25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பழமொழி.

Oct 31, 2023

கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்

கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் பொருள்: தனது திறமையின்மையை மறைக்க ,பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள். 

Oct 24, 2023

.தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு

 .தழைத்த மரத்திற்கு நிழல் உண்டுபொருள்: பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்சேர இருந்தால் செடியும் பகை பொருள்: எப்போதும் பிறருடன் அளவாக பழக வேண்டும். யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

Oct 17, 2023

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது

பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது. 

Oct 10, 2023

செக்கை வளைய வரும் எருதுகள் போல ...

செக்கை வளைய வரும் எருதுகள் போல பொருள்: செக்கு மாடுஒரே மாதிரி வளைந்து செல்கிறதோ,அதே போல எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் ,ஒரே மாதிரியான செயல்களை செய்பவர்களை குறிப்பதே இந்த பழமொழி.

Oct 03, 2023

இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை

.இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லைபொருள்: பிறருக்கு தான தர்மங்களை வழங்கி அழிந்தவருமில்லை, அவற்றை வழங்காமல் வாழ்ந்தவருமில்லை.

Sep 26, 2023

அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்

அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம் பொருள்: குணத்தால் தீயவர்களாக இருப்பவர்கள் வெளிப்புறத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதை உணர்த்துகிறது.

Sep 19, 2023

அப்பன் அருமை செத்தால் தெரியும்

அப்பன் அருமை செத்தால் தெரியும்பொருள்: ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் இறந்த பின்பு அக் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அது போல ஒரு விஷயத்தை நாம் இழக்கும்  வரை  அதன் அருமையை நாம் அறிவதில்லை.

Sep 12, 2023

.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்

.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும் பொருள்:: வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்தால் அவை‘வைக்கோல் போர்’ என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றி முழுமையாக எறிந்துவிடும்.

Sep 05, 2023

.இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லை

.இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லைபொருள்: ஒரு விடயத்தை பற்றி நன்கு அறியாமல் ,அது இப்படி தான் என்று முன் கூட்டியே, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவது தவறு.

Aug 29, 2023

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான்

 "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்" என்பதே சரி. ஏழை ஒருவன் பணக்காரன் ஆகும்போது, அவரிடம் யாரேனும் பண உதவிகேட்டு நள்ளிரவில் வந்தாலும் அவர்களுக்கு அவன் உதவி செய்வான்

1 2 ... 9 10 11 12 13 14 15 16 17 18

AD's



More News