25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Apr 06, 2024

அரைக்கீரை சூப்

தமிழ் மக்களுக்கு அறிமுகமான கீரை வகைகளில் அரைக்கீரை ஒன்று, அரைக்கீரையில் 87 சதவிகிதம் நீர் உள்ளது. 8 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது மற்றும் 0.4 சதவிகிதம் கொழுப்புச்சத்தும், 2.4 சதவிகிதம் தாது உப்புகளும் உள்ளன. 100 கிராம் கீரையில் 364 மி.கிராம் சுண்ணாம்புச் சத்தும், 38.5 கிராம் புரதச் சத்தும் உள்ளன.சித்த மருத்துவத்தில் இந்தக் கீரை முக்கியமான ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், ஜன்னி, கபரோகம், வாத நோய்கள் ஆகிய நோய்களைக் குணமாக்கும். தாது விருத்திக்கு இது சிறந்தது.தேவையான பொருட்கள்-அரைக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடியளவுவெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1 கொத்தமல்லிப் பொடி - அரை தேக்கரண்டி தக்காளிப்பழம் (பொடியாக நறுக்கியது) 2 எலுமிச்சம் பழச்சாறு - 2தேக்கரண்டி மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப பயத்தம் பருப்பு - 50கிராம் வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி சீரகப்பொடி - அரை தேக்கரண்டி பூண்டு 2 பற்கள், தண்ணீர் 500 மி. லி செய்முறை-தண்ணீர் விட்டு பயத்தம்பருப்பைக் குழைய வேக வைத்து சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக் கொள்ள வேண்டும் வெங்காயத்தையும் பூண்டும் நெய்விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். அதில் சீரகப்பொடி, கொத்தமல்லிப் பொடி, பொடியாக நறுக்கிய தக்காளிப்பழம் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும் உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு எலுமிச்சம்பழச்சாற்றைச் சேர்க்க வேண்டும்.நன்கு வதக்கிய வெங்காயம். எலுமிச்சம் பழத்துண்டுகளோடு பரிமாறலாம். 

Apr 06, 2024

ஆப்பிள் சூப்

தேவையான பொருட்கள்-ஆப்பிள் - 4 சர்க்கரை - 4 தேக்கரண்டி லவங்கப்பட்டை - 2துண்டுகள் கிரீம் - அரை கோப்பை, தண்ணீர் - 500மி.லி தேன் - 1மேசைக்கரண்டி, கார்ன் மாவு - 2தேக்கரண்டி, எலுமிச்சம் பழத்தோல் - அரை தேக்கரண்டி. செய்முறை-ஆப்பிள் பழங்களின் தோலைச் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகள், எலுமிச்சம் பழத்தோல்; லவங்கப்பட்டை ஆகியவற்றுடன் தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும். எலுமிச்சம் பழத்தோலையும்,லவங்கப்பட்டையையும் நீக்கி விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.கார்ன் மாவை அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை, தேன் மற்றும் கார்ன் மாவைச் சூப்போடு சேர்க்கவும் மிதமான தீயில் 5 நிமிடங்கள் கூட வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லென்று கீரிமுடன் பரிமாறவும்.

Apr 06, 2024

முட்டைக்கோஸ் சூப்

தேவையான பொருட்கள்-முட்டைக்கோஸ் - 250 கிராம்,தண்ணீர் - 1லிட்டர்சர்க்கரை - 2மேசைக்கரண்டிவெண்ணெய் - 20கிராம்பால் - 100 மி.லிஎலுமிச்சம் பழச்சாறு - 1தேக்கரண்டிமிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்பஉருளைக்கிழங்கு -3புளித்த கீரிம் - அரை கோப்பைசெய்முறை:-முட்டைக்கோஸை நன்றாகக் கழுவிபொடியாக நறுக்கிக் கொள்ளவும், உருளைக்கிழங்கின் தோலைச்சீவி. அதையும் நறுக்கிக் கொள்ளவும். இக்காய்கறிகளை தண்ணீரில் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். வெந்த காய்கறிகளை சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டவும். அல்லது மிக்ஸியில் அரைக்கவும். அதோடு பால், உப்பு, மிளகுத்தூள்.வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து 10 நிமிடம் வைக வைத்து இறக்கிக் கொள்ளவும்.பறிமாறும்  முன் எலுமிச்சம் பழச்சாறுகளையும் ,புளித்த கிரீமையும் சேர்க்கவும்.

Mar 30, 2024

கேழ்வரகு கூழ்

 கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகி உடலுக்கு பல அற்புத நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கிய தானியமாகும். இவற்றில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் கேழ்வரகு முக்கிய உணவாக இருக்கிறது.தேவையான பொருட்கள்:ராகி மாவு - 10 ஸ்பூன்தண்ணீர் - 1 லிட்டர்உப்பு - தேவைக்கேற்பகூடுதல் சுவைக்கு:தயிர் - 4 டீஸ்பூன்வெங்காயம் - 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்செய்முறை-முதலில் ஒரு பாத்திரம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.கேப்பை மாவை எடுத்து அதில்1/2cup தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.கொதித்து வரும் தண்ணீரில் அவற்றை சேர்த்து கரண்டி கொண்டு கிளற ஆரம்பிக்கவும்.நாம் சேர்த்த மாவு பால் போன்று பொங்கி வரும். இந்த நேரத்தில் அதிக சூட்டில் வைத்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.மாவு நன்கு கொதித்து வரும் நேரத்தில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளவும்.10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்த பிறகு, கேப்பை மாவு நல்ல வாசனை வரும். அப்போது நாம் அடுப்பை அனைத்து கொள்ளலாம்.தயாரான கேழ்வரகு கூழை நாம் அப்படியே ஆற வைத்து பருகலாம்.அவற்றுக்கு கூடுதல் சுவை கொடுக்க நாம் சில பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.கூடுதல் சுவைக்கு என நாம் எடுத்து வைத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும். அவற்றை சேர்க்கும்போது நன்றாக கிளறிக்கொள்ளவும்இதை முதல் நாள் இரவு தயாரித்து ,மறுநாள் உபயோகிக்கவும். இத்துடன் வேக வைத்த சாதம்1 கைப்பிடி, அல்லது வேகவைத்த கோதுமை குருணை சிறிதளவு, சேர்த்து மோர் ஊற்றி குடிக்கலாம். சத்தான மற்றும் சுவையான கேழ்வரகு கூழ் தயார்

Mar 30, 2024

கற்றாழை ஜூஸ்

 தேவையான பொருட்கள்: - கற்றாழை இலை - 1தண்ணீர் - 1 கப்சர்க்கரை - தேவையான அளவுலெமன் ஜூஸ் - 1-2 டீஸ்பூன்செய்முறை-கற்றாழை மடலின் செடியில் இருந்து பறித்த பிறகு, சிறிது நேரம் வைத்தால் அதிலிருந்து மஞ்சள் நிறதிரவம் வெளியேறும். இதை தவறாமல் செய்யவும்.கற்றாழை இலையின் ஓரங்களை வெட்டி, நடுவே உள்ள கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். இதை செய்வதற்கு ஸ்பூனை பயன்படுத்தலாம்.கற்றாழை ஜெல்லை ஒரு மிக்சர் ஜாரில் சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர், சர்க்கரை மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.லெமன் ஜூஸ் சேர்ப்பதை தவிர்க்க வேண்டாம்.இப்போது தயாராக உள்ள கற்றாழை ஜூஸை ஃபிரஷ்ஷாக குடித்து மகிழுங்கள்.கற்றாழையில் உடலுக்குத் தேவையான முக்கியமான எட்டு அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸôகக் குடிப்பது பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

Mar 30, 2024

கோடைக்காலத்தில் உடல் சூடு குறைய சுரைக்காய் சப்பாத்தி

 தேவையான பொருட்கள்: -அரைப்பதற்கு...சுரைக்காய் - 300 கிராம்,இஞ்சி -3 துண்டு,பூண்டு - 7-8,பச்சை மிளகாய் – 5,சீரகம் - 1 டீஸ்பூன்சப்பாத்திக்கு...கொத்தமல்லி – கையளவு,மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,உப்பு - சுவைக்கேற்பகோதுமை மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:-முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்சர் ஜாரில் சுரைக்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த சுரைக்காய் விழுதை சேர்த்து, அத்துடன் கொத்தமல்லி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, கோதுமை மாவு சேர்த்து, நீர் சேர்க்காமல் அப்படியே பிசைய வேண்டும்.சப்பாத்தி மாவை பிசைந்த பின், மாவு காய்ந்து போகாமல் இருக்க சிறிது எண்ணெய் தடவி மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த சப்பாத்தி மாவை சிறிது எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் தடவி முன்னும் பின்னும் அவ்வப்போது திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து சப்பாத்தி மாவையும் சப்பாத்திகளாக சுட்டு எடுத்தால், சுவையான சுரைக்காய் சப்பாத்தி தயார். சுரைக்காய் சப்பாத்தி சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இந்த சப்பாத்தியை கோடைக்காலத்தில் அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடல் சூடு குறையும். இந்த சப்பாத்திக்கு தேங்காய் சட்னி  சுவையாக  இருக்கும்.

Mar 30, 2024

நுங்கு பால்

தேவையான பொருட்கள்: - இளம் நுங்குகள் – 10 , பால் -2 cup , ஜீனி சுவைக்கேற்பசெய்முறை- இளம் நுங்குகள் எடுத்து அதன் தோலை எடுத்து துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் பரத்தி வைத்து ஆறிய பாலுடன் ஜீனி சுவைக்கேற்ப சேர்த்து ஊற்றி பிரிட்ஜில் வைத்து2 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.கோடை உஷ்ணத்தை தணிக்க நுங்கு மிகவும் சிறந்தது. அதிலிருந்து எடுக்கப்படும் பதநீர் உடல் சூட்டை வெகுவாகத் தணித்து உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும். கோடைக்காலத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலை உடலுக்குத் தரும்

Mar 30, 2024

தயிர்சாதம்

.தேவையான பொருட்கள்1கப் அரிசி2 டம்ளர் பால் 2 ஸ்பூன் தயிர்தேவையானஅளவு உப்பு 1 கப் மாதுளம் பழம் 2 ஸ்பூன் திராட்சை2 பேரிச்சம்பழம்2 வெங்காயம்1 கொத்து கருவேப்பிலை1 கொத்து கொத்தமல்லி தழைஒருகப்  அரிசிக்கு4 கப்தண்ணி ஊத்தி ,அரிசியை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். சாதம் நன்றாக ஆறியவுடன்,பால்சேர்த்து மத்தினால் நன்றாக கடைந்து, பிசைந்து பால் சேர்க்கவும், தாளிக்க-கடுகு பெருங்காயம்,வெங்காயம், இதைமட்டும் தாளித்துகூட கருவேப்பிலையும்கொத்தமல்லியும் சாதத்தில்கொட்டவும். தேவையானஅளவு உப்புபோட்டு, இரண்டுஸ்பூன் தயிர்சேர்த்து நன்றாகபிசைந்து.மாதுளம் பழம்,திராட்சை, பேரிச்சம்பழம்நறுக்கியது, அனைத்தையும்எடுத்து,தயிர் சாதத்தில்கலந்து,பிரிட்ஜில் வைத்து2 மணி நேரம் கழித்து பரிமாறவும்

Mar 23, 2024

நிலக்கடலை கூழ்

தேவையான பொருட்கள் - நிலக்கடலை 1 கைப்பிடி அளவு, வாழைப்பழம் 1, பேரீட்சைப்பழம் 5 எண்ணிக்கை, தேன் சிறிதளவு, முந்திரி தேவையான அளவு, தேங்காய் துருவல் 3 ஸ்பூன்.செய்முறை - நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து, சுத்தமாக கழுவி அதனுடன் வாழைப்பழம், பேரீச்சம்பழம், தேன். உடைத்த முந்திரி, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ,மிக்ஸியில் அரைத்தால்,சத்தானமிக்ஸ்ரெடி.ஆப்பிளுக்குபதிலாகசப்போட்டா,மாம்பழம்,கொய்யா,சேர்த்துக்கொள்ளலாம்.வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பசி அடங்கும். புத்துணர்ச்சி தரும். 

Mar 23, 2024

பேரீச்சை டிலைட்

தேவையான பொருட்கள் - பேரீட்சைப்பழம் 50 கிராம், தேங்காய் பால் 1 டம்ளர், ஐஸ் சிறிதளவு, ஆப்பிள் ஒன்று.செய்முறை - கொட்டை நீக்கிய பேரீச்சை, ஆப்பிள் இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின்னர் தேங்காய் பால் சேர்த்து, நுரை பொங்க மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். விரும்பினால் ஐஸ் கட்டி சேர்த்து குடிக்கலாம்.பேரீட்சை இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸ் செய்து பருகலாம். அனைத்து வயதினருக்கும் இது மிகச் சிறந்தது. 

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News