இராஜபாளையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இத்துடன் வானிலை அறிக்கையும் ஒரு வாரத்திற்கு பரவலான மழை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பருவம் தவறிய இந்தொடர் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நெற் பயிர்கள் மண்ணில் சாய்ந்து வருகிறது. விவசாயிகளை பெரிதும் பாதித்து வருகிறது. அறுவடையை எதிர்பார்க்கும் நேரத்தில் ஏற்படும் நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற வருத்தத்தில் உள்ளனர்.
இராஜபாளையம் மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில் 07.01.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00மணிக்கு நடைபெற்றது. பொதுமக்களுக்கான சிவபுராணம் எழுதும் போட்டி 06.01.2024 சணிக்கிழைைம பிற்பகல் 3 மணிக்கு மறக்கண்ணு செட்டியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. மேலும் இன்னிசை, பேருரை, நூல் வெளியீடு, பரிசளிப்பு, பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது திரு கொ.பூமிநாதன் அவர்கள் தலைமையில் திரு.எஸ்.முத்துக்கிருஷ்ணராஜா அவர்கள் முன்னிலையில், திரு. இரா.மாரியப்பன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் சங்க இலக்கியங்களில் சமய வளர்ச்சிக்கான வழிபாட்டு முறைகளும்,சமுதாய வளர்ச்சிக்கான வழிமுறைகளும் நூல் வெளியிடப்பட்டது. திரு.ஆ.சங்கரலிங்கம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.மன்றத் தொடர் பணிகள்இல்லந்தோறும் திருமுறை ஓதுதல் நூல்கள் வெளியீடு, மகாசிவராத்திரி வழிபாடு நடத்தி, அன்றே மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு வழிபாட்டுப் பிரசாதம், வேஷ்டி, சேலை, பழம் வழங்கி வருதல் தேவார இன்னிசை பெரியபுராணம் கட்டுரைப் போட்டி நடத்தி பரிசளித்தல், மாதந்தோறும் ஆங்கில மாத இரண்டாவது சனிக்கிழமை கூட்டம் நடத்துதல் மேலும் விபரங்களுக்கு இராஜபாளையம் சேக்கிழார் மன்றம் என்னும் Youtube விழியத்தைக் காண E.mail: sekkizhar1986@gmail.com
இராஜபாளையம் நகராட்சி பச்சமடம் குடியிருப்பு பகுதியில் ஊருணி உள்ளது. இதில் மூன்று நாட்களுக்குள் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் செத்து மிதந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பின்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருணி குப்பை, கழிவுகள் கலக்காததாக உள்ளது. இதனால் மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், ஆமைகள், நீர் பறவைகள் என இயற்கையான சூழல் நிலவியது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் ஊருணியை ஆழப்படுத்தி, பாதுகாப்பு வேலி அமைத்து நடைப்பயிற்சி இடமாக மாற்ற ரூ.75 லட்சம் ஒதுக்கி பணிகள் தொடங்கின. பெரும்பாலான பணிகள்முடிந்து, தற்போது வரை பாதுகாப்பு வேலி அமைக்காததால் திறந்தவெளி பார், சூதாடும் இடமாக மாறி உள்ளது. ஆமைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை இரு நாட்களில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவங்கப்படும் என்றனர்!
சலானி ஜீவல்லரி சார்பில் தங்கம், வைரம், நகைகளுக்கு மூன்று நாள் கண்காட்சிநம்நகரில் உள்ள தென்காசி ரோடு ,அமிழ் ஹோட்டலில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சியல் மணமகள் திருமண நகைகள், தினமும் அணிய லைட் வெயிட் கலெக்சன், பாரம்பரியத்தை உணர்த்தும் ஆன்டிக் நகைகள், டைமண்ட் நகைகள், தெய்வீகமான டெம்பிள் நகைகள்,வெள்ளி பாத்திரங்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.ஜனவரி 7ம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெறும். இக் கண்காட்சியை திருமதி ஆனந்தி அவர்கள் துவக்கி வைத்தார். காலை 10.00 மணி முதல் இரவு 8 .30 மணி வரை ஜனவரி 5,6,7,ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கண்காட்சியில் பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து,திருச்சியில்20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்து, மேலும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடிஅவர்களின் இந்த வருட முதல் பயணம் திருச்சி விமான நிலையத்தில் 1112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.வணக்கம் தமிழ் குடும்ப உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி உரையை தொடங்கினார். தற்போது துவக்கப்படும் 20000 கோடி ரூபாய் திட்டங்களால், தமிழகம் வளர்ச்சி அடையும். இத்திட்டங்கள் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் புதிய திட்டங்களால், தமிழகம் இன்னும் விரைவான வளர்ச்சி பெறும். உ அதன் வாயிலாக நாடும் வளர்ச்சி அடையும். பத்து ஆண்டுகளில், மத்திய அரசானது, கடலோர பகுதிகள் முன்னேற்றம், மீனவர்களின் நலன் போன்ற வற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனித்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. தமிழ் இளைஞர்களின் மீது, எனக்கு அபார நம்பிக்கை உள்ளது என்று கூறினார் .
இராஜபாளையம் சிட்டி பேஸ்கட்பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தன. இதில் திருநெல்வேலி, கோவை, தேனி மதுரை பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. இராஜபாளையத்தில் நடந்த மாநில கூடைப்பந்து இறுதிப் போட்டியில் திருவேங்கடம் அணியை வென்று இராஜபாளையம் அணி முதலிடம் பெற்றது. திண்டுக்கல் உதவி ஊார்க்காவல் படை தளபதி அஜய் கார்த்திக் ராஜா, தென்காசி ஏரியா கமாண்டர் பிரதாப் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை பரிசு தொகை வழங்கினார் ஏற்பாடுகளை இராஜபாளையம் சிட்டி பேஸ்கட் பால் கிளப் தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த், பொருளாளர் ராம்சிங் ராஜா செய்திருந்தனர்
டிசம்பர் 30 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு காந்திகலைமன்றம் பி.எஸ்.கே ருக்மணி அம்மாள் அரங்கத்தில் திரு.பி.ஆர்.வெங்கட்ராம ராஜா அவர்கள் தலைமையில் கவிஞர். கிருஷ்ண பிரசாத் அவர்கள் மருத்துவர். த.அறம் அவர்கள் திரு.அ.லட்சுமிகாந்தன் அவர்கள், திரு.P.லோகநாதராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். திரு. முனைவர் வி.ப.ஜெயசீலன் (விருதுநகர் ஆட்சத் தலைவர்) அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்.இலண்டனில் உலகளாவிய விருது பெற்ற டாக்டர் கு.கணேசன் அவர்களுக்கு பட்டமளித்தல் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகள் அளித்தல் கவிதைப் போட்டை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தல் நூல்கள் தேர்வு செய்த நடுவர்களுக்கு பாராட்டு, நூல்கள் வெளயீடு வழங்க உள்ளனர். வரவேற்புரை கொ.மா.கோ. இளங்கோ, மன்றத் தலைவர் குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம், நன்றிஉரை V.K. பாரதி பீமா.
நம் நகரில் மாநில கூடைப்பந்து போட்டி இராஜபாளையம் சிட்டி பேஸ்கெட் பால் கிளப் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கூடைபந்து போட்டியில் கோவை, மதுரை, தேனி, போடி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 18 அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு ஆனந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜீக்கள் கல்லூாயில் உள்ள இரண்டுஆடுகளங்களில் போட்டிகள் நடைபெறகின்றன.முன்னாள் இந்திய கூடை பந்தாட்ட வீரர் ராமசுப்பிரமணிய ராஜா நேற்று போட்டியை துவக்கி வைத்தார். சந்திர ராஜா.தலைமை வகித்தார். டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.31,000தொகையுடன் டிராபி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இராஜபளையம் சிட்டிபேஸ்கட் பால் தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த் பொருளாளர் ராம்சிங் ராஜா செய்துள்ளனர்.
இராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாயூரநாதர் சாமி கோவில் அடுத்து பள்ளி முன்பு போலிஸ் சார்பில் ரோட்டின் குறுக்கே பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த இரண்டு டுவீலர் விபத்துகளை காரணம்காட்டி இதற்கு 100 மீட்டர் அருகே வளைவில் தடை ஏற்படுத்தும் விதமாக மற்றொரு பேரிகார்டை போலீசார் அமைத்துள்ளனர். இதனால் தொலைதூரங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் இதில் கவனம் செலுத்தி தடை ஏற்படும் போரிகார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பால தடுப்பு சுவர் உடைந்துள்ளதால் குறுகலாக மாறியது. எச்சரிக்கைக்காக தற்காலிக கம்பிகளை ரோட்டில் ஒரு அடி உள்பகுதி வைத்துள்ளனர். பல்வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென எதிர்ப்படும் பள்ளம், தெரியாமல் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதன் அருகே ரோட்டோரங்களில் வரிசையாக நிறுத்தப்படும் லாரிகளும் இடைஞ்சலை அதிகப்படுத்துகின்றன. இரவில் இதன் நிலை இன்னும் சிக்கல், மாதக்கணக்கில் தீர்வின்றி தொடரும் பாதிப்பை தடுக்க விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அய்யனார் கோவில் ஆறு அதன் அருகே அமைந்துள்ள நீர்காத்த அய்யனார் கோவில் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சுற்றுலா தளமாக உள்ளது. பொது மக்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களில் உணவுகளை கொண்டு வந்து வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதுடன் கழிவுகளை ஆற்றின் அருகே போட்டு செல்கின்றனர்.இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் யானை, மான், கரடி, காட்டெருமை, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளது.இளைஞர்கள் ஆற்றின் அருகே சமைத்து போதையில் பாட்டில்களை உடைத்து விலங்குகள் நடமாடும் பகுதியில் வீசிசெல்வதும் தொடர்கிறது. குருங்குகள், இரையைத் தேடி காட்டிற்குள் செல்லாமல் அங்கு கீழே விழுந்து கிடக்கம் பாலிதீன் பைகளில் உள்ள உணவுகளை பையுடன் சேர்த்து சாப்பிடுகிறது. இதனால் வனவிலங்குகள் பாதிப்பிற்குள்ளாகின்றன்.இதைத் தவிர்க்க ஆற்றிற்கு வருபவர்களை நன்றாகக் கண்காணித்தும் சோதனைக் கூடத்தை தீவிரக் கண்காணிப்பிற்கு வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என வனவிலங்கு சமூக அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். எத்தனை கண்காணிப்பாளர்கள் இருப்பினும் மக்களாகிய நாமும் இவற்றை கடைபிடிக்க வேண்டும்.