25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கேழ்வரகு கூழ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேழ்வரகு கூழ்

 கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகி உடலுக்கு பல அற்புத நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கிய தானியமாகும். இவற்றில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் கேழ்வரகு முக்கிய உணவாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 10 ஸ்பூன்
தண்ணீர் - 1 லிட்டர்
உப்பு - தேவைக்கேற்ப

கூடுதல் சுவைக்கு:

தயிர் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்

செய்முறை-முதலில் ஒரு பாத்திரம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.கேப்பை மாவை எடுத்து அதில்1/2cup தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.கொதித்து வரும் தண்ணீரில் அவற்றை சேர்த்து கரண்டி கொண்டு கிளற ஆரம்பிக்கவும்.நாம் சேர்த்த மாவு பால் போன்று பொங்கி வரும். இந்த நேரத்தில் அதிக சூட்டில் வைத்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.மாவு நன்கு கொதித்து வரும் நேரத்தில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளவும்.10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்த பிறகு, கேப்பை மாவு நல்ல வாசனை வரும். அப்போது நாம் அடுப்பை அனைத்து கொள்ளலாம்.

தயாரான கேழ்வரகு கூழை நாம் அப்படியே ஆற வைத்து பருகலாம்.அவற்றுக்கு கூடுதல் சுவை கொடுக்க நாம் சில பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.கூடுதல் சுவைக்கு என நாம் எடுத்து வைத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும். அவற்றை சேர்க்கும்போது நன்றாக கிளறிக்கொள்ளவும்

இதை முதல் நாள் இரவு தயாரித்து ,மறுநாள் உபயோகிக்கவும். இத்துடன் வேக வைத்த சாதம்1 கைப்பிடி, அல்லது வேகவைத்த கோதுமை குருணை சிறிதளவு, சேர்த்து மோர் ஊற்றி குடிக்கலாம். சத்தான மற்றும் சுவையான கேழ்வரகு கூழ் தயார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News