25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Nov 25, 2025

இத்தாலி அணி டேவிஸ் கோப்பை டென்னிசில் சாம்பியன் .

டேவிஸ் கோப்பை டென்னிஸ் 113வது சீசனுக்கானஇத்தாலியில்,  'நாக்-அவுட் சுற்று நடந்தது. இதன் பைனலில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதின. இத்தாலியின் மேட்டியோ பொரேட்டினி - 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில்,  ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில், ஸ்பெயினின் பாப்லோ கரெனோ புஸ்டாவை வீழ்த்தினார். இத்தாலியின் பிளாவியோ கோபோலி 1-6, 7-6, 7-5 என்ற கணக்கில்இரண்டாவது போட்டியில், ஸ்பெயினின் ஜாம்முனாவை தோற்கடித்தார்.  இத்தாலி  அணி முடிவில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறை, ஒட்டுமொத்தமாக 4வது முறையாக (1976, 2023-25) சாம்பியன் பட்டத்தை வென்றது.

Nov 25, 2025

மதுரை வந்த ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 9 அணி வீரர்கள் !

 மதுரையில் நவ. 28 ல் நடக்க உள்ள, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்பதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மதுரை வந்தனர். மதுரை விமான நிலையம் நேற்று (நவ.24) இங்கிலாந்து, நெதர்லாந்து, நமீபியா, தென்னாப்பிரிக்கா ஹாக்கி அணியினர்.எஸ்.டி.ஏ.டி., மாவட்ட நிர்வாகம், ஹாக்கி சங்கங்கள் சார்பில் வெளிநாட்டு வீரர்களுக்கு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுவரை அயர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, கனடா, எகிப்து உட்பட 9 நாடுகளைச் சேர்ந்தஅணியினர் மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். நவ. 27 வரை பயிற்சி ஆட்டம் நடைபெறும்.நவம்பர் 28 காலை 9:00 மணிக்கு நடக்கும்முதல் போட்டியில் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதால் பாதுகாப்பு கருதி  ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் போலீசாரின் பாதுகாப்புவளையத்திற்குள் கொண்டு வரப்படும்.

Nov 25, 2025

இந்தியா பெண்கள் கபடி உலக கோப்பையில் ,மீண்டும் சாம்பியன் !

பெண்களுக்கான கபடி உலக கோப்பை 2வது சீசன் வங்கதேச தலைநகர்தாகாவில்,'நடப்புசாம்பியன்' இந்தியா, நேபாளம், போலந்து உள்ளிட்ட 10 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. இந்தியா லீக் சுற்றில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி, உகாண்டாவை  வீழ்த்தி, அரையிறுதியில் ஈரானை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் சீனதைபே அணி, வங்கதேசத்தை வென்றது. நேற்று நடந்த பைனலில்  இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் இந்திய அணி 20-16,. ஆட்டநேர முடிவில் 25-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2012, 2025) சாம்பியன் பட்டத்தை வென்றது. 

Nov 25, 2025

இந்திய வீராங்கனை 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில் பிரஞ்சலி (25 மீ.,  'பிஸ்டல்') பிரிவில் தங்கம் வென்றார்.

. காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன்ஜப்பான் தலைநகர்  டோக்கியோவில்பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் பிரஞ்சலி பிரஷாந்த் துமால் (573.14 புள்ளி),  அனுயா பிரசாத் (569.15)  முதலிரண்டு இடம் பிடித்தனர். பைனலில் பிரஞ்சலி, 34 புள்ளி களுடன் முதலிடம் பிடித்துதங்கத்தை தட்டிச் சென்றார். பிரஞ்சலி கைப்பற்றிய 3வது பதக்கம். கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் சகவீரர்அபினவ் தேஷ்வாலுடன் இணைந்து தங்கம் வென்ற இவர், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் வெள்ளி கைப்பற்றினார்.  தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்ற அனுயா, 23 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். இம்முறை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்து உள்ளன. 

Nov 24, 2025

ஜூனியர் உலகக் கோப்பை சர்வதேச ஹாக்கியை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாகமாற்ற ஆக்கி போட்டிக்கு டிக்கெட் இலவசம் !

சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி(21 வயதுக்குட்பட்டோர்)நடக்கிறது. இதில்இந்தியா,ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், அர்ஜென்டினா உள்பட 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி 28-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சிலியை எதிர்கொள்கிறது.தமிழ்நாட்டில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை பார்க்க டிக்கெட்டுகள் இலவசம் என ஹாக்கி  இந்தியா அறிவித்துள்ளது. www.ticketgenie.inஎன்ற இணையத் தளத்திலோ அல்லது ஆக்கி இந்தியாவின் அதிகாரபூர்வ செயலியிலோபதிவு செய்து டிஜிட்டல் டிக்கெட்டுகளை பெற்று போட்டியை நேரில் பார்க்கலாம்.ஒரு நபருக்கு 4 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், 'இலவச டிக் கெட்டுகளை வழங்குவதன் மூலம் தமிழகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மாணவ,மாணவிகள், இளம் விளையாட்டு வீரர்கள், அவரது குடும்பத்தினர், ஆக்கி பிரியர்களுக்கு போட்டியை நேரில் பார்ப்பதற்கான கதவினை திறப்பதே எங்களது இலக்கு. சர்வதேச ஹாக்கி யை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம்' என்றார்.

Nov 24, 2025

சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக, புதிய கேப்டன் ராகுல் .

 சுப்மன் கில்கழுத்து வலி காரணமாக, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி பங்கேற்கிறது.  ராஞ்சியில் முதல் போட்டி வரும் நவ. 30ல் நடக் கவுள்ளது. ராய்பூர் (டிச.3),விசாகப்பட்டனத்தில் (டிச. 6) மீதமுள்ள போட்டிகள் ராய்பூரில் நடக்கவுள்ளன. 15 பேர் கொண்ட இந்திய அணி இத் தொடருக்கு அறிவிக்கப்பட்டனர்.

Nov 24, 2025

இந்தியாவின் லக்சயாசென்  ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் சிட்னியில், 'சூப்பர் 500' தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லக்சயா சென் 24, ஜப்பானின் யூஷி டனாகா 26, மோதினர். முதல் செட்டை 21-15 ,2வது செட்டை 21-11 என  லக்சயா கைப்பற்றி, நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். நடப்பு ஆண்டில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றி, சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்தியரானார். கடினமாக பயிற்சி மேற்கொண்டு நடப்பு சீசனில் முதல் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி," என்றார் லக்சயா சென்.சமீபத்தில் முடிந்த யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி கோப்பை வென்றிருந்தார்

Nov 24, 2025

பெண்களுக்கான பார்வையற்றோர் 'டி-20' கிரிக்கெட்டில், இந்தியா 'உலக சாம்பியன்'

 பெண்களுக்கான'டி-20' உலககோப்பைஇந்தியா,இலங்கையில், பார்வையற்றோர்முதல்சீசன்நடந்தது.இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன.இலங்கை தலைநகர் கொழும்புவில்நேற்று,  நடந்த பைனலில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தீபிகா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.நேபாள அணிக்கு பிமலா ராய் (26), சரிதாகிமிரே (35) ஆறுதல் தந்தனர். நேபாள அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்தது. இந்திய அணி 12.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது.இந்திய அணி இத்தொடரில் 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஐந்து லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, பைனலில் நேபாளத்தை அரையிறுதியில் வென்றது.

Nov 22, 2025

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் லக்சயா சென்.

'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட் மின்டன் தொடர் சிட்னியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சக வீரர் ஆயுஷ் ஷெட்டி பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட் 19–19, 21–21 என இழுபறியாக இருந் தது. பின் லக்சயா 23-21 என வென்றார்.இரண்டாவது  செட்டை 21-11 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் லக்சயா 23-21, 21-11 என நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு நுழைந்தார். ஆண்கள் இரட்டை யர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந் தியாவின் சாத்விக்சாய்  ராஜ், சிராக் ஷேட்டிஜோடி, இந்தோனேஷியா வின் பிக்ரி, அல்பியான் ஜோடியை சந்தித்தது.இந்திய ஜோடி 19-21, இந்திய 15-21 என தோல்வியடைந்தது. 

Nov 22, 2025

அயர்லாந்து நாட்டு ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை விமான நிலையம்  வந்த வீரர்கள் மதுரையின் வரவேற்பை வியந்து ரசித்தனர்.

நேற்று அயர்லாந்து நாட்டு அணியினர், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ., 28ல் துவங்க உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக, மதுரை விமான நிலையம்  வந்தனர்.. மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிரவீன்குமார், விமான நிலையத்தில் வரவேற்றார்.  வீரர்கள், அணியைச் சேர்ந்தவர்களுக்கு துாத்துக்குடியின் பெருமை சொல்லும் வகையில் சங்குபாசியும் வரவேற்கும் முகமாக சந்தனமாலையும் அணிவித்தார். தொடர்ந்து பரி வட்டத் துண்டை அணிவித்து கவுரவித்தார். மகளிர் சுயஉதவிக்குழுவினரின் ஆர்கானிக் சோப்பு உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம், போட்டிக்கான லோகோவை வீரர்களுக்கு வழங்கினார்.விமான நிலைய வாசலில் பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், கரகாட்ட குழுவினர் காத்திருந்தனர். வீரர்கள் வெளியே வந்ததும்,  தாரை தப்பட்டை முழங்க, பாரம்பரிய ஆட்டத்துடன் வீரர்களை வரவேற்றனர். உற்சாகமடைந்த வீரர்கள், சந்தோஷத்துடன் கூடவே நடனமாடி ,தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். .மதுரையின்வரவேற்பை வியந்து ரசித்தனர்

1 2 ... 70 71 72 73 74 75 76 ... 158 159

AD's



More News