சீனா தனது தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், ஆசியாவின் மிக நீளமான நதியான யாங்சே (Yangtze River) நதிக்கு அடியில் 11 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான சுரங்கப்பாதையைக் கட்டி முடித்துள்ளது. இந்தச் சுரங்கப்பாதை கட்டுமானப் மேலாக பணிகள் 5 சுமார் ஆண்டுகளுக்கும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்தச் சுரங்கப்பாதையின் வழியாக மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது ஷாங்காய் மற்றும் மற்ற முக்கிய நகரங்களுக்கு இடையிலான நேரத்தை பாதியாகக் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிக உயரமான கட்டிடமாக உருவாகி வரும் சவூதியின் Jeddah Tower, தற்போது 100வது மாடியை எட்டியுள்ளது. சுமார் 1 கி.மீ உயரத்துக்கு கட்டப்பட்டு வரும்இந்த கட்டிடம், புர்ஜ் கலீஃபாவை முறியடித்து உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை படைக்கவுள்ளது.
ஜோஹோவின் இந்த முதலீடு, மேலும் பல வணிகங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்க வழிவகுக்கும்.சென்னையைச் சேர்ந்த முன்னணிSaaS நிறுவனமான ஸோஹோ கார்ப்பரேஷன், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பில்(ONDC)₹70 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.ONDC என்பது இந்திய அரசின் ஒரு முன்முயற்சியாகும். இது மின்னணு வர்த்தகத்தை ஒரு தளம் சார்ந்த மாதிரியிலிருந்து, விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒருமுறை பட்டியலிட்டு, இணக்கமான அனைத்து செயலிகளிலும் அவை தெரியும்படி செய்யும் ஒரு திறந்த, ஒன்றோடொன்று இயங்கும் வலையமைப்பாக மாற்றுகிறது.ஸோஹோவின் இந்த முதலீடு, வலையமைப்பின் சூழலமைப்பை விரிவுபடுத்தவும், அதன் பயன்பாட்டை விரைவுபடுத்தவும் உதவும். இதன்மூலம், மேலும் பல வணிகங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்க வழிவகுக்கும்.
ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் இருந்தால் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் விவரங்களை வருமான வரித்துறையிடம் எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுள்ளதாக தகவல்.
டீ மற்றும் காபி குடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்களில் சூடான பானங்களை ஊற்றும் போது, அதில் உள்ள மெழுகு மற்றும்பாலிஎத்திலீன் பிளாஸ்டி துகள்கள் கரைந்து உடலுக்குள் செல்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு 3 முறை இவ்வாறு பேப்பர் கப்பில் சூடான பானங்களை குடிப்பவர்கள், சுமார் 75,000 நுண் பிளாஸ்டிக் துகள்களை தங்களையறியாமலே உட்கொள்கின்றனர். இத்தகைய துகள்கள் உடலில் சேர்வதால் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
1 நிமிடம் நடந்தால் ரத்த ஓட்டம் நல்லது. 5 நிமிடம் நடந்தால் மனம் அமைதியாகும். 10 நிமிடம் நடந்தால் டென்ஷன் குறையும். 15 நிமிடம் நடந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். 30 நிமிடம் நடந்தால் இதயம் வலுவாகும். 45 நிமிடம் நடந்தால் உடல் சோர்வு குறையும். 60 நிமிடம் நடந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கோடையில் அதிக வெப்பம் காரணமாக உடல் நீரிழப்புக்கு (Dehydration) உள்ளாகும்போது ,மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து தலைசுற்றல் ஏற்படுகிறது. வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைவதால், மயக்கம் மற்றும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. போதிய அளவு தண்ணீர் குடிப்பது, மற்றும் நிழலில் ஓய்வெடுப்பது, இதைத் தவிர்க்க உதவும்.
அமெரிக்காவின் MIT நடத்திய ஆய்வில், AI-ஐப் பயன்படுத்திய 83% பேரால் சில நிமிடங்களுக்கு முன் எழுதிய ஒரு வாக்கியத்தைக் கூட நினைவில் வைக்க முடியவில்லை எனவும், ChatGPT பயன்படுத்துவோரின் மூளை செயல்பாடு 47% வரை குறைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் வேலைகளை 60% வேகமாக முடித்தாலும், கற்றலுக்கான (Cognitive Offloading) மனதளவு முயற்சி 32% குறைகிறதாம்!.
இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து தங்களது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ஒரு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஒப்பந்தத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளன. இதன்படி, மே 2026 முதல் இந்தோனேசியாவிற்கு வரும் சீனச் `சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டின் 'QRIS' குறியீட்டைப் பயன்படுத்தும் எந்தவொரு வணிகரிடமும் தங்களது 'Alipay'செயலி மூலம் நேரடியாகப் பணம் செலுத்தலாம். அதேபோல், சீனாவிற்குச் செல்லும் இந்தோனேசியர்கள் அங்குள்ள வணிகர்களுக்குத் தங்களது உள்ளூர் செயலிகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்த முடியும்.
"மத்தியஅரசு ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதாவது, ரூ.78,000 நேரடி மானியத்துடன் செயல்படுத்தப்படும் இந்தத்திட்டம் மூலம் நம் வீடுகளின் மொட்டை மாடியில் சோலார் அமைத்துக்கொண்டால்நம்முடைய மின் கட்டணத்தை 90% அளவுக்குக் குறைக்க முடியும்.சொந்த வீடும், வீட்டு மொட்டை மாடியில் 250 முதல் 300 சதுர அடி நிழல் படாத இடமும் இருந்தால் போதும். மொட்டை மாடியில் நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்யலாம்."மொபைல் வாங்கும் பணத்தில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்.