25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


குழந்தை வளர்ப்பில்  பெற்றோர்களின் கடமை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தை வளர்ப்பில்  பெற்றோர்களின் கடமை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசக் கூடாது.

 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்கள். நண்பர்கள் முன் மட்டம் தட்டிப் பேசுவது, அடிப்பது கூடவே கூடாது.

பொண்ணு எப்படிப் படிக்கிறா?, 'பையன் சேட்டை பண்ணுவானா?' என்று கேட்டால், 'அதை ஏன் கேட்கிறீங்க' என்று கூறாமல், 'நன்றாகப் படிக்கிறாள்/பொறுப்பாக இருக்கிறான். வளர வளர நிறைய மாற்றத்தை உணர்கிறோம்' என்று உயர்வாகப் பேசி குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் சோகமாக இருக்கும்போது ஒரு நண்பன் போல பேசி, பிரச்னையை அறிந்து அதற்குத் தீர்வு காணவேண்டும் உங்கள் யூகங்களை அங்கே நிரப்பி அவர்களை இன்னும் தனிமையில் தள்ளக்கூடாது.

குழந்தைகள் தினம் பள்ளி விட்டு வந்தவுடன் நண்பர்கள், பாடம், வகுப்பு, ஆசிரியர் என பள்ளியில் நடந்த விஷயங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை உருவாக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை குழந்தைகள் முன் விவாதிப்பது சண்டை போடுவதை அறவே தவிர்க்க வேண்டும்

'என் அப்பா, அம்மாதான்  உயர்ந்தவர்கள்.என் வீடு ரொம்ப சந்தோஷமான வீடு' என்று மகிழும், கொண்டாடும் பால்யத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது, பெற்றோரின் கடமை!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News