கிளாசிக் செஸ் தொடர் லண்டனில், நடக்கிறது. மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் பிரக்ஞானந்தா, 4வது சுற்றில் சக வீரர் பிரனவ் ஆனந்தை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் போட்டியை டிரா' செய்தார். அடுத்து நடந்த 5வது சுற்றில் பிரக்ஞானந்தா ஹங்கேரியின் தாமஸ் ஜூனியர் போடோரை சந்தித்தார். இப்போட்டி 21வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.மற்றொரு 5வது சுற்றில் இந்தியாவின் பிரனவ் ஆனந்த் ,45வது நகர்த்தலில் ரஷ்யாவின் டேனியல் யூபாவை வென்றார். இந்தியாவின் இனியன் 49வது நகர்த்தலில் இங்கிலாந்தின் ஜோனா பி வில்லோவை வென்றார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் பிரனவ் ஆனந்த், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.பிரக்ஞானந்தா, இனியன் உள்ளிட்டோர் தல 4.0 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளனர்.
19வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நேற்று, நடந்த 'ஈ' பிரிவுலீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. இதில் கோல் மழைபொழிந்த இங்கிலாந்து 13-0 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு 'ஈ' பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, மலேசியா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய நெதர்லாந்து, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. 'டி' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 2-0 என வென்றது.மற்றொரு 'டி' பிரிவு போட்டியில் நமீபியா அணி 4-2 என, எகிப்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. சென்னையில்உள்ளமேயர்ராதாகிருஷ்ணன்ஹாக்கிமைதானத்தில்நேற்று, நடந்த 'சி' பிரிவுலீக்போட்டியில்நியூசிலாந்து, அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 3-3 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான், சீனா அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றி பெற்றது.'எப்' பிரிவு போட்டியில் தென் கொரியா, வங்கதேசம் அணிகள்'எப்' பிரிவு போட்டியில் மோதின. ஆட்டநேர முடிவில்போட்டி 3-3 என 'டிரா' ஆனது, மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி 8-3 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன்சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சிலி அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, ஓமன் அணிகள் மோதின. இதில் சுவிட்சர்லாந்து அணி 4-0 என வெற்றி பெற்றது. அர்ஜென்டினா ஜப்பான் அணிகள்'சி' பிரிவு லீக் போட்டியில் மோதின. இதில் அர்ஜென்டினாஅணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து, சீனா அணிகள் மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் மோதி, நியூசிலாந்து அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
சர்வதேச தரத்திலான ஹாக்கி தொடர் முதல் முறையாக மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.முதல் போட்டியில் ( 'ஏ ' பிரிவு) 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, தென் ஆப்ரிக்க அணியை, 4-0 என வெற்றி பெற்றது. டி' பிரிவில் பெல்ஜியம், நமீபியா அணிகள் மோதி, பெல்ஜியம் அணி 12-1 என்ற கோல் கணக்கில் வென்றது. 'டி' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணி 8-0 என எகிப்தை வென்றது. ஏ' பிரிவில் கனடா, அயர்லாந்து அணிகள் மோதின. முடிவில் அயர்லாந்து 4-3 என வெற்றி பெற்றது.
சையது மோடி சர்வதேச 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் லக்னோவில்,ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.இதில் ஸ்ரீகாந்த் 21-14, 11-4 என முன்னிலை வகித்த போது பிரியான்ஷு காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் வீரர் மன்ராஜ் சிங்கை வென்றார். இந்தியாவின் உன்னதி ஜூடோ பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் 21-15, 13-21, 21-16 என சகவீராங்கனை ரக்ஷிதா ஸ்ரீயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தன்வி சர்மா 21-13, 21-19 என ஹாங்காங்கின் லோ சின் யான் ஹேப்பியை வென்றார்.இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரிசா ஜோடி ,பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் 21-15, 21-16 என துருக்கியின் பெங்கிசு, நாஸ்லிகன் ஜோடியை வென்றது.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் ,தோகாவில் நடந்த பைனலில் போர்ச்சுகல், ஆஸ்திரியா அணிகள் மோதின.ஆட்டத்தின் 32வது நிமிடத்தின் போர்ச்சுகல் வீரர் அனிசியோ ஒரு கோல் அடித்தார். முடி வில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுமுதன்முறையாக உலக கோப்பை வென்றது.பிரேசில், இத்தாலி அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதின. முடிவில் 0-0 என சமநிலையில் இருந்தது. 'பெனால்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது இடத்தை கைப்பற்றியது. ஆஸ்திரியாவின் ஜோஹன்னஸ் மோசர் ,அதிக கோல் (8) அடித்தவருக்கான 'கோல்டன் பூட்' விருதை வென்றார்.
துபாயில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர், 19 வயதுக்கு உட்பட்ட) டிசம்பர் 12-21ல் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுபோட்டிகள் லீக் முறையில் நடக்கும். இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது.15 பேர் கொண்ட கொண்ட இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆயுஷ் மாத்ரே 18, கேப்டனாக தேர்வானார் . பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். துணைக் கேப்டன் விஹான் மல்ஹோத்ரா, வைபவ் சூர்ய வன் ஷிஅணிக்கு துவக்கம் தரவுள்ளனர்.அணி விபரம்: ஆயுஷ் மாத்ரே.வைபவ் விஹான், வேதாந்த், அபிக்யான், ஹர்வன்ஷ், யுவ்ராஜ் கோஹில், கனிஷ்க்,கிலன், நமன் புஷ்பக், தீபேஷ், ஹெனில், கிஷன், உதவ் மோகன், ஆரோன் ஜார்ஜ்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான உலகக்கோப்பை தொடர் ,14வது சீசன் இன்று சென்னை, மதுரையில் துவங்குகிறது.சொந்த மண்ணில் களமிறங்கும் இந்திய அணியினர், சிறப்பாக செயல்பட்டு, 9 ஆண்டுக்குப் பின் கோப்பை வெல்ல காத்திருக்கிறது. கடந்த 2023 உலக தொடரில் இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 1-3 என ஸ்பெயினிடம் தோற்று, நான்காவது இடம் பெற்றது. 9 ஆண்டுக்குப் பின் (கடைசியாக 2016) இந்தியா மீண்டும் இம்முறை சாதித்தால் உலக சாம்பியன் ஆகலாம்.
சுல்தான்அஸ்லான்ஷா கோப்பைஹாக்கி 31வதுசீசன்மலேசியாவின்இபோநகரில் நடக்கும்போட்டியில்இந்தியா, மலேசியா, பெல்ஜியம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் தமிழகத்தின் செல்வம் கார்த்தி ஒரு 'பீல்டு' கோல் அடிக்க, இந்திய அணி 3-2 என வெற்றி பெற்றது. மற்ற போட்டிகளில் கனடா அணி 3-2 என, தென் கொரியாவை வென்றது.பெல்ஜியம் அணி 9-1 என மலேசியாவை வென்றது.நான்கு போட்டிகளின் முடிவில் 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியது.
பெண்களுக்கான பிரிமீயர் லீக் (டி- 20) 4-வது சீசன் ஓவர் கிரிக்கெட் போட்டிஅடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நவிமும்பை மற்றும் வதோதராவில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் வீராங்கனைகள் ஏலம் நேற்று நடந்தது. ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர், எனமொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறிவைத்து ஏலம் கேட்டனர்.