பிரதமர் மோடியை , பார்வையற்றோருக்கான 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகள் டெல்லியில் சந்தித்தனர்.அப்போது பிரதமர் மோடி, வீராங்கனைகளை பாராட்டி, இனிப்பு வழங்கினார்.
அடுத்த ஆண்டு (பிப். 6-22) குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலியில், நடக்கவுள்ளது. இதற்காக நேற்று, ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீசில் உள்ள ஒலிம்பியா நகரில், ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் விழா நடந்தது. இந்த ஜோதி, வரும் பிப். 6ல் துவக்க விழா நடக்கவுள்ள இத்தாலியின் மிலன் நகரில் உள்ள சான் சிரோ மைதானத்திற்கு வந்தடையும்
ஜூனியர் அணிகளுக்கான உலக கோப்பை தொடர் சர்வதேச ஹாக்கி கூட் டமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. இதன் 14வது சீசன் நாளை சென்னை, மதுரையில் துவங்குகிறது. இந்தியா, 'நடப்பு சாம் பியன்' ஜெர்மனி, ஆஸ் திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறும் 6 அணிகள், இரண்டாவது இடம் பிடிக்கும் சிறந்த 2 அணிகள் என 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
மலேசியாவின் இபோ ஹாக்கி நகரில், சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் ,இந்தியா, தென் கொரியா, பெல்ஜியம் உட்பட மொத் தம் 6 அணிகள் பங்கேற் கின்றன.இந்திய அணி தென் கொரியா, பெல்ஜியம், மலேசியாவை போட்டியில் சந்தித்தது. மூன்று போட்டிகளின் முடிவில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
206 பேர் பங்கேற்ற உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில், நடந்தது. இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித்குஜ்ராத்தி உட்பட 24 பேர் பங்கேற்றனர். அரையிறுதிக்கு யாரும் முன்னேறவில்லை.பைனலில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், சீனாவின் வெய் இ மோதினர். இவர்கள் மோதிய இரண்டு போட்டியும் 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமனில் இருந்தது. முடிவில் 2.5-1.5 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். தவிர இளம் வயதில் (19) உலக கோப்பை வென்ற வீரர் என சாதனை படைத்தார். இவருக்கு ரூ. 1 கோடி பரிசு கிடைத்தது. வெய் இ,ரூ.76 லட்சம், 3வது இடம் பெற்ற எசிபென்கோ, ரூ.54 லட்சம் பரிசு பெற்றனர்.
காமன்வெல்த் விளை யாட்டு கூட்டமைப்பு சார்பில், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன் வெல்த் விளையாட்டு நடத்தப்படுகிறது. இதன் 23வது சீசன், அடுத்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ளது. கடை சியாக, 2022ல் இங்கி லாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது.. வரும் 2030ல், 24வது காமன் வெல்த் விளையாட்டை நடத்திட இந்தியா (ஆம தாபாத்), நைஜீரியா (அபுஜா) நாடுகள் விருப்பம் தெரிவித்தன.நேற்று, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு பொதுக்குழு கூட்டத்தில், வரும் 2030ல் போட்டியை இந்தியாவில் நடத்த முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. வரும் 2034ல் இப் போட்டியை நடத்தும் உரிமம் ஆப்ரிக்க நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.காமன் வெல்த் விளையாட்டு நடத்தும் 2வது இந்திய நகரமானது ஆமதாபாத். ஏற்கனவே 2010ல் டில்லியில் நடந்தது.
இந்தியா, இலங்கைகையில், 'டி-20' உலக கோப்பை அடுத்த ஆண்டு, மொத்தம் 55 போட்டிகள் நடக்கும். இந்தியாவில் , 'டி-20' உலக கோப்பை 10வது சீசன், அடுத்த ஆண்டு பிப்ரவரி 7- மார்ச் -8, இல் ஆமதாபாத், டில்லி, சென்னை, கோல்கட்டா, மும்பையில் போட்டிகள் நடக்க உள்ளன. ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் பைனல் நடக்கவுள்ளது.நான்கு பிரிவுகளாக ,20 அணிகள், பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும். பின் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா நேற்று இதற்கான அட்டவணையை வெளியிட்டார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 38. வரும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கான தூதராக, இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
உலக கோப்பை தமிழகம் முழுவதும் வலம் வந்தது. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு சென்றது. சென்னை பரங்கிமலைக்கு நேற்று வந்தடைந்தது.ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை, 14வது சீசன், தமிழகத்தின் மதுரை, சென்னையில் வரும் 28ல் துவங்க உள்ளது. இதில்மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.பிலிப்ஸ், கோவிந்தன், ஹாக்கி வீரர் வீராங்கனைகள், பள்ளி மாணவர்கள் தமிழகத்தின் இரண்டு ஒலிம்பியன் ஹாக்கிகள் வரவேற்பு அளித்தனர்.
உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ருமேனியாவின் கிளஜ் நபோகா நகரில் ,19 வயது ஆண்கள் அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி, வலிமையான சீன தைபேவை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, 3-2 என (11-9, 11-8, 9-11, 8-11, 12-10) ஹிசெய்னை வீழ்த்தினார். இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, மாற்று ஒற்றையர் போட்டியில் 0-3 என (10-12, 10-12, 10-12) வீழ்ந்தார். 5வது போட்டியில் இந்தியாவின் அபிநந்த், 3-0 என 11-4, 11-8, 11-8) என ஹிசெய்னை வென்றார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.அங்கோலிகா, தின் யான்ஷி, அனன்யா இடம் பெற்றஇந்திய அணி, பெண்களுக்கான 15 வயது பிரிவு அரையிறுதியில் தென் கொரியாவை சந்தித் தது. இதில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கல பதக்கம் பெற்றது.
காதுகேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நிறைவு விழா இன்று நடக்கிறது.இந்தியா சார்பில் 45 வீரர்கள், 28 வீராங்கனைகள் 11 போட்டிகளில் பங்கேற்றனர். கோல்ப் போட்டியில் இந்தியாவின் திக்ஷா தாகர், தங்கப்பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார்.தனுஷ் (2 தங்கம்), அனுயா, அபினவ் உள்ளிட்டோர் தங்கம் வென்றனர். 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என துப்பாக்கிசுடுதலில் 16 பதக்கங்களை இந்திய நட்சத்திரங்கள் குவித்தனர். இந்தியாவின் சுமித் தாஹியா ஆண்கள் மல்யுத்தத்தில் தங்கம் கைப்பற்றினார்.அமித் கிருஷ்ணன் வெள்ளி வென்றார். கராத்தேயில் லோமா ஸ்வெய்ன், வெண்கலம் வென்றார்.இந்தியா 9 தங்கம்,7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்ற இந்தியா, பட்டியலில் 6வது இடம் பிடித்தது.