கண்களில் இருக்கும் சோர்வு நீங்க
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.
எனவே தான் இப்போதும். எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும். முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர். எனவே கண் அழகை அதிகரிக்க தினமும் கண்களில் வெள்ளரிக்காயை வைத்து சிறிது நேரம் அப்படியே அமர்த்திருங்கள். பின்பு கண்களை கழுவிவிடுங்கள்.
கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. எனவே தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவது மிக முக்கியம்.
கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது. பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள், கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும் இது கண்களுக்கு புத்துணர்வை அளிக்கும்.
0
Leave a Reply