மத்திய ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீகப் பகுதியான ஈரானில்,10ம் நுாற்றாண்டில், முதன்முதலில் கேரட் அறிமுகமானது. அங்கிருந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என, உலகெங்கிலும் பரவியது.ஆரம்பத்தில் ஊதா, மஞ்சள், வெள்ளை நிறத்திலேயே கேரட்கள் இருந்தன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள விவசாயிகள், 16ம் நுாற்றாண்டில் அறிமுகப்படுத்திய ஆரஞ்சு நிற கேரட்கள், தற்போது உலகம் முழுவதும் பரவலான புழக்கத்தில் உள்ளன.கேரட்டில், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, கே,நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. கண் பார்வை, தோல், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கேரட் உதவுகிறது. குறைந்த கலோரி, கொழுப்பு இருப்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மாலைக்கண் நோயை குணப்படுத்தும் மாமருந்தெனவும் போற்றப்படுகிறது.கேரட்டில் அதிக அளவு பீட்டா-கரோட்டின் (Beta-carotene) மற்றும் வைட்டமின் A உள்ளது, இது மாலைக்கண் நோய் வராமல் தடுத்து, கண்பார்வையை கூர்மையாக்குகிறது.கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும், இளமையுடன் இருக்கவும் உதவுகின்றன.கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தத்தை (Blood Pressure) சீராக வைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.நார்ச்சத்து (Fiber) அதிகமாக இருப்பதால், செரிமான கோளாறுகளை சரிசெய்து, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக கேரட் பயன்படுகிறது.கேரட்டில் உள்ள வைட்டமின் C மற்றும் பிற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. கேரட் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து இரவு பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது, தினமும் கேரட்டை தவறாமல் சாப்பிட்டால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் வைட்டமின் சி எலும்புகளை வலுவாக்கும்.இதில் அதிகளவில் பொட்டாசியம் நார்ச்சத்து உள்ளன மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.கேரட் சாறுடன் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடித்தால் வாயுத்தொல்லை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.சாலட், சூப், அல்வா, கேக் மற்றும் புட்டிங் போன்ற பல உணவு வகைகளில்கேரட் பயன்படுத்தப்படுகிறது.
வெறுங்கால் நடை ,இயற்கையான ஒரு மனிதனின் நடையை மீட்டெடுத்து, கால் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுவதுடன், இடுப்பு, முழங்கால்கள் இலகுவாக இயங்க உதவுகிறது என்றும் கூறுகின்றனர்.நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப் பிடிக்க தொடங்கி உள்ளனர்.மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது. நமது செல்கள் மின் தூண்டுதல்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகின்றன. நரம்பு மண்டலம் உடல் முழுவதும் மற்றும் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்ப மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் நாம் சிந்திக்கவும், நகரவும், உணரவும் முடியும். ஓய்வெடுக்கும் செல்கள் உட்புறமாக எதிர்மறையாக மின்னூட்டம் பெற்றிருந்தாலும், வெளிப்புற செல் சூழல் நேர்மறையாக மின்னூட்டம் ,இதன் பின்னணியில் ஒரு எளிய அறிவியல் உள்ளது என் றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமி ஒரு எதிர்மறை மின்னூட்டம் என்ற நெகடிவ் மின்னூட்டம் கொண்டுள்ளது.மனிதனின் கால்கள் நிலத்தில் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தும் போது, பூமியை அழுத்துவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான நேர்மறை மின்னூட்டம் சமநிலை அடைந்து உடலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆய்வுகளில் நிலத்தில் வெறுங்கால்களால் நடப்பதன் மூலம், மன அழுத்தம், ரத்த அழுத்தம் குறைந்து, உடல் ஆற்றல் அதிகரிக்கிறது என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. காலணிகள் இன்றி நிலத்தில் நடப்பது பல்வேறு கிருமிகள் உடலில் தொற்றி உடல் நலனை பாதிக்கும் என்றும் பல்வேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். இயற்கை மருத்துவர்கள் புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது. இது நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் என்றும் கூறுகின்றனர்.
செவ்வாழை கண்கள் அத்தனை சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் நீக்குகிறது.செவ்வாழையில், வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச்சத்து. பொட்டாஷியம் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துகள் உள்ளன. இதனால், சிறுநீரகங்களில் கற்களை சேர விடாமல் தடுக்கிறது.நம்மிடமேசெவ்வாழை, ரத்தஅழுத்தத்தைகட்டுப்படுத்துகிறது.இதனால்,இதயநோய்களைஎளிதில்நம்மிடம்அண்டவிடுவதில்லை. நுரையீரல், கல்லீரல், இதயம், குடல்போன்றமுக்கியஉடலுறுப்புகளின்செயல்பாட்டிற்கு, செவ்வாழை உதவுகிறது. நம்முடைய குடலில், நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை, 10 மடங்கு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மலச்சிக்கலை போக்கக்கூடியது உடல் எடை சீராக வைக்கவும் உதவுகிறது.செவ்வாழையை சிறிதாக நறுக்கி, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலே, கண்களிலுள்ள உஷ்ணம் நீங்கி விடும். அதேபோல, மாலைக்கண் நோயால் அவதிப்படுபவர்கள், இரவு உணவிற்கு பின், தொடர்ந்து, 40 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தாலேநிவாரணம் கிடைக்கும்.தினமும், ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்ட தோல் பிரச்னைகள் தீரும்.வாரம் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள தொற்று நோய் பாதிப்புகளும் தீரும், அந்த அளவுக்கு கிருமிகளை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி, செவ்வாழைக்கு உள்ளது.ஒரு நாளைக்கு, இரண்டு செவ்வாழை வீதம், 48 நாட்கள் சாப்பிட்டு வர, ஆண்மைக் கோளாறுகள் நீங்கி விடும்.செவ்வாழையில், கால்ஷியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், பற்களுக்கு மிகவும் வலு தருகிறது. பலவீனமான பற்கள் இருந்தாலோ அல்லது பல் ஆடுவது போல இருந்தாலோ, ஈறுகள் பலவீனமாக இருந்தாலோ, அத்தனைக்கும் செவ்வாழை மருந்தாகிறது. எனவே, தொடர்ந்து, 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள்முற்றிலும் தீரும்.வாழைப்பழத்தில் பொட்டாஷியம் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுத்து விடுகிறது. ஏற்கனவே, சிறுநீரக கற்கள் பிரச்னை இருப்பவர்களும் செவ்வாழையை வாரம், இரண்டு முறை சாப்பிடுவது நல்லது.
கத்திரிக்காயில் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கிறது.கத்திரிக்காய் கருப்பு, ஊதா, வெள்ளை என பல நிறங்களிலும் கடைகளில் கிடைக்கிறது. அதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியிருக்கிறது.வைட்டமின்C,வைட்டமின்A,வைட்டமின்E, வைட்டமின்K மற்றும் வைட்டமின்B காம்ப்ளக்ஸ் போன்றவை உள்ளன.கத்திரிக்காயில் வைட்டமின் அதிகமாக இருக்கும் காரணத்தால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினை போக்கும்.இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (Polyphenols) உள்ளன, இது செல்களின் சேதத்தைத் தடுக்கிறது.பிஞ்சு கத்திரிக்காய் சாப்பிட்டால் வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய், சளி, கீழ்வாதம், பித்தம், மலச்சிக்கல், தொண்டைக்கட்டு, உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் போக்கும்.கத்திரிக்காயில் வைட்டமின் பி அதிக அளவு உள்ளதால் நாம் உண்ணும் உணவு விரைவாகவே சத்தாக மாற அது உதவுகிறது.பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன.இதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.உடலில் அரிப்பு ஏற்படும் என்பதற்காக முத்திய கத்திரிக்காயை முற்றிலுமாகவே தவிர்க்க முடியாது ஏனெனில் முத்திய கத்திரிக்காயில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் உடலின் வளர்ச்சிக்கு அது பயன்படும்.கத்திரிக்காய் கண் பார்வை திறனை அதிகரிக்கும்.இரத்தஅழுத்தத்தைசீராகவைத்து,இதயநோய்அபாயத்தைக்குறைக்கஉதவுகிறது.அதேநேரம் உடலில் சொறி சிரங்கு புண் உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.அதேபோல் கத்தரிக்காய் வற்றல் சாப்பிட்டால் உடம்பு சூடாகும். மேலும், கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும் என பலரும் நினைக்கிறார்கள்.உண்மையில் முத்திய பெரிய கத்திரிக்காய் சாப்பிட்டால் மட்டுமே அந்த பிரச்சினை வரும்.பிஞ்சு கத்தரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு நன்மையே தரும்.
சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல, உடலில் நாம் செய்யும் வாழ்வியல் தவறினால் இன்சுலின் சுரப்பதில் சில மாற்றங்கள் நிகழும் அதை நம் உணவின் ரீதியாக இயற்கை வாழ்வியல் ரீதியாக சரி செய்து கொள்ளலாம்.மருந்து, மாத்திரைகள் எடுக்கும் போது காலத்திற்கும் அது உடலில் நோயாக மாறுகிறது. இதுவே மறைக்கப்பட்ட உண்மை.மருந்து, மாத்திரை,ஊசி தேவையில்லை, தினமும் அருகம்புல் சாருடன் மூன்று மிளகு சேர்த்து,48 நாட்கள் குடித்து வந்தால், சர்க்கரை நோய் முழுவதுமாக குணமாகிவிடும்.இதனுடன் ஆவாரம் பூ தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தினமும் ஒரு வேலை குடிக்கவும்.காலையில் இஞ்சி(தோல் நீக்கவும்), மதியம் சாப்பாடு வடித்த கஞ்சியில் ஒரு ஸ்பூன் சுக்கு பொடி, மாலை வெந்நீரில் கடுக்காய் தூள் எடுத்துக்கொள்ளவும்.
ஒரு நாளில் 5-10 நிமிடங்கள் நடந்து நிறுத்துவதை விட ஒரே நேரத்தில் தொடர்ந்து நடப்பது தான் உங்கள் உடலுக்குஉண்மையான பலன் தருகிறது.தொடர்ந்து நடக்கும் போது இதயம் சீராகவும்,வலுவாகவும் வேலை செய்யும்.தசைகள் உறுதியாகும் .ரத்த ஓட்டம் மேம்படும்.இடைவிடாத நடை, இதய நோய் அபாயத்தை குறைக்கும்.திடீர் மரண ஆபத்தை குறைக்கும்.உடலுக்கு உண்மையானகார்டியோ பயிற்சி கிடைக்கும்.சின்ன சின்ன நடைகள் உடலை அசைக்குமே தவிர,உடலை மாற்றாது.இன்று முதல் 30-40 நிமிடம் இடைவிடாது தொடர்ந்து நடக்க, உங்கள் நடை உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கும்.
கோடை காலங்களில் உடலில் உஷ்ணம் சேர்த்து விடும். அதனால் நீர்ச்சத்து குறைத்துவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பது, இளநீர் குடிப்பது மோர் சாப்பிடுவது, எறுமிச்சை சாறு தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்கும்.வெயில் காலத்தில் சிவருக்கு மஞ்சள் காமாலை நோய் வர வாய்ப்புண்டு.எனவே அதை தவிர்ப்பதற்காக காய்ச்சிய நீரை பருகலாம்.வெயில் காலத்தில் பலருக்கும் சரும் நோய்கள் வரும். எனவே அதை தவிர்பதற்காக மெல்லிய பருத்தி ஆடைகளை அணியலாம்.கோடை காலத்தில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால் சமைத்தவுடன் சாப்பிடுவது நல்லது.வெயில் காலங்களில் கண் தொடர்பான நோய்கள் நிறைய வரும். எனவே குளிர்ந்த நீரில் கண்களை கழுவு வேண்டும். அதேபோல் வெயிலில் செல்ல நேரிடும் போது சன் கிளாஸ் அணியலாம்.அதேபோல் , மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்தால் அந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
மூட்டு வலி பலருக்கும்40 வயதை தாண்டிவிட்டாலே வந்து விடுகிறது. முட்டி தேய்ந்து விடுவதால்60 வயதை தாண்டிய பலருக்கும் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படுகிறது. இதற்காக பல லட்சத்தை கூட செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே மூட்டு வலி வராமல் இருக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களான சால்மன், மத்தி போன்ற உணவுகளை சாப்பிடலாம்.இஞ்சி, மஞ்சள், பூண்டு நட்ஸ் விதைகள் மற்றும் விட்டமின் சி நிறைந்த பழங்கள் நல்லது.அதேபோல் ஆலிவ் எண்ணெய், பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம் நிறைந்த பால் கலந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.. இவை அனைத்தும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.அதேபோல் பீன்ஸ், எலும்பு சூப் ஆகியவையும் மூட்டுக்கு நல்லது.குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்கள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.பெர்ரிகள், கீரை, கேல் என்று அழைக்கப்படும் பரட்டைக்கீரை, குடைமிளகாய் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளன. இவை மூட்டு திசுக்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கின்றன. எனவே, தினமும் பழங்களின் கலவை அல்லது காய்கறிகளை எடுத்துக் கொள்வது மூட்டுகளின் நெகிழ்வை பாதுகாக்க உதவும்.போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மூட்டுகளுக்கான இயற்கையான மெழுகாக செயல்படுகிறது. அதாவது, தண்ணீர் குடிப்பது மூட்டுகளை மென்மையாக்கி, இயக்கத்தைக் கடினமாக்குவதை தடுக்கிறது.இடுப்பு, முழங்கால் போன்ற உடல் எடையை தாங்கும் மூட்டுகளில் அழுத்தம் குறைய இது அவசியமாகும். ஆரோக்கியமான உடல் எடை என்பதும், மூட்டு வலியைத் தடுக்க உதவுகிறது.
கருப்பு உளுந்து/ கருப்பு மூக்கடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு முளைக்கட்டி உண்டால் பலன்100% அல்லது அவித்து உண்டால் பலன்70%உடலுக்கு அதிகப்படியான சக்தி தரும் போர் வீரர்கள் போல பலம் கிடைக்கும் தசைகள்(muscles) வலுப்படும் உடல் சோர்வு குறையும்.கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளது மூட்டு வலி, முதுகு வலி குறைய உதவும் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.இரும்புச்சத்து (Iron) அதிகம்.ரத்த சோகை (Anemia) தடுக்கும்.ஆண்களுக்கு உடல் பலம், உறுதி அதிகரிக்கும்.பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை.இடுப்பு சார்ந்த பிரச்சைைனகள், மாதவிலக்கு கோளாறுகள் சரியாகும்.நார்சாத்து (Fiber) அதிகம்.மலச்சிக்கல் பிரச்சனை குறையும் குடல் சுத்தமாக இருக்கும்.நீண்ட நேரம் பசி வராது, உடல் எடை குறைக்க உதவும்.ஒரு வாரத்தில் பெரிய மாற்றத்தை உடலில் பார்ப்பீர்கள்.
வெள்ளரிக்காய்கோடைக்கு இயற்கை கொடுத்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்று.வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவில் இருக்கும் வெள்ளரிக்காயில், கொழுப்பு சத்து மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதிகளவில் தண்ணீர் சத்து இருப்பதால், உடல் உஷ்ணத்தை நீக்கி, குளிர வைக்கிறது.கோடை காலத்தில் ஏற்படும் தாகம், வறட்சி போன்றவற்றையும், வயிற்று உபாதைகளையும் போக்கும். வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவது தான் சிறந்தது. வெள்ளரிக்காயை அரைத்து உடலில் தேய்த்து குளித்தால்,உடலின் நிறம் மாறும்.கோடை காலத்தில் முகத்தில் தோன்றும் முகப்பரு மற்றும் சிறு வேனல் கட்டிகள் போன்றவற்றை வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் சென்றதும், நீரால் கழுவினாலே போதும். அவை உதிர்ந்து விடும்.தோல் சீவாமல், வெள்ளரிக்காயை வட்டமான வில்லைகள் செய்து, ஒரு வில்லையின் மேல் தக்காளி அதன் மேல் ஒரு வில்லை வெங்காயம் வைத்து, மிளகுத்துகளையும் கலந்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும். வெள்ளரிக்காயை பச்சையாக தோலோடு உண்பது தான் பலன் தரும்.பிஞ்சு வெள்ளரிக்காயாக பார்த்து வாங்க வேண்டும். கோடை காலத்தில் வியர்வை வெளியேறி நாம் சோர்வாக இருக்கும் போது, ஒரு வெள்ளரி பிஞ்சை சாப்பிட்டாலே போதும், இழந்த சக்தியை மீட்டெடுக்கலாம்.வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். கோடைக்கு மிகவும் குளுமை தரும்.குறைந்த விலையில் கிடைத்தாலும், கோடைக்கு ஏற்றது.