'விலங்கு' வெப்சீரிஸ் தந்த வரவேற்பால் கதை தேர்வு விஷயத்தில் கவன முடன் இருந்து வருகிறார் நடிகர் விமல். தற்போது தேசிங்கு ராஜா 2, பரமசி வன்பாத்திமா ஆகியபடங் களில் நடித்து வருகிறார். அடுத்து மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் பட புகழ் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான 'ஜென்.இ.மேன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க போகிறார். சிதம்பரத்தின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்க போகிறார்.
அன்பு இயக்க, இளையராஜா இசையமைத்துள்ள, மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் 'படை தலைவன்'. முக்கிய வேடத் தில் கஸ்தூரி ராஜா, எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளனர். ஏஐ., தொழில்நுட்பம் மூலம் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த்தை இப்படத்தில் கொண்டு வந்துள்ளனர். யானையை பின்புலமாக வைத்து இந்த கதை உருவாகி உள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது மே 23ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள, மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். இசையமைப்பில் உருவான'தக்லைப்'. படம் ஜூன் 5ல் ரிலீசாகிறது. இதன் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியிட்டனர். 24 மணிநேரத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற டிரைலர் தமிழில் 18.8 மில்லியன் பார்வைகளும், ஹிந்தியில் 3 மில்லியன் பார்வைகளும், தெலுங்கில் 3.8 பார்வைகளும் பெற்றுள்ளது. கமல் இதற்கு முன் நடித்த 'விக்ரம்' படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்த நிலையில் அதனை தக்லைப் முறியடித்துள்ளது.
சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்து அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியானபடம் 'டூரிஸ்ட் பேமிலி'. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று 16 நாட்களில் 63 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்தை மே 24ல் ஜப்பான் மொழியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படம் ஜப்பான் மொழியில் ரிலீசாகி வரவேற்பை பெற்றதுபோல், 'டூரிஸ்ட் பேமிலி' படமும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கின்றனர்.
மே 23ல் 7 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிய இன்னும் பத்து நாட்களே உள்ளது. விஜய் சேதுபதியின் 'ஏஸ்', சண்முகபாண்டியனின் 'படை தலைவன் 'ஆகியவற்றுடன் "அக மொழி விழிகள், ஆகக் கடவன, மையல்,திருப்பூர் குருவி, ஸ்கூல்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன.
மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக அல்லு அர்ஜுன், அட்லி இணைய உள்ள பிரமாண்ட படத்தில் ஏற்கனவே தகவல் வெளி யானது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் பேச்சு நடந்த நிலையில், கால்ஷீட் பிரச்னையால் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் முதல் நாயகியாக 'சீதா ராமம், ஹாய் நானா' படத் தில் நடித்த மிருணாள் தாகூரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். 2வது நாயகியாக விரைவில் ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்.
தமிழில் விருமன், மாவீரன் போன்ற படங்களில் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்தார். தற்போது தெலுங்கில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் ஜோடியாக பைரவம் என்ற படத்தில் நடித்து, அங்கு நாயகியாக அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்க, மே 30ல் படம் ளிலீஸாகிறது. அதிதி கூறுகையில், "விருமன் படத்தை பார்த்து இப்பட இயக்குனர் விஜய் இந்த வேடத் திற்கு நான் சரியாக இருப்பேன் என வாய்ப்பு வழங்கினார். தெலுங்கில் நடிப்பது கஷ்டம் என நினைத்தேன். ஆனால் நடிக்கும்போது அப்படி தோன்றவில்லை. சின்ன வயதில் அப்பாவுடன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு வந்துள்ளேன். ஆனால் என் படத்தின் படப்பிடிப்புக்கும் அங்கு வருவேன் என நினைத்து கூட பார்க்க வில்லை, கனவு போல் உள்ளது" என்றார்.
சூரி கதை யின் நாயகனாக நடித் துள்ள படம் ,பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “மாமன்.” அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். மே 16ல் படம் வெளியாகும் நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது. 3 நிமிடம் ஓடும் டிரைலரில் குடும்ப உறவுகளுக்குஇடையே நடக்கும் மோதல்கள், பாசப் போராட்டம்ஆகியவற்றுடன் அக்கா மகன், தாய் மாமன் பந்தத்தை முதன்மையாக கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.'மாமன்' படம் மே 16ல் ரிலீஸாகிறது. 'மாமன்' பட கதையை சூரி எழுதி யுள்ளார். இவர் கூறுகையில் "கதையை நான் எழுதியிருந்தாலும் எனது பெயர் வர வேண்டாம் என இயக்குந ரிடம் சொன்னேன். ஆனாலும் பெயரை போட்டு விட்டார். நான் இங்கு நிற்க என் குடும்பம் தான் காரணம். என் குடும்பம் தான் எனக்கு சாமி. இந்த கதை அங்கிருந்து தான் உருவானது. சின்ன பையனுக்கும், அவனது தாய் மாமனுக்கும் இடையேயான உறவே கதை. படத்தில் சின்ன பையனாக நடித்தவர் இயக்குனரின் மகன் என்றார்.
இயக்குனர் லெனின் பாரதியிடம் இணை இயக்குன ராக இருந்தவர் ராஜ்மோகன். இவர் யோகிபாபுவை வைத்துபுதிய படம் இயக்குகிறார். அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார். படம் பற்றி ராஜ்மோகன்கூறுகையில் . உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டு "இரும் புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலும் தான் இப்படம்..
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த என்.டி.ஆரின் மகன்களான பாலகிருஷ்ணா (பாலய்யா), ஹரிகிருஷ்ணா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள். இதில் ஹரிகிருஷ்ணாவின் மகன்களான ஜானகிராம், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரும் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஜானகிராமின் மகன் தாரக ராமராவும் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். ஒய்.வி.எஸ்.சவுத்ரி தயாரித்து, இயக்கும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குச்சிப்புடி நடன கலைஞர் வீணா ராவ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி 'கிளாப்' அடித்து தொடங்கி வைத்தார்.என்.டி.ஆரின் மகளுமான புரந்தரேசுவரி கூறும்போது, சினிமா உள்ளவரை என். டி.ஆரின் புகழ் மறையாது. தற்போது அவரது குடும்பத்தில் இருந்து 4-ம் தலைமுறையாகவும் நடிக்க வந்துவிட்டார். என்.டி.ஆரின் ரசிகர்கள் அவரை பார்த்துகொள்வார்கள்" என்றார்.