25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் பொது மக்களின் நலன் கருதி  முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர இயக்கப்படும்  வழித்தடங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் பொது மக்களின் நலன் கருதி முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர இயக்கப்படும் வழித்தடங்கள்

 விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் பொது மக்களின் நலன் கருதி 21.08.2024 அன்று முதல் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று,  விருதுநகர் கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தினை இன்னும் சிறப்பாக பயன்பாட்டில் கொண்டுவரும் வகையில் சிவகாசி முதல் மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்வதற்கும்,  விருதுநகர் முதல் திருமங்கலம், மதுரை மார்க்கமாக செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் / மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்வதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்த நடைமுறையானது நாளை 16.10.2024,  முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

வழித்தடங்கள்:
விருதுநகர் முதல் கள்ளிக்குடி, திருமங்கலம்,(நகர் பேருந்துகள்)
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் - எம்ஜிஆர் சிலை - ஆத்துப்பாலம் - பழைய பேருந்து நிலையம் - கள்ளிக்குடி - வழியாக திருமங்கலம் செல்ல வேண்டும். மீண்டும் திருமங்கலத்திலிருந்து அதே வழித்தடத்தில் திரும்பவும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

விருதுநகர் முதல் கள்ளிக்குடி, திருமங்கலம், மதுரை மார்க்கம். ( புறநகர் பேருந்துகள்)
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் - எம்ஜிஆர் சிலை - ஆத்துப்பாலம் - மீனாம்பிகை பங்களா  - கள்ளிக்குடி -  திருமங்கலம் - மதுரை செல்ல வேண்டும்.  மீண்டும் மதுரையிலிருந்து அதே வழித்தடத்தில் மதுரையிலிருந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வர வேண்டும்.

 சிவகாசி முதல் மதுரை மார்க்கம் (புறநகர் பேருந்துகள்)
சிவகாசி - நந்தா ஹோட்டல் - புறவழிச்சாலை - எம்ஜிஆர் சாலை - புதிய பேருந்து நிலையம் - கருமாதி மடம்  - ஆத்துப்பாலம் - மீனாம்பிகை பங்களா - கள்ளிக்குடி வழியாக மதுரை செல்ல வேண்டும். மீண்டும் மதுரையிலிருந்து அதே வழித்தடத்தில் சிவகாசி செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News