 25 வயதை அடையும்போது இத்திரவம் குறைகிறது. ஆகையால் முதுமை அப்போதே தொடங்க ஆரம்பித்து விடுகிறது.இவ்வுடல் மாற்றங்கள் காலத்தால் ஏற்படுவதுஎன்றாலும்,முதுமைஅடைந்தவர்க்கெல்லாம் இம்மாற்றங்கள் ஏற்படுவதில்லை. சிலருக்குச் சில மாற்றங்களே நிகழும் .மேற்கண்ட மாற்றங்கள் முதுமையில் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக அமைத்துக்கொண்டால் முதுமையிலும்  இன்பம் காணலாம்.

May 06, 2025

முதுமை காலத்தில் ஆரோக்கியமாக வாழ….

உடற்பயிற்சி என்றால் கனமான பொருள்களை தூக்குவது, ஓடுவது, உட்கார்வது என்று நினைக்க வேண்டாம். வேகமான பயிற்சியும் அவசியமில்லை. நாற்காலியில் உட்கார்ந்தபடி கைகளை கால்களை அசைத்து இலேசான பயிற்சி செய்யலாம். நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.வாரத்துக்கு 150 நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும். வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் அருகில் இருக்கும் பூங்கா, கோவில் போன்ற இடங்களுக்கும் செல்லலாம். பயிற்சியின் போது அல்லது அவ்வபோது உடலில் சூரிய ஒளி பட வேண்டும். அப்பொதுதான் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் இருக்கும்.வயதான காலத்திலும் இனிப்புகளை அதிகம் விரும்புவது, கார சாரமான உணவை எடுத்துகொள்வது, துரித உணவுகளை விரும்பி உண்பது என எல்லாமே மோசமான பழக்கங்கள் தான். இனி நாக்குக்கு நீங்கள் அடிமை ஆக கூடாது.இந்தகாலத்தில்உங்களுக்குநோய்எதிர்ப்புசக்திகுறையக்கூடும்.அதைஈடுசெய்யும்வகையில்பழங்கள், காய்கறிகள், கீரைகள், கொட்டைகள் போன்றவற்றை எடுத்துகொள்ள வேண்டும். இது நோய்த்தொற்றை உண்டாக்கும் வைரஸ் மற்றும்பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாக்கிறது. இது ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல மூலமாகும். இது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.ஆண்கள்புகைப்பழக்கம்மற்றும்மதுப்பழக்கத்தைகொண்டிருந்தால்கண்டிப்பாகதவிர்க்கவேண்டும்.பாக்கு, புகையிலை, வெற்றிலை என எல்லாமே வயதான காலத்தில் தவிர்க்க வேண்டியவையே.உடல் உறுப்புகள் வயதான காலத்தில் தங்களது பணியை மெதுவாக்கும். இந்த நேரத்தில் இதன் பாதிப்புகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். புகைப்பிடிப்பதால் பக்கவாதம், இதய செயலிழப்பு, பெருந்தமனி தடிப்பு, விறைப்புத்தன்மை தோல் நெகிழ்ச்சி உண்டாக்க கூடும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருந்தால் நீங்கள் இந்த பழக்கத்திலிருந்து வெளியேறியே தீர வேண்டும்.வருடம் ஒரு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். கண் மருத்துவரை சந்தித்து கண் கோளாறுகள் குறித்த பரிசோதனை செய்ய வேண்டும். காது கேட்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் காது மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். வயதான காலத்தில் தான் இந்த கோளாறுகள் அதிகரிக்க கூடும் என்பதால் இந்த பரிசோதனை அவசியம்.

Apr 29, 2025

வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.

 இரு கால் மூட்டுகளில் ஏற்படும் வலி பெரும்பாலும் கீல்வாதத்தால் வருகிறது. இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களை அதிகமாக பாதிக்கிறது.கால் மூட்டுகளில் ஏற்படும் காயங்கள் காரணமாக வீக்கம், வலி உருவாகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள தசைகள், எலும்புகள், இணைபுள்ளிகள் மற்றும் இணைப்புக்கயிறுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன..கீல்வாதம் காரணமாக, கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை பாதுகாக்கும் இணை எலும்பு மெதுவாக பலவீனமடைந்து, காலப்போக்கில் முற்றிலும் தேய்ந்து வருகிறது. மூட்டுகளுக்குள் இருக்கும் திரவம் குறைந்து, எலும்புகள் நேரடியாக உராய்வதால் கடுமையான வலி, வீக்கம் மற்றும் நடக்கும் போது சத்தம் போன்றவை ஏற்படலாம்.வயதாகும் போது, கீல்வாதம் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இந்த பிரச்சனை ஆண்களை விட அதிகம் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள்.நடக்கும் போது, உட்காரும் அல்லது நிற்கும் போது மூட்டுகளில் கடுமையான வலிகாலையில் எழுந்தவுடன் மூட்டுகளில் விறைப்பு, சீராக இயக்க முடியாத நிலைகால்மூட்டுகளினசுற்றுவட்டாரத்தில்வீக்கம்சில வளர்சிதை மாற்ற நோய்கள் (மெடபாலிக் டிஸ்அோர்டர்கள்), நீரிழிவு, இரும்புச்சத்து அதிகம் காணப்படும் நிலை  போன்றவை கீல்வாதத்தை மேலும் மோசமாக்கும்மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

Apr 22, 2025

வயதானவர்களை தாக்கும்  (சர்கோபீனியா நோய் )

மனிதர்கள் முதுமை அடையும்போது, உடலின் தசைகள் மெதுவாக வலிமையிழக்கத் தொடங்குகின்றன. இந்த நிலைமைக்கு மருத்துவத்தில் 'சர்கோபீனியா' என்ற பெயர் உள்ளது..இது வயதினால் மட்டுமல்ல; உடற்பயிற்சியின்மை, மது மற்றும் புகை பழக்கம், புரதச்சத்து மற்றும் வைட்டமின் டி குறைபாடும் முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.வயதானவர்கள் எப்போதும் அமராமல், சற்று நடக்கவும், நிற்க வேண்டும். ஒரு வாரம் படுக்கையில் இருந்தால், 5% வரை தசை இழப்பு ஏற்படும். அதை மீண்டும் மீட்டெடுக்க மிகவும் கடினம்.இதைவிட ஆபத்தானது தசை குறைபாடு ஏற்படுவதால். சர்க்கரை அளவு கூடும்,  நடையிலும் தடை ஏற்படும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்றவை தசையை வலிமையாக்கும் சிறந்த வழிகள்.60-70 வயதினருள் 13% பேர், 80-க்கு மேல் உள்ளவர்களில் பாதி பேர் வரை இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால், தினமும் சிறிய பயிற்சிகளுடன் உடலை இயக்குங்கள்.

Apr 15, 2025

உணவை மென்று சாப்பிட சிரமப்படுபவர்களுக்கு...

பல் இல்லாத முதியோர்கள்உணவை  மென்று சாப்பிட  மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பெரும்பாலும் திரவ உணவையோ அல்லது திரவம் அதிகமாகக் கலந்துள்ள உணவையோதான் எடுத்துக்கொள்வார்கள். இதனால் உணவின் அளவு மட்டுமல்ல,அதன் ஊட்டச்சத்து நிலையும் குறைந்துவிடும்.மெல்வதற்குச் சிரமப்படும் முதியோர்களுக்கான சில யோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றினால் அவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.பால்அருந்தவும்,பனீர், சீஸ்சாப்பிடவும்,மெல்வதற்குக்கடினமானபொருள்களைநன்றாகஅரைத்து, மசித்துச்சாப்பிடவும்.காய்கறிகளை வேகவைத்து மசித்துச் சாப்பிடவும். மிருதுவான பழங்களான வாழை, பப்பாளி, மாம்பழம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிடவும் அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ்கள் குடிக்கவும்.குழைய வேகவைத்த சாதம், சேமியா, பொங்கல் மற்றும் உப்புமா சாப்பிடலாம்.வேகவைத்த முட்டை,மிருதுவான இறைச்சி,வேகவைத்த மிருதுவான மீன்.தக்காளி போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட வேண்டியிருந்தால் பொடியாக நறுக்கியோ தோலுரித்தோ சாப்பிடலாம்.சூப் வகைகள், ரொட்டித் துண்டுகளைப் பாலோடு சேர்த்துச் சாப்பிடலாம்.ஐஸ்க்ரீம், ஜெல்லி, புட்டிங்ஸ், பாயசம், பாஸந்தி, ஜாமூன் மற்றும் ஜாங்கிரி போன்ற மிருதுவான உணவுகளைச் சாப்பிடலாம்.

Apr 08, 2025

எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

வயதானவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, தைராய்டு, சிறுநீரக பிரச்சனை போன்ற நோய்களில் ஏதேனும் இருந்தால் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் இந்த மாத்திரைகளோடுவைட்டமின்டி.பி6, பி 12, கால்சியம்மாத்திரைகளையும்பரிந்துரைத்திருப்பார்கள்.அதையும்தவிர்க்காமல்எடுத்துகொள்ளுங்கள்.மருத்துவர் குறிப்பிட்ட அளவு மட்டுமேயான மாத்திரைகளை எடுத்துகொள்ள வேண்டும். சுயமாக மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே போன்று மாத்திரைகள் வாங்கும் போது அது பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் பரிசோதிப்பது அவசியம். மாத்திரைகள் விஷயத்தில் எப்போதும் சமாதானம் ஆக வேண்டாம்.நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு என எந்த நோயாக இருந்தாலும் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வயதானவர்கள் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை.வீடு தேடி வந்து ரத்த பரிசோதனை செய்கிறார்கள். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் வீட்டிலேயே அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வசதீயாக வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவி வாங்கி வைத்துகொள்ளலாம்.எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

Apr 01, 2025

படுக்கைப்புண்

படுக்கைப்புண் என்பது அழுத்தப்புண். அதாவது தொடர்ந்து ஏற்படும் அழுத்தத்தினால் திசுக்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் பிராணவாயுவும், ஊட்டச்சத்தும் திசுக்களுக்குக் குறைகிறது. தசைகளிலிருந்து கழிவுப் பொருட்கள் வெளியேறுவது குறைந்து அங்குள்ள திசுக்கள் இறந்து புண்ணாகிவிடும். முதலில் தோலில் நிற மாற்றம் இருப்பதைக் காணலாம். பிறகு புண்ணாகி மிகவும் ஆழமானதாக மாறிவிடும். இது உடலில் பெரும்பாலும் எலும்புகள் புடைத்துக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும். அந்த இடங்கள் படுக்கைகளில் அழுத்தப்படும் போது அழுத்தம் அதிகரித்து, ரத்த ஒட்டம் குறைந்து திசுக்கள் இறந்து அழுத்தப்புண் உண்டாகிறது.தோலில் ஏதாவது ஒரு அசாதாரணமான மாற்றம் ஏற்பட்டால் உடனே அதை மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.புண் ஏற்பட்டுள்ள பகுதியில் அழுத்தம் ஏற்படாமல் இருக்கத் தலையணை அல்லது காற்றுத் தலையணை வைத்து அழுத்தத்தைக் குறைக்கலாம்.சுமார் 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது புண் இருக்கும் இடத்திற்கு அழுத்தம் ஏற்படாமல் நிலையை மாற்றிப் படுக்கவைக்க வேண்டும். (Change of position).தேவையானால் கிருமிநாசினி மருந்து மூலம் புண்ணைச் சுத்தம் செய்து தகுந்த மருந்துகளை வைத்துக் கட்டுப்போட வேண்டும்.உடல்நலம் தேறத் தேவையான கலோரி, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற உணவு வகைகளைக் கொடுக்கலாம். புண் மிகவும் ஆழமாகவோ, அழுகியோ இருந்தால் அதை மருத் மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.முதியோர் கவனிப்பில் பொதுக் கவனிப்பும், அடிப்படை வசதிகளுமே மிகவும் முக்கியமானவை. இவற்றைச் செவிலியர் மிக கவனமாகக் கடைப்பிடித்தால் பலதொல்லைகள் வராமலேயே தவிர்க்க முடியும் அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தக்க சிகிச்சை அளிக்க முடியும்.

1 2 3 4 5

AD's



More News