.மும்பையில், 'வெஸ்' டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் 80வது சீசன் மும்பையில் ,பெண்களுக்கான பைனலில் ஜோஷ்னாசின்னப்பா, சானியா வாட்ஸ் மோதினர். அபாரமாக ஆடிய ஜோஷ்னா3-1 (7-11, 11-8, 11-8, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் ஆண்களுக்கானபைனலில் மோதினர். இதில் சோட்ரானி 3-0 (11–9, 11-9, 11-2) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக சாம்பியன் ஆனார்..
'கோல்கட்டாவில், 'வேர்ல்டு 25கே'ஓட்டப் பந்தயத்தின் (25 கி.மீ.,) 10வது சீசன் 'கோல்கட்டாவில் ,இந்திய வீரர்கள் பிரிவில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம்,12 நிமிடம்,06 வினாடியில் கடந்த குல் வீர் சிங், தனது சொந்த சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார்.. சீமா இந்திய வீராங்கனைகள் பிரிவில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 26 நிமிடம், 04 வினாடியில் கடந்து, புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லியில் இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக ,பல்வேறு நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டார். மெஸ்சிக்குஇந்திய பயணத்துக்காகரூ.89கோடிவழங்கப்பட்டது.ரூ.11 கோடி அரசுக்குவரியாகசெலுத்தப்பட்டது. ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் கட்டணம் மூலம் கணிசமான தொகை வசூலிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள, எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று, அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கைப்பந்து போட்டி தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் (தமிழ்நாடு) 25-19, 25-6, 25-21 என்ற நேர் செட்டில் ஸ்வர்னிம் குஜராத் பல்கலைக் கழகத்தை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கே.ஐ.ஐ.டி. (ஒடிசா) அணி 25-10, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழகத்தை (அரியானா)வென்றது. அதாமஸ் பல்கலைக்கழகம் மேற்கு வங்காளம்) 25-22, 25-21, 21-25, 25-19 என்ற செட் கணக்கில் சண்டிகார் பல்கலைக் கழகத்தை வெற்றி பெற்றது.
மாநிலஜூனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்போட்டி தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டிசார்பில் கோவை துடியலூரில் உள்ள எஸ்.என்.எஸ். அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளியில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல் நாளில் சிறுமிகளுக்கும், 2-வது நாளில் சிறுவர்களுக்கும் போட்டி நடத்தப்படும். தமிழ் நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டி தலைவர் சுப்பையா தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் இதன்அடிப்படையில் ஒடிசாவில் ஜனவரி 5 முதல் 10-ந்தேதி வரை 33-வது தேசிய ஜூனியர் வாள்வீச்சு போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
உலக டூர் இறுதி சுற்று பேட் மிண்டன் போட்டி ,சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஹாங்சோவ் டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற , பெண்கள் பிரிவின்இறுதி ஆட்டத்தில் தென்கொரியாவின் அன்சே யங் 21-13, 18-21, 21-10 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங்ஷியியையும், ஆண்கள் பிரிவில் பிரான்சின் கிறிஸ்டோபோபோவ் 21-19, 21-9 என்றநேர் செட்டில் சீனாவின் ஷி யு கியையும் .வென்று 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றினர். அன்சே யங் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ,இந்த ஆண்டில் II-வது பட்டம் அவருக்கு ரூ.2 கோடியை 15 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த சீசனில் அவரது பரிசுத்தொகை ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய மதிப்பில் ரூ.9 கோடி தாண்டியது. இதன் மூலம் ஒரு சீசனில் மில்லியன் டாலருக்கு மேல் பரிசுத் தொகை ஈட்டிய முதல் பேட்மிண்டன் நட்சத்திரம் என்ற சாதனையை படைத்தார்.
தாய்லாந்தில்தென்கிழக்குஆசியவிளையாட்டு 33 வதுசீசன்நடந்தது. 10நாடுகளில்இருந்து 9,199 பேர்பங்கேற்றனர். 50 விளையாட்டில் 574 பிரிவுகளில் நடந்த போட்டிகளில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலா ,பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பைனலில், 6-1, 6-2 என தாய்லாந்தின் மனன்சயாவை வீழ்த்தி தங்கம் வென்றார். மொத்தம் 478 பதக்கம் வென்ற தாய்லாந்து (226 தங்கம், 148 வெள்ளி, 104 வெண்கலம்) பட்டியலில் முதலிடம் பிடித்தது.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் டில்லியில் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு போட்டி ,தகுதிச் சுற்றில் இந்திய ஆர்மி அணியின் லக்சிதா (290), ஷர்வன் (292) இணைந்து 582 புள்ளி பெற, முதலிடம் பெற்று பைனலுக்கு முன்னேறினர். இதில் லக்சிதா, ஷர்வன் ஜோடி 16-10 என ஹரியானாவின் சுருச்சி, சாம்ராட் ராணா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றினர்.ராஜஸ்தானின் அஞ்சலி, அமித் சர்மா ஜோடி 17-13 என கர்நாடகாவின்ஜோனாதன், அவந்திகா ஜோடியை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வென்றது.மத்திய பிரதேசத்தின் ஆராத்யா, யுக்பிரதாப் ஜோடி, ஜூனியர் பிரிவில் கர்நாடகாவின் கேம்பெர்யா, டேரன் ஜோடியை 16-8 என வென்று தங்கம் வென்றனர்.
பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நேற்று சீனாவின் ஹாங்சு நகரில், . ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் உலகின் 'டாப்-8' ஜோடி, இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன.இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக்ஷெட்டி ஜோடி, உலகத் தரவரிசையில் 'நம்பர்-3', 'பி' பிரிவில் இடம் பெற்று, முதல் இரு போட்டியில் வெற்றி பெற்றது. உலகத் தரவ ரிசையில் ‘நம்பர்-2' ஆக உள்ள மலேசியாவின் ஆரோன்சியா, சோ இக் ஜோடியை மூன்றாவது, கடைசி போட்டியில் எதிர் கொண்டது.அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில், இந்திய ஜோடி முதல் செட்டை (17–21) என இழந்து.,பின் இந்திய ஜோடி அடுத்த இரு செட் டுகளை (21-18, 21-15) வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 17–21, 21-18, 21-15 என வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வென்று, பட்டியலில் முதலிடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்ஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆண்கள் இரட்டையர் இந்திய ஜோடி பெருமை பெற்றனர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரையும் 3-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. நேற்று ஐந்தாவது போட்டி குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார். தென்ஆப்பிரிக்க அணி20 ஓவர்கள் முழுமையாக ஆடி ,8 விக்கெட்டுக்கு 201 ரன்களே எடுக்க முடிந்தது. இந்தியஅணி 20 ஓவரில் 231/5 ரன்கள் குவித்தது இதனால் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜனவரி மாதம் 2026ல் நியூசிலாந்துடன் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ,2025-ம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்த இந்திய அணி இனி விளையாட இருக்கிறது.