பசித்தபின்னர் சாப்பிடுங்கள் என்று பொதுவான ஆலோசனை ஒன்று உண்டு. இருப்பினும் பசி வரும்வரை சாப்பிடாமல் இருக்க வேண்டாம். தாகம் வரும்வரை தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். போதுமான தண்ணீர் அருந்துவது நல்லது. தூக்கம் வரும்வரை படுக்காமல் காத்திருக்க வேண்டாம். உடலுக்கான ஓய்வை அளிப்பது முக்கியம். உழைப்பு முக்கியம்தான். அதற்காகச் சோர்வு ஏற்படும்வரை ஓய்வெடுக்காமல் உழைக்க வேண்டாம். நோய்வாய்ப்படும்வரை மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லாமல் காத்திருக்க வேண்டாம். வருமுன்னர் காக்க வேண்டியது நம் கடமை. பிரச்னை வரும்வரை கடவுளிடம் பிரார்த்தனை செய்யாமல் சும்மா இருக்க வேண்டாம்.
ஞாபகசக்தியை மேம்படுத்தச் சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு செய்தால் போதும்.நேற்று என்னவெல்லாம் சாப்பிட்டோம். யார் யாரையெல்லாம் சந்தித்தோம் என நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அன்றைய இரவில் தூங்கச் செல்லும் முன்னும் நடந்தவற்றை அசைபோடலாம்.தெருவில் உள்ளவர்களின் பெயர்களையும் தெரிந்தவர்களின் முகங்களையும் நினைவில் வைக்கப் பழக வேண்டும்.நம் பிள்ளைகளின் மொபைல் எண்களைத் திரும்ப திரும்ப நினைவில் கொண்டுவர வேண்டும்.அன்றாடம் காலையில் நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு அவற்றைச் செய்து,இரவில் நாம் இட்ட பட்டியலில் முழுவதும் முடிந்துவிட்டதா என மூளையைச் சிறிது சிறிதாகப் பழக்க வேண்டும்.கடைகளுக்குச் செல்லும் முன் வாங்க வேண்டிய லிஸ்ட்டை நினைவில் வைத்து,அதை வாங்கியபின் சரிபார்க்க வேண்டும்.மறக்காமல் வெளியில் செல்லும் முன்பு நம்மைப் பற்றிய அடையாள அட்டையை (வீட்டு முகவரி, தொலைபேசி எண், நம்முடைய நோய் பற்றிய விவரங்கள்) கொண்டுசெல்ல வேண்டும்.
1 தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால்..சில நேரங்களில் உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளலாம். அப்போது பதற்றப்படாமல் இரண்டு கைகளையும் மெதுவாக தலைக்கு மேல் உயர்த்தி சில விநாடிகள் வைத்திருக்கவும். இதனால் தொண்டை தசைகள் சற்று தளர்ந்து உணவு கீழே செல்ல உதவலாம். 2.தவறான தலையணை காரணமாக கழுத்து வலி வந்தால்..தூங்கும் போது சரியான தலையணை பயனபடுத்தலில்லை என்றால் கழுத்து வலி ஏற்படலாம். அப்போது படுக்கையிலேயே கால் களை ஒன்றன் பின் ஒன்றாக உயர்த்தி, கால் விரல்களை மெதுவாக பிசைந்து மசாஜ் செய்யுங்கள் இதனால் நரம்புகள் தளர்ந்து சற்றே நிவாரணம் கிடைக்கலாம். 3) காலில் திடீரென தசை இறுக்கு (cramp) ஏற்பட்டால்..சில நேரங்களில் கால்களில் தசை இறுக்கு அல்லது சுளுக்கு போன்று வரும். அப்போது வலது கால் வலித்தால் இடது கையை உயர்த்தவும், இடது கால் வலித்தால் வலது கையை உயர்த்தவும். இது உடலின் நரம்பு சமநிலையை சீராக்க உதவலாம். 4.பாதத்தில் திடீரென கூச்சம் (நரம்பு பிடிப்பு) வந்தால்…அப்படி இருந்தால் எதிர் பக்க கையின் உள்ளங்கையை வேகமாக சுழற்றி அல்லது மசாஜ் செய்யுங்கள். இதனால் நரம்பு அழுத்தம் குறைந்து பாத வலி குறையலாம்.
முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம்.எந்தளவிற்கு விரைவாகச் சிகிச்சை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு ஆஸ்துமா விரைவில் குணமாகும்.வாகனம் ஓட்டும்போதும், சமையல் செய்யும்போதும், ஒட்டடை அடிக்கும்போதும் முகத்தைத் துணியால் மூடிக்கொள்வது அவசியம்.மருத்துவரிடம் ஆஸ்துமா நோயாளிகள் தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காண்பிப்பது மிக முக்கியம்.தவறாமல் செய்யும் நடைப்பயிற்சி மூலம் நுரையீரலின் செயல்திறனை அதிகரித்துஆஸ்துமாவின் தொல்லையை வெகுவாகக் குறைக்க முடியும்.பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சி மிகவும் அவசியம்.சரியாக உட்காருதல் மற்றும் தூங்கும் நிலைகளை முறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.உடல் பருமன் மற்றும் தொப்பையைக் குறைக்கவும்.மனதைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் அவசியம்.ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே ஆரம்பிக்க வேண்டும்.சைனஸ் மற்றும் வயிறுஎரிச்சல் போன்ற தொல்லைகளுக்குத் தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் நீராவி பிடித்துக்கொள்ளலாம்.இன்புளூயன்ஸா, நிமோனியா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இன்புளூயன்ஸா தடுப்பூசியும், ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் நிமோனியா தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.உள் இழுப்பான் (Inhaler) மற்றும் உள் உறிஞ்சி (Nebulizer) ஆகியவற்றை உபபோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். மூச்சுவிடும் சிரமத்திலிருந்துஉடனே நிவாரணம் கிடைக்கும். பக்கவிளைவுகள் ஏதுமில்லை. குறைந்த அளவு மருந்தே உள்ளே செல்லும்.முடிக்குச் சாயம் (Hair dye) அடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளிக்கொணர மார்பு இயன்முறைச் சிகிச்சை தேவைப்படும். சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ எடுத்துக்கொள்ள வேண்டும்.நோய் தீவிரநிலையில் இருக்கும்போது வெந்நீர் அருந்துவது நல்லது.காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alarm) வீட்டில் தேவை.தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்க தயங்கக்கூடாது.
வாந்தி, வயிற்றுப்போக்கினால் நீரிழப்பு ஏற்பட்டால் ORS பாக்கெட்டுகளைப் பயன்படுத்துங்கள்.இதில் போலிகளும் விற்கப்படுகின்றன. எனவே, பல வண்ணங்களில் விற்கப்படும் பானங்கள் வாங்குவதில் கவனமாக இருங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி, தரமான பாக்கெட்டுகளையே வாங்குங்கள்.நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்-அதிக தாகம் எடுப்பது, நாவறட்சி, சிறுநீர் குறைவாகப் போவது, அடர்ந்த மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போவது, தலைவலி, தசைப்பிடிப்பு போன்றவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை உணர்த்தும்.வீட்டிலேயே தயாரிக்கலாம்உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஒரு லிட்டர் ஒ.ஆர்.எஸ். கரைசலில் சர்க்கரை 13.5 கிராம், சோடியம் குளோரைடு 2.6 கிராம், பொட்டாசியம் குளோரைடு 1.5 கிராம், சோடியம் சிட்ரேட் 2.9 கிராம் சேர்க்க வேண்டும். இவற்றைக் கொதிக்க வைத்து, பின்பு ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஆறு டீஸ்பூன் சர்க்கரையும் அரை டீஸ்பூன் உப்பும் சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்கு கலக்கிக் கரையச் செய்தால் ஓ.ஆர்.எஸ் கரைசல் தயார்.ஒ.ஆர்.எஸ். கரைசல் மிதமான நீரிழப்பை மட்டுமே சரி செய்யும். கடுமையான நீரிழப்புக்கு மருத்துவச் சிகிச்சை அவசியம்.
உடல் வறட்சி, அரிப்பு, வேனல் கட்டி, அக்கி, நீரிழப்பு, மயக்கம், நீர்ச்சுருக்கு. இவை எல்லாவற்றிலும் இருந்து மொத்தமாக நம்மைக் காப்பாற்றஒரே ஒரு மருந்து இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? வாங்க... ஒட்டுமொத்தநோய்களுக்கும் கீழ்க்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இந்தக்கோடை முழுவதும் சாப்பிட்டால் சகலரோக நிவாரணியாகச் செயல்படும்! 1. குக்கில் பற்பம் அல்லது குக்கில் பற்ப மாத்திரையைப் பாலுடன் தினமும் ஒருவேளை எடுக்க நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், தோல் அரிப்பு வெப்ப அலை தாக்கம் இவற்றிலிருந்து தப்பிக்கலாம் (மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கவும்). 2. பாதாம் பிசினைப் பொடித்து நீரில் ஊறவிட்டுப் பாலுடனோ,பழச்சாறுகளுடனோ சேர்த்துக் குடிக்க, மேற்சொன்ன கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். 3. சப்ஜா விதைகளை நீரிலிட்டு ஊறவைத்துப் பழச்சாறுகளுடன் குடிக்கலாம். இதனால் உடல் உஷ்ணம் தணியும். 4. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நன்னாரி மணப்பாகு தினம் இருவேளை நீர்விட்டுக் குடிக்க மேற்சொன்ன நோய்கள் தீரும். 5. மேலும் வெண்பூசணி லேகியம், சதாவரிலேகியம், சரபுங்க வில்வாதி லேகியம், நன்னாரி லேகியம், மனோரஞ்சித லேகியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கலாம். 6. வாழைத்தண்டு, முள்ளங்கி, பீர்க்கன்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களைத் தினமும் சாப்பிடலாம். 7. பானகம், பழச்சாறுகள் இளநீர், மோர், நிசி நீர் எனப்படும் பழைய சோற்றுநீர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் புரோபயாடிக் உள்ளதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இதயத்தின் துடிப்பு ஒய்வில்லாத ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஆனால், ஒவ்வொரு மாற்றத்தையும் ஒரு சாதாரண ஈ.சி.ஜி.யினால் பதிவு செய்ய முடியாது, இதற்குக் காரணம் உண்டு. பரிசோதிக்கும் அந்த சில விநாடிகளில் மட்டுமே இதயத்தின் மின்னழுத்த இயங்கலை ஈ.சி.ஜி.யானது பதிவு செய்கிறது. சில நோயாளிகளுக்கு ஏற்படும் துடிப்புக் குறைபாடு, அதிக துடிப்பு, திடீர் மயக்கம், மார்பு வலி, நெஞ்சு படபடப்பு போன்றவை எப்போதும் வரக்கூடியவை அல்ல. எனவே, இவற்றைஈ.சி.ஜி.யினால் துல்லியமாகக் கண்டறிய முடியாது. இப்படி விட்டு விட்டுஏற்படும் நாடித்துடிப்பைக் கண்டுபிடிப்பதற்கு ஹோல்டர் மானிட்டர் (Holter monitor) மிகச்சிறந்த சாதனமாக உள்ளது.ஹோல்டர் மானிட்டர் என்பது சிறிய,கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாதனம். 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம்வரை தொடர்ந்து ஈ. சி. ஜி. யைப் பதிவு செய்யும் கருவியும் கூட. நோயாளியின் மார்பில் சில மின்முனைகள் (Electrodes) பொருத்தப்பட்டு, ஒரு சிறிய ரெக்கார்டருடன் இந்த ஹோல்டர் மானிட்டரானது இணைக்கப்படும். ஹோல்டர் கருவி பொருத்தப்பட்டிருக்கும்போதும் நோயாளி தனது வழக்கமான தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கலாம்.
60 வயது முதியவர் போல் இருப்பார்..!!60 வயதுடைய இரண்டு பேர் சந்தித்தால், 30 வயதுடையவர்கள் போல இருப்பார்கள்..!!!60 வயதுடைய மூன்று பேர் ஒன்று சேர்ந்தால்20 வயது இளையவர்களாகத் தெரிகிறார்கள்..!!!!60 வயதுடைய ஆறு பேர் ஒன்று சேர்ந்தால், அவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்அதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை மறக்காமல் தொடர்ந்து சந்தித்து வந்தால்,முதுமையின் அறிகுறிகள் மறைந்துவிடும்.நண்பர்களை மறந்து விடாதீர்கள்..!
வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்யப்படுவார்கள், ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாகப் பார்க்கிறார்கள் : ஓய்வு பெற்றவர்கள் (மூத்த குடிமக்கள்) அதிகம் பேச வேண்டும்என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் தற்போது நினைவாற்றல் இழப்பைத் தடுக்கவழி இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி. மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதால்குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.பேசுவது மூளையை செயல்படுத்துகிறது, ஏனெனில் மொழியும்எண்ணங்களும்ஒன்றுக்கொன்றுதொடர்புகொள்கின்றன, குறிப்பாகவிரைவாகபேசும்போது, இதுஇயல்பாகவே சிந்தனையை விரைவுபடுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது. பேசாத மூத்த குடிமக்களுக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிகமாகப் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மனநோயைத் தடுக்கிறது.மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பெரும்பாலும் எதையும் பேசாமல் இதயத்தில்எல்லாவற்றையும் வைத்துக்கொள்வது, மூச்சுத் திணறல் மற்றும் அசௌகரியமாக உணர்கிறது,எனவே, பெரியவர்கள் அதிகம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது.பேச்சு முகத்தின் சுறுசுறுப்பான தசைகளுக்குப் பயிற்சி அளிக்கிறது, தொண்டைக்கு பயிற்சி அளிக்கிறது, நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது, கண்கள் மற்றும் காதுகளை சேதப்படுத்தும் தலைச்சுற்றல் மற்றும் காது கேளாமை போன்ற மறைந்திருக்கும் ஆபத்துகளைக் குறைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஓய்வு பெற்றவர், அதாவது மூத்த குடிமகன், அல்சைமர்நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, உங்களால் முடிந்தவரை பலருடன் பேசுவதும்சுறுசுறுப்பாகப் பழகுவதும்தான். இதற்கு வேறு பரிகாரம் இல்லை.
தடுக்கப்பட்ட கரோனரி தமனிகளைச் சுற்றிப் புதிய பாதையை உருவாக்குவதன் மூலம், ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இதயத் தசைக்குச் செல்வதை இந்த அறுவை சிகிச்சை உறுதி செய்கிறது.இது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, அது சீராக இயங்க உதவுகிறது.இதயத்துக்குப் போதுமான ரத்தம் கிடைக்காததால் ஏற்படும் மார்பு வலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை இந்த அறுவை சிகிச்சைத் திறம்பட நீக்குகிறது அல்லது கணிசமாகக் குறைக்கிறது.இது நோயாளியின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அதிக சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.தமனியில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை மீட்டெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க CABG உதவுகிறது.குறிப்பாக, பல தமனிகள் அடைக்கப்பட்டிருக்கும் கடுமையான கரோனரி தமனி நோய் உள்ளவர்களுக்கு இது உயிர் பிழைப்பதற்கான சாத்தியத்தை மேம்படுத்தலாம்.சிகிச்சை அளிக்காவிட்டால் ஏற்படும் கடுமையான சிக்கல்களைத் தவிர்ப்பதன் மூலம், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூத்த குடிமக்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது.அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான பராமரிப்பு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம், நோயாளிகள் பல ஆண்டுகளுக்கு அறிகுறிஇல்லாமல் ஒரு சாதாரண, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.சில சந்தர்ப்பங்களில், ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) போன்றஎதிர்கால நடைமுறைகளைத் தவிர்க்க இதய அறுவை சிகிச்சை உதவக்கூடும்.முக்கியக் குறிப்பு75 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்கள் மற்றும் மீட்புக் காலம் சற்றே அதிகமாக இருக்கும் என்றாலும், பொதுவாக அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவானது நோயாளியின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம், அடைப்புகளின் தீவிரம் மற்றும் இதயநோய் நிபுணரின் முழுமையான மதிப்பீட்டின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது.மேம்பட்ட அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் முந்தைய தீவிரக் கவனிப்பு ஆகியவை மூத்த குடிமக்களுக்குக்கூட அறுவை சிகிச்சையின் பலனை அதிகரிக்கிறது.எப்போதும் உங்கள் இதய அறுவை சிகிச்சை நிபுணர்அல்லதுமருத்துவரிடம்கலந்தாலோசித்து, அபாயங்கள் மற்றும் நன்மைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுப்பது மிக முக்கியம்.