25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்க....

பற்களின் மஞ்சள் நிறமானது சிரிப்பதற்கும், பாடுவதற்கும், பேசுவதற்கும் தயக்கத்தை ஏற்படுத்தும். பற்களை சரியாக கவனிக்காமல் இருப்பது, பற்களை சரியாக சுத்தம் செய்யாதது மற்றும் பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும் பொருட்களை சாப்பிடுவது போன்றவை தான் இந்த மஞ்சள் நிறத்திற்கு மிக முக்கிய காரணமாகும். பற்கள் படிதல் வாய் துர்நாற்றம், சர்க்கரை இருக்கும் பானங்களை குடிப்பது, பான் மசாலா சாப்பிடுவது மற்றும் புகையிலை, மருந்துகள் அல்லது சோடா குடிப்பது போன்றவற்றாலும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறும்..பற்கள் மஞ்சள் நிறமாக மாறியிருந்தால், வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயங்களில் ஒன்று பேக்கிங் சோடாமற்றும் மற்றொன்று எலுமிச்சை சாறு ஆகும். பேக்கிங் சோடா பெரும்பாலும் மஞ்சள் பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், எலுமிச்சை சாறு மஞ்சள் கரை மற்றும் பிளேக் நீக்க உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை பிரஷ்ஷில் எடுத்து பற்களில் தேய்க்கவும். இந்த வழியில், இரண்டு முதல் மூன்று பயன்பாடுகளால், நீங்கள் மஞ்சள் நிற பற்களில் இருந்து விடுபடலாம், மேலும் உங்கள் பற்கள் சுத்தமாக தோன்ற ஆரம்பிக்கும். 

ஸ்ட்ராபெர்ரிகளை நசுக்கி, பிரஷ் மூலம் பற்களில் தேய்ப்பது, பற்களில் படிந்து இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க உதவும்.உப்பு மற்றும் கடுகு எண்ணெயை (Mustard Oil) கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்கள் சுத்தமாகும். இந்த இயற்கை தீர்வை முயற்சிப்பதன் மூலம், நீங்கள் வாய் துர்நாற்றத்திலிருந்தும் (Bad Breath) விடுபடுவீர்கள்.மஞ்சள் பற்களை சுத்தம் செய்வதில் பயனுள்ள பல பழங்களின் தோல்களும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழத் தோலின் உள் பகுதியை பற்களில் தேய்க்கலாம், ஆரஞ்சு தோலை உலர்த்தி அரைத்து பயன்படுத்தலாம், பற்களுக்கு டீத் ஒயிட்னிங் பவுடர் தயாரிக்கப்படும் போது அதன் விளைவு தெரியும். இந்தப் பொடியில் தண்ணீர் கலந்து பற்களை சுத்தம் செய்யலாம்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News