25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


பழமொழி.

Nov 28, 2023

உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன்  இலை தேடுவான்

உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன்  இலை தேடுவான்.பொருள்: ஒருவனுக்கு தன் காரியம் வெற்றி பெற்று விட்டால் அதற்கு அடுத்தகட்ட காரியங்களை மேற்கொள்வான். அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான்.

Nov 21, 2023

ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல

ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல பொருள்: வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தாங்கள் அறிந்ததே உண்மை, தாங்கள் செய்வதே சரி என எண்ணுவர். 

Nov 14, 2023

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கலாமா?

விளக்கம்-: நாம் துன்பப்படும் வேளையில் ஒருவர் நமக்கு உதவி செய்தார் என்றால் உதவியை பெற்று நாம் வாழ்வில் முன்னேறியவுடன் நமக்கு உதவி செய்தவரையே பகைவராய்க் கருதி அவருக்கு துன்பம் இழைக்கலாமா கூடவே கூடாது .அவ்வாறு செய்வது பாவம் என்பதை இப் பழமொழி விளக்குகிறது.

Nov 07, 2023

ஊதாரிக்கு பொன்னும் துரும்பு

ஊதாரிக்கு பொன்னும் துரும்பு பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய செல்வமும் சிறு துரும்பாகவே தெரியும்.

Oct 31, 2023

கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்

கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் பொருள்: தனது திறமையின்மையை மறைக்க ,பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள். 

Oct 24, 2023

.தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு

 .தழைத்த மரத்திற்கு நிழல் உண்டுபொருள்: பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்சேர இருந்தால் செடியும் பகை பொருள்: எப்போதும் பிறருடன் அளவாக பழக வேண்டும். யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

Oct 17, 2023

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது

பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது. 

Oct 10, 2023

செக்கை வளைய வரும் எருதுகள் போல ...

செக்கை வளைய வரும் எருதுகள் போல பொருள்: செக்கு மாடுஒரே மாதிரி வளைந்து செல்கிறதோ,அதே போல எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் ,ஒரே மாதிரியான செயல்களை செய்பவர்களை குறிப்பதே இந்த பழமொழி.

Oct 03, 2023

இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை

.இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லைபொருள்: பிறருக்கு தான தர்மங்களை வழங்கி அழிந்தவருமில்லை, அவற்றை வழங்காமல் வாழ்ந்தவருமில்லை.

Sep 26, 2023

அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்

அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம் பொருள்: குணத்தால் தீயவர்களாக இருப்பவர்கள் வெளிப்புறத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதை உணர்த்துகிறது.

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News