தாத்தா வைத்த தென்னையுமே, தலையால் இளநீர் தருகிறது. பாட்டி வைத்த கொய்யாவும் ,பழங்கள் நிறையக் கொடுக்கிறது. அப்பா வைத்த மாஞ்செடியோ, அல்வா போலப் பழம் தருது. அம்மா வைத்த முருங்கையுமே, அளவில்லாமல் காய்க்கிறது. அண்ணன் வைத்த மாதுளையோ, கிண்ணம் போல பழுக்கிறது. சின்னஞ் சிறுவன் நானும் ஒரு செடியை நட்டு வளர்ப்பேனே!
ஆர்.எஸ்.எஸ்.நூற்றாண்டுவிழாவைமுன்னிட்டு பிரதமர் மோடி நாணயம் வெளியிடப்பட்ட, இந்திய நாணயத்தில் பாரதமாதா படம் இடம் பெற்றது. ”இது ஒவ்வொரு பாரததேச குடிமகனுக்கும் பெருமை" என்றார் பிரதமர் மோடி
.2025 ஆசிய கோப்பையில் தனது அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த அபிஷேக் சர்மா, போட்டியின் வீரருக்கான விருதை சரியாகப் பெற்றார். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக, அவருக்கு ஒரு பிரீமியம் மற்றும் சக்திவாய்ந்த ஹவல் H9 SUV பரிசாக வழங்கப்பட்டது. ஹவல்H9 அதன் கரடுமுரடான நல்ல தோற்றத்திற்கும், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவைக்கும் பெயர் பெற்றது, இது ஒரு ஆடம்பர ஆஃப்ரோடிங்SUV ஆக நிலைநிறுத்தப்படுகிறது.4,950 மிமீ நீளம் கொண்ட இந்த பெரியSUV, ஒரு சிறந்த ஆஃப்ரோடு ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுகடினமான நிலப்பரப்பில் பயணித்தாலும் சரி அல்லது நகர்ப்புற சாலைகளில் பயணித்தாலும் சரி, அற்புதமான செயல்திறனை உறுதி செய்யும் வகையில், ஆஃப்ரோடு திறன் மற்றும் ஆடம்பர வசதியின் சரியான கலவையாகH9 வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த கணிசமானSUV4950 மிமீ நீளமும்1976 மிமீ அகலமும் கொண்டது.ஹவல்H9 வாகனம் ஓட்டுவதை எளிதாக்கவும் பாதுகாப்பாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்ட சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது:ஆறு ஏர்பேக்குகள்.வாகனத்தைச் சுற்றி மறைந்திருக்கும் ஆபத்துகளைக் கண்டறிவதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.போக்குவரத்து நிலைமைகளின் அடிப்படையில் வாகனத்தின் வேகத்தை தானாகவே சரிசெய்து, நீண்ட பயணங்களைக் குறைவான கடினமானதாக மாற்றுகிறது.நிறுத்தும் மற்றும் செல்லும் போக்குவரத்தின் போது கூட மன அழுத்தமில்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது.360,,டிகிரி வியூ கேமரா: பார்க்கிங் மற்றும் சுற்றுப்புறங்களின் பொதுவான கண்காணிப்பை எளிதாக்குகிறது.HAVAL சவுதி அரேபியா வலைத்தளத்தின்படி, ஹவல் H9 SUVயின் தற்போதைய விலை 142,199.8 சவுதி ரியால்களாகும், இது இந்திய ரூபாயில் தோராயமாக ₹33,60,658 ஆகும்.நிறுவனத்தின் தோற்றம்ஹவல் என்பது உலகளாவிய கிராஸ்ஓவர் மற்றும்SUV சந்தையில் ஒரு முக்கிய வீரரான சீன ஆட்டோமொபைல் நிறுவனமான கிரேட் வால் மோட்டார் (GWM)-க்கு சொந்தமான ஒரு ஆட்டோமொடிவ் பிராண்ட் ஆகும்.2 ஹவல் GWM-இன் தயாரிப்பு வரிசையிலிருந்து மார்ச் 2013 இல் ஒரு தனி பிராண்டாக மாறியது.
நடைப்பயிற்சி மற்றும் மெது ஓட்ட பயிற்சிகளை விட சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு 4 மடங்கு அதிக ஆற்றலையும், ஓடுவதை விட 8 மடங்கு அதிக பலன்களையும் தருவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி மனிதர்கள் அதிக தூரம் பயணிக்க உதவுவது சைக்கிள் மட்டுமே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன..உடலின் தசைகளுக்கு தேவையற்ற அழுத்தம் தராமல், உடலின் ஒரு குறிப்பிட்ட தசை சக்தியை இயக்கமாக மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உடலும் நன்கு இயங்க சைக்கிள் உதவுகிறது என இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அந்த ஆய்வில், நாம் நடக்கும் போது அல்லது ஓடும் போது, அடிப்படையில் உடல் முன்னோக்கி நகரும் போது, தரையில் விழுந்து விடாதபடி உடலை கட்டுப்படுத்தும் செயல்பாடு நடைபெறுகிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஈர்ப்பு விசைக்கு எதிராக கால் மூட்டுகளை தூக்கி கவனமாக வைக்கும் செயல்முறையின் போது உடலில் இருந்து அதிகமான சக்தி இழப்பு ஏற்படுகிறது.ஆனால், சைக்கிள் என்ற மிதிவண்டியில்,கால்கள் மட்டுமே ஆற்றலை வெளிப்படுத்தி அதனை அழுத்த விசையாக மாற்றுகின்றன. நடைப்பயிற்சியில் ஒட்டுமொத்த உடலும் அழுத்தத்தை உணர்கிறது. இதற்கு பதிலாக, சைக்கிள் பெடல்களை மிதிக்கும் போது கால்களில் இருந்து மட்டும் தரப்படும் அழுத்தம்,சைக்கி ளின் சுழற்சி ஆற்றலாக மாறி விடுகிறது. இதன் மூலம், மனித உடலில் தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.சைக்கிள் ஓட்டுதலின் போது, குறைந்த ஆற்றல் செலவழிப்பு மூலம் உடலில் அதிக ஆற்றல் சேமிக்கப்ப டுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் கறுப்பு நிறமாக இருக்கும் மரங்கொத்தி வடஅமெரிக்கா மற்றும் அலாஸ்கா பகுதி காடுகளில் வாழும் தனித்துவமானது. ஆண் பறவை தலை மஞ்சள் வண்ணப் பட்டையுடன் ஜொலிக்கும். மரங்களில் வாழும் புழு, பூச்சிகளை உணவாகக்கொள்ளும். கறுப்பு மரங்கொத்தி, எரிந்த நிலையில் இருக்கும் காட்டுப்பகுதியில் அதிகமாக பறந்து திரியும். தீயில் கருகும் மரங்களில்இருந்து தப்ப முயலும், பூச்சிகளை பிடித்து உண்ணும். மற்ற மரங்களில் கூர்ந்த அலகால் பட்டையை உரித்து, நீண்ட நாக்கால் பூச்சிகளை வெளியே இழுத்து உண்ணும். இந்த பறவை மரத்தில் துளையிடும் ஒலி, வெகு தொலைவு வரை கேட்கும்.இதன் இனப்பெருக்கம் மே முதல்ஜூலை வரை நடக்கிறது. ஆண், பெண் பறவைகள் இணைந்து மரக்கிளையில் கூடு கட்ட குழி தோண்டும். பெண் பறவை, இரண்டு முதல் ஆறு முட்டைகள் வரை இடும். இரு பாலினமும் மாறி மாறி அடைகாக்கும். முட்டைகள் பொரிந்து, நான்கு வாரங்களில்குஞ்சுகள் பறக்க துவங்கும்.இயற்கையை சமநிலையில் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பறவை. புழு, பூச்சிகளை கட்டுப்படுத்துவதால், காடு ஆரோக்கியமாக வளர உதவுகிறது. இந்த பறவையின எண்ணிக்கை குறைந்துள்ளதால், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரின பட்டியலில் வைத்துள்ளது சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். இதன் தனித்துவ வாழ்க்கை முறையும், எரியும் காடுகளுடனான தொடர்பும், இயற்கை ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
மராட்டியத்தை சேர்ந்த 29 வயதான நட்சத்திர வீராங்கனை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ,ஸ்மிர்தி மந்தனா,சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து, 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார். மந்தனா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை, விரைவில் தொடங்குகிறார்.அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா ,வருகிற 23-ந்தேதி அவரை கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணத்துக்குபிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
சவுதியில் உலகில் நேராக செல்லும் நீளமான ரோடு நெடுஞ்சாலை 10' ) மொத்த தூரம் 1480 கி.மீ. இது அல் டார்ப் இடத்தில் இருந்து சவுதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எல்லை வரை செல்கிறது. இது அந்நாட்டின் ஜாஜன், அசிர், ரியாத், கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாணங்களை கடந்து செல்கிறது. இதில் ஹராத் - அல் பாதா வரை 256 மீ.க்கு வளையாமல் நேராக செல்கிறது. இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் இரண்டாவது140 கி.மீ., நீளமானநேர் ரோடு உள்ளது.
இறகுகள்,பறவைகளின் உடலில் தோன்றும் புரதப்பொருட்களால் உருவாகுபவை .நூற்றுக்கணக்கான இறகுகளால் உருவானவை தான் இறக்கைகள்.ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இறகுகளைக் கொண்ட பறவைகள் இருக்கின்றன.இறகின் நடுவில் உறுதியான தண்டு போன்ற அமைப்பு இருக்கும். அந்தத் தண்டின் இரண்டு பக்கங்களிலும் சிறிய நுண் எலும்புகள் காணப்படும்.நுண் எலும்புகளுக்கு இடையில் சிறிய ஓட்டை உடைய அமைப்புகள் உள்ளன. இவை பறவையை பல வகைகளில் பாதுகாக்கின்றன.நடுப்பகுதியில் இரண்டு பக்கமும் சமமாக இருப்பவை வால் இறகுகள் என்று அழைக்கப்படுகின்றன.பறவைகளை வெப்பத்திலிருந்து காப்பாற்ற, பறவையின் உடலைச் சுற்றி கீழ் இறகு என்ற அமைப்பு உள்ளது.ஆந்தை போன்ற பறவைகளுக்கு இரையின் ஒலியை ,சத்தமாக கேட்பதற்கு இறகுகள் உதவுகின்றன.பென்குயின் போன்ற பறவைகளுக்கு பனிச்சறுக்கு ,செய்வதற்கு இறகுகள் உதவுகின்றன.நீரில் மூழ்கி வேட்டையாடும் பறவைகளுக்கு, இறகுகள் தேவைப்படுகின்றன.வளர்ந்த பறவைகள் தங்கள் இறகுகளை கோடைக் காலத்தில் உதிர்த்து, புதிய இறகுகளை வளர்க்க ஆரம்பிக்கும்.குளிர்காலம் வரும் போது பறவைகளை பாதுகாக்க இறகுகள் அவசியம் என்பதால், குளிர்காலத்துக்குள் புதிய இறகு உருவாகிவிடும்.
செரிமானம் உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு உமிழ்நீர் உடலில் சுரக்கும் அரிய திரவம் உதவுகிறது. போதிய அளவு உமிழ்நீர் உடலில் இல்லாத நிலையில் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.உமிழ்நீர் சிலர் அடிக்கடி காரி உமிழ்வதால் ,உடல் கடுமையாக பாதிப்படைகிறது. வாய் மற்றும் தொண்டையை ஈரப்ப தத்துடன் வைத்திருக்கிறது. இதனால், வாயில் உள்ள சளி சவ்வுகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பாதுகாக்கப்படுகிறது.உணவின் மூலம் உடலுக்கு வேண்டிய உயிர்ச்சத்துக்கள் ,எளிதாக கிடைக்கஉமிழ்நீர் மிகவும் அவசியம். உடலின் நல்ல செரிமானம் உமிழ்நீர் மூலம்தொடங்குகிறது. உமிழ்நீரில், அமிலேஸ் எனப்படும் நொதி உள்ளது, இது வயிற்றில்உணவில் உள்ள மாவுச்சத்தை உடைக்க உதவுகிறது.பாக்டீரியாக்களை சிதைக்கும்உமிழ்நீரில் 'லைசோசைம்' என்ற நொதி ஆகும். உடலுக்குள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வாயின் வழியாக நுழையும் போது அவற்றை உமிழ்நீர் தடுத்து நிறுத்தி விடுகிறது. பல்வேறு பாக்டீரியா மற்றும் நச்சு கிருமிகளை அழிக்கும் திறன் உமிழ்நீருக்கு உண்டு. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த கிருமி நாசினிகளையும் விட, உமிழ்நீர் காயங்களை வேகமாக எளிதாக குணப்படுத்தும்.உடலின் திசுக்களை சரி செய்தல் மற்றும் காயங்களை மூடி புண்களை ஆற்றுதல் போன்ற செயல்பாடுகளை ,மனித உமிழ்நீரில் ஹிஸ்டாடின்கள் என்ற புரதங்கள் ஊக்குவிக்கின்றன. உடலில் மற்ற இடங்களில் ஏற்படும் புண்களை விட வாயில் ஏற்படும் புண்கள் விரைவில் குணம் அடைய உமிழ்நீரில் உள்ள இந்த ஹிஸ்டாடின் போன்ற சேர்மங் கள்தான் காரணமாக உள்ளன. உடலில் ஏற்படும் பல்வேறு நோய் பாதிப்புகளை அடையாளம் காண உமிழ்நீர் பயன்படுகிறது. சாதாரண காய்ச்சல் முதல் எய்ட்ஸ் நோய் வரை கண்ட றிய உமிழ்நீர் பரிசோதனை உதவுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் திருமலையில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் உணவுகளை வழங்கக்கூடிய நவீன சமையலறை கட்டப்படும் என்று ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தனது நிறுவனம் திருமலையில் ஒரு அதிநவீன சமையலறையைக் கட்டும் என்றும், இது ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.இந்த முயற்சி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) உடன் இணைந்து ஆந்திரப் பிரதேச அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும். புதிய சமையலறை மேம்பட்ட ஆட்டோமேஷன் மற்றும் ஒவ்வொரு பக்தருக்கும் சத்தான அன்ன பிரசாதம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும்2,00,000 க்கும் மேற்பட்ட உணவுகளைத் தயாரித்து பரிமாறும் திறனைக் கொண்டிருக்கும்.முகேஷ் அம்பானி திருமலைக்கு வருகை தந்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.திருமலை நம்பிக்கை, இரக்கம் மற்றும் தன்னலமற்ற சேவையின் நித்திய அடையாளமாக நிற்கிறது. "இந்த முயற்சியின் மூலம், அன்ன சேவை பாரம்பரியத்தை அனைத்து டிடிடி கோயில்களுக்கும் விரிவுபடுத்தும் என சந்திரபாபு நாயுடுவின் உன்னதமான பார்வைக்கு பங்களிப்பதில் நாங்கள் தாழ்மையுடன் இருக்கிறோம்" என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.கேரளாவின் திருச்சூரில் உள்ள குருவாயூர் நகரில் அமைந்துள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கும் அம்பானி சென்றார். அவர் கோயிலுக்கு ரூ.15 கோடி நன்கொடை அளித்தார்.