25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆரோக்கியம்

May 20, 2026

மூளையை ‘ரீசெட்' செய்ய....

.எப்போதும் போனும் கையுமாகத் தலைகுனிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனிதர்களுக்கு, டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளனர். தொடர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால், பலருக்குக் கவனச்சிதறல் (Focus) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெறும் 2 வாரங்கள் மட்டும் இன்டர்நெட் பயன்பாட்டை முழுமையாக நிறுத்தினால், மூளை புத்துணர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே செயல்திறனையும் ஆற்றலையும் மீண்டும் பெறும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.டிஜிட்டல் உலகத்திலிருந்து,சற்றுவிலகிஇருப்பதுஉங்கள்மூளையை ‘ரீசெட்' செய்ய உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்

May 19, 2026

தூக்கத்தில் குறட்டை .

தூக்கத்தில் குறட்டை என்பது ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறி அல்ல. அது சுவாசக் குழாயில் தடையிருப்பதற்கான அறிகுறியாகும். இதனால் மூளைக்கு கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்து விடுகிறது. இது 100% ஆபத்தானதாக இருக்கலாம், ஏனெனில் இது இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது உடல் தரும் ஒரு எச்சரிக்கை. அதை புறக்கணிப்பது உடல்நலத்திற்கு ஆபத்தானது.தூங்கும்போது அதிகமாக குரல் எழுவது சுவாசக் குழாயில் தடையிருக்கலாம் என்பதற்கான அறிகுறி. இதனால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குறைந்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்.

May 18, 2026

பெண்களை தாக்கும் saree cancer.

இந்தியப் பெண்களிடையே இடுப்புப் பகுதியில் ஏற்படும் ஒரு வகை தோல் புற்றுநோய் (Squamous Cell Carcinoma) குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சேலை அல்லது பாவாடையின் கயிற்றை (Nada) நீண்ட காலமாக ஒரே இடத்தில் இறுக்கமாகக் கட்டுவதால் ஏற்படும் உராய்வு மற்றும் வியர்வை காரணமாக இப்புற்றுநோய் உருவாகிறது. இடுப்பில் கருப்புத் தழும்பு அல்லது ஆறாத புண் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். கயிற்றுக்குப் பதில் அகலமான பெல்ட் பயன்படுத்துவது மற்றும் இறுக்கத்தைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

May 16, 2026

”தாகம் எடுக்கும் வரை காத்திருக்காதீங்க!”

கோடைக்காலத்தில் தாகம் இல்லாவிட்டாலும், அதிக தண்ணீர் குடிப்பது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமாகும். வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைசுற்றல், சோர்வு மற்றும் நீரிழப்பு (Dehydration) போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ,உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுவதுடன் சருமத்தையும் ஈரப்பதமாக வைத்திருக்கும். ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது ,2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

May 14, 2026

தண்ணீர் குடித்தால் தொப்பை,கொழுப்பு படியாது.

.ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.அப்போது தான் உடல் வறட்சியில்லாமல் இருக்கும் அதோடு உடலில் தங்கியிருக்கும்நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அது, மட்டுமன்றி சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் வறட்சி ஏற்படாது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால், வயிற்றைச் சுற்றி கொழுப்பு படியாது..

May 13, 2026

நுங்கு 

நுங்கில் 'ஆந்த்யூசைன்’ என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

May 11, 2026

ஒற்றைத் தலைவலியைவிரட்ட.......

'மைக்ரேன்' எனப்படும் ஒற் றைத் தலைவலியானது இளவய தினருக்கு வரும் நோய். இதன் தாக்கத்தை குறைக்க யோகா பயிற்சி செய்யலாம். விகிதாச்சார கணக்கு படி மாத்திரைகளால் வரும் பயனை விட யோகாவினால் வரும் பயன் அதிகமென்பது ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தியானப்பயிற்சியும் பயன்தரும் ஒருமுறை. சரியான நேரத்தில் உணவும் உறக்கமும் தேவை. தினமும் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்ய லாம். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும். அதிகமாக கவலைப்படுவதையும் மன உளைச்சலையும் தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட பொருட் களை தவிர்க்க வேண்டும். பாட் டிலில் அடைத்து விற்கப்படும் பழபானங்கள், துரிதஉணவுகள், இறைச்சி வகைகள் நீண்ட நாட் கள் கெடாமல் இருக்கும் வகை யில் செயற்கை'ப்ரிசர்வேடிவ்' சேர்க்கப்படுவதால் இவற்றை தவிர்க்க வேண்டும். இவை ஒற் றைத் தலைவலியை அதிகரிக்கும் தன்மையுடையது. தலைவலி அதி கமாக இருந்தால் சில நாட்களுக்கு சாக்லெட், ஐஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.

May 08, 2026

ஆரோக்கியம் நிறைந்த காலிபிளவர் ...

நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் காலிபிளவர் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்ததுமாகும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.காலிபிளவர் பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இருக்கிறது. ஒரு சில இடங்களில் இந்த காயானது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் இருக்கிறது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வகை காலிஃப்ளவரும் அதற்கென்று தனித்துவமான பயன்களைக் கொண்டிருக்கின்றன.காலிபிளவரில் உள்ள அதிகப்படியான நார்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றன.வைட்டமின் சி மற்றும் கே நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுப்பெறவும் இது உதவுகிறது. செரிமான மேம்பாடு, உடல் எடை குறைப்பு, புற்றுநோய் எதிர்ப்பு உணவுகள், வைட்டமின் சி சத்து,குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறி என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதனை தாராளமாக உட்கொள்ளலாம். இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள'சல்பராபேன்' என்ற சத்து ரத்த அழுத்தத்தை குறைத்து இதய தமனிகளை பாதுகாக்கிறது. மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் தேவையான'கோலின்' சத்து இதில் ஏராளமாக உள்ளது. 

May 07, 2026

சத்து நிறைந்த ரொட்டி.

பழங்காலத்தில் இருந்தே ரொட்டி பல்வேறு நாடுகளில் ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. பொதுவாக ரொட்டி வகை உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கருதப்படு கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்க ளுக்கு ரொட்டி மற்றும் வாழைப்பழம் தரும் வழக்கம் இருந்தது.உலக நாடுகளில் பல்வேறு வகையான ரொட்டிகள் இருந்தாலும், சவுர்டாப் ரொட்டி சத்து நிறைந்த மற்றும் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ரொட்டி என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது கோதுமை மாவு, தண்ணீர் கலந்து இயற்கை நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. சிறிது புளிப்பு சுவை கொண்ட ரொட்டி வகை ஆகும். இதனால், தனித்துவமான மென்மையான ஒரு தன்மையை கொண்டுள்ளது. மேலும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காமல், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை மிக மெதுவாக ஏறுகிறது. இதனால், ரத்த சர்க்கரை ஏற்ற, இறக்கம் குறைவாக நீடித்து உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. குடல் நுண்ணுயிரிகளை பெருக்கி குடலில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உடலால் எளிதாக உறிஞ்ச உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த ரொட்டியில் பல நன்மைகள் இருந்தாலும் வயிறு தொடர்பான பாதிப்புகள் இருந்தால், டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று குறிப்பிட்ட அளவு தினமும் உட்கொள்வது நல்லது என்று கூறுகின்றனர். 

May 06, 2026

ஆரோக்கியமாக இருக்க விரும்பினால்.....

 படுக்கையில் செல்போன் பயன்படுத்துவது - உங்கள் தூக்கத்தை கெடுக்கும். காலியான வயிற்றில் காபி குடிப்பது - ஜீரணத்திற்கு விஷம் போன்றது. தினமும் மிகவும் சூடான நீரில் குளிப்பது - உங்கள் தோல உலரச் செய்கிறது. எப்போதும் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பது - மைக்ரோபிளாஸ்டிக் நிறைந்திருக்கலாம். ஒரு போதும் காலில் செருப்பு இல்லாமல் நடக்காதது -தசைகள் மற்றும் உடல் நிலைப்பாட்டிற்கு (posture) பாதகம். மிகவும் குறைந்த சூரிய ஒளி -வைட்டமின் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை - உங்கள் உடல் உறுப்புகளுக்கு மெதுவான அழிவு.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 35 36

AD's



More News