25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Feb 17, 2024

அவல் பிரியாணி

 தேவையான பொருட்கள் -  அவல் கால் கிலோ, உருளைக் கிழங்கு 100 கிராம், காரட் 100 கிராம்,  பச்சைப்பட்டாணி 50 கிராம், பல்லாரி 2, தக்காளி 1, தேங்காய் 1 மூடி, இஞ்சி சிறிதளவு, பட்டை சோம்பு சிறிதளவு, உப்பு தேவையான அளவு, பச்சை மிளகாய் 5.செய்முறை -  ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இறக்கி அதில் அவலைப் போடவும். உருளைக் கிழங்கு, காரட், பட்டாணி வேக வைக்கவும். தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, பல்லாரி, தக்காளி வதக்கி பின் அவலைப் போட்டு வதக்கி அரைத்த விழுதையும் போட்டுக் கிளறி உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

Feb 17, 2024

சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள் -  ஆட்டுக்கறி 200 கிராம், சேமியா 200 கிராம், டால்டா 100 கிராம், தக்காளி 250 கிராம், பெரிய வெங்காயம் 3, பச்சை மிளகாய் 4, மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி, கொத்தமல்லித்தூள் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல், பட்டை கிராம்பு சிறிது, ஏலக்காய் 5, உப்பு தேவையான அளவுசெய்முறை  - முதலில் கறியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஆகியவற்றை அம்மியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிப்பழம், ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் டால்டாவை ஊற்றி அடுப்பில் வைக்கவும். டால்டா காய்ந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொண்டு பின் தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.நன்றாக வதக்கி நறுக்கி வைத்துள்ள கறியைப் போட்டு கிளறி, அதனுடன் அரைத்த இஞ்சியை போட்டு கிளறி வதக்கவும். மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள், உப்பு இவைகளைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். கறி நன்றாக வெந்ததும் சேமியாவைப் போட்டு கிளறி மூடி வைக்கவும். சேமியா வெந்து,வற்றி வருகையில் இறக்கி வைக்க வேண்டும். இதுவே சேமியா பிரியாணி. இது சாப்பிட சுவையாக இருக்கும்.

Feb 10, 2024

பீட்ரூட்  கொழுக்கட்டை ( மோதகம் )

தேவையான பொருட்கள்- பச்சரிசி மாவு- 2 கப் ,பீட்ரூட்- 1, வெல்லம்- கால் கிலோ ,கடலைப்பருப்பு- ஒரு கப் தேங்காய் துருவல், 1 கப் ஏலக்காய்- ஒரு ஸ்பூன் செய்முறை: முதலில் பீட்ருட்டை தோலை நீக்கி விட்டு கழுவி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள பீட்ருட் விழுதை வடிகட்டி எடுக்க வேண்டும். வடிகட்டிய பீட்ருட் சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து கடலைப்பருப்பை கழுவி விட்டு குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும்.கடலைப்பருப்பு வேகும் நேரத்திற்குள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள பீட்ருட் சாரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.பீட்ருட் சாறு கொதித்து வரும் பொழுது அதில் எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கைவிடாமல் கலந்து விட வேண்டும்.மாவு நன்றாக கெட்டி பதத்திற்கு வந்த பிறகு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில்வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து தெளித்து நன்றாக கிளறி விட வேண்டும். வெல்லம் பாகு பதத்திற்கு வந்த பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.குக்கரில் வேகவைத்த கடலைப்பருப்பு நன்றாக மசியும் படி வெந்த பிறகு அதை தேங்காய் துருவல் கலந்த பாகில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்பூரணம் நன்றாக கெட்டியாக வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு மோதக அச்சில் பீட்ருட் கலந்த மாவை சேர்த்து நன்றாக மோதகம் போல் செய்து அதற்குள்இந்த கடலைப்பருப்பு தேங்காய் பூரணத்தை வைத்து மூட வேண்டும். கொழுக்கட்டை செய்தபிறகு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பீட்ருட் கொழுக்கட்டை மோதகம் தயார்.

Feb 10, 2024

ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை

செய்முறை:ஓட்ஸ்- 1 கப்பச்சரிசிமாவு- 1 கப்தேங்காய்த்துருவல்- 1/4 கப்உப்பு- தேவையான அளவுகாயம்- சிறிதளவுதாளிக்க:எண்ணெய்- 1 தேக்கரண்டிகடுகு- 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டிவெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டிகறிவேப்பிலை- 1 இணுக்குதூவ:மிளகாய்த்தூள்- சிறிதளவுமிளகுத்தூள்- சிறிதளவுஇட்லி மிளகாய்ப்பொடி- 1/2 தேக்கரண்டிசெய்முறை:1.மின்னரைப்பானில் ஓட்ஸைத் திரித்துக் கொள்ளவும்.2. திரித்த ஓட்ஸ், அரிசிமாவைப் பச்சை வாடைப் போக வதக்கிக் கொண்டு உப்பு, காயம் சேர்க்கவும்.3. வழக்கமாகக் கொழுக்கட்டைக்குச் செய்வது போல சுடுதண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு ஆக்கவும்.4. தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.5. அடுப்பை அணைத்து விட்டு சூடு லேசாக ஆறியதும் உருண்டைகள் ஆக்கவும்.6. இட்லிப்பானையில் தட்டுக்களில் எண்ணெய் தடவிக் கொழுக்கட்டைகளை அடுக்கவும்.7. ஆவியில் வேக விடவும்.8. அவை வெந்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.9. கொழுக்கட்டை தயாரானதும் ஓரிரு நிமிடங்கள் வெளியே வைத்து சூடு ஆற விடவும்.10. தாளித்தப் பொருட்களுடன் கொழுக்கட்டைகளைப் பிரட்டி எடுக்கவும்.11. அப்போது முப்பொடிகளைத்(மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி) தூவிப் பிரட்டவும்.12. மிகவும் ருசியாக இருக்கும் ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை. அம்மிணிக்கொழுக்கட்டையின் பாணியில் செய்வதால் ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை.

Feb 10, 2024

அவல் கொழுக்கட்டை

தேவையானவை:வெள்ளை அவல் அல்லது சிவப்பு அவல்- 2 டம்ளர்தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டிஉப்பு- தேவையான அளவுதண்ணீர்- சிறிதளவுதாளிக்க:நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு- 1 தேக்கரண்டிவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டிபச்சைமிளகாய்- 2காயம்- சிறிதளவுகறிவேப்பிலை- 1/2 இணுக்குசெய்முறை:1. அவலைத் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.2. ஊறிய அவலைக் கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துப் பிசையவும்3. அடுப்பை ஏற்றி வாணலியில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு மசித்த அவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்4. தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கி ஆற விட்டு உருண்டைகள் பிடித்து இட்லி குக்கரில் வேக விடவும்(மற்ற கொழுக்கட்டைகள், இட்லி போல அதிக நேரங்கள் வேக விடத் தேவையில்லை, ஐந்தே நிமிடங்கள் போதுமானது)5. கொழுக்கட்டைகள் வெந்ததும் தக்காளிச்சட்னி அல்லது புதினாச்சட்னியுடன் பரிமாறவும். மிளகாய்ப்பொடி கூட அருமையான இணை.6. வெங்காயம், கேரட் துருவிப் போட்டும் செய்யலாம்.7. வெறும் தண்ணீரில் ஊற வைக்காமல் புளித்தண்ணீரில் ஊற வைத்தால் புளி அவல் கொழுக்கட்டை, புளி நீரில்லாமல் மோரில் ஊற வைத்துச் செய்தால் மோர் அவல் கொழுக்கட்டை.

Feb 10, 2024

காரக்கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:பச்சரிசி மாவு- ஒரு கிண்ணம்காரப்பொடி- 1 தேக்கரண்டிதேங்காய்- 1/4 கிண்ணம்எண்ணெய்- 2 தேக்கரண்டிகடுகு- 1 டீஸ்பூன்வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்கறிவெப்பிலை- 1 இணுக்குகாயம்- 1/2 டீஸ்பூன்உப்பு- தேவையான அளவுசெய்முறை:1. பச்சரிசி மாவை ஒரு வாணலியில் பச்சை வாடை போக சிறிது வறுத்துக் கொள்ளவும்.2. வறுத்த மாவுடன் உப்பு, காயம், காரப்பொடி போட்டு கலந்து மிதமான தீயில் வதக்கவும்.3. 3/4 டம்ளர் நீரைச் சுட வைக்கவும்4. எண்ணெயில் கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சுடு நீருடன் சேர்க்கவும்.5. சுடு தண்ணீரை மாவுடன் சிறிது சிறிதாகக் கலக்கவும். துருவின தேங்காயைச் சேர்த்து நன்றாக மாவைக் கிளறவும்.6. மாவை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.7. மாலை நேரத்து சுவை மிகுந்த சிற்றுண்டி இது.சூடான சுவையான இவ்வகை காரக்கொழுக்கட்டைகள் எனக்கு உனக்கு என்று போட்டி போட்டபடியே வியாபாரம் ஆகும்.கூடுதல் கவனத்திற்கு:1. அதிகத் தண்ணீர் விட்டால் மாவு உருண்டைகள் பிடிக்க வராது.2. காரப்பொடியைப் பார்த்து அளவாகப் பயன்படுத்த வேண்டும்.3. தேங்காய் போட்டால் சீக்கிரம் கெட்டு விடும். பண்ணின சில மணி நேரங்களிலேயே சாப்பிட்டு விட வேண்டும்.

Feb 10, 2024

உளுத்தம் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – 3 டம்ளர்உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் (100 கிராம்)மிளகாய்வற்றல் – 6,தேங்காய் – கால்மூடிஉப்பு – தேவையான அளவு தாளிக்க:எண்ணெய் – 2 தேக்கரண்டிகடுகு – ஒரு தேக்கரண்டிஉளுந்து – ஒரு தேக்கரண்டிபச்சை மிளகாய் – 2இஞ்சி – ஒரு துண்டுகறிவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை: பூரணம் செய்ய: 1. உளுத்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து கொஞ்சம் நீர் சேர்த்து மிளகாய்வற்றலுடன் உப்பும் சேர்த்துக் கரகரப்பாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.2. அரைத்த உளுந்தை இட்லித்தட்டுகள் அல்லது மைக்ரோவேவ்வில்(5 நிமிடங்கள்) வேக விட்டு வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி உதிர்க்கவும்..3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பச்சைமிளகாய் சின்ன சின்னதாக நறுக்கி, இஞ்சி போட்டு தாளித்துக் கொள்ளவும்.4. பிறகு தாளித்ததில் உளுத்தம் மாவைக் கொட்டி கிளறி பொல பொல வென்று பூரணம் தயார் செய்யவும். உளுத்தம்மாவில் தேங்காய்த்துருவலையும் சேர்க்கவும். மேல்மாவு செய்ய: 1. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.2. பச்சரிசி மாவைப் பச்சை வாடை போக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி கொதித்தத் தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.3. பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டும் போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலைஅல்லது ஜிப்லாக் கவரில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும். கொழுக்கட்டை செய்ய:தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை நடுவில் வைத்து மாவை சமமாக மடித்து ஓரங்களை ஒட்டவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் கொழுக்கட்டைகளாகத் தயாரித்துக் கொள்ளவும். பிறகு இட்லி குக்கரில் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும். சுவையான, ஆரோக்கியமான உளுத்தம் கொழுக்கட்டை தயார். எலும்புகளைப் பலப்படுத்தும் உளுத்தம் கொழுக்கட்டையை மாதம் ஒரு முறையாவது செய்து வர வேண்டும்.வரலெட்சுமி நோன்பின் போதும் நவராத்திரி காலங்களிலும் இவ்வகைக் கொழுக்கட்டைகளை நைவேத்தியமாக்கிப் பிறருக்கும் வழங்கலாம்.

Feb 10, 2024

பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்அரிசி உருண்டைகளுக்கு:1½ கப் அரிசி மாவு , வறுத்தது1 டீஸ்பூன் நெய்¼ தேக்கரண்டி உப்பு1½ கப் சூடான நீர்கீருக்கு:3 கப் தண்ணீர்1 கப் பால்¾ கப் சர்க்கரை½ தேக்கரண்டி ஏலக்காய் தூள்        குங்குமப்பூ 1 pinch¾ கப் தேங்காய் பால் , கெட்டியானதுமுதலில், ஒரு பாத்திரத்தில் 1½ கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். வறுத்த மாவு அல்லது இடியாப்பம்  மாவு பயன்படுத்தவும்.1 தேக்கரண்டிநெய், ¼ தேக்கரண்டி உப்புசேர்த்து நன்குகலக்கவும்.இப்போது 1½ கப் சூடானநீரை  சேர்த்து நன்கு கலக்கவும்.மாவு ஈரமாக மாறும்வரை கலக்கவும்.மூடி 5 நிமிடங்கள் ஒதுக்கிவைக்கவும்..மென்மையான மற்றும்மென்மையான ஒட்டாத மாவாக பிசையவும்.இப்போது சிறிய பந்து அளவு உருண்டைகளை உருட்டி வைக்கவும்.ஒரு பெரிய கடாயில் 3 கப் தண்ணீர் எடுத்துகொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்ததும், தயார்செய்த அரிசி உருண்டைகளைச் சேர்க்கவும்.10 நிமிடங்கள்அல்லது அரிசி உருண்டைநன்றாக சமைக்கும் வரைகொதிக்க வைக்கவும்.மேலும், 1 கப் பால்சேர்த்து பால்சிறிது கெட்டியாகும் வரைகொதிக்க வைக்கவும்.மேலும் ¾ கப் சர்க்கரை, ½ தேக்கரண்டி ஏலக்காய்தூள் மற்றும்  குங்குமப்பூ சேர்க்கவும்.5 நிமிடங்கள்அல்லது எல்லாம் நன்றாக ஒன்றிணைந்து சுவைகள்உறிஞ்சப்படும் வரைகொதிக்க வைக்கவும்.தீயை அணைத்து ¾ கப்தேங்காய் பால்சேர்க்கவும். மெதுவாககலக்கவும்.

Feb 03, 2024

பூண்டு சூப்

தேவையான பொருட்கள் -  பூண்டு 8 பற்கள், ரொட்டி 8 துண்டுகள், எண்ணெய் 4 மேஜை கரண்டி, மிளகுத்தூள் 2 சிட்டிகை, பால் 50 மி .லி , வெண்ணெய் 10 கிராம், உப்பு 1 தேக்கரண்டி, தண்ணீர் 500 மில்லி லிட்டர்.செய்முறை  - ரொட்டியைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். பேக்கிங் ஓவெனில் வைக்கவும். வெண்ணையில் பூண்டு வறுத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூளைச் சேர்த்து உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும். தண்ணீரைக் கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும். ரொட்டித்துண்டுகளில் மேல் கொதிக்க வைத்த தண்ணீரை விட்டு 5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். பூண்டுத் துண்டுகளை எடுத்துவிட்டு அத்துடன் பாலைச் சேர்த்துக் கொள்ளவும். சூப்பை 10 நிமிடங்கள் வரை சூடான பேக்கிங் ஓவெனில் வைத்துபரிமாறவும். 

Feb 03, 2024

பாதாம்பருப்பு சூப்

 பொதுவான உடல் வளர்ச்சிக்கும், உடல் நல்ல உரம் பெறவும், இந்த சூப்உதவும். இந்த சூப்பைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களின் மேனியழகு அதிகமாகி மிகுந்த உடல் கவர்ச்சியைப் பெறுவார்கள்.தேவையான பொருட்கள்  - பாதாம் பருப்பு 50 கிராம், பீன்ஸ் 2, சிறுகீரை 1 கைப்பிடி, இஞ்சி 1 சிறிய துண்டு, வெண்ணெய் 10 கிராம், சோளமாவு 1 மேஜைகரண்டி, காரட் சிறியது 2, தக்காளி 2, உருளைக்கிழங்கு 2, லவங்கப்பட்டை1, மிளகு 1 சிறிதளவு, உப்பு தேவைக்கு,செய்முறை -  பாதாம் பருப்பைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டுத் தோலை உரிக்கவும். வெண்ணெய் போல அரைத்துக் கொள்ளவும். காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும், வெங்காயத்தையும், இஞ்சியையும் பொடியாக நறுக்கவும். மிளகு, உப்பு, பொடி செய்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெண்ணையைப் போடவும் ,உருகியதும் லவங்கப்பட்டை, வெங்காயம் இரண்டையும் போட்டு வதக்கவும், வதங்கியதும், மாவைப் போட்டு இரண்டு லிட்டர் தண்ணீர் விடவும். சிறிது நேரம் கழித்து காய்களையும், அரைத்த பாதாம் விழுதையும் போட்டுக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து எல்லாம் வெந்து கரைந்து தண்ணீர் பாதியாகச் சுண்டியதும், மிளகு, உப்பு பொடியைப் போட்டுக் கிளறி இறக்கிவிடவும், சற்று ஆறியபின் பருகலாம். 

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News