ரஜினியின் சில்வர் ஜூப்ளி படம்டாப் நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்வது இப்போது டிரெண்ட் ஆகிவிட்டது. இந்த மாதம் எட்டாம் தேதி கமலின் ஆளவந்தான் படம் ரீ ரிலீஸ் ஆனது. அதை தொடர்ந்து இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் தன்னுடைய பிறந்த நாளான டிசம்பர்12 ஆம் தேதி , 25 வருடத்திற்கு முன்பு ஹிட்டான படத்தை ரீ ரிலீஸ் செய்தார்.இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் ஹைபை ட்ரீட் ஆக பார்க்கப்படுகிறது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் ரஜினி, மீனா நடிப்பில் கடந்த1995 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தான் முத்து.இந்த படம் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபீசை மிரள விட்டது. அதிலும் குறிப்பாக ஜப்பானில் இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் எல்லாம் இன்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஃபேவரிட் பாடல்களின் லிஸ்டில் இருக்கிறது.இந்த நிலையில் கமலின் ஆளவந்தான் படம் ரிலீஸ் ஆகும். அதே சமயத்தில் முத்து படத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ரிலீஸ் செய்கின்றனர். முத்து படத்தை4k டெக்னாலஜியில்5.1 சவுண்ட் சிஸ்டத்தோடு கொல மாஸ் ஆக ரீ ரிலீஸ் செய்கின்றனர்.இதற்கான ப்ரோமோஷன் சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் முத்து படத்தை குறித்த அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அது மட்டுமல்ல இந்த படத்தின் புதிய டீசரையும் பட குழு சோசியல் மீடியாவில் வெளியிட்டதால் ட்ரெண்ட் ஆகிறது..
கொடியநோயால் பாதிக்கப்பட்டுள்ளஇவர் படங்களில்நடிப்பது இல்லை,மற்றபடி சின்னசின்ன நிகழ்ச்சிகள்கலந்துகொள்வது எனபிஸியாக இருக்கிறார்.அவர்பூரண குணமடைந்துவிரைவில் திரையுலகில்பிஸியாக நடிக்கவேண்டும் என்பதுரசிகர்களின் ஆசையாகஉள்ளது.அண்மையில்அவர் கொஞ்சம்கிளாமரான உடையில்போட்டோ ஷுட்நடத்தி வெளியிடஅதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வந்தார்கள்.சமந்தாஏற்கெனவே பள்ளி குழந்தைகளுக்காகEkam நிறுவனம், ஆடை துறையில்Saaki என்ற நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவர்Tralala என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.எனது சொந்ததயாரிப்பு நிறுவனத்தைஅறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனத்தின்மூலம் நல்ல படங்களை கொடுப்பேன். என பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 700 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும், வட இந்தியாவிலேயே சக்கைப் போடு போட்டு வருகிறது., அந்த படத்தில் இடம்பெற்ற அந்த சுத்தியல் சண்டைக் காட்சி பிரபலமான படத்தில் இருந்து சுடப்பட்ட சீன் என்றும் அர்ஜுன் ரெட்டி படத்திலேயே அட்லீயை மிஞ்சுகிற அளவுக்கு சந்தீப் ரெட்டி ஹாலிவுட் படத்தில்இருந்துஅப்படியேகாப்பியடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் ஆதாரத்துடன் போஸ்ட் போட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜுன் ரெட்டி என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை வைத்து பேன் இந்திய அளவில் அனிமல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் நெகட்டிவ் ஆக தான் விமர்சனங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.அதிலும் வட இந்தியாவில் இப்படம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.இந்நிலையில் ஷாருக்கான், சல்மான் படங்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அனிமல் படம்4 நாட்களில்410 கோடிகளை வசூல் செய்து மிரட்டியுள்ளது.இதில் வட இந்தியா மட்டும் ரூ250 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரன்பீர் கபூர் தான் அடுத்த பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஷாருக்கான், சல்மான் கானை அச்சத்தில் ஆழ்த்திய அனிமல் வசூல்.
லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவின, நடிகர் விஜய் மட்டுமின்றி தயாரிப்பாளர் லலித்குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட வீடியோ காட்சிகளை அந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உணவு தயார் செய்து கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மாஸ் காட்டிய விஜய்: லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிம்பிளாக வந்து அந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக மாற்றி, ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் நடிகர் விஜய் ஈர்த்து இருந்தார். நடிகர் விஜய் வரும்போது அவருக்கு உற்சாக வரவேற்பை மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த வீடியோவையும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியாக வெளியிட்டுள்ளார்.விஜய் அம்மா, அப்பா: நடிகர் விஜய் மட்டுமின்றி அவரது தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு உண்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் தற்போது சினிமா பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு புக் செய்யப்பட்டு வருகிறதுவிக்னேஷ் சிவனை உட்கார வைத்து: மேலும், இப்ப நான் விக்னேஷ் சிவனை உட்கார வைத்து அவருக்கு மாதம்பட்டி ரங்கராஜ் உணவு பரிமாறும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. ராக்ஸ்டார் அனிருத், கவிஞர் பா விஜய், விஜய் அட்மின் ஜெகதீஷ், புஸ்ஸி ஆனந்த், நடிகர் சூரி, சாந்தனு உள்ளிட்ட பல பிரபலங்கள் லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காட்சிகளை மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ளார். உணவு மெனு: ஜாலபெனோ சீஸ் சமோசாவில் ஆரம்பித்து, பானிபூரி ஸ்டால், ஃப்ரூட் சாலட், விதவிதமான இனிப்பு பண்டங்கள், ஐஸ்கிரீம் ஸ்டால்கள் என களைகட்டிய நிலையில், மெயின் மெனுவாக கோதுமை தந்தூர் ரொட்டி குல்ச்சா, மாதம்பட்டி ஸ்பெஷல் கொத்து பரோட்டா - தண்ணி குழம்பு, ராஜஸ்தானுக்கு செடி - குஜராத்தி கடி, மினி தட்டு இட்லி - தேங்காய் சட்னி, போடி கோதுமை தோசை - வெஜ் ஆம்லெட், கொள்ளு ரசம் சாதம், சிறிய வெங்காயம் சாமை தயிர் சாதம் - இஞ்சி ஊறுகாய் என மெயின் கோர்ஸ் களைகட்டியது.
ரியோ ராஜ் நடித்துள்ள புதிய படத்துக்கு'ஜோ" என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அன்பு தாசன், மாள விகா மனோஜ், ஏகன், பவ்யா திரிக்கா ஆகியோரும் முக் கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹரிஹரன் ராம் டைரக்டு செய்துள்ளார்.படம்பற்றி அவர் கூறும்போது,“கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவ- மாணவிகளின் பதினேழு வயது முதல் இருபத்தி ஏழு வயது வரையிலான வாழ்க்கையை மூன்று கட்டங்களாக சொல்லும் படம் இது. ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும்,கேரளப் பெண்ணுக்கும் வரும் காதலும், அதன் விளைவுகளுமே இந்தப் படம். படத்தில் வைசாக் வரிகளில் உருவாகி உள்ள'ஒரே கானா' பாடலில் யுவன் சங்கர்ராஜாதோன்றியுள்ளது படத்துக்கு பெரும் பலம் என்றார். இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஒரிஜினலாக தாடி வளர்த்ததாகவும், இதனால் வேறு எந்த பட வாய்ப்புகளையும் ஏற்க முடியவில்லை என்றும் ரியோ கூறி னார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ ஆகியோர் தயாரித்துள்ளனர். இசை: சித்துக்குமார், ஒளிப் பதிவு: ராகுல் கே. விக்னேஷ்.
சினிமாவில் கொஞ்சம் வளர்ந்து விட்டாலும் எவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தாலும் மரியாதை மற்றும் கண்ணியம் தவறாமல்இந்த ஐந்து ஹீரோக்கள் மட்டும் தனித்துவமாக நடந்து கொள்கிறார்கள் .சமுத்திரக்கனி: இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் சமுத்திரக்கனி. ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இன்று தெலுங்கு சினிமா கொண்டாடும் கலைஞனாக இருக்கிறார். நடிப்பு மட்டுமே தொழில், அதை சரியாக செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர் இவர்.சத்யராஜ்: நடிகர் சத்யராஜ் சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம்.. சத்யராஜ் எப்போதுமே மனதில் பட்டதை மறைக்காமல் பேசக்கூடியவர். பிரச்சனையே வந்தாலும் உண்மையை பேச இவர் எந்த மேடையிலும் தவறியதே இல்லை.மம்மூட்டி: மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்மூட்டி. தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் நடிகராக இருக்கிறார். ஆனால் இவரிடம் எந்த பந்தாவும் இருக்காது. இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமும் ரொம்பவும் மரியாதையாக நடந்து கொள்வாராம்.பாக்யராஜ்: இந்திய சினிமா உலகில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் பாக்யராஜ். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய கதைகளை படமாக இயக்கி, நடித்து இருக்கிறார். பாக்யராஜுக்கு நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் கிடையாதாம். எல்லோரிடமும் பண்பாக பேசும் பழக்கம் உடையவர் கூட.டி.ராஜேந்தர்: நடிகர் டி. ராஜேந்தர் இயக்குனர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் நடிக்கும் படங்களில் நடிகைகளிடம் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்வாராம். அதே போன்று நடிகைகளுக்கு ரொம்ப கவர்ச்சியான காட்சிகளை வைப்பதில்லை. படங்களிலும் அப்படிப்பட்ட காட்சிகளை வைக்க மாட்டார்.
நட்சத்திரங்கள் சினிமாவை'தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆரம்பக் கால புகழ்பெற்ற ஹீரோக்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, நடிகை பானுமதி போன்றோர் சொந் தமாக ஸ்டூடியோக்கள் வைத்து இருந்தனர்.அதன் பிறகு வந்த ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிலத்தில் முதலீடு செய்தனர். நடிகைகள் அம்பிகா,ராதா ஸ்டூடியோ கட்டி வருமானம் பார்த்தனர். தற்போதைய முன் னணி கதாநாயகன் விஜய் திருமண மண்டபம், ரியல் எஸ்டேட் முதலீடு என்று இருக்கிறார்.அஜித்குமார் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் சாலை பயணம்'மேற்கொள்பவர்களுக்காக ஏ.கே. மோடோ ரைட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். சூர்யா படக் கம்பெனி உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.ஆர்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஓட்டல் தொழில் செய்தார். இப்போது சினிமாவில் கிடைத்த வருமானம் மூலம் பல இடங்களில் உணவகம் திறந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத் தில் இருக்கும் நயன்தாரா சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட், துபாயில் எண் ணெய் நிறுவனம், படக்கம்பெனி, சர்வதேச சந்தையில் போட்டியிடக் கூடியளவுக்கு அழகு சாதனப் பொருட்கள் என பல துறைகளில் முதலீடு செய்துள்ளார்.தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் மார்க்கெட்டை தக்க வைத்திருக்கும் தமன்னா இணையதளம் மூலம் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத் திலேயே விஜய், சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்த கீர்த்தி சுரேஷ் சம்பாத்தியத்தை முதலீடாக்கி அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் நடத்துகிறார்.தமிழில் அறிமுகமாகி இந்தியில் கொடிகட்டி பறக்கும் டாப்சி ஈவண்ட் மேனஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.‘மைனா' படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அமலா பால் தன் சொந்த மாநிலமான கேரளாவில் யோகா மையங்கள், ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிறுவனம் என பல வியாபாரம் செய்து வருகிறார்.தமிழ், தெலுங்கு என இரு மொழி களிலும் பிசியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் ஆந்திரா மாநிலத்தில் பல இடங் களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் தன் தங்கையுடன் சேர்ந்து தங்க நகை வியாபாரம் செய்கிறார்.தனுஷ், சிவகார்த்திகேயன், திரிஷா, அனுஷ்கா, சமந்தா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்துள்ளனர்.
ஜெயம் ரவி சைரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ், மற்றும் யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் டைரக்டு செய்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டீசரில் ஜெயிலில் இருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியே வருவதுபோன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. ஜெயம் ரவியின் கைதி கதாபாத்திரத்தில் ஒரு கதையும், போலீசாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் கதையை விவரிக்கும் காட்சி டீசரில் உள்ளது.பரபரப்பான திருப்பங்களுடன் மாறுபட்ட கதைக் களத்தில் ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகி இருக்கும் இந்த டீசர், படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் ஜெயம்ரவி முதல் முறையாக 'சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் வருகிறார்.ஆக் ஷன் திரில்லர் கதையம்சத்தில் உருவாகிறது. ஜெயம்ரவி இது வரை ஏற்றிராத இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். யோகி பாபு நகைச்சுவை மட்டுமின்றி கதையுடன் ஒன்றிய வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வர உள்ளது. இசை ஜி வி.பிரகாஷ், ஒளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்..
தமிழ் சினிமாவில் பெண் இசை அமைப்பாளர்கள் மிகவும் குறைவு ஒரு சிலர் வருகிறார்கள். ஓரிரு படங்களுடன் ஒதுங்கி விடுகிறார்கள். இளையராஜாவின் மகள் பவதாரிணி. ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ரெஹானா உள்ளிட்ட ஒரு சிலர் அவ்வப்போது படங்களுக்கு இசையமைக்கிறார்கள் இந்த நிலையில் 'வடக்கன்' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக ஜனனி அறிமுகமாகிறார்.இவர் கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவர் இந்துஸ்தானி, வெஸ்டர்ன். கிளாசிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவர் தனிப் பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றவர் இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராகிறார் படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை ரமேஷ் வைதியா எழுத. தேவா பாடினார் பாடலைப் பாடி முடித்ததும் ஜனனியை தேவா பாராட்டி ஆசி வழங்கினார்.எம்டன் மகன் வெண்ணிலா கபடிக்குழு. நான் மகான் அல்ல. அழகர்சாமியின் குதிரை பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனத்தை எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் படம் வடக்கன்' தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும் பாரதிராஜா கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெரு நகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான நகைச்சுவை கலந்த பொழுது போக்குத் திரைப்படமாக வடக்கன் உருவாகியுள்ளது