ராஜபாளையம் சமத்துவபுரம் அருகே, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.80 கோடி மதிப்பில் மூன்று மாடிகளுடன் 864 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு, 2025-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன. இங்கு குடியேறி 15 மாதங்கள் கடந்தும் அலைபேசி சிக்னல் கிடைக்காததால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அலைபேசியில் பேசவோ, அழைப்புகளைப் பெறவோ முடியாததால், ஒவ்வொரு முறையும் குடியிருப்பிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதான சாலைக்குச் சென்று சிக்னல் தேட வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மற்றும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.குடியிருப்புவாசி பிரபா கூறுகையில், "எங்கள் பகுதியில் அலைபேசி டவர் சிக்னல் முற்றிலும் இல்லை. பேச வேண்டுமென்றால் பிரதான சாலைக்கு சென்று அலைபேசியை உயர்த்திப் பிடித்து சிக்னல் தேட வேண்டிய நிலை உள்ளது. அவசர நேரங்களில் ஆம்புலன்ஸை கூட தொடர்புகொள்ள முடியவில்லை. மலைப்பகுதிகளில்கூட தொடர்பு வசதி உள்ள நிலையில், நகர்ப்புற குடியிருப்பில் 15 மாதங்களாக தொடர்பு எல்லைக்கு வெளியே வாழ்ந்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வயல் தின விழா நடைபெற்றது. இதில் நெல் சாகுபடியில் உர மேலாண்மை, இலை வண்ண அட்டை பயன்பாடு, மண்வள அட்டை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சங்கத் தலைவர் ஆர். வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார்.செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா விருந்தினரை அறிமுகம் செய்தார். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் அமைச்சருக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விழாவில் அமைச்சரிடம் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது:முன்னாள் சென்னை மாகாண முதல்வரும், முன்னாள் ஒடிஷா மாநில கவர்னருமான பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் திருவுருவப் படத்தை சட்டசபையில் திறக்க வேண்டும்.தற்போது முடங்கியுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்.நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரி விதிப்புகளைக் குறைக்க வேண்டும்.ராஜபாளையம் மாஸ்டர் பிளான் - 2041 திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.நிகழ்வின் நிறைவாக, சங்கச் செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், பூர்ணா ஹுதி தீபாராதனை, முதல் காலயாக சாலை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை 9:00 மணிக்கு வேத கால பாராயணம் 2ம் யாக பூஜைகளுக்கு பின் விநாயகர், சப்த கன்னி மார், பெருமாள், லாட சன்னாசி, கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மகா தீப ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கன்னிமார் கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
ஸ்ரீபராபவ வருடம், ஆனி 08, திங்கள் முதல் ஆனி 14, ஞாயிற்றுக்கிழமை வரை,22.06.2026 முதல் - 28.06.2026 வரை ,அனைவரும் வருக! அருளின்பம் பெறுக!ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீடம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸேவா ஸமிதி (பதிவு எண்: 500/2002) ஸ்வாமீ சித்பவாநந்த ஆச்ரமம், சத்திரப்பட்டி சாலை, வேதபுரீ, தேனி. - 625 531தொடர்புக்கு 97517 51910, 94430 51910www.vedaneri.org
.முக்கியத் தகவல்கள்:பணிகளின் நிலை: 71.6 கி.மீ நீளமுள்ள இந்தச் சாலையில், அழகாபுரி முதல் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் வரையிலான 35.6 கி.மீ பணிகள் 100% முடிந்து வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.சுங்கச்சாவடி வசதிகள்: நத்தம்பட்டி சுங்கச்சாவடியில் பாஸ்டேக் (FASTag) மற்றும் தானியங்கி எந்திரங்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுவதால், குறைந்த அளவிலான ஊழியர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம் மயிலிறகு மனசுக்காரி,குழலிசை,பேச்சுக்காரி, கிளிப்பச்சைஉறவுக்காரி,ஆண்டாளின் சொந்தக்காரி,உறவுகளின் மேன்மைக்காரி,என் ஆறாம் வகுப்பின் கூட்டுக்காரி,இத்தனை பிரியமான"நம் ரஜினியின் படைப்புலகம்" குறித்த இலக்கிய நிகழ்வுகள் நட்பு சூழ நடைபெற்றது.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலையையொட்டி உள்ள விவசாய நிலங்களில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் அதிக அளவிலான மாம்பழ விளைச்சல் இருக்கும். இந்த மா விளைச்சலை நம்பி விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். இதில் சப்பட்டை, பஞ்சவர்ணம் போன்ற மாம்பழங்கள் மிகுந்த சுவை உடையது. ராஜபாளையத்தில் மாம்பழ வரத்து அதிகரித்து, சந்தைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் கிளிமூக்கு, சப்போட்டா, மற்றும் கானாரூஸ் வகைகள் உள்ளிட்ட சுவையான மாம்பழங்கள் அதிகளவில் விற்பனைக்குக் குவிந்துள்ளன.நடுத்தரமாம்பழங்கள்ஒருகிலோரூ.70க்கும், நன்குவிளைந்தமாம்பழம்கிலோரூ.100க்கும்விற்பனைசெய்யப்படுகிறது. ராஜபாளையத்தில் விளையக்கூடிய மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும், அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் மாம்பழத்தை வாங்கி செல்கின்றனர்.
புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்காண சித்திரை திருவிழா கடந்த 21-ந் தேதி பூக்குழி திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் பல்வேறு அலங்காரத்துடன் சுவாமிஊர்வலம் நடைபெற்றது. 10-வது நாள் திருவிழாவான பூக்குழி திருவிழாநேற்று நடை பெற்றது. கோவிலில் பக்தர்கள் அழகு குத்துதல், அக்னி சட்டி முளைப்பாரி ஊர்வலம்சென்றனர். பின்னர் காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களைசெலுத்தினர்.மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், இதையடுத்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது பின்னர் அம்மன் சப்பரம் உலா வந்து பூக்குழி திடலை அடைந்தது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். துணை போலீஸ் சூப்பிரண்டு பசினா பீவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புத்தகங்களுக்கான கண்காட்சி ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடந்து வருகிறது. மதுரை மீனாட்சி புக் ஷாப், - பிரதர்ஸ் மீடியா பிரை வேட் லிட் இணைந்து 5 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.மே 5 வரை கண்காட்சி தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைநடக்கிறது. அனுமதி இலவசம். ஞாயிறும் விற்பனை உண்டு. இங்கு தாமரை பிரதர்ஸ்மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். உலக அளவில் நாம் வியக்கும் சான்றோர்களின் வாழ்வில் மாற்றம் என்பது புத்தகங்களை வாசித்ததில் இருந்து தொடங்கியுள்ளது.புத்தகங்களை தேடி வருவது என்பது ஒவ்வொரு முறை புதிய அனுபவம். டிஜிட்டல் பத்திரிகைகளில் இந்த வாசிப்பின் சுவை கிடைக்காது. வாழ்க்கை அனுபவங்களில் கிடைக்காத உண்மைகளும் புதிய உலகங்களையும் புத்தகங்களில் இருந்து கண்டு வருகிறோம். எண்ணங்கள் நேர் பெறுவதற்கு புத்தகங்களே காரணம். உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும். நல்ல புத்தகங்களை தேடி வாசிப்பதால் உற்சாகம் பெறுவதோடு சரியான முடிவுகளை எடுக்க துணை புரியும். முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும்.