பிரபாஸ் நடிப்பில் 'சலார் 2' படத்தை இயக்குவதாகவும், 2026ல் ரிலீஸ் என்றும் 'கேஜிஎப், படங்களை சலார்' இயக்கிய பிரசாந்த் நீல், அறிவித்தனர்.ஆனால் ஜூனியர் என்.டி.ஆர்., நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் பிரசாந்த் நீல். பிரபாஸ் மற்ற படங்களில் நடித்து வருவதால் ஜூனியர் என்.டி.ஆர்., படத்தை துவக்கி உள்ளார். இதனால் 'சலார் 2 படப்பிடிப்பும், வெளியீடும் தள்ளிப்போகிறது.
ஹிந்தி படங்களில் நடித்து வரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர். ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது ராம்சரணின் 'பெத்தி' படத்தில் நடிக்கிறார். தமிழில் ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தமிழிலும் அறிமுகமாவார்.
தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக இருந்து, 'ஒரு கிடாயின் கருணை மனு, லவ் டுடே, மாமன்னன்' படங்கள் மூலம் நடிகையாக மாறியவர் ரவீணா ரவி. தற்போது மலையாளத்தில் ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ள 'ஆசாதி' என்ற படத்தில் வாய் பேசாத சிறை கைதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுப்பற்றி ரவீணா கூறுகையில் "இந்த படத்தில் முதலில் என்னுடைய கதாபாத்திரம் பேசும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் என் மீது இரக்கம் வரவேண்டும் என்பதற்காக வாய் பேசாத மற்றும் கர்ப்பிணி கதாபாத்திரமாக மாற்றினர். வாணி விஸ்வநாத் போன்ற சீனியர் நடிகருடன் எப்படி நடிக்க போகிறேன் என பயந்த நிலையில் பேசாமலேயே நடிக்க வைத்ததால் தப்பித்தேன்" என்றார்.
பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், தமிழில் 'சாது, ஆளவந்தான்' என இரு படங் களில் மட்டுமே நடித்தார். ஜோஷுவா சேது ராமன் இயக்கும் 'லாயர்' என்ற படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். நீதிமன்றம் தொடர்பான கதை யில் உருவாகும் இப்படத்தில் இன்னொரு வக்கீல் வேடத்தில் ரவீனா நடித்து, 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்தில் நடித்துள்ளார் விக்ரம் மகன் துருவ். தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. அடுத்தபடியாக ஹிந்தியில் 2023ல் வெளியான 'கில்' படத்தின் தமிழ் ரீ மேக்கில் இவரை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. நிகில் நாகேஷ் பட் இயக்கிய 'கில்' படத்தில் லஸ்யா லால்வாணி, தன்யா மணித்லா ஆகி யோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக வெளியானது.
8 தோட்டாக்கள், ஜீவி' போன்ற படங்களில் நடித்தவர் வெற்றி. தற்போது 'வெப், 7ஜி' படங்களை இயக்கிய ஹாரூன் இயக்கத்தில் நடிக்க ,இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை அக்ஷிதா நடிக்கிறார். இயக்குனர் ஹாரூன் "இப்படத்தில் வெற்றி போலீஸ் அதிகாரியாக, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிக சஸ்பென்ஸ்கள் கொண்ட கதையாக உருவாக்கியுள்ளோம்" என்றார்.
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார்.அவரது50வது பிறந்தநாள் ஜூலை12ல் வருகிறது.தமிழ் இலக்கியத்திற்கும், திரையிசை பாடல்களுக்கும் இவர் ஆற்றிய பங்களிப்பை கொண் டாடும் விதமாக சென்னை, ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜூலை5ல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இயக்குனர்கள் ஆர்.வி., உதயகுமார், செல்வ மணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர், தேசிய, மாநில விருதுகளும் வென்றுள்ளார்.
பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா உலகளவில் பிரபலமானது. இந்தாண்டுக்கான விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தாண்டு வெள்ளை நிறத்தில் அழகிய வேலைப்பாடுகள் உடன் கூடிய பனராஸ் புடவையை அணிந்து வந்ததோடு, நெற்றி வகிட்டில் குங்குமத்தை (சிந்துார்) திலகமிட்டு சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றார். இதேபோல் நடிகை அதிதி ராவ்வும் சிவப்பு நிற புடவையில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை திலகமிட்டு பங்கேற்றார். சமீபத்தில் பாகிஸ்தானில் பயங்கர வாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அதிரடி ஆப்பரேஷன் 'சிந்துாரை' பிரதிபலிக்கும் விதமாக இவர்கள் இப்படி திலகமிட்டு பங்கேற்றதாக சொல்கிறார்கள் .
சேகர் கம்முலாஇயக்கத்தில்தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகாநடிப்பில்ஜூன் 20ல்வெளியாகும்படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கு, கன்ன டம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இதன் டீசர் 'டிரான்ஸ் ஆப் குபேரா' என்ற பெய ரில் வெளியாகி உள்ளது. என்ன மாதிரியானகதைஎன்பதையூகிக்கமுடியாதசூழலில்டீசர்உள்ளது. 24 மணிநேரத்தில்தமிழ்டீசர் 28.5 லட்சம்பார்வைகளையும், தெலுங்கு டீசர் 33.25 லட்சம் பார்வைகளையும் கடந்தது.
சூரி, ஐஸ்வர்யலட்சுமி நடிப்பில் ,பிரசாந்த் பாண்டி ராஜ் இயக்கத்தில், வெளியான குடும்ப படம் 'மாமன்'. 25 கோடிக்கு மேல் வசூலித்து லாபக்கணக்கில் சேர்ந்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு சூரி "உண்மையான வெற்றி உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் மனதார மதிப்பு கொடுப்பதில் தான் ஆரம்பமாகிறது நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த நம்பிக்கையோட மாமன் கதையை துவங்கினேன். மாமன் என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கை யிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஒரு உணர்வுப்பூர்வ மான பயணம். உங்கள் அன்பும், ஆதரவுமே எனக்கு உண்மையான மகிழ்ச்சி.என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.