IPL கிரிக்கெட் விளையாட்டுபோட்டி -22ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா, பெங்களுர் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 174/8 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 177/3, ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KRUNAL PANDYA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
HYDERABAD - RAJASTHAN23ம் தேதி ஹதராபாத்தில் நடைபெற்ற ஹதராபாத், ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹதாராபாத் அணி 286/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 242/6, ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ISHAN KISHAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.CHENNAI - MUMBAI23ம் தேதி சென்னையில் நடைபெற்ற சென்னை மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அணி 155/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 158/6, ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக NOOR AHMAD தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டு வில்வித்தையில், ஷீத்தல் தேவி 'தங்கம்' வென்றார்.டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா' விளையாட்டு 2வது சீசன் நடக்கிறது.பெண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்ட்' பிரிவு பைனலில் ஜம்மு காஷ் மீரின் ஷீத்தல் தேவி 18, ஒடிசாவின் பாயல் நாக் 17, மோதினர்.ஷீத்தல் தேவி 109-103 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். 2023ல் நடந்த முதல் சீசனில் இவர், தங்கம் வென்றிருந்தார்.உலக கோப்பை செபக் தக்ரா இரட்டையரில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.பீஹாரில், உலக கோப்பை செபக்தக்ரா 5வது சீசன் நடக்கிறது பெண்கள் இரட்டையர் பைன்லில் மியான்மர் மோதின. இந்தியா, அணிகள்இதில் ஏமாற்றிய இந்திய அணி 0-2 (9- 15, 9-15) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. உலக கோப்பை பெண்கள் இரட்டையரில் முதன் முறையாக வெள்ளி வென்று இந்தியா வரலாறு படைத்தது .
சர்வதேச ஒலிம்பிக் சங்க (ஐ.ஒ.சி.,) புதிய தலைவராக ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சர், ஒலிம்பிக் நீச்சலில் இரு முறை தங்கம் வென்ற முன்னாள் வீராங்கனை கிறிஸ்டி கவன்ட்ரி 41, தேர்வு செய்யப்பட்டார்.ஒலிம்பிக் தினமான ஜூன் 23 பொறுப்பேற்க உள்ள கிறிஸ்டி கவன்ட்ரி, 131 ஆண்டு IOC. வரலாற்றில் முதல் பெண் தலைவர், முதல் ஆப்ரிக்கர் என்ற பெருமை பெற்றார். 2036ல் ஒலிம்பிக் போட்டி நடத்த இந்தியா முயற்சித்து வருவது குறித்து கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் நடத்தும் நாடு குறித்த பேச்சுவார்த்தை விரைவுபடுத்தப்படும். இதற்கென உள்ள செயல் முறைகள், தற்போது நடந்து வருகின்றன.
ஐ.பி.எல்., 18வது சீசன் இன்று துவங்குகிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் கோல்கட்டா அணி, பெங்களூருவை சந்திக்கிறது. முதல் ஆட்டம், இரவு 7.30 மணி அளவில், தொடங்குகிறது, இந்த விளையாட்டினை, star ஸ்போர்ட்ஸ் 1, தமிழ், டிவியில் காணலாம்
தேசிய 'டி.இ.எப் டி20' கிரிக்கெட்டில் புதுச்சேரி அணி சாம்பியன் ஆனது, சென்னை, ஐதராபாத்தில், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய 'டி-20' சாம் பியன்ஷிப் நடந்தது.நேற்று, சென்னையில்நடந்தபைனலில்லியோபார்ட்ஸ்புதுச்சேரி, புல்ஸ்விஜயவாடாஅணிகள்மோதின.புதுச்சேரி 20 ஓவரில் 187/9 ரன் எடுத்தது விஜயவாடா அணி 15 ஓவரில் 113 ரன்னுக்கு சுருண்டு 74 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாரா விளையாட்டில் அசத்தல், தமிழகத்தின் ரமேஷ் 'தங்கம்' டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான "கேலோ இந்தியா பாரா' விளையாட்டு உவது சீசன் நடக் கிறது. ஆண்களுக்கான 800 மீ., (D53/D54) 'வீல்சேர்' ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தின் ரமேஷ் ஷண்முகம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சென்னையை சேர்ந்த ரமேஷ் ஷண்முகம், திருச்சி யில் உள்ள விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். எட்டாவது வயதில் நடந்த லாரி விபத்தில் தனது இடது காலை இழந்தார். துவக்கத்தில் கூடைப்பந்து விளையாடிய இவர், பின் 'வீல்சேர்' போட்டியில் பங்கேற்றார். சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின் டன் தொடர் காலிறுதியில் சங்கர், சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின் டன் தொடர் ஆண்கள் சங்கர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் தரவரிசை யில் 64வது இடத்திலுள்ள இந்தியாவின் சங்கர் முத்துசாமி, உலகின் 'நம்பர்-2' வீரர், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனை சந்தித்தார்.முதல் செட் 17-17 என சமநிலையில் இருந்த போதும், கடைசியில் சங்கர் 19-21 என இழந் தார். 2வது செட்டில் எழுச்சி பெற்ற சங்கர் 18-9 என முந்தினார். பின் 21-12 என செட்டை கைப்பற்றினார். மூன்றாவது, கடைசி செட் துவக்கத்தில் 3-3 என சமனில் இருந் தது. அடுத்து துடிப்பாக செயல்பட்ட சங்கர் 21-5 என எளிதாக வசப் படுத்தினார்.முடிவில் சங்கர் 19-21, 21-12, 21-5 செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். துப்பாக்கி சுடுதல்: அசாம் அணி சாம்பியன் .பல மாநில போலீசார், எல்லை பாதுகாப்பு படை, சி.ஆர். பி.எப்., என 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பிஸ்டல், ரிவால்வர் உட்பட பல பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு, ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை, அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படை அணியினர் தட்டிச் சென்றனர். இரண்டாம் இடத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்தனர். தமிழக காவல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஓத்தி வாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி வளாகத்தில், 25வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கம், பரிசுகளை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். டி.ஜி.பி., சங்கர்ஜிவால், அதிகாரிகள் பங்கேற்றனர்.
மார்ச் 22 கோல்கட்டா - பெங்களூருகோல்கட்டாமார்ச் 23 ஐதராபாத் - ராஜஸ்தான்ஐதராபாத்*மார்ச் 23 சென்னை - மும்பைசென்னைமார்ச் 24 டில்லி - லக்னோவிசாகப்பட்டனம்மார்ச் 25 குஜராத் - பஞ்சாப்ஆமதாபாத்மார்ச் 26 ராஜஸ்தான் - கோல்கட்டாகவுகாத்திமார்ச் 27 ஐதராபாத் - லக்னோஐதராபாத்மார்ச் 28 சென்னை - பெங்களூருசென்னைமார்ச் 29 குஜராத் - மும்பை ஆமதாபாத்மார்ச் 30 டில்லி - ஐதராபாத்விசாகப்பட்டனம்மார்ச் 30 ராஜஸ்தான் - சென்னைகவுகாத்திமார்ச் 31 மும்பை - கோல்கட்டாமும்பை
பி.சி.சி.ஐ., சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத் தப்படுகிறது. இதன் 18வது சீசன் நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. பைனல் வரும் மே 25ல் நடக்க உள்ளது.சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.27 கோடி) வாங்கப்பட்ட கேப்டன் ரிஷாப்பன்ட் தான் ,லக்னோ அணியின் பலம். மிட்ஸல் மார்ஷ், மார்க்ரம், பூரன், மில்லர் என உலக தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், சாதிக்க வாய்ப்பு உள்ளது. ஒரே ஓவரில் முடிவு தலைகீழாக மாறும்,ஐ.பி.எல்., போட்டியில் கோப்பை வெல்லும் அணியை கணிப்பது கடினம். கடைசி பந்து வரை பதட்டப்படாமல் செயல்படும் அணிக்கே கோப்பை வசப்படும். சென்னை அணிக்காக 43 வயதிலும் 'தல' தோனி விளையாட இருப்பது சிறப்பு. ஐ.பி.எல்.,தொடர் 13 மைதானங்களில் நடக்க உள்ளது. முதன் முறையாக அனைத்து மைதானத்திலும் முதல் போட்டி துவங்கும் முன் அல்லது போட்டிக்கு இடையில் துவக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 6:00 மணிக்கு துவக்க விழா நடக்கும். இதில் பாலிவுட் நடிகை திஷா படானி, பாடகி ஷ்ரேயா கோஷல் பங்கேற்கின்றனர். ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி, இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.13 கோடி வழங்கப்படும் 3, 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி தரப்படும். ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் சென்னை, மும்பை முதலிடத்தில் உள்ளன. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றன.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு ரூ.58 கோடி பி.சி.சி.ஐ., பரிசு .ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் துபாயில் நடந்தது. பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை சாய்த்து,3வது முறையாக கோப்பை, வென்றது.இதையடுத்து ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணிக்கு ரூ. 58 கோடி பரிசு வழங்குவதாக, இந்திய கிரிக் கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது.
நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை கால் பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று மார்ச் 25ல் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் உலகத்தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி, 162வது இடத்திலுள்ள மாலத்தீவுக்கு எதிராக நட்பு போட்டியில் மோதியது.இப்போட்டி, மேகா லயாவின் ஷில்லாங்கில் உள்ள நேரு மைதானத் தில், முதன் முறையாக நடந்தது. ஓய்வுக்குப் பின் நேற்று மீண்டும் வந்த சுனில் செத்ரி, கேப்டனாக களமிறங்கினார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. தவிர 2021க்குப் பின் மாலத்தீவு அணிக்கு எதிராக களமிறங்கினார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'கேலோ இந்தியா' பாரா விளையாட்டு 2வது சீசன்டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'கேலோ இந்தியா' பாரா விளையாட்டு 2வது சீசன் இன்று முதல் மார்ச் 27 வரை நடக்கிறது. இதில் 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தட களம், வில்வித்தை, பவர்லிப்டிங், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் என 6 வகையான விளையாட்டு நடத்தப்படுகிறது. இதற்கான போட்டிகள் டில்லியில் உள்ள மூன்று மைதானங்களில் நடக்கின்றன. இன்று, டில்லியில் உள்ள இந்திரா உள்ளரங்கு மைதானத்தில் துவக்க விழா நடக்கிறது. பாராலிம்பிக்' கில் இந்தியாவுக்கு 9 தங்கம் உட்பட 29 பதக்கம் கிடைத்தது. தேசிய துப்பாக்கிசுடுதல் போட்டி தமிழக காவல்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஒத்தி வாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி வளாகத்தில், 25வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி,நேற்று துவங்கியது. பல மாநில போலீசார், எல்லை பாதுகாப்பு படை, சி.ஆர். பி.எப்., என 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.இதன் துவக்க விழா நேற்று சென்னை, ஊன மாஞ்சேரியில் உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் நடந்தது. மும்பை கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப் பட்டார்.மும்பை, மார்ச் 20-சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்கும் மும்பை அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப் பட்டார்.சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 22 ல் நடக்க உள்ள ஐபி எல்., லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிக்கான மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். சமீபத்தில்இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றிருந்தது.செஸ் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி தொடர் நடக்கிறது 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோண வள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.இதன் 4வது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஆஸ்திரியாவின் பெடெல்காமோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 27வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். தடகளம்இந்திய ஓபன் எறிதல் போட்டிக்கான 4வது சீசன் நவி மும்பையில், இன்று துவங்குகிறது. ஈட்டி எறிதலில் இந்தியாவின் ரோகித் யாதவ், ஷிவ்பால் சிங், சாஹில் சில்வால் பங்கேற்கின்றனர்.