18வது சீசன் ,சையது முஷ்தாக் அலி டிராபி, 'டி-20' தொடரின் 18வது சீசன்,. நேற்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் பீஹார், மகாராஷ்டிரா அணிகள் மோதின. மகாராஷ்டிரா 'டாஸ்' வென்று பீல்டிங் செய்தது.பீஹார் அணியின் வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரி (7), சிக்சர் (7) மழை பொழிந்தார். 58 பந்தில் சதம் அடித்த இளம் வீரர் என சாதனை படைத்தார். பீஹார் அணி 20 ஓவரில் 176/3 ரன் எடுத்தது.மகாராஷ்டிரா அணி 19.1 ஓவரில் 182/7 ரன் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது .
'எப்' பிரிவு சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வென்றது. வங்கதேச அணி 2-3 என, பிரான்சிடம் தோல்வியடைந்தது. 'எப்' பிரிவில் பிரான்ஸ் அணி (9 புள்ளி) காலிறுதிக்கு முன்னேறியது.இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியா (6), மீண்டும் காலிறுதி வாய்ப்பை இழந்து, 9 முதல் 16 வரையிலான இடத்துக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஹாக்கி அரங்கில் வலிமையான ஆஸ்திரேலியா அணி, கடந்த 28 ஆண்டுகளாக ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. சிலி, ஓமன் அணிகள் 'பி' பிரிவு போட்டியில் மோதின. இதில் சிலி அணி 2-0 என வெற்றி பெற்றது.
கிளாசிக் செஸ் தொடர் லண்டனில் மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர்விளையாடுகின்றனர்.இதன் ஆறாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் ரொஜெனை எதிர்கொண்டார். பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்த முடிவில் 33 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் கிருஷ்ணன் ரித் விக், சகவீரர் பகத் குஷ்சை வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்கள் சந்தோஷ், பத்ரிநாத் தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். ஆறு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் வெலிமிர் இவிச் (5.0) உள்ளார்.
.சிலியின் சாண்டியாகோ நகரில் ஜூனியர்பெண்களுக்கான உலககோப்பைஹாக்கி, நேற்றுதுவங்கியது.24 அணிகள் 6 பிரிவுகளாக விளையாடுகின்றன. இந்திய அணி 'சி' பிரிவில் ஜெர்மனி, நமீபியா, அயர்லாந்துடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில், நமீபியாவை எதிர் கொண்டது.. முதல் பாதியில் இந்திய அணி 7-0 ,எ இரண்டாவது பாதியில் இந்திய பெண்கள் அணி, 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜெர்மனி, 7-1 என அயர்லாந்தை நேற்று நடந்த மற்றொரு போட்டியில் வெற்றி பெற்றது.
கேப்டன் ரோகித், இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ், "தற்போது ஜூனியர் உலகக்கோப்பையில் எங்களது முழுக்கவனத்தையும்செலுத்துகிறோம். காலிறுதிப் போட்டியில் யார் பங்கேற்பர் என்று இப்போது கூறமுடியாது. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கைஇருக்கிறது. அதிக கோல் அடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். போட்டியின் தேவைக்கேற்ப ஆட்டத்தை 'டிபன்ஸ், அட்டாக்' நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இந்திய அணியில் தற்போது தமிழக வீரர்கள் இடம் பெற. முயற்சி நடக்கிறது. பள்ளி அளவில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இது நீண்டகால முயற்சி. இந்திய அணியில் தமிழக வீரர்கள் 2026 உலகக்கோப்பை, 2028 ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது ,நிச்சயமாக இடம்பெறுவர்," என்றனர்.
'நம்பர்-2' ஆக உள்ள இந்திய அணி ,உலகத் தரவரிசையில் 'பி' பிரிவில் சிலி, ஓமன், சுவிட் சர்லாந்துடன் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் சிலி (7-0), ஓமனை (17-0) வீழ்த்திய இந்திய அணி, 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி, 14வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும்.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர், ஆசிய கால்பந்து கூட்ட மைப்பு சார்பில், வரும் 2026, மே 7-24ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 38 அணிகள் பங்கேற்றன. இந்திய அணி 'டி' பிரிவில் பாலஸ்தீனம், ஈரான், லெபனான், சீன தைபேவுடன் இடம் பெற்றது. பட்டியலில் முதலிடம் பிடித்தால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும். இந்திய கோல் கீப்பர் சர்கார் சிறப்பாக செயல்பட, முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈரானை வென்று,ஆசிய கோப்பை தொடருக்கு 10வது முறையாக தகுதி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அணி இந்தியா வந்துள்ளது. நேற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் முதல் போட்டி நடந்தது. இந்திய அணியில் ருதுராஜ் வாய்ப்பு பெற்றார்.தென் ஆப்ரிக்க அணியில் மஹாராஜ், 'ரெகுலர்' கேப்டன் பவுமாவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப் பட்டது. 'டாஸ்' வென்ற தற்காலிக கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 349/8 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்க அணி 49.2 ஓவரில் 332 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் மலேசியாவின் இபோ நகரில் நேற்று நடந்த பைனலில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இந்திய அணி ஆட்டநேர முடிவில் 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து, 4வது முறையாக (2008, 2016, 2019, 2025) 2வது இடம் பிடித்தது. பெல்ஜியம் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.
சையது மோடி 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் லக்னோவில் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திரீசா 22, காயத்ரி கோபி சந்த் 22, ஜோடி, ஜப்பானின் கஹோ ஒசாவா, மை டனாபே ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 17-21 என இழந்த இந்திய ஜோடி, பின் அடுத்த இரு செட்களை 21-13, 21-15 எனக் கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் காயத்ரி, திரீசா ஜோடி 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2024, 2025) சாம்பியன் பட்டத்தை வென்றது.இந்தியாவின் ஸ்ரீகாந்த் 32, ஹாங்காங்கின் ஜேசன் குனாவன் 21, ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். முதல் செட்டை 16-21 என இழந்த ஸ்ரீகாந்த், 2வது செட்டை 21-8 எனக் கைப்பற்றினார்.முடிவில் ஸ்ரீகாந்த் 16-21, 21-8, 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.