இருள் சூழ்ந்த இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்
இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளுக்காக இடிக்கப்பட்டு புதிய கட்டுமானபணிகள் நடந்து வருறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் எரிந்து வந்த மின்விளக்கும் பழுதடைந்தது. பெண்கள் பாதுகாப்பு கருதி போலீசார் அருகில் உள்ள பெட்ரோல்|பங்க் நிர்வாகத்தினரிடம் கேட்டு தற்காலிகமாக பல்ப் வசதி செய்திருந்தும் வெளிச்சம் போதிய அளவு இல்லாமல் அகற்றும் நிலை ஏற்பட்டது.
இதன் அருகாமை பகுதியை திறந்த வெளி கழிப்பறையாக ஆண்கள்பயன்படுத்துவதும், அருகிலேயே ஒயின்ஷாப் இருந்து சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கும் நிலையில் மாலை முதல் இரவு வரை தினமும் பெண்களின் நிலை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகிறது. பெண்களின் பாதுகாப்பு கருதியாவது நகராட்சி நிர்வாகம் உடனடியாக, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply