கர்நாடக அரசு ஆண்டு தோறும் கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கி வருகிறது. 2025ம் ஆண் டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள் ளது. இதில் கலை உலகைச் சேர்ந்த மறைந்த நடிகை சரோஜாதேவி, நடிகர் விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 90வது பிறந்தநாளை கொண்டாடிய ,பழம் பெரும் நடிகை எம். என்.ராஜம் 200 படங்கள் வரை நடித்த அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்., 21ல் சென்னையில் நடக்கும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இவ்விருது வழங்கப் பட இருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு இசையமைப்பாளர் இளைய ராஜா, மகன் கார்த்திக் ராஜா ,பேரன் யத்தீஸ்வர் உடன் சென்றார். அங்கு மூகாம்பிகைக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ் ,வீரபத்திர சுவாமிக்கு தங்க வாளை காணிக்கையாக வழங்கினார். இவற்றின் மதிப்பு பல கோடி. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெய்வங்களுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.
மும்பையில் உள்ள தங்களது 17.5 கோடி மதிப்பிலான அம்பார்ட்மெண்டை நடிகர் மாதவன் - சரிதா தம்பதி, வாடகைக்கு விட்டு, மாதம் ரூ. 6.50 லட்சம் வாடகை பெறுகின்றனர் - 2 ஆண்டுகளில் அவர்கள் ரூ.1.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர் - மாதவன் மும்பையில் இருந்து துபாய்க்கு இடம்பெயர்ந்ததுள்ளனர்.
பாபி தியோல், சான்யா மல்கோத்ரா நடித்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஹிந்தி படம் 'பாந்தர்' (மங்கி இன் ஏ கேஜ்). உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் புகழ்பெற்ற கனடாவின், டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. செப்., 4 முதல் 14 வரை நடக்கும் இந்த விழாவில் உலகம் முழுக்க இருந்து பல்வேறு திரைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் தக் லைப் படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது. எனது அடுத்தபடம் இளம் நடிகர்களை வைத்து காதல் கதையில் உருவாகும் என மணிரத்னம் கூறி வந்தார். இப்போது இந்த படத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ், நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க நவம்பரில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.
வெறும் ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி 100 கோடி வசூலித்தது. ஹாரர் கலந்த காமெடி கன்னட படமான இதனை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். கன்னடத்தில் இயக்குனரும், நடிகருமான ராஜ் பி ஷெட்டி நடித்து, ஜேபி துமினாடு இயக்கிய படம் 'சூப்ரம் சோ'. இதில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
கவின், பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள, நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கி உள்ள முதல் படம் 'கிஸ்'. காதல் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் செப்., 19ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.
நடிகர்கள் சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா பதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜி. அசோக் இயக்கத்தில் படம் 'உப் யே சியாபா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள் ளார். இப்படத்தில் எந்தவொரு வசனமும் இல்லையாம். படம் பற்றி ரஹ்மான் கூறுகையில், "இசையே இப்படக் கதையின் ஒரு பகுதி. புதிய பாணிகளை பரிசோதிப்பதை ரசித்தேன். நகைச்சுவை, திரில்லர் வகை படமாக இது இருந்தது " என்றார்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தமைக் காகவும். சிம்பொனி இசைக்காகவும் இசையமைப்பாளர் இளைய ராஜா அவருக்கு பாராட்டு விழா ஜூன் 2ல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது அந்த விழா தள்ளி வைக்கப்பட்டு. செப்., 13ல் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் உள்ள பிரபல நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர்.