25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 30, 2024

இந்தியாவின்நம்பர் 1 யூடியூபர், ப்ளஸ் டூஃபெயில்

அடிமட்டத்திலிருந்து உச்சம் தொட்டவர்தான் கேரளாவைச் சேர்ந்த பிஜு. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காமல், கூலித் தொழிலாளியாக இருந்த இவர், இப்போது இந்தியாவின் நம்பர்1 யூடியூபர்(தனிநபர் பிரிவில்; சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையின்படி).‘KLBROBijuRithvik’ எனும் இவரது யூடியூப் சேனல்,4.5 கோடி சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சிக்கு, பிஜுவுடன், அவரின் மொத்த குடும்பமும் கூட்டாக நடித்து, உழைக்கின்றனர். தங்கள் வீட்டு நிகழ்வுகள் மற்றும் பயணங்களுடன், இல்லம்தோறும் நடக்கின்ற குடும்ப பஞ்சாயத்து களை, ரகளையாகவும் ரசனையாகவும் வீடியோவாக்குகின்றனர். கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், பாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பிஜுவுக்கு, அவரின் மனைவி கவிதா, சேனல் வளர்ச்சிக்கும் உற்றதுணை.

Apr 29, 2024

நன்மைகள் நிறைந்த பிரியாணி இலை

பிரியாணி இலைகள் உணவிற்கு வாசனையையும், சுவையையும் கொடுப்பதுடன் அனைத்து இந்திய குடும்பத்திலும் காணப்படும் பொதுவான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும், ஆனால் இந்த இலை ஒரு மசாலாப்பொருள் என்பதை விட இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.பிரியாணி இலையில இயற்கையாகவே வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட தாதுக்களும் நிறைந்துள்ளன.இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, நோயெதிர்ப்பு ஆரோக்கியம், எலும்பு வலிமை மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் உள்ளிட்ட சிகிச்சை பண்புகளைக் கொண்டுள்ளன. .பிரியாணி இலை சேர்க்கப்பட்ட டீயை உட்கொள்வது அல்லது அவற்றை சமையலில் சேர்ப்பது வீக்கம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளைப் போக்க உதவும்.,நீரிழிவு நோயாளிகள் அல்லது நீரிழிவு நோய் வரப்போகும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு பிரியாணி இலைகள் நன்மை பயக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன . இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் இது மூட்டுவலி, இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற பல்வேறு நாள்பட்ட நோய்களின் தாக்கத்தைக் குறைக்கிறது.பிரியாணி இலை சேர்க்கப்பட்ட நீராவியை உள்ளிழுப்பது அல்லது பிரியாணி இலை தேநீர் குடிப்பது இருமல், நெரிசல் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளை போக்க உதவும். பிரியாணி இலைகள் சளியை தளர்த்தவும் மற்றும் சுவாச பாதைகளை சுத்தம் செய்யும் சளி நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. ப்ரெஷான பிரியாணி இலைகளை மென்று சாப்பிடுவது அல்லது பிரியாணி இலை கலந்த மவுத்வாஷைப் பயன்படுத்துவது ,வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், வாய் துர்நாற்றத்தைக் குறைக்கவும், பல் துவாரங்கள் மற்றும் ஈறு நோய் போன்ற பல் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும்.பிரியாணி இலைகளின் நறுமணம்,. மூலிகை டீ அல்லது அரோமாதெரபி கலவைகளில் பிரியாணி இலைகளைச் சேர்ப்பது அமைதி மற்றும் மகிழ்ச்சியான மனநிலையைத் தூண்டும். பிரியாணி இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்ட கலவைகள் உள்ளன, பிரியாணி இலை சாற்றை மேற்பூச்சாகப் பயன்படுத்துதல், பிரியாணி இலை உட்செலுத்தப்பட்ட கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 

Apr 29, 2024

"கிசான் ரின் போர்டல்"? அவசர கடனுதவிக்கு கிசான் லோன் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி.

விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களையும், கடனுதவியையும் வழங்கி வருகிறது.பிஎம் கிசான்: தற்போது, பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் காத்து வருகிறதென்றே சொல்லலாம்.விவசாயிகளுக்கு பண உதவிகளை, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது வரை 16 வது தவணையை வெளியிட்டுள்ளது. விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளதுகிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு கடன் பெறுவதில் கடுமையான சிரமம் இருப்பதால், மத்திய அரசு கடந்த ஆண்டு கிசான் ரின் போர்ட்டலை அறிமுகம் செய்துள்ளது சீக்கிரமாக கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கிசான் ரின் போர்ட்டல், பல அரசுத் துறைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமாகும். இது விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதிச்சேவைகள், கடன் வழங்குதல், வட்டி மானியக் கோரிக்கைகள் மற்றும் பயன்பாடு பற்றிய விரிவான தரவுகளை வழங்கும்.  வணிகத் துறையில் முதலீடு செய்யவும், விவசாய உற்பத்தி திறனை அதிகரிக்கவும் இந்த வெப்சைட் மிகவும் உதவியாக இருக்கும். விவசாயிகள் கடன் தொடர்பான ஆலோசகர்களை, இந்த வெப்சைட் மூலமாக தொடர்புகொள்ளவும் முடியும்..கிசான் கிரெடிட் கார்டு குறித்த பயன்பாடுகளை விவசாயிகள் நேரடியாக அறியலாம். கிசான் கிரெடிட் கார்டு (KCC) மூலம் கடன் பெற்ற விவசாயிகளும், தங்களுக்கு தேவையான தகவல்களை இந்த வெப்சைட்டில் அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் கிசான் ரின் போர்டல் மூலம் தொழில் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.கிசான் லோன் போர்ட்டல் மூலம் கிசான் கிரெடிட் கார்டுகளை எளிதாக பெறலாம். விவசாயிகளுக்கு வீடு வீடாக சென்று பதிவு செய்து கிசான் கிரெடிட் கார்டுகளையும் மத்திய அரசு வழங்கி வரும்நிலையில், கிசான் ரின் போர்ட்டல் மூலம் விவசாயிகள் எளிதாகவும், விரைவாகவும் விவசாய கடன்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த வெப்சைட்டின் பலன்கள் கிடைக்க வேண்டுமானால் ஆதார் கார்டு உதவியுடன் விவசாயிகள் ரிஜிஸ்டர் செய்தாலே, விவசாயிகளின் விவரங்கள் அனைத்தும் இந்த வெப்சைட்டில் அறிய முடியும். விவசாயிகள் மகிழ்ச்சி: இதற்கு முன் கடன் பெற விவசாயிகளின் விவரங்களை உள்ளிடுவதில் சிரமம் இருந்தது. ஆனால் இப்போது கிசான் லோன் போர்டல் மூலம் ஆன்லைன் கண்காணிப்பு செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் குறைந்த நேரத்தில் எளிதாக விவசாயக் கடன் பெற . "கிசான் ரின் போர்டல்" அவசர கடனுதவிக்கு கிசான் லோன் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

Apr 27, 2024

Dawki River: கண்ணாடி போல காட்சி தரும் 'டவ்கி ஆறு'

இந்தியாவில், மேகாலயாவில் உள்ள ஜைந்தியா மலையடிவாரத்தில் உள்ள சிறிய நகரமான டவ்கி வழியாக ஓடுகிறது'டவ்கி ஆறு'. இந்த ஆறு அதனுடைய தூய்மைக்கும், ஆற்றின் படுகையில் இருப்பதை காண இயலும் அளவிற்கு கண்ணாடி போல காட்சி தருவதற்கும் பிரபலமானது. ஆற்றின் படுகையில் இருக்கும் மீன்கள், கற்களை கூட தெளிவாக காண இயலும் அளவிற்கு தூய்மையான நீரை உடையது. இந்த சிறிய நகரத்தில் தான் இந்தியா- பங்களாதேஷ் வணிகம் நடப்பதால், எந்நேரமும் பரபரப்பாகவே இயங்கி கொண்டிருக்கும்.இந்த ஆறு ஆசியாவிலேயே மிகவும் தூய்மை வாய்ந்த ஆறு என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த ஆறு பச்சை நிற மரகத நிற நீரை கொண்டதாகும். இந்தியா- பங்களாதேஷிற்கு எல்லையாக இருக்கிறது. டவ்கி ஆற்றில் இருக்கும் பாலம்1932 ல் கட்டப்பட்டதாகும். இந்த ஆறு இதன் அழகிற்கும், இந்த பாலத்திற்கும் பிரசித்தி பெற்றதாகும். மேகாலயாவில் அதிக அளவில்லான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் இடங்களில் டவ்கி ஆறும் ஒன்றாகும். இந்த ஆற்றின் அழகை ரசித்து மகிழ்வதற்காக படகு சவாரி செய்யும் வசதியும் உள்ளது. இந்த ஆற்றில் குளிப்பதற்கும் அனுமதி உண்டு.இந்த ஆறு எந்த அளவிற்கு தெளிவாக இருக்கும் என்றால் இதில் செல்லும் படகு அந்தரத்தில் மிதப்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷனை உருவாக்கும் அளவிற்காகும். இதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள்இவ்விடத்திற்கு வருகை தருகிறார்கள்.இந்த ஆற்றிற்கு வரும் கிளையாறுகளான கிழக்கு காசி மற்றும் மேற்கு ஜைந்தியா மலையிலிருந்து வரும் தண்ணீர் எந்த அழுக்கையும் எடுத்துவருவதில்லை. அதனாலேயே இந்த ஆற்றின் நீர் மிகவும் தூய்மையாக இருக்கிறது. டவ்கி ஆறு30 முதல்50 அடி ஆளம் கொண்டதாகும்.டவ்கி ஆற்றிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதற்கான சரியான நேரம், நவம்பர் முதல் மே மாதம் ஆகும். எல்லா மாதங்களும் இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தரலாம். ஆனால் நவம்பர் முதல் மே மாதம் இந்த ஆற்றின் முழுமையான அழகை ரசிக்க முடியும். டவ்கி ஆற்றில் படகு சவாரி மட்டுமில்லாமல், கயாக்கிங்(Kayaking),மலையேற்றம், ஷிப் லைன்(Zipline) போன்ற சாகசங்களையும் செய்யலாம். படகு சவாரிக்கு கட்டணம்800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்தியாவில் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மேகாலயா இயற்கையை பாதுகாப்பதில் பெறும் பங்கு வகிக்கிறது. உயிருள்ள மரத்தில் செய்யப்பட்ட பாலம் போன்று இங்குள்ள மக்கள் இயற்கையை இயற்கையோடு வாழ முயற்சிப்பது மிகவும் அழகாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது.

Apr 27, 2024

LPG Gas, E-KYC-ஐ வீட்டில் இருந்தே செய்யலாம் கேஸ் சிலிண்டர் அப்டேட்

பலர் கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று தங்கள்KYC விவரங்களைத் தருகிறார்கள். இருப்பினும்,EKYCஐ வீட்டிலிருந்தும் ஆன்லைனிலேயே முடித்துவிட முடியும். இது கடினம் அல்ல. மிக எளிது.. முதலில் www.mylpg.in தளத்திற்கு செல்லவும்.அங்கே வலது பக்கத்தில் பாரத் கேஸ்/HP கேஸ்/இண்டேன் சிலிண்டர் என்ற ஆப்ஷன்களை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.அதன் பிறகு தொலைபேசி எண்ணுடன் உள்நுழையவும். உங்கள்KYC புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதை அங்கு நீங்கள் சரிபார்க்கலாம். உங்கள் விவரங்கள் தெரியவில்லை என்றால்,needkyc என்பதைக் கிளிக் செய்தால், கேஒய்சி படிவம் தோன்றும். அதை நிரப்பி உங்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் ஏஜென்சியிடம் கொடுங்கள்.ஆன்லைனில் படிவத்தைச் சமர்ப்பித்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் உங்கள்KYC செயல்முறை முடிவடையும். அதன் பிறகு மானிய விலையில் சிலிண்டர் பெற வாய்ப்பு உள்ளது. KYC ஏற்கனவே செய்திருந்தால் பிரச்சனை இல்லை.

Apr 27, 2024

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் டிஜி யாத்ரா.. வசதி..!

டிசம்பர் 2024 க்குள் சென்னை, புவனேஸ்வர் மற்றும் கோவை உட்பட சில விமான நிலையங்களுக்கு முறையான டிஜி யாத்ரா திட்டத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் கோவையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.டிஜி யாத்ரா திட்டம் விமான நிலையங்களில் விமானப் பயணத்தை எளிதாக்குகிறது. இது செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்கும், பயணிகளுக்கு விஷயங்களை எளிதாக்குவதற்கும், காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கும், பேப்பர் பயன்பாட்டினை தவிர்ப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். மேலும், வெளிநாட்டு பயணிகளுக்கான இ-பாஸ்போர்ட்டையும் இதில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். ஃபேஷியல் ரெகக்னிஷன் டெக்னாலஜி (எஃப்ஆர்டி) அடிப்படையிலான தொடர்பு இல்லாத மற்றும் தடையற்ற பயணிகள் இயக்கஅமைப்பாகும். தற்போது சில விமான நிலையங்களில் டிஜி யாத்ரா திட்டம் செயல்படும் நிலையில், இந்த வசதியை கோயம்புத்தூர் உள்ளிட்ட கூடுதல் விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். மத்திய சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சகத்தினால் விமான பயனாளிகளின் வசதியை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இது பெங்களூரு, ஜெய்ப்பூர், கவுஹாத்தி, அகமதாபாத் போன்ற விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மேலும் 11 விமான நிலையங்களில் டிஜி யாத்ராவைச் சேர்க்கும் திட்டமும் உள்ளது. பயணிகளுக்கு விஷயங்களை எளிதாக்கவும், விமான நிலையங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் இத்தகைய மாற்றங்களை செய்து வருகிறது.கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதாவது, போர்டிங் பாஸ் பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டி இருக்கும். இதனை எளிதாக்கும் விதமாகவும் மற்றும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்திலும் இந்த டிஜி யாத்ரா செயலியை, மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் தங்களின் மொபைலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பயண விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.டிஜி யாத்ராவைப் பயன்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை பயணிகள் தேர்வு செய்யலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். பயணிகள் ஒப்புக்கொண்டால் மட்டுமே விமான நிலைய ஊழியர்கள் பயன்பாட்டிற்கான தகவல்களைச் சேகரிப்பார்கள், அவர்களின் தனியுரிமை மற்றும் விருப்பம் மதிக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.டிஜி யாத்ராவைப் பயன்படுத்த, பயணிகள் தங்கள் ஆதாரை மற்றும் தங்களைப் படம் எடுத்துக்கொண்டு டிஜியாத்ரா செயலியில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் விமான நிலையத்தை அடைந்ததும், பார்கோடு கொண்ட அவர்களின் போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்யப்பட்டு, விவரங்கள் விமான நிலையத்திற்கு அனுப்பப்படும்.இ-கேட்டில், பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் FRT அவர்களின் அடையாளத்தையும், பயணப் பேப்பர்களை சரிபார்க்கிறது. எல்லாம் சரியாக இருந்தால், அவர்கள் இ-கேட் வழியாக உள்ளே செல்லலாம். டிஜி யாத்ராவை பல விமான நிலையங்களுக்கு கொண்டு வரவும், வெளிநாட்டு பயணிகளும் அதை பயன்படுத்த அனுமதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Apr 27, 2024

குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார் கார்டை ஆன்லைனில் பெறுவது எப்படி?

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. பேங்க் முதல் முதலீட்டுத் திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படும். இந்த ஆதார் கார்டில் உங்களது பெயர் முகவரி மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய விஷயங்கள் அடங்கியிருக்கும்கேஒய்சி சரி பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆவணங்களில் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணம்\ ஆகும். முன்பெல்லாம் பெரியவர்களுக்கு மட்டும் இருந்த ஆதார் 2018 ஆம் ஆண்டு முதல் சிறிய குழந்தைகளுக்கும் வந்துள்ளது. அதனை பால்ய ஆதார் கார்டு அல்லது ப்ளூ ஆதார் கார்டு எனக் கூறுவார்கள்.இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களின் விவரங்களையும் உள்ளடக்கி வைத்திருப்பதால் இந்த ஆவணத்தை பல்வேறு\ துறைகளிலும் முக்கியமான சான்றாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க எண் இருக்கும். இந்த 12 இலக்க எண் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 2018 ஆம் ஆண்டு இந்த ப்ளூ ஆதார் கார்டை அரசு பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை கொண்டுவர முடிவு செய்தது. இந்த ஆதார் கார்டு அதனை வாங்கிய ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். இந்த ஆதார் பெற அந்த குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.இந்த ஆதார் கார்டை பெற பெரிதாக ஆவணம் ஒன்றும் தேவையில்லை. பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் பெற்றோர்கள் பயன்படுத்திய டிஸ்சார்ஜ் சீட் போதுமானது. மேலும் அதற்கு பதிலாக குழந்தைகள் பள்ளியில் சேர்த்திருந்தால் அந்த ஐடி கார்டை கூட பயன்படுத்தலாம் பல்வேறு அரசாங்க நலத்திட்டங்களை பெரும் வகையில் இந்த ஆதார் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது பள்ளியில் சேர்க்கும்போது இந்த அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டையில் உள்ள எழுத்துகள் நீல நிறத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கும். ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு அதில் உள்ள ஆதார் நம்பரை பயிற்றுவிக்கும் வகையில் UIDAI இந்த கார்டுகளை உருவாக்கியுள்ளது.பெரியவர்களைப் போல அல்லாமல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த பயோமெட்ரிக்ஸும் எடுக்கப்பட மாட்டாது. அவர்களின் பெற்றோரின் யுஐடியுடன் இணைக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே இந்த ப்ளூ ஆதாருக்கு போதுமானது. மேலும் இந்த குழந்தைகள் 5 மற்றும் 15 வயதை அடையும்போது பத்து விரல்கள் கருவிழி மற்றும் முக புகைப்படம் ஆகியவை கொண்டு இந்த ஆதாரை புதுப்பிக்க வேண்டும்.ப்ளூ ஆதார் கார்டு பெற அதன் அதிகாரபூர்வ இணையதளமான, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்த்திற்குச் செல்ல வேண்டும். பிறகு "My Aadhar" என்பதற்குச் செல்லவும். "My Aadhar" பகுதியைக் கண்டறிந்து, "Book an appointment" என்பதைக் கிளிக் செய்யவும். "Child Aadhaar" என்பதைத் தேர்வு செய்யவும். "New Aadhar" என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை (கேப்ட்சா) உள்ளிடவும். "Relationship with Head of Family" என்பதன் கீழ், "Child (0-5 years)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் குழந்தையின் விவரங்களை நிரப்பவும். உங்கள் குழந்தையின் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்களை கவனமாக உள்ளிடவும். உங்களிடம் தேவையான ஆவணங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் உங்கள் சொந்த ஆதார் அட்டை.உங்கள் ஆபாயிண்ட்மென்ட் ஐ பதிவு செய்யுங்கள். அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யவும். உங்கள் முன்பதிவை உறுதிப்படுதிக் கொள்ளவும்.

Apr 27, 2024

ஐபோன் உற்பத்தியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.டாடா சன்ஸ் சேர்மன் என்.சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமம்

டாடா குழுமத்தின் புதிய குரோத் இன்ஜினாக உருவெடுத்திருக்கும் ஐபோன் தயாரிப்பு பிரிவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல சென்னை நிறுவனத்தை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் பிரம்மாண்ட தொழிற்சாலையில் ஐபோன் அசம்பளி தளத்தை உருவாக்கி, நாட்டின் ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.இந்த நிலையில் பெங்களூரில் சமீபத்தில் விஸ்திரான் தொழிற்சாலையை மொத்தமாகக் கைப்பற்றிய நாட்டின் முதல் ஐபோன் தயாரிப்பாளர் என்ற பட்டத்தை பெற்றது. இந்த நிலையில் அடுத்தகட்டமாகச் சென்னையில் உள்ள பெகாட்ரான் தொழிற்சாலையைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது டாடா குழுமம்.டாடா குழுமத்திற்கு தனது ஒரே ஐபோன் உற்பத்தி ஆலையின் கட்டுப்பாட்டை ஒப்படைப்பது குறித்த பேச்சுவார்த்தையை பெகாட்ரான் நிறுவனம் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தைவான் நாட்டின் நிறுவனமான பெகாட்ரான், ஆப்பிள் நிறுவனத்துடனான தனது கூட்டணியில் இருந்து விலகுவதற்கான நடவடிக்கையில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்புதலுடன் இந்த பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் வேளையில், சென்னை அருகே இயங்கி வரும் பெகாட்ரான் ஆலையை இயக்க டாடா குழுமத்துடன் சேர்ந்து புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்க உள்ளதாகவும்...இந்த கூட்டணி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 65% பங்குகளை டாடா குழுமம் வைத்திருக்கும் என்றும், மீதமுள்ள பங்குகளை பெகாட்ரான் நிறுவனம் வைத்திருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விஸ்திரான் நிறுவனத்தை கைப்பற்றிய டாடா தற்போது பெகாட்ரான் நிறுவனத்தையும் கைப்பற்ற உள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் ஒன்றான டாடா குழுமம், டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு மூலமாக இந்த கூட்டு நிறுவனத்தை இயக்கும் என்று தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துவிட்டால் பாக்ஸ்கான் - டாடா மட்டுமே இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும்.சுமார் 10,000 ஊழியர்களைக் கொண்ட இந்த சென்னை பெகாட்ரான் தொழிற்சாலை, ஆண்டுதோறும் 5 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. சீனாவில் இருந்த தனது ஐபோன் உற்பத்தி ஆலையின் கட்டுப்பாட்டைக் கடந்த ஆண்டு தனது சகபோட்டி நிறுவனமான Luxshare-க்கு 290 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்த நிலையில், பெகாட்ரன் இயங்கி வந்த கடைசி ஆலை இதுவாகும்.இந்த ஒப்பந்தம், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான டாடா குழுமத்தின் திட்டங்களுக்கு புதிய சக்தியை அளிக்கும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்கான ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தி மாற்றத்தின் ஒரு பகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது. சீனாவிற்கு வெளியே தனது உற்பத்தி தளத்தை விரிவுபடுத்துவதில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.பெகாட்ரான் கைப்பற்றல் மூலம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்தால் டாடா குழுமம் தனது வருவாயை அதிகரித்துக்கொள்ளவும், இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும். அதே நேரத்தில், சீனாவை அதிகம் சார்ந்திருந்திருக்கும் நிலை மாறும்.

Apr 26, 2024

பெரிய உவர் ஏரி

ஓடிசாவின் கட்டாக் அருகே உள்ள சில்கா ஏரி, உப்பு நீரும், நல்ல நீரும் கலந்துள்ள இந்த ஏரி, இந்தியாவின் பெரிய உவர்நீர் ஏரி என அழைக்கப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பரப்பளவு3560 சதுர கி.மீ. இதன் நீளம்64 கி.மீ. அதிகபட்ச ஆழம்13 அடி. தனித்துவமான நீர் அமைப்பால் பல்வேறு கடல் தாவரங்கள், மீன்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த ஏரி மகாநதியின் முகத்துவாரப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தஏரியின் நடுவே நலபன் தீவு உள்ளது. இதன் பரப்பளவு223 சதுர கி.மீ. இது பறவைகள் சரணாலயமாகவும், சுற்றுலாதலமாகவும் திகழ்கிறது.

Apr 26, 2024

யூகேவில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கான விசா கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது.

யூகே ரிஷி சுனக் அரசாங்கம், மற்ற ஊர்களில் இருந்து அந்நாட்டிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.2022 ஆம் ஆண்டில் மட்டும், 7,45,000 மக்கள், இந்நாட்டிற்கு புலம்பெயர்ந்து உள்ளனர் என்று அந்நாட்டின் அதிபர் சுனக் கூறியுள்ளார். இந்தியாவில் இருக்கும் திறமையானவர்களுக்கான வேலை விசா, 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் £13,380 ஆக இருந்தது. 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் £21,837 ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 63 சதவீத அதிகரிப்பை காட்டுகிறது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.யுகேவில் பணிபுரிய தேவைப்படும் சிறப்பு திறன் பணியாளர் விசாவை பெறுவதற்கான ஆண்டு சம்பளமாக ஒவ்வொரு நபரும் £26,200 பவுண்டு வாங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறி இருந்தது. அதாவது இது இந்திய ரூபாயில் சுமார் 27 லட்ச ரூபாய் ஆகும். தற்போது இந்த சம்பளம் £38,700 பவுண்டாக மாற்றப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 50 சதவீத உயர்வை காட்டுகிறது. புதிய விதிமுறை சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத் துறையில் உள்ளவர்களுக்குப் பொருந்தாது என்றாலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது.கடந்த ஜூன் 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 70,000 குடும்பங்கள் ஃபேமிலி விசாக்களை பயன்படுத்தி UK விற்கு வந்துள்ளனர். ஃபேமிலி விசா பெறுவதற்கான தொகை £18,600 லிருந்து £38,700 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த புதிய விதிகள் பல குடும்பங்களை பிரிப்பதாக எழுந்த புகாருக்குப்பின், இதன் கட்டணம் £29,000ஆக குறைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்தத் தொகையானது முதலில் £34,500 ஆகவும் பின்னர் £38,700 ஆகவும் உயர்த்தப்படும் என்று சுனக் கூறினார். மேலும், இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.எவ்வாறாயினும், தற்போதுள்ள குடும்ப விசாவைப் புதுப்பிக்கும் எவரும் புதிய சம்பளத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என்று அந்நாட்டின் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அங்கு வேலை செய்யும் பராமரிப்பு பணியாளர்கள் தங்களது குடும்பங்களை யூ கே விற்கு அழைத்து வர முடியாது. பராமரிப்பு பணியாளர்களின், குடும்பங்களால் யூகே விற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அந்நாட்டின் உள்துறை அலுவலக தரவுகள் கூறுகின்றன.புதிய திட்டத்தினால் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல் என்ன?: யுகே வில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருக்க பட்டதாரி விசா அனுமதிக்கிறது. இதனை தவறாக சிலர் பயன்படுத்துவதால், அதனை ஆய்வு செய்ய உள்ளோம் என யூகே அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்கு படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோரை அழைத்து வருவதை குறைக்கும் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளதாக அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் படிப்பை முடிக்கும் முன்னரே வேலை செய்வதற்கான ஒர்க் விசா பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 2 ... 30 31 32 33 34 35 36 ... 47 48

AD's



More News