25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 16, 2024

அரிதாக கிடைக்கும் பழ சாகுபடியில் கைநிறைய பணம் சம்பாதிக்கும்  மெக்கானிக்கல் இன்ஜினியர்

ஓரிடத்தில் அரிதாக கிடைக்கும் ஒரு பொருளை நாம் உருவாக்கி விற்பனை செய்யும் போது குறுகிய காலத்திலேயே அது நல்ல லாபத்தை பெற்று தரும். அப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டு பெரிய தொழில் முனைவோராக மாறி இருக்கிறார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருஇளைஞர்.கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்தவர் சேத்தன் ஷெட்டி. மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பெங்களூருவில் சேல்ஸ் பிரிவில் தலைமை பொறுப்பு வகித்து வந்தார்.சேத்தன் ஷெட்டியின் குடும்பத்தினர் மங்களூர் பகுதியில் விவசாயம் செய்து வந்தனர். விடுமுறை நாட்களில் இவர் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று வருவது வாடிக்கை. அப்படி விவசாயத்தின் மீது ஆர்வம் பிறந்துள்ளது. முதல்கட்டமாக ஊரில் தங்களுடைய நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். இது இவருக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. எனவே தன்னுடைய வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தார். இந்தியாவில் அரிதாக கிடைக்கக்கூடிய பழங்களை நாம் விளைவித்து விற்பனை செய்யலாம் என்று யோசனையும் இவருக்கு பிறந்துள்ளது. எப்பொழுது விடுமுறைக்காக ஊருக்கு சென்றாலும் அதிகப்படியான நேரம் விவசாய நிலத்திலேயே இருந்து உதவிகளை செய்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு தன்னை நன்றாக பழகிக் கொண்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு நிலத்தில் மஞ்சள் பயிரிட்டார். முதலில் அவருக்கு165 கிலோவிற்கு மஞ்சள் அறுவடை நடைபெற்றது. அதனை மஞ்சளாகவே விற்பனை செய்யாமல் மஞ்சள் பவுடராக மாற்றி ஒரு கிலோ450 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்துள்ளார். இது அவருக்கு நல்ல லாபத்தை தந்தது.2017 ஆம் ஆண்டு வேலையை விட்டு சொந்த ஊருக்கே திரும்பிய அவர் தன்னுடைய ஊரில் இன்னும் கூடுதலாக நிலங்களை வாங்கி நான்கு ஏக்கர் பரப்பளவில் ரம்புட்டன்),மேங்கோஸ்டின்அவகேடோ மற்றும் பப்பாளி ஆகிய ஆகியவற்றை பயிரிட்டார்., ஒரு ரம்பூட்டன் மரக்கன்றின் விலை 350 ரூபாய் என்றும் கூறுகிறார்.பொதுவாக35அடி இடைவெளியில் தான் ரங்புட்டன் கன்றுகளை நட வேண்டும் என்பது விதி ஆனால் அதனை சற்றே மாற்றி அமைத்து 15அடி இடைவெளியில் இவர் பயிரிட்டுள்ளார். இந்தியாவில் பொதுவாக ரம்புட்டன் என்பது மலேசியா தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் சேத்தன் இதனை இந்தியாவிலேயே விளைவித்ததால் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்தியா முழுவதும் டோர் டெலிவரி செய்யும் அளவிற்கு இவரது விவசாயம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு கூடுதலாக100 ரம்புட்டன் மரங்களை நட்டு இருப்பதாகவும் இது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் விளைச்சலை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ரம்புட்டன், அவகேடோ ஆகியவற்றுடன் வெண்ணிலா, மேஸ் பிளவர் என பல வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். இயற்கையானமுறையில்தாங்கள்விளைவிப்பதால்வாடிக்கையாளர்களுடைய நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்

May 15, 2024

குறைந்து வரும் ஹிந்துக்களின் எண்ணிக்கை

ஷமிகாரவி,அபூர்வ்குமார்மிஸ்ராமற்றும்ஆப்ரஹாம்ஜோஸ்ஆகியோர்,1950 முதல்2015 வரை மக்கள் தொகை குறித்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த காலகட்டத்தில் இந்திய மக்கள் தொகையில், பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்து உள்ளது. அதாவது84.68 சதவீதத்தில் இருந்து78.06 சதவீதமாக குறைந்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.முஸ்லிம்களின்எண்ணிக்கை 7.84 சதவீதமாக இருந்தது. அது, 14.09 சதவீதமாக அதிகரித்தது. இது 43.15 சதவீதம் அதிகம் ஆகும்.கிறிஸ்தவர்களின்எண்ணிக்கை 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது(5.38 சதவீதம்)சீக்கியர்களின்எண்ணிக்கை 1.24 சதவீதத்தில் இருந்து 1.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.(6.58 சதவீதம்)புத்தமதத்தைபின்பற்றுவர்களின்எண்ணிக்கை 0.05 சதவீதத்தில் இருந்து 0.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.,ஜெயின்சமூகத்தினரின்எண்ணிக்கை0.45 சதவீதத்தில் இருந்து0.36 சதவீதமாக குறைந்துள்ளது. பார்சி சமூகத்தினரின் எண்ணிக்கை 85 சதவீதம் குறைந்துள்ளது.இந்தியதுணைக்கண்டத்தில்முஸ்லிம்நாடுகளில், முஸ்லிம்களின்எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. மாலத்தீவில்மட்டும், பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.உலகளவில்123 நாடுகளில் பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.44 நாடுகளில் மட்டுமே அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

May 15, 2024

கிராமங்களில் குறைந்த முதலீட்டில் இலாபம் பெறக் கூடிய தொழில்கள்.

 மாதச் சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் பலருக்கும் சொந்தமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். தொழில் தொடங்க முதலீடு இல்லாமல் சிலரும், நஷ்டம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் சிலரும், தொழிலை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற சிந்தனையில் சிலரும் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையை மட்டுமே மனதில் வைத்து முன்னேற பயப்படுகின்றனர். அந்த பயத்தை உடைத்து தன்னம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வைத்தால் போதும். வெற்றிக்கனி நிச்சயம் ஒருநாள் வந்து சேரும். நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் தொழில் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. அவ்வகையில், கிராமங்களில் குறைந்த முதலீட்டில் இலாபம் பெறக் கூடிய தொழில்கள் .பேரீச்சம்பழத்தின் தேவை சந்தைகளில் மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் பேரீச்சம்பழத்தில் இருந்து பல வகையான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றனகிராமங்களில் பேரீச்சம்பழம் சாகுபடி செய்வதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். பேரீச்சம்பழ சாகுபடியில் சாதிக்க நிலத்தைப் பற்றிய புரிதல் அவசியம். பேரீச்சம்பழங்களை சாகுபடி செய்வது மட்டுமின்றி சந்தையில் வியாபாரம் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.கற்றாழை சாகுபடியைத் தொடங்க40,000 முதல்50,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகும். கற்றாழை சாகுபடி செய்ய வயலில் ஒரு முறை மட்டும் நடவு செய்தால் போதும். நடவு செய்த3 ஆண்டுகளுக்கு இதிலிருந்து அறுவடை செய்து இலாபம் பெறலாம். கற்றாழை சாற்றை பலரும் விரும்பி குடிப்பதால், இதற்கும் சந்தைகளில் நல்ல வரவேற்பு இருக்கும்.தற்காலத்தில் ஆடு வளர்ப்பு என்பது மிகவும் பரவலான தொழிலாகவும், எளிதாகவும் இருக்கிறது. இந்தத் தொழில் கிராம மக்களுக்கு மிகவும் ஏற்ற தொழில். மேலும், இத்தொழிலுக்கு அரசு மானியமும் கிடைக்கிறது. கிராமங்களில் ஆடுகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தொழிலில் ஆடுகள் விற்பனையைப் பொறுத்து மாதம் 1 முதல் 2 இலட்சம் ரூபாய் வரை இலாபம் கிடைக்கும்.மிக எளிதாக கிராமத்தில் பால் வியாபாரத்தை வெற்றிகரமாகச் செய்யலாம். இந்தத் தொழில் மற்ற தொழில்களை விடவும் நல்ல லாபத்தைக் தரும்.5 பசுக்கள் அல்லது எருமைகளை வைத்தே இந்தத் தொழிலைத் தொடங்கி விடலாம். பால் வியாபாரத்தை பெரிய அளவில் தொடங்கினால், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உதவிகளையும் பெறலாம். பால் பண்ணையின் மூலம் மாதத்திற்கு சுமார் 1 முதல் 2 இலட்சம் ரூபாய் வரை இலாபத்தை ஈட்டலாம்.

May 14, 2024

முதலீட்டாளர்கள் முதலில் தேர்ந்தெடுக்க ,கடனே இல்லாத பங்கு நிறுவனங்கள்

ஒரு கம்பெனியில் பலமே அதன் மூலதனம்அமைப்புதான். ஏனெனில் அது நிலையாகவும், எவ்வித சிக்கலும்இல்லாமல் இருந்தாலே முதலீட்டாளர்களைசுலபமாக ஈர்க்க முடியும். கடனே இல்லாத நிறுவனங்களின்பலமே ரிஸ்க் குறித்துகவலைப்பட தேவையில்லை என்பதுதான். மேலும்அடுத்தடுத்த புதிய புராஜெக்ட்களுக்கானமுடிவுகளை சுலபமாக எடுக்கமுடியும் சில நிறுவனங்கள் கடனே இல்லாத நிறுவனங்களைபார்ட்னர்ஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கிறது  அதற்குமுக்கிய காரணம் எவ்விதசூழ்நிலையிலும் அந்த நிறுவனங்கள்திவால் நிலையை அறிவிக்காது. மேலும்அதன் முதலீட்டாளர்களுக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிபற்றி கவலைப்பட தேவையில்லைஎன்பதுதான்.கடன் இல்லாத நிறுவனங்கள்சில அவசரகால முடிவுகளைசட்டென எடுக்க முடியும்என்பது மற்றொரு பிளஸ் பாயிண்ட். பொதுவாகDebtFreeCompanies அதாவதுகடனே இல்லாத நிறுவனங்களின்நிதி நிலை அறிக்கையும், நிதி நிலைமையும் வலுவாகஇருக்கும். அதனால் முதலீட்டாளர்கள்சரிவைப் பற்றி கவலைப்படமாட்டார்கள்.ரூ.1000 கோடிக்கும்கீழ் சந்தை மூலதனம் கொண்ட கடனே இல்லாத நிறுவனங்களின் பட்டியல்.1. Prevest DenPro Limited - சந்தை மூலதனம் - ரூ.524.11 கோடி2. Global Education Limited - சந்தை மூலதனம் - ரூ.525.2 கோடி3. SIL Investments Limited - சந்தை மூலதனம் - ரூ.548.49 கோடி 4. Stovec Industries Limited - சந்தை மூலதனம் - ரூ.553.45 கோடி5. ADC India Communications Limited - சந்தை மூலதனம் - ரூ.560.32 கோடி6. Prime Securities Limited - சந்தை மூலதனம் - ரூ.580.06 கோடி7. Nicco Parks & Resorts Limited - சந்தை மூலதனம் - ரூ.641.4 கோடி8. Wim Plast Limited - சந்தை மூலதனம் - ரூ.642.84 கோடி9. Munjal Showa Limited - சந்தை மூலதனம் - ரூ.657.33 கோடி10. NINtec Systems Limited - சந்தை மூலதனம் - ரூ.812.2 கோடிஇது எந்த அளவிற்குபாசிட்டிவான பக்கங்கள் இருந்தாலும், புதிய வாய்ப்புகளையும்நிறுவனங்கள் கண்டுகொள்ளாது. இந்த நிறுவனங்களின் ROE சற்று குறைந்த அளவிலேயேஇருக்கும். 

May 13, 2024

கரிகால சோழன் கட்டிய கல்லணை

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கன நீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இந்த அணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பமாகும்.கல்லணை கரிகாலச் சோழனால் கட்டப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். மேலும், தமிழகத்தில் உள்ள அணைகளிலேயே கல்லணைதான் மிகவும் பழைமையானது. அதுமட்டுமின்றி, தற்போது வரை புழக்கத்திலுள்ள பழைமையான அணை கல்லணை என்பது மிகவும் வியக்கத்தக்க ஒரு விஷயம் ஆகும். இதுவே உலகின் மிகப் பழைமையான நீர்ப்பாசனத் திட்டம் என்று கூறுவதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். மேலும், இந்தக் கல்லணை மணலில் அடித்தளம் அமைத்து கட்டப்பட்டது இன்னொரு சாதனை. கல்லணையின் நீளம்1080 அடி, அகலம்66 அடி, உயரம்18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.கல்லணை பல காலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும், வறட்சியாலும் வளமை குன்றியது. இந்தச் சூழலில்1829ல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையை தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்டிருந்த அடித்தளத்தை ஆராய்ந்த அவர், பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் பாராட்டும் விதமாக கல்லணைக்கு, ‘கிரான்ட் அணைகட்’ என்ற பெயரையும் சூட்டினார். நூற்றாண்டுகளைக் கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது நம்மால் கட்ட முடியாத அணைக்கட்டுகளை, நம் முன்னோர்கள் நமக்கு கட்டிவைத்து சென்றுள்ள பொக்கிஷ அணைக்கட்டுகளை பாதுகாக்க வேண்டியது பராமரிக்க வேண்டியது நம் கடமை .பழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டால், நமக்குப் பின் வரும் தலைமுறைகளும் இந்த வரலாறுகளை தெளிவாகக் காண முடியும்.

May 13, 2024

ரயில் ஓட்டும் லோகோ பைலட்  (Loco pilot )

 ரயிலை ஓட்டுபவர் யார்? இவ்வளவு பெரிய ரயிலை ஒருவர் தனியாக ஓட்டுவாரா? எவ்வளவு நேரம் ஓட்டுவார், முழு பாதைக்கும் ஒருவரே ஓட்டுவாரா? அவரது சம்பளம் என்னவாக இருக்கும்? மற்ற துறை பணிகளை பற்றி அதிகம் கேட்டிருப்போம். ஆனால் ரயில் சார்ந்த பணிகள் பற்றி அதிகம் தெரியாது.இந்தியர்களைப் பொறுத்தவரை, ரயில்வே பயணத்திற்கும் அவர்களுக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது.. பல கனவுகளோடு செல்லும் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து கொண்டு போகும் ரயிலின் ஓட்டுனர் " லோகோ பைலட்" என்று அழைக்கப்படுகிறார். ஒரு விமானி விமானத்தை ஓட்டுவது போன்றது இந்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் வேலை. மக்களை அவர்களது இடங்களுக்கு அழைத்து செல்வது மட்டுமல்லாமல், சரக்கு ரயில்களில் பொருட்களையும் கொண்டு செல்கிறார்கள். ரயிலின் இயக்கத்தை திறம்பட மேற்பார்வையிட ஒரு நபர் தேவை. இது இந்திய ரயில்வேயில் ஒரு உயர் பதவி. ஆனால் எந்த ஒரு நபரும் நேரடியாக லோகோ பைலட்டாக நியமிக்கப்பட மாட்டார்கள். இந்திய ரயில்வே முதலில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட்களை நியமிக்கிறார்கள். இதற்காக தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டாக சேரும் நபர் அனுபவம் பெற்ற பின்னர் பதவி உயர்வு மூலம் லோகோ பைலட்டாக மாறலாம்..அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டின் கடமைகள், லோகோ பைலட்டுக்கு ரயிலை சீராக இயக்க உதவுவதாகும். ஒரு லோகோ பைலட்டின் பணி, ரயில் இன்ஜினை முறையாகப் பராமரித்தல், ரயிலில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அவற்றை சரிசெய்தல், சிக்னல் மாற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்புகொள்வது. அதற்கு ஏற்ப ரயில்களை இயக்குவது.கோ பைலட் ஆக  தனியே ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம்(railwayrecruitmentboard) தேர்வுகளை நடத்தும். குறிப்பிட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தான் குறைந்தபட்ச கல்வித்தகுதி. உதவி லோகோ பைலட் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலைகளிலும் கணினி அடிப்படையிலான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் லோகோ பைலட் ஆகலாம். லோகோ பைலட் கட்டண விவரங்களுக்கு பே மேட்ரிக்ஸ் நிலை2 ஆகும். தொடக்க அடிப்படை ஊதியம் ரூ.19,900 ஆக இருக்கும். இதனுடன், வீட்டு வாடகை கொடுப்பனவு, அகவிலைப்படி, போக்குவரத்து கொடுப்பனவு போன்ற சலுகைகள் உள்ளன  மற்ற வேலைகளை போலவே லோகோ பைலட்டுகளுக்கும் ஒரு ஷிப்ட் என்பது 8 மணி நேரம்தான். அதற்கு கொஞ்சம் முன்னர் அல்லது பின்னர் எதாவது ஸ்டேஷன் வந்தால் அடுத்த பைலட் மாறிக்கொள்வார். இல்லை இன்னும் கொஞ்சம் நேரத்தில் இலக்கே வந்துவிடும் என்றால் அவரே ஓட்டிச்செல்வார். லோகோ பைலட்டுகள் வாரத்தில் குறைந்தது.36 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் ஓவர் டைம் அலவன்ஸ் என்ற கூடுதல் சம்பளம் கிடைக்கும்.

May 11, 2024

450 ரூபாய்க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டரை வாங்கலாம்..

உஜ்வாலா திட்டத்தின் கீழ்நீங்கள் ஒரு சிலிண்டரை வெறும்450 ரூபாய்க்கு பெற வாய்ப்பு உள்ளது. இதற்காக, பயனாளிகள் ஒரு முக்கியமான வேலையைச் செய்வது கட்டாயமாகும். ரேஷன் கடைகளில் கேஒய்சி செய்து கொள்ளும் வசதியையும் அரசுசெய்து வருகிறது. தற்போது ரேஷன் கடைகள் KYC செய்யத் தொடங்கியுள்ளன.மாவட்டத்தில் உள்ள பலநிறுவனங்களின் காஸ் ஏஜென்சிகளில் 1.45 லட்சத்துக்கும் மேற்பட்ட உஜ்வாலா காஸ் நுகர்வோர் உள்ளனர். காஸ் ஏஜென்சிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், எல்பிஜி சிலிண்டர் மானியத் திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் ஜன் ஆதார் விதைப்பு செய்ய முடியவில்லை.இத்தகைய சூழ்நிலையில், உஜ்வாலா திட்டத்தின் தரவுகளை அனைத்து தளவாட அதிகாரிகளுக்கும் அரசாங்கம் வழங்கியுள்ளது. மாவட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ்1.45 லட்சம் குடும்பங்கள் உள்ளன, இதில் சுமார்32 ஆயிரம் குடும்பங்கள் இன்னும் ஜன் ஆதார் பதிவு செய்யப்படவில்லை.இந்த அனைத்து குடும்பங்களுக்கும் எரிவாயு மானியத்தின் பலனைவழங்க, ரேஷன் கடைகளில் கேஒய்சி வசதியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் குடும்பத்திற்கு எரிவாயு மானியத்தைப் பெற,LPG ஐடியை ஜன் ஆதாருடன் இணைப்பதன் மூலம் உங்கள் KYC ஐமுடிக்கவும்.ரேஷன் கடைகளில், கூடுதல் ரேஷன் டீசல் பெறகேஒய்சி கட்டாயம். ரேஷன் டீசலுக்கு கேஒய்சிக்கு ரூ.5 எனஅரசு நிர்ணயித்துள்ளது. உஜ்வாலா நுகர்வோருக்கு ரேஷன் கடைகளில் ஜன்ஆதார் பதிவு செய்யும் வசதியை மாநில அரசு வழங்கியுள்ளது.அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஜன் ஆதாருடன் இணைக்கப்பட்ட எல்பிஜி ஐடியைப் பெறுங்கள். இந்த வேலைபோஷ் இயந்திரம் மூலம் செய்யப்படும். அதே நேரத்தில், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் ஜனதார் கேஒய்சி செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அப்போதுதான் ரூ.450க்குகாஸ் சிலிண்டர் கிடைக்கும்.ஒருலட்சத்து45 ஆயிரம் பயனாளிகளில்32 ஆயிரம் பேருக்கு இது வரைகேஒய்சி செய்யப்படவில்லை. அத்தகைய சூழ்நிலையில், நுகர்வோர் அருகிலுள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே KYC பெறமுடியும்.

May 11, 2024

ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகள் மட்டுமே ரயிலில் இலவசமாகப் பயணிக்க முடியும்.

இந்த வயது வரையிலான குழந்தைகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம். இந்தமுக்கியமான விதிகளை அறிந்த பின்னரே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.உங்கள் குழந்தைகள் உங்களுடன் இருந்தால் ரயிலில் பயணம் செய்ய நினைத்தால், முதலில் டிக்கெட் விதிகளை தெரிந்து கொள்ளுங்கள். விதிகள் இல்லாததால், மக்கள் வந்து குழந்தைகளுக்கான முழு டிக்கெட்டுகளையும் பெறுகிறார்கள், ஆனால் இப்போது நீங்கள் இதைச் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.இது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ரயில்வே விதிகளின்படி வயதுவாரியாக டிக்கெட் பிரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பாக ரயில்வே சில முக்கிய விதிகளை வகுத்துள்ளது. பயணத்திற்கான டிக்கெட்டுகளை நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பாக ரயில்வே கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது.ரயில்வே விதிகளின்படி, ஒருவயது முதல் நான்கு வயதுவரையிலான குழந்தைகளுக்கு ரயிலில் டிக்கெட் எதுவும் கிடைக்காது. அத்தகைய குழந்தைகளுக்கு எந்த விதமான முன்பதிவு டிக்கெட் கூடஎடுக்கப்படுவதில்லை. எனவே, நீங்கள் எங்காவது பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், குழந்தை டிக்கெட்டை வாங்கவே வேண்டாம்.  உங்கள் குழந்தை உங்களுடன் தனியாக பயணம் செய்யலாம்.இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, ஜூன் மாதத்தில் உங்கள் குடும்பத்துடன் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், உங்கள் குழந்தைக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன் சிலமுக்கியமான விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் வயது5 வயது முதல்12 வயதுவரை இருந்தால், ரயில்வேயில் டிக்கெட் வாங்குவது அவசியம்.குழந்தைக்கு இருக்கை வேண்டாம் என்று நினைத்தால் பாதிடிக்கெட்டை வாங்க வேண்டும். இருக்கை வேண்டுமானால், முழு டிக்கெட்டையும் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால்,TET உங்கள் ரசீதையும் கழிக்கலாம். ஒன்று முதல் நான்கு வயதுவரையிலான குழந்தைகள் மட்டுமே ரயிலில் இலவசமாகப் பயணிக்க முடியும்.

May 11, 2024

விளையாட்டுப் பருவமான வெறும் 16 வயதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, தற்போது ரூ.100 கோடியாக மாற்றியுள்ளார் பிரஞ்சலி அவஸ்தி என்ற சிறுமி.

அமெரிக்காவின் புளோரிடாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரஞ்சலி அவஸ்தி. இவரது தந்தைக்கு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வியை மேம்படுத்தும் பணி என்பதால், அதில் பிரஞ்சலி அவஸ்திக்கும் சிறு வயது முதலே அதிகளவு ஆர்வம் இருந்துள்ளது.இதனால்,தனது7வது வயதிலேயே கோடிங் எழுதுவதை கற்றுக் கொண்ட பிரஞ்சலி அவஸ்தி, தனது13வது வயதில் புளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப் காலத்தில் விர்சுவல் முறையில் கற்கத் தொடங்கினார்.இந்த நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் வந்ததால், மெஷின் லேர்னிங் என்ற புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கற்கத் தொடங்கினார். இதே நேரத்தில்OpenAI நிறுவனம்ChatGPT பீட்டா வெர்ஷனை வெளியிட்டதால், அதை பயன்படுத்தி ஆராய்ச்சித் தரவுகளை பிரித்தெடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்யத் தொடங்கினார் பிரஞ்சலி அவஸ்தி.பின்னர்,Delv.AI என்ற நிறுவனத்தை உருவாக்கி, டேட்டா தொடர்பான பல்வேறு பணிகளை செய்யத் தொடங்கினார். இதன் மூலம் On Deck மற்றும் Village Global ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பிரஞ்சலி அவஸ்தியின் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அளவிற்கு முதலீடு கிடைத்தது.இதன்மூலம்16 வயதில் நிறுவனத்தின் மதிப்பை ரூ.100 கோடியாக மாற்றி, அமெரிக்க வாழ் இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அத்துறையில், தொழில்துறையில் சாதிக்க விரும்புவோருக்கும் புதிய ஊக்கத்தை கொடுத்துள்ளார் பிரஞ்சலி அவஸ்தி

May 11, 2024

ஹார்லிக்ஸ், பூஸ்ட் ஹெல்த் ட்ரிங்ஸ் இல்லை. பதிலாக ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என அறிவித்தது ஹிந்துஸ்தான் யுனிலீவர்

 இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏப்ரல் 2ஆம் தேதி அன்று பால் மற்றும் தானியங்களை கொண்ட பானங்களுக்கு 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' (Health Drinks) என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பெயரில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் அதன் ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற பிராண்டுகளில் இருந்து 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' (Health Drinks) என்ற வார்த்தையை நீக்கியுள்ளது.ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற பல பிராண்டுகளைக் கொண்ட ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL), அதன் பானங்களின் பெயரை 'Health Drinks' என்பதில் இருந்து ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் (Functional Nutritional Drinks) எனப் பெயரிட்டுள்ளது.ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என்பது புரதம் மற்றும் ஊட்டச்சத்துகுறைபாடுகளைபூர்த்திசெய்யஉதவும்பானங்களாகும். இவை தாவரங்கள், விலங்குகள் மற்றும் கடலில் உள்ள நுண்ணுயிரிகளின் கூறுகளைக்கொண்டிருக்கும். இந்தியாவில் விற்கப்படும் சில பானங்கள் 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' என்ற பெயரில் விற்கப்பட்டு வருகிறது. இது உண்மையாகவே ஆரோக்கியமானது தானா? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) ஒரு விசாரணையை அனுப்பியது. அதன் விளைவாக இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி பால், தானியம் மற்றும் மால்ட் பானங்களை குறிப்பிடுவதற்கு 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' 'எனர்ஜி ட்ரிங்க்' (Energy Drink) என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.ஹார்லிக்ஸ் பானத்தில் இருந்து ஹெல்த் ட்ரிங்க் என்ற பெயரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் நீக்கியுள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தலைமை நிதி அதிகாரியான ரித்தேஷ் ஹார்லிக்ஸ் போன்ற பானங்களின், லேபிள் மாற்றத்தைப் பற்றி அறிவித்தார். ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்பதற்கு திவாரி, ஏப்ரல் 24ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பதிலாக  ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என பெயரிட்டு இருப்பது, இந்த வகை பானங்களின் பயன்பாட்டை துல்லியமாகவும் வெளிப்படையான விளக்கத்தை வழங்கும் விதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மத்திய வணிகர் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அனைத்து இகாமர்ஸ் தளங்களிலும் விற்கப்படும் பானங்களில் குறிப்பிட்டுள்ள 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவிற்கு பிறகு இந்த பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் போர்ன்வீட்டா சமீபத்தில் அதன் லேபிளை 'ஹெல்த் ட்ரிங்க்' என்ற பிரிவிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்திய உணவு சட்டங்களின் கீழ் ஹெல்த் ட்ரிங்க் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. இது போன்ற தவறான சொற்களை லேபிள்களில் பயன்படுத்துவது, இந்த பானங்களின் நுகர்வோரை தவறாக வழிநடத்தக் கூடும் என்பதால் இத்தகைய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

1 2 ... 26 27 28 29 30 31 32 ... 47 48

AD's



More News