நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும், மோர் பாத்திரத்தில் தோசை மாவை வைக்கலாம்.வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
முள்ளங்கி சமைக்கும் போது லேசாக வதக்கி சமைத்தால், எளிதில் சளி பிடிக்காது.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் நேரம் கிடைப்பதில்லை, இதனால் கிழங்கு போன்றவற்றை முதல் நாள் இரவே வேகவைத்து கொள்ளலாம்.பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
பன்னீர் பட்டர் மசாலா போட்டுகிரேவியில் உப்பு அதிகமானால் வேகவைத்தஉருளைக்கிழங்குடன் சிறிதளவு பிரெஷ் கிரீமை சேர்க்க, சுவை கூடும். உப்புத் தன்மையும் குறைந்துவிடும்.கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவி அல்லது குழம்பில் தண்ணீர் சேர்க்க வேண்டி இருந்தால் சூடான நீரை சேர்க்கவும். சுவை மாறாமல் இருக்கும். சைடு டிஷ்க்கு வெள்ளை நிற கிரேவி தயாரிக்க முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றை மசாலாவுடன் சேர்த்து அரைத்து கிரேவி செய்யலாம். நெய் சேர்த்து கிரேவிசெய்வதற்கு பதிலாக வெண்ணை சேர்த்து செய்தால் மணமும் சுவையும் வேறலெவல்.நார்த் இந்தியன் கிரேவி செய்யும்போது. புட் கலர் சேர்க்காமல் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி செய்தால், கிரேவி சிவப்பு நிறமாக வரும். இறக்கி விடும் முன் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் சுவை ஜோராக இருக்கும்.
கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமெனில் பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும்.பழுத்த தக்காளியை ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டு வெட்டுங்கள். பழம் பிய்ந்து போகாது.காய்கறி மீது எலுமிச்சை பழச்சாறு கலந்த நீரை தெளித்தால் காய்கறி பச்சையாக இருக்கும்.இறைச்சி வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.தக்காளி, எலுமிச்சம்பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது. பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும் வரும்.வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில்போட்டுவைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேகவைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும்.வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.பூண்டை அவ்வப்போது உரித்து கொண்டிருந்தால் நேரம் வீணாகும். ஆகையால் பூண்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் எளிதில் வந்து விடும்.பலகாரம் செய்த பிறகு மீதமாகும் எண்ணெய்யில் வாழைக்காய், கருணைக்கிழங்கு வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.
சப்பாத்தி செய்து எண்ணெய்வடிகட்டியில் போட்டு மூடிவைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாகஇருக்கும்.தேங்காய்த் துருவல்மீதியானால் அதை லேசாக வதக்கி, சிறிது உப்பு சேர்த்து வைத்தால், மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். கேசரி, பால்கோவா, தேங்காய்பர்பி ,போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
தோசை மாவு நீர்த்து இருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விட்டால் மேலும் நீர்த்துப் போகாது, புளிப்பும் தெரியாது.காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் காய்கறிகள் எளிதில் வெந்துவிடும்.மீதமான தேங்காய் சட்னியைகெட்டியான புளிப்பு மோரிலசேர்ந்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர் குழம்பு தயார். கொள்ளு, காராமணி வேக வைத்த நீரை கீழே கொட்டாமல் சூப் செய்ய பயன்படுத்தலாம்.சத்தாக இருக்கும்.தோசைக் கல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறு மொறுப்பாக வரும்.வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.
இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை குப்புற இருப்பது போல போடவும். இரண்டுநாட்கள் கெடாமலும், காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் புளிக்காமலும் இருக்கும்இட்லி தோசை மாவு அரைத்தால் இனி அதில் இதை சேர்க்க மறக்காதீர்கள். மாவு அரைக்கும் போது அதில் வெண்டைக்காய் சேர்த்து அரைக்கலாம். அப்படி அரைக்கும் போது மாவு பஞ்சு போன்று மிருதுவான பதத்தில் இருக்சப்பாத்தி மாவு பிசைந்து அதனை1/2 மணி நேரத்திற்கு மேல் ஊறவிடவும். அதன் பின் சப்பாத்தி சுட்டு பாருங்கள் சப்பாத்தி நன்றாக இருக்கும் ,அதேபோல் மாவு பிசையும் போது அதில் வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து பாரத்தால் மிருதுவாகஇருக்கும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.
கோதுமை மாவில் பரோட்டா செய்யும்போது ஒருடேபிள்ஸ்பூன் ஓமம் கலந்து செய்யலாம். சுவையாகவும் எளிதில் ஜீரணமும்ஆகும்.சுட்ட அதிரசங்களை சேகரித்துவைக்கும்போது, டப்பாவின் அடியில் கிச்சன் டிஷ்யூஸ் வைத்து, அதன்மீது அதிரசங்களை அடுக்கினால் உபரி எண்ணெயை டிஷ்யூ பேப்பர் இழுத்துக்கொள்ளும். சுவையும் மாறாமல் இருக்கும்.சாம்பாரில் தக்காளியை நறுக்கி போடுவதை விடமிக்ஸியில் அரைத்துப் போட்டால் ருசி தனியாக தெரியும். வாழைப்பழம் அல்லது வாழைத்தண்டை நறுக்கியவுடன் மோர் கலந்த தண்ணீர் போட்டு பயன்படுத்தினால் துவர்ப்பு தன்மை அகன்றுவிடும். கொஞ்சம் மசாலாப் பொடியை சேர்த்து தக்காளி சாதம் தயாரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.வாடிய பீன்ஸை சிறிது நேரம் குளிந்த தண்ணீரில் போட்டு எடுத்து பிறகு சமையல் செய்தால் வாடாத பீன்ஸை போலவே இருக்கும்.
உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்கவேண்டும்.போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.