25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கேட்டராக்ட்டின் அறிகுறிகள் என்ன?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேட்டராக்ட்டின் அறிகுறிகள் என்ன?

கேட்டராக்ட் பிரச்னை உள்ள  ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஆனால் கேட்டராக்ட் பிரச்னை உள்ள அனைவருமே பொதுவாகக் கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை உணர்வது வழக்கம். எனவே பின்வருவனவற்றைக் கேட்டராக்டின் அறிகுறிகள் எனலாம்.

பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.

நிறங்களைப் பிரித்தறிவதில் சிரமம் இருப்பது மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.

சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.

தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது

‎பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.

அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது

சில வெளிச்சங்கள் மிகக் குறைவாகவும். சில வெளிச்சங்கள் மிக அதிகமாகவும் தெரிவது.

படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமம் ஏற்படுவது. குறிப்பாக இரவு நேரங்களில் படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் அதிகமாகச் சிரமம் ஏற்படுவது.

வெளிச்சத்தைச் சுற்றி வானவில் போலத் தெரிவது, குறிப்பாக வாகன வெளிச்சத்தை சுற்றி அவ்வாறு தெரியலாம்.

நிறங்கள் தெளிவாகத் தெரியாமல்  இருக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News