25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெள்ளித்திரை

Oct 12, 2023

அஜித்தின் விடாமுயற்சி  திரைப்படம்

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒருவழியாக துவங்கிரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துணிவு படத்திற்கு பிறகு கடந்த பத்து மாதங்களாக அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மறுபக்கம் விஜய், ரஜினி, கமல் ஆகியோரின் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிவந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்புஅஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாமல் இருந்தது.இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பிற்காக ஆவலாக,காத்துக்கொண்டிருந்தனர்..விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக நடக்கும் என்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வந்த பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் அஜித், த்ரிஷா, ரெஜினா ஆகியோர் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.விடாமுயற்சி படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. 

Oct 12, 2023

2024 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ள ரஜினியின் படம்.

பண்டிகை நாட்களில் தான் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். அந்த2024ஆம் ஆண்டு தீபாவளியை குறிவைத்து ரஜினியின் படம் ஒன்று வெளியாக இருக்கிறது.சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் கிட்டத்தட்ட600 கோடி வசூலை எட்டியது. இந்தப் படம் எப்படியும் ஆயிரம் கோடி வசூலை தொடும் என எதிர்பார்த்த நிலையில் அதற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகிவிட்டது. இந்த சூழலில் ஜெயிலரில் விட்ட அந்த ஆயிரம் கோடி வசூலை கண்டிப்பாக அடுத்த படத்தில் அடித்து விட வேண்டும் என்ற ரஜினி திட்டம் போட்டு இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின்171 வது படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.எப்போதுமே லோகேஷ் தனது படத்தின் அறிவிப்புடன் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பார். அந்த வகையில் இந்த படத்தின் பூஜை போடும்போது 2024 தீபாவளிக்கு தலைவர்171 ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. மேலும் பிப்ரவரியில் இருந்து தொடர்ந்து8 மாதங்களுக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்திற்கு முன்னதாக ரஜினி நடித்துள்ள லால் சலாம் படம் வெளியாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. ஆகையால் அடுத்த வருடம் ரஜினியின் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு படங்களாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Oct 05, 2023

மலையாள திரையுலகிலும், தமிழிலும் விருதுகளை பெற்ற மம்மூட்டி

முகம்மது குட்டி பனம்பரிம்பில் இஸ்மாயில் என்ற இயற்பெயரை கொண்டவர் மம்மூட்டி. கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மம்மூட்டி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் .அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக சினிமாவில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என ஆர்வத்தோடு, 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாளிசிக்கல் என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்த அவருக்கு 1976ஆம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் அறிமுகம் கிடைக்க அவரது வாசுதேவனின் இயக்கத்தில் தேவலோகம் படத்தில் நடித்தார். 1979ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மம்மூட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாக முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார்.மம்மூட்டியை பொறுத்தவரை தனது நடிப்பில் எந்த விதமான அலட்டலையும் காட்டிக்கொள்ளாதவர். தனது முக பாவனையிலேயே அனைத்தையும் சொல்லி அனைவரையும் கவர்ந்துவிடுவார். அதனால்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார்.. மலையாள திரையுலகில் மம்மூட்டிதான் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த ஹீரோ..: மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் தமிழிலும் நடித்திருக்கிறார். 1990ஆம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் மற்றும் 1991ஆம் ஆண்டு வெளியான அழகன் படத்தில் நடித்த மம்மூட்டிக்கு தமிழில் மெகா ஹிட் படமாக அமைந்தது ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி. அந்தப் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த மம்மூட்டி நட்புக்கு இலக்கணமாக இருக்கும் ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படி; பக்குவமாக நடித்திருந்தார். அதேபோல் தமிழில் அவர் நடித்த மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன. மம்மூட்டி ஏராளமான கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றிருக்கிறார். அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஐந்து முறையும் பெற்றிருக்கிறார்.அந்த ஐந்து விருதுகளில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக ஒரு முறை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மம்மூட்டியின் நடிப்பில் கடைசியாக கிரிஸ்டோபர் வெளியானது.: இந்நிலையில் இன்று அவர் தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கைராலி டிவியின் ஓனர் மம்மூட்டி .மம்மூட்டிக்கு மொத்தம் 360 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

Oct 05, 2023

சுதந்திரத்திற்கு முன் பிறந்த சினிமா நட்சத்திரங்கள்..

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே பிறந்து, அப்போது இருந்த சூழ்நிலையிலும் வளர்ந்து சினிமா துறையின் வளர்ச்சிகளை படிப்படியாக பார்த்து, அனைத்தையும் கரைத்துக் குடித்து, பல திறமைகளை உள்ளே அடக்கி கொண்டு, தற்போது உள்ள சூழ்நிலைகளும் புரிந்து நடித்துக் கொண்டிருக்கும் மாபெரும் பிரபலங்கள்..கவுண்டமணி1939 ஆம் ஆண்டு மே29ம் தேதி பிறந்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். சில சமயங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் தமிழில்60களில் ஆரம்பித்து தனது தனித்துவமான நடிப்பினால்2010 ஆம் ஆண்டு வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவைகள் அனைத்தும் ரசிகர்களால் தற்போதும் ரசிக்கும் வகையில் இருக்கும். பாரதிராஜா. தமிழ் சினிமாவில் மிகவும் பரிச்சயமான இயக்குனர்.பாரதிராஜா.1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார். இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்“16 வயதினிலே”. இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் இயக்குனராக இருந்தார். நடிகராகவும் சினிமாவில் வலம் வந்தவர். கே ராஜன்தமிழ் திரையுலகின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர்.. இவர்“பிரம்மச்சாரிகள்” எனும் திரைப்பட த்தை முதலில் இயக்கியுள்ளார். இவர்1941 ஆம் ஆண்டு பிறந்தார்.80களில் ஆரம்பித்த திரையுலக பயணத்தை, தற்போது வரை தொடர்ந்து துணிவு திரைப்படம் வரை நடித்துள்ளார். விஜயகுமார்1943இல் பிறந்து“ஸ்ரீ வள்ளி” என்ற திரைப்படத்தில்1961இல் குழந்தை முருகராக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானவர்.. இவர் பொண்ணுக்கு தங்க மனசு, இன்று போல் என்றும் வாழ்க, தீபம் நீயா, அவள் ஒரு தொடர்கதை போன்ற400 திரைப்படங்களுக்கு மேல் இவர் நடித்து விட்டார். இவர் சப்போர்ட்டிங் நடிகராகவே அதிகபட்சம் நடிப்பார். தங்கம், வம்சம் போன்ற  சீரியல்களில்  நடித்துள்ளார். டெல்லி கணேஷ்தமிழ் சினிமாவில்1970களில் ஆரம்பித்து தற்போது வரை நடித்துக் கொண்டிருப்பவர் ..1944ல் பிறந்தவர், கிட்டத்தட்ட400 திரைப்படங்களுக்கு மேலே நடித்து இருக்கிறார். இந்திய விமானப்படையிலும் இவர் வேலை செய்துள்ளார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன் போன்ற எக்கச்சக்க திரைப்படங்களில் சப்போர்ட்டிங் மற்றும் காமெடி நடிகராகவும் நடித்து உள்ளார். குறிப்பாக அபூர்வ சகோதரர் திரைப்படத்தில் வில்லத்தனமாகவும் நடித்துள்ளர். தற்போது கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தியாகராஜன்.1981ல்“அலைகள் ஓய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.1946ல் பிறந்தவர், இவர் நடிகர் பிரசாந்தின் தந்தை ஆவார்.80ல் ஆரம்பித்த இவரின் பயணம்2020 வரை தொடர்ந்தது. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எண்ணில் அடங்காதவை. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

Sep 28, 2023

பேராசைப்படாமல் நிதானமாக செயல்பட்டு ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள ஜெயம் ரவி

 சினிமாவை பொறுத்தவரையில் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல தான். ஒரு படம் வெற்றி பெறுமா, தோல்வி பெறுமா என்பது ரசிகர்களின் கையில் மட்டுமே இருக்கிறது.அரசியல்வாதிகளுக்காவது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் வெற்றி, தோல்வி பயம் வரும். ஆனால் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு தங்கள் படம் வெளியாகும் ஒவ்வொரு முதல் நாளும் அந்த பயம் இருக்கும். இதில் சில நடிகர்கள் அதிக பண ஆசையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்கள்.தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நடிப்பில் பட்டையை கிளப்பினாலும் தயாரிப்பில் இறங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும் விதமாக படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் தனுஷ் சில வருடங்களாக படம் தயாரிப்பதையே விட்டுவிட்டார்.சிவகார்த்திகேயன். படம் தயாரித்து கடனில் அவதிப்பட்டு அதை அடைக்க பல பிரச்சனைகளை சந்தித்தார்..“போதும் என்ற மனமே பொன்னானது” என்பது போல வாழ்ந்து சினிமாவை தவிர அவர் வேறு எந்த தொழிலிலும் கவனம் செலுத்த விரும்பவில்லை. தேவையில்லாமல் எதிலாவது தலையை கொடுத்து மாட்டிக்கொண்டால் அதன் பிறகு நிம்மதி தொலைந்து விடும் என்கிறார். தனக்கு எந்த கதாபாத்திரம் வருமோ அதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவி கைவசம் இப்போது இறைவன், சைரன் மற்றும் பிரதர் போன்ற படங்கள் இருக்கிறது. நிதானமாக செயல்பட்டு இப்போது ஒரு டஜன் படங்களை கைவசம் ஜெயம் ரவி வைத்துள்ளார்.

Sep 28, 2023

மாதவனின் ராக்கெட்ரி தேசிய விருது

69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே சிறந்த படமாக மாதவனின் ராக்கெட்ரி: நம்பி விளைவு (இந்தி) படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த விருது விழா முடிந்தவுடனே பத்திரிகையாளர் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கிய நிலையில், ராக்கெட்ரி படத்துக்கு என்ன காரணத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம். ஆனால், நீங்கள் கேட்டதற்காக பதில் அளிக்கிறேன் எனக்கூறிய கேத்தன் மேத்தா 4 - C தான் காரணம் என விளக்கி உள்ளார்.இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட்டுக்கான இன்ஜினை கண்டுபிடித்த நிலையில், அவருக்கு பாராட்டுக்கள் கிடைப்பதற்கு பதிலாக தேசதுரோகி என்கிற பட்டம் கிடைத்து பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். மேலும், தன்னை நிரபராதி என நிரூபிக்க நீதி போராட்டத்தையும் நடத்தி வென்றார்.அவரது வாழ்க்கை வரலாற்று கதையை படமாக இயக்கி அதில் நம்பி நாராயணனாகவே நடிகர் மாதவன் வாழ்ந்திருந்தார். இந்தியில் ஷாருக்கான் கேமியோ ரோலிலும், தமிழில் சூர்யா கேமியோ ரோலிலும் நடித்திருந்தனர். நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.சிறந்த படம் ராக்கெட்ரி: 69வது தேசிய விருதுகள் ஆகஸ்ட் 28ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது ராக்கெட்ரி படத்துக்கு அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை இயக்கி, நடித்த மாதவனுக்கு தேசிய விருது வழங்கப்படும் என அறிவித்தனர்.

Sep 21, 2023

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவிக்கு, வரிசையாக திரைப்படங்களில் வாய்ப்பு

.தனி ஒருவன்- ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற திரைப்படங்களை இயக்கிய மோகன் ராஜா கூட்டணியில் மீண்டும் ஜெயம் ரவி தற்போது இணைந்துள்ளார்.2015 இல் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு, பிறகு அதன் தொடர்ச்சியாக தனி ஒருவன் 2 திரைப்படம் தற்போது எடுக்கப் போவதாக அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.ஜன கன மன: வானம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அகமது. இவர் என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜெயம் ரவியுடன் இணைந்து ஜனகனமன திரைப்படத்தையும் தொடங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டு தொடங்கியது, அதன் பிறகு பாதியிலேயே லாக்டவுன் காரணமாக நின்றது. இந்நிலையில் படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இதில் ஜெயம் ரவியுடன் டாப்ஸி, அர்ஜுன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்...ஜே ஆர்30: ராஜேஷ் இயக்கத்தில் ரவி தன்னுடைய30 ஆவது படத்தில் நடிக்கிறார்.பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். வி டிவி கணேஷ், நடராஜன் சுப்பிரமணியன், ஐயோ ரமேஷ் போன்றோர் இணைந்து நடித்து உள்ளனர். கூடிய விரைவில் திரைப்படம் வெளிவர போகிறது என்று அப்டேட் அளித்துள்ளனர் பட குழுவினர்.இறைவன்: அகமத் இயக்கத்தில் உருவாகும் இறைவன் திரைப்படத்திலும் ரவி நடிக்கின்றார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுஜீனி: அடுத்ததாக புவனேஷ் இயக்கத்தில் ஜீனி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு மொத்தமாகவே மூன்று வாரங்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறாம். இதில் கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷேன், ஓமிகா கேபி போன்ற மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நடக்கின்றனர்களாம். திரைப்படம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்யும் அளவிற்கு உருவாக்கப்படுகிறது, இதில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சைரன்: ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ரிவர்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது சைரன் இதில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி போன்றோர  நடித்துள்ளனர்.. ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Sep 21, 2023

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகர் கார்த்தி கைவசம் இருக்கும் அடுத்தடுத்த படங்கள்

குக்கூ, ஜோக்கர் போன்ற விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்து கார்த்தி நடிக்கும் படம் தான் ஜப்பான். இந்தப் படத்தை தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது கார்த்தி தன்னுடைய26 ஆவது படத்தில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடிக்கவிருக்கிறார். தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலா படங்களுக்கு ட்ரிபியூட் கொடுப்பது போல் இந்தப் படத்தை எடுக்க இருப்பதாக படக்குழு  அறிவித்திருக்கிறார்கள்96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தவர் தான் இயக்குனர் பிரேம்குமார். இவர்தான் கார்த்தியின் 27 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் நல்ல ஒரு காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி100 கோடி வசூல் வேட்டை ஆடிய படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது கைதி. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரெடி ஆகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.கார்த்திசதிஷ் செல்வகுமார்: நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷை வைத்து பேச்சிலர் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் சதிஷ் செல்வகுமார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி இவருடைய இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இவரும் கார்த்திக்கு கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும்.நடிகர் கார்த்தி கைவசம் அடுத்தடுத்து இருக்கும் படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

Sep 14, 2023

ஜீவாவுக்கு திருப்புமுனை தந்த எஸ் எம் எஸ்

சிறிது காலம் எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் பிரேக் எடுத்து கொண்ட சில ஹீரோக்களுக்கு 2 வது . முறை வெற்றியை கொடுத்த படங்கள்தொடக்கத்தில் அமோக வரவேற்பு பெற்று, சிறிது காலம் எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் பிரேக் எடுத்து கொண்ட சில ஹீரோக்களுக்கு செகண்ட் இன்னிங்ஸ் மூலம் வெற்றியை கொடுத்த படங்களை பார்க்கலாம்.ஆசை ஆசையாய், தித்திக்குதே போன்ற திரைப்படங்களின் மூலம்2000 களின் தொடக்கத்தில் பயங்கர வைரலாக இருந்த நடிகர் தான் ஜீவா. பிறகு சில வருடங்களிலேயே காணாமல் போய்விட்டார். இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்காமல் இருந்தது. ராஜேஷ் இயக்கத்தில் 2009இல் வெளியான“சிவா மனசுல சக்தி” என்ற திரைப்படம் பயங்கர ரீச் ஆனது. இவருக்கு மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு எக்கச்சக்க திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் விஷ்ணு விஷால். முதல் படத்திலே சிறந்த கதாநாயகன் விருதும் வாங்கி,. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் அது எதுவும் இவருக்கு பெரிதாக வெற்றி படமாக அமையவில்லை. நடிகரில் இருந்து தயாரிப்பாளராகவும் மாறி பார்த்தார், எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை. பிறகு2017 இல் வெளியான ராட்சசன் திரைப்படதின் மூலம் இவருக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட் ஆகியது.90களில் இருந்து முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருந்தவர்தான் அரவிந்த்சாமி. இவர்2000 வரை நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு இணையாக இருக்கும் நடிகர்களே பயப்படும் அளவிற்கு இருந்தது. அதற்குப் பிறகு சில வருடங்கள் எங்கே போனார் என்று தெரியாமல் இருந்தார். பிறகு 2015 இல் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம் பேக் குடுத்தார்.ஆரம்ப காலகட்டத்தில் காதல் அழிவதில்லை, கோவில் போன்ற திரைப்படங்கள் மூலம் பீக்கிலிருந்தவர் தான் சிலம்பரசன். அதனைத் தொடர்ந்து 2015 வரை நல்ல படங்கள் நடித்து அமோக வரவேற்புடன் இருந்தார். பின்னர் இவர் நடித்த படங்களுக்கு அந்த அளவிற்கு வரவேற்பும் கிடைக்காமல் போனது. அந்த சமயத்தில் இவருக்கு ரி என்ட்ரி திரைப்படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 வெளியான மாநாடு திரைப்படம் அமைந்தது..தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான்மாதவன். இவர் பல பேரின் கனவு கண்ணனாகவே இருந்தவர்.2000 களின் தொடக்கத்தில் அமோக வரவேற்பு கொடுத்த அலைபாயுதே, மின்னலே போன்ற திரைப்படங்களின் மூலம் பயங்கர பேமஸ் ஆக இருந்தார். பிறகு2010 க்கு மேல் தேடும் அளவிற்கு பட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.2016ல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தடத்தை பதித்தார்.பல வருடங்களாக சினிமாவில் இருந்தும், அருண் விஜய்க்கு வெற்றி எட்டா கனியாகவே இருந்தது. அதனை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கு, தவம், வேதா போன்று தொடர்ச்சியாக திரைப்படங்கள் நடித்திருந்தாலும், போதிய அளவிற்கு ரீச் கிடைக்கவில்லை. பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்2015இல் அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம், திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்ற மாதிரி விக்டர் மனோகரன் ஆக மாசாக என்ட்ரி கொடுத்தார். 

Sep 07, 2023

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் நான்கு படங்கள்

 பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் எப்போதுமே பண்டிகை நாட்களை குறி வைத்து தான் வெளியாகும். அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நான்கு படம் வெளியாகிறது.இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி வந்த படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் வைத்துள்ளனர். ஏனென்றால் இப்படம் அறிவியல் சார்ந்த படமாக உருவாகி இருக்கிறது.அயலான் படத்திற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எல்லாம் வெளியான நிலையில் இப்படம் மட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த சூழலில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் விஏபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால் அதற்கான பணிகள் இப்போது மும்மரமாக நடந்து வருகிறது.மேலும் சிவகார்த்திகேயனுடன் 57 வயது நடிகர்ஒருவரும் போட்டிபோட இருக்கிறார். அதாவது விக்ரமின்தங்கலான் படமும்பொங்கல் பண்டிகைக்குவெளியாகிறது. பாரஞ்சித் இயக்கத்தில்உருவாகி இருக்கும்இந்தப் படம்கோலார் தங்கசுரங்கத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்டுவருகிறது. தங்கலான்படத்தில் மாளவிகாமோகன் கதாநாயகியாகநடித்திருக்கிறார்.கேஜி எஃப் பட இயக்குனர்பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிஇருக்கும் படம் தான் சலார். சமீபகாலமாக பிரபாஸ் நடிப்பில் வெளியானபடங்கள் எதுவும் பெரிய அளவில்ஹிட் கொடுக்கவில்லை. பாகுபலி 2 படத்திற்கு பிறகு அவர் எந்தவெற்றி படமும் தரவில்லை. குறிப்பாககடைசியாக வெளியான ஆதிபுருஷ் படம்மிகப்பெரிய அடி வாங்கி இருந்தது. இந்த சூழலில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள சலார் படத்தின் மீது பிரபாஸ் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குண்டூர் காரம் படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

1 2 ... 15 16 17 18 19 20 21 ... 25 26

AD's



More News