இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் நகைச்சுவைப் படங்களில் ஒன்றான, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடித்த பரம் சுந்தரி, ஆகஸ்ட்29 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. துஷார் ஜலோட்டா இயக்கிய இந்தப் படம், சீரான தொடக்கத்தைக் கொண்டிருந்தது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் தொழில் கண்காணிப்பாளர் சக்னில்க் கருத்துப்படி, பரம் சுந்தரி முதல் நாளில் ரூ.7.25 கோடி வசூலித்து, நல்ல தொடக்கத்தை அளித்தது. சனிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணிசமாக மேம்பட்டது, படம் ரூ.9.25 கோடி வசூலித்தது, ஞாயிற்றுக்கிழமையும் இந்த உயர்வு தொடர்ந்தது, ரூ.10.45 கோடியை ஈட்டியது, இது இதுவரையிலான ஒரே நாளில் அதன் சிறந்த வசூலைக் குறிக்கிறது.இந்த வார இறுதி வசூல், பரம் சுந்தரியின் மொத்த உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலை அதன் முதல் வார இறுதிக்குப் பிறகு ரூ.26.75 கோடியாகக் கொண்டு வந்ததுபரம் சுந்தரி திரைப்படம் ஒட்டுமொத்தமாக20.71 சதவீத ஹிந்தி திரைப்பட ஆக்கிரமிப்பை பதிவு செய்தது. மாலை காட்சிகள் சிறப்பாக செயல்பட்டன, கிட்டத்தட்ட30 சதவீத திரையரங்க இருக்கைகள் நிரம்பியிருந்தன, காலை காட்சிகள் சுமார்10 சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்தன. இரவு காட்சிகள் சற்று குறைந்து18.39 சதவீத ஆக்கிரமிப்பை பதிவு செய்தன.. சென்னை, ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலும் படத்திற்கு நல்ல பார்வையாளர்கள் வருகை பதிவாகியுள்ளது.பரம் சுந்தரி என்பது ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த கவலையற்ற டெல்லி சிறுவன் பரம்(சித்தார்த் மல்ஹோத்ரா) பற்றிய ஒரு படம், அவர் தனது தந்தையின் பணத்தை புதிய யுக தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்கிறார். 'சோல்மேட்ஸ்' என்ற AI- இயங்கும் திருமணப் பொருத்த செயலியை முயற்சிக்கும்போது, அவர் தனது மாமாவுடன் தனது மூதாதையர் இல்லத்தை நடத்தும் கேரளாவைச் சேர்ந்த தென்னிந்தியப் பெண்ணான சுந்தரி(ஜான்வி கபூர்) உடன் ஜோடி சேருகிறார்.இந்தப் படம் பரமின் நவீன, நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கும் சுந்தரியின் வேரூன்றிய, பாரம்பரியம் நிறைந்த உலகத்திற்கும் இடையிலான மோதலைக் காட்டுகிறது. பரம் சுந்தரி இந்த ஆண்டின் மிகப்பெரிய காதல் பொழுதுபோக்கு படமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டியை எதிர்கொண்டது.
சூரி நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் அவர் ஹோட்டல் நடத்துகிறார். இந்நிலையில் சூரி புதிதாக ஸ்வீட்ஸ் கடையை திறந்து இருக்கிறார். சூரி மற்றும் அவருடன் பிறந்த TWIN சகோதரர் லக்ஷ்மணன் இருவரும் விநாயகர் சதுர்த்தி மற்றும் பிறந்தநாள் என இரண்டும் ஒரே நாளில் வந்த நிலையில் புது தொழிலை அந்த நாளில் தொடங்கி இருக்கின்றனர். .
இயக்குனர் சிதம்பரம் கடந்தாண்டு வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற வெற்றி படத்தை தந்தவர்.. அடுத்த படம் பற்றிய எந்த தகவலும் இல்லை. இப்போது, அம்மா, மகன் சம்பந்தப்பட்ட கதையாக 'பாலன்' எனும் படத்தை ஜீத்து மாதவன் இதற்கு கதை எழுத ,தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார்.
விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் ரவி அரசு இயக்கத்தில் படம் 'மகுடம் ". விஷாலின் 35வது படமான இதில், அவர் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். அவற்றின் முதல் பார்வையை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. ஒன்றில் வயதான தோற்றத்திலும், இரண்டில் இளமையான தோற்றத்தில் விஷால்..
புதிய படத்துக்கு 'ஒர்க்கர்' என தலைப்பு வைக்கப்பட்டு ஜெய், யோகி பாபு நடிக்கும் 'உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதையில் இது உருவாகிறது' என்கிறார் இயக்குனர் வினய் கிருஷ்ணா. இந்த படத்தின் மூலம் கன்னட நடிகை ரீஷ்மா நனையா ஹீரோயினாக அறிமுகம் ஆகி, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி நடித்துள்ள படம் மு.மாறன் இயக்கத்தில். 'பிளாக்மெயில்' ,ஆக., 1ல்ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு 'தள்ளிப்போனது. பின்னர் ஆக., 22ல் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தன. இப்போது செப்., 12ல் ரிலீஸ் என புதிய தேதியை அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் செப்., 5ல் வெளியாகிறது. இப்படத்திற்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்று வழங்கப்பட்டுள்ளது. படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள். சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டரை மணி வருவது அதிகமாகி உள்ளது. இது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.
அதர்வா, லாவண்யா திரிபாதி, அஷ்வின் காக்மானு நடித்துள்ள படம் ரவீந்திர மாதவா இயக்கத்தில் 'தணல்'.ஆக., 29ல் படம் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் வெளியாகவில்லை. இப்போது படத்தின் டிரைலரை வெளியிட்டு அதன் உடன் வரும் செப்., 12ல் ரிலீஸ் என புதிய தேதியை அறிவித்துள்ளனர். .
சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்த வீட்டை பெரிய தொகை தந்து விலைக்கு வாங்கி, இடித்து, ஸ்டுடியோ வடிவில் நயன்தாரா போயஸ் கார்டனில் 7,000 சதுர அடியில் ரூ.100 கோடியில், வீட்டை கட்டி முடித்துவிட்டார்.. 3 தளங்களில் கட்டியிருக்கிறார், சினிமாவை மிஞ்சும் வகையில் தோட்டம் அருங்காட்சியகம் போன்று பழங்கால தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்புடன் காட்சி தருகிறதாம் நயன் வீடு, 3 தள வீட்டில், முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு தனி அறை என கண்களை சுவரும் கனவு இல்லமாக கட்டியிருக்கிறாராம். இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன,
விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி நடிக்கும், ரவி அரசு இயக்கத்தில், புதிய படத்திற்கு 'மகுடம்' என பெயரிட்டுள்ளனர். விஷாலின் 35வது படமான இது கடல் சார்ந்த ஒரு ஆக்ஷன் படமாக உருவாகிறது.1992ல் பிரதாப் போத்தன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் ஏற்கனவே 'மகுடம்' படம் வெளியாகி உள்ளது.