தனுஷ் நடித்திருக்கும்47வது படம் கேப்டன் மில்லர் அவருடன் பிரியங்கா மோகன். சிவராஜ்குமார். சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படம் பிரியாடிக் ஆக்சன் அட்வெஞ்சரஸ் படமாக உருவாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள கேப்டன் மில்லர் படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில், இப்படம் திரைக்கு வருவதற்கு 38 நாட்கள் இருப்பதால் விரைவில் புரமோஷன் பணிகளை தொடங்கவிருக்கிறோம். சமீப காலமாக படங்களின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்துவது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதனால் இப்படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதோடு இதுவரை தனுஷ் நடித்த படங்களில் இது ஒரு தனித்துவமான படமாக இருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகவும் இந்த படம் இருக்கும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்கள் மீது படையெடுத்த அந்த அடிமைத்தனத்தை மட்டுமின்றி இன்றைய சமூகத்தில் இருக்கும் அடிமைத்தனம் ஆதிக்க வர்க்கத்தின் செயல்களையும் பேசக்கூடியதாக இந்த கேப்டன் மில்லர் படம் இருக்கும் என்கிறார் அருண் மாதேஸ்வரன்.
தமிழில் அஜித், லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அஜித்தின் மற்றொரு படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.. இந்த படத்தை பாலிவுட்டில் கௌதம் மேனன் இயக்க இருக்கிறார்.இதில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். சமீபகாலமாக அங்கு ஷாருக்கானின் படங்கள் மட்டும் தான் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் இயக்குனர் கௌதம் மேனன் சல்மான் கான் வைத்து என்னை அறிந்தால் படத்தை ரீமேக் செய்ய உள்ளதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தார். மேலும் என்னை அறிந்தால் ரீமேக்கில் மற்ற பிரபலங்கள் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஹிந்தி மொழியில் வெளியான படங்கள் தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் உருவாகும் பல படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.jith
ராகவா லாரன்ஸின் “ ஜிகிர்தண்டா டபுள் x ”, கார்த்திக்கின் “ ஜப்பான்”, விக்ரம் பிரவுவின் “ரெய்டு” வெளியாக உள்ளது.2023 தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் “அயலான் ” படமும் வெளியிட பட உள்ளது.
...'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது170வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் ஆரம்பமானது. பின் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புமும்பையில் நடந்து வருகிறது.அதில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த்தும் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அமிதாப்புடன் நடிப்பது பற்றி ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், “லைக்காவின் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில், தலைவர்170 படத்தில்,33 வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டி, அமிதாப்புடன் மீண்டும் பணியாற்றுகிறேன். எனது இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது,” என அமிதாப்புடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்....ரஜினிகாந்த், அமிதாப் இருவரும் ஹிந்தியில் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இருவரும் இணைந்து கடைசியாக நடித்த ஹிந்திப் படம் 'ஹம்'. அப்படம் தான் தமிழில் 'பாட்ஷா'வாக ரீமேக் ஆனது.ரஜினியின்170வது படத்தில் அமிதாப் தவிர மஞ்சு வாரியர், ராணா, பஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா...விஜயன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது.
அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. மகிழ்திருமேருமேனிஇயக்குகிறார். த்ரிஷா, ரெஜினா, பிரியாபவானி சங்கர் உள்பட பலர்நடிக்கிறார்கள்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்புக்காக குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர். அவர்களுடன்...கலை இயக்குனர் மிலனும்சென்றிருந்தார். அங்கு அவர் திடீரெனமாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதுபடக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...இந்த நிலையில் அஜித்படக்குழுவினைரை அழைத்து பேசியுள்ளார். அனைவரும்உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்என்றும், ஆண்டுக்கு ஒரு முறையாவது முழுஉடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மிலன் மரணம் தன்னைமிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனிதன் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளாராம். இதை தொடர்ந்து .அஜர்பைஜானில் உள்ள குழுவினருக்கு மருத்துவபரிசோதனை நடத்த ஏற்பாடு நடக்கிறது..
கடந்த வாரம் விஜய் நடித்து வெளிவந்த படம் 'லியோ'. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியானது. அதே நாளில்பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படமும், மறுநாள் ரவி தேஜா நடித்த'டைகர் நாகேஸ்வரராவ்' படமும் தெலுங்கில் வெளியாகின. அந்த இரண்டு நேரடித் தெலுங்குப் படங்களுக்கு முன்பாகவே'லியோ' படம் வசூலில் லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.தெலுங்கில் சுமார் 16 கோடிக்கு விற்கப்பட்ட 'லியோ' படத்தின் நிகர வசூல் 18 கோடியைத் தாண்டி லாபக் கணக்கை.ஆரம்பித்துவிட்டது. கடந்த ஐந்து நாட்களில் 35 கோடி வரை வசூலாகியுள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள். . விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை தெலுங்கில் இப்படம் முறியடித்துள்ளது. அது போலவே மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அதிக வசூலைக் குவித்துள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.
ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள்நடிகை நயன்தாராவின்75வது படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்...இந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப். படத்தில் நடிகை நயன்தாரா உடன் நடிகர்கள் ஜெய் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கின்றனர்... கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு'அன்னபூரணி' என தலைப்பு வைத்துள்ளதாக வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர்.இதில் நயன்தாரா உணவுப் பிரியையாக நடித்திருக்கிறார் என தெரிகிறது. மேலும் படத்தின் டேக் லைனா ‛‛அன்னப்பூரணி - சாப்பாட்டு பிரியை' என குறிப்பிட்டுள்ளனர்.
சந்திரமுகி 2 - இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரென்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திகில் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளரான சுபாஷ்கரன் தனது லைக்கா புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.திகில் - திரில்லர் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரென்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சுபிக்ஸா, சுரேஷ் சந்திரா மேனன், வடிவேலு என பல தமிழ் பிரபலங்கள் நடித்துள்ளனர்.ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் தொடர்ச்சி கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் அதே அரண்மனையில் சந்திரமுகி மீண்டும் வர இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.முதல் பாகத்தின் முடிவை தொடர்ந்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) குடும்பத்தில் தொடர்ந்து அசம்பாவித சம்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த குடும்பத்துடன் வேட்டைய புரத்துக்கு வரும் ராதிகா சரத்குமார் தனது பெரிய குடும்பத்தினர் தங்க சந்திரமுகி பங்களாவுக்கு வருகின்றனர்.அந்த பங்களாவில் உள்ள அமானுஷ்ய கதைகளை கேட்கும் அந்த வீட்டின் இளம் பெண்களில் ஒருவர் சந்திரமுகி அறைக்கு மீண்டும் செல்ல, ரியல் சந்திரமுகியே இந்த முறை இறங்கி வருவதும் அதனை அடக்க வேட்டையன் (ராகவா லாரென்ஸ்) வருகிறார். பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை.இப்படம் 2023 விநாயகர் சதுர்த்தி-க்கு ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்படம் செப் 28ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.வடிவேலு நடித்துள்ள முருகேசன் கதாபத்திரம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்திலும் உருவாகியுள்ளது. நகைச்சுவை - திகில் - திரில்லர் என இப்படம் குடும்பங்கள் ரசிக்கும் திரைக்கதையில் உருவாகியுள்ளது.
கடந்த2021ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டன., புதுடில்லியில்,69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், திரையுலக பிரபலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கினார்.பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு, சினிமா துறையின் உச்சபட்ச விருதான, தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறந்த நடிகருக்கான விருது, புஷ்பா படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட் டது. சிறந்த நடிகையருக்கான விருது, அலியா பட், கிருத்தி சனோன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்துக்கான விருது, ராக்கெட்ரி படத்தை இயக்கியதற்காக, நடிகர் மாதவனுக்கு வழங்கப்பட்டது. தேவிஸ்ரீ பிரசாத், ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி ஆகியோருக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்துக்காக பாடகி ஸ்ரேயா கோஷல் பெற்றார். கருவறை குறும்படத்துக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா விருது பெற்றார். கடைசி விவசாயி திரைப்படம் இரண்டு பிரிவில் தேசிய விருது வென்றது. படத்தின் இயக்குனர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றார்.இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. நல்லாண்டி மறைந்ததால், அவர் குடும்பத்தினர் சார்பில் விருதை இயக்குனர் மணிகண்டன் பெற்றார். ஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோர் தேசிய விருதுகளை பெற்றனர்.